Showing posts with label மனு. Show all posts
Showing posts with label மனு. Show all posts

Tuesday, May 14, 2019

வேறு தானங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 65

Other gifts! | Anusasana-Parva-Section-65 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 65)


பதிவின் சுருக்கம் : பொன், வெள்ளி, நீர், நெய், குடை, தேர் ஆகியவற்றைக் கொடையளிபதால் உண்டாகும் பலன்களையும், அவை குறித்த பெரியோர்களின் கருத்துகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெரும்பாட்டன் பிரம்மனின் மகனான சிறப்புமிக்க அத்ரி, "பொன்னைக் கொடையளிப்பவர்கள் இவ்வுலகில் அனைத்தையும் கொடையளிபவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்" என்றார்.(1)

Monday, April 15, 2019

பெண்களை மதிப்பீராக! - அநுசாஸனபர்வம் பகுதி – 46

Honour women! | Anusasana-Parva-Section-46 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 46)


பதிவின் சுருக்கம் : பெண்களுக்குப் பொருள் கொடுத்தல் மற்றும் அவர்களை அன்போடு நடத்தல் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிம்}, "பழைய வரலாறை அறிந்தவர்கள், பிரசேதஸின் மகனான தக்ஷனின் பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்கிறார்கள். "எந்தக் கன்னிகையைப் பொறுத்தவரையில், அவளது உறவினர்களால் மணக்கொடையின் வடிவில் ஏதும் பெறப்படவில்லையோ, அவளை விற்பனை செய்யப்பட்டவளாகச் சொல்ல முடியாது" {என்பதே அந்த ஸ்லோகம்}[1].(1) திருமணத்தில் கரம்பற்றப்படும் கன்னிகையை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தி, ஏற்புடைய அனைத்தையும் கொடுக்க வேண்டும்.(2) அவளது தந்தை, சகோதரர்கள், மாமனார், மைத்துனர்கள் {கணவனின் சகோதரர்கள்} ஆகியோர் நன்மையை அறுவடை செய்யும் விருப்பம் கொண்டவர்களாக இருந்தால், அவளை அனைத்து வகையிலும் மதித்து, ஆபரணங்களால் அவளை அலங்கரிக்க வேண்டும். அத்தகைய நடத்தை அவர்களைப் போதுமான மகிழ்ச்சிக்கும், நன்மைக்கும் வழிநடத்திச் செல்லும்.(3)

Monday, June 18, 2018

செயல்விலக்கம்! - சாந்திபர்வம் பகுதி – 206

Abstention from acts! | Shanti-Parva-Section-206 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 33)


பதிவின் சுருக்கம் : செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறம் என்பதைப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


Abstention from acts! | Shanti-Parva-Section-206 | Mahabharata In Tamil
மனு {பிரஹஸ்பதியிடம்}, "ஐம்புலன்களோடும், மனத்தோடும் ஐவகை உடைமைகள் கலக்கும்போது, ரத்தினத்தின் ஊடாகக் கடக்கும் நூலைப் போலத் தனிப்பட்ட ஒருவனால் {ஆன்மாவால்} பிரம்மம் {பரம்பொருள்} காணப்படுகிறது.(1) மேலும் நூலானது எவ்வாறு தங்கம், முத்து, வைடூரியம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட எந்தப் பொருளிலும் நூலாகக் கிடக்குமோ,(2) அவ்வாறே ஒருவனின் ஆன்மாவும், அதன் செயல்களின் விளைவாக ஒரு பசுவுக்குள்ளோ, குதிரை, மனிதன், யானை, பிற விலங்கு, புழு, அல்லது பூச்சிக்குள்ளோ வாழ்கிறது.(3) தனிப்பட்ட ஒருவன் {ஆத்மா} குறிப்பிட்ட ஓர் உடலுக்குள் இருந்து செய்யும் நற்செயல்கள் உண்டாக்கும் வெகுமதிகளை அந்தக் குறிப்பிட்ட உடலுக்குள் உள்ள அந்த ஒருவனே {ஆத்மாவே} அனுபவிக்கிறான்[1].(4) குறிப்பிட்ட வகை நீர்மத்தால் நனைக்கப்பட்ட மண்ணானது, அதில் வளரும் ஒவ்வொரு வகை மூலிகை, அல்லது செடிக்கும் அதற்குத் தேவையான வகையில் உள்ள சாற்றைக் கொடுக்கிறது. அதே வகையில், ஆன்மாவை சாட்சியாகக் கொண்ட புத்தியானது, முற்பிறவிச் செயல்களால் குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றவே இணங்குகிறது[2].(5)

Saturday, June 16, 2018

பரப்பிரம்மம்! - சாந்திபர்வம் பகுதி – 205

Supreme Brahma! | Shanti-Parva-Section-205 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 32)


பதிவின் சுருக்கம் : துன்பத்தைத் தவிர்ப்பதும், பிரம்மத்தை அடைவதும் எவ்வாறு என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


Supreme Brahma! | Shanti-Parva-Section-205 | Mahabharata In Tamil

மனு {பிரஹஸ்பதியிடம்}, "உடல் மற்றும் மனத் துன்பங்கள் தோன்றும்போது, ஒருவனால் யோகத்தைப் பயில முடியாது. எனவே, அத்தகைய கவலைகளை நினைத்தேங்கிக் கொண்டிருப்பவனுக்கு அது கைக்கொள்ளக்கூடியதல்ல.(1) கவலைகளை நினைத்து ஏங்காமல் இருப்பதே அதற்கான மருந்தாகும். துன்பங்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால், அவை மேலும் தீவிரமடைந்து, தீங்கை அதிகரிக்கச் செய்கிறது.(2) ஒருவன் ஞானத்தால் மனத்துன்பத்தில் இருந்தும், குணப்படுத்தும் மருந்துகளால் உடல் துன்பத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஞானம் இதையே கற்பிக்கிறது. கவலையில் இருக்கும்போது ஒருவன் குழந்தை போல நடந்து கொள்ளக்கூடாது.(3) ஞானம் கொண்ட மனிதன், நிலையற்றவையான இளமை, அழகு, நீடித்த வாழ்நாள் {ஆயுள்}, செல்வத் திரட்டு, அன்புக்குரியோரின் தோழமை ஆகிய ஆசைகளை ஒருபோதும் பேணி வளர்க்கக்கூடாது.(4) மொத்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கவலைக்காக ஒருவன் தனியாக வருந்தக்கூடாது. வாய்ப்பைக் காணும்போது அவன் தீர்வை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.(5)

ஆன்மவுணர்வு! - சாந்திபர்வம் பகுதி – 204

Spiritual sense! | Shanti-Parva-Section-204 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 31)


பதிவின் சுருக்கம் : எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


Spiritual sense! | Shanti-Parva-Section-204 | Mahabharata In Tamil
மனு {பிரஹஸ்பதியிடம்}, "இந்த வெளிப்பாடு (உடல்) {ஸ்தூலசரீரம்}, கனவின்போது (செயலின்றி) கிடந்து, ஜீவனானது {ஸூக்ஷமசரீரமானது} முன்னதிலிருந்து {உடலான ஸ்தூலசரீரத்திலிருந்து} தன்னை விடுவித்துக் கொண்டு நுண்ணிய வடிவில் நடப்பதைப் போல, ஆழ்ந்த உறக்கம் (அல்லது மரணம்) என்றழைக்கப்படும் நிலையில், புலன்கள் அனைத்துடன் கூடிய அந்த நுண்ணிய வடிவம் {ஜீவன் / சூக்ஷமசரீரம்} செயலற்றுப் போகவும், புத்தியானது அதனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது. இவ்வாறு இருப்பு மற்றும் இல்லாமை {முக்தி} ஆகிய நிலைகளில நேர்கிறது[1].(1) தெளிந்த நீரில் கண்ணால் வடிவச் சாயல்கள் {பிரதிபிம்பங்கள்} காணப்படுவதைப் போல, புலன்கள் கலக்கமடையாமல் இருந்தால், ஆன்மாவானது புத்தியால் காணப்படவல்லதாக இருக்கிறது.(2) எனினும், அந்நீர் கலங்கினால், அதன் அருகில் இருக்கும் மனிதனால் அந்த வடிவத்தோற்றங்களைக் காண முடியாது. அதைப் போலவே, புலன்கள் கலக்கமடைந்தால், ஆன்மாவைப் புத்தியால் காண முடியாது.(3) அறியாமையானது மாயையைத் தோற்றுவிக்கிறது. மாயை மனத்தைப் பாதிக்கிறது. மனமானது, பழுதாகும்போது, மனத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்ட ஐம்புலன்களும் பழுதடைகின்றன.(4) அறியாமையால் மடக்கப்பட்டு, உலகம் சார்ந்த பொருட்களெனும் சகதிக்குள் மூழ்கும் ஒருவனால், மனநிறைவு அல்லது நிலையமைதியின் இனிமைகளை அனுபவிக்க முடியாது. (இவ்வாறான சூழ்நிலையில்} நன்மை மற்றும் தீமையான செயல்களின் தொடர்பறாத ஆன்மாவானது, மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த பொருட்களுக்கே திரும்புகிறது.(5)

Thursday, June 14, 2018

கர்மப்பயன்! - சாந்திபர்வம் பகுதி – 203

The fruits of acts! | Shanti-Parva-Section-203 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 30)


பதிவின் சுருக்கம் : புலப்படாததாக இருக்கும் ஆன்மாவின் இருப்பையும், எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதையும் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


The fruits of acts! | Shanti-Parva-Section-203 | Mahabharata In Tamil
மனு {பிருஹஸ்பதியிடம்}, "புலன்களுடன் ஒன்றிணையும் மனம், கடந்தகாலத்தில் பெறப்பட்ட பொருட்களின் மனப்பதிவுகளை நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவுகூர்கிறது. புலன்கள் அனைத்தும் (தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால்,[1] புத்தியின் வடிவில் உள்ள உயர்ந்தது (ஆன்மா), தன் உண்மையான இயல்பில் நீடித்திருக்கிறது.(1) (அத்தகைய நேரத்தில்) ஆன்மாவானது, புலன்நுகர் பொருட்களின் ஒருங்கமைவையோ, முரணையோ கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமல், அனைத்துத் திசைகளில் இருந்தும் அவற்றைத் திரட்டி ஒன்றாகப் பற்றி வைக்கும்போது, பொருத்தமற்ற பொருட்கள் அனைத்திற்கும் மத்தியில் அஃது அவசியம் உலவ நேர்கிறது. எனவே, அஃது (அமைதியான) சாட்சியாக இருக்கிறது. உடலுக்குள் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தனிப்பட்ட சுதந்திர இருப்பாக இருக்கிறது[2].(2)

Tuesday, June 12, 2018

கர்மக் கோட்பாடு! - சாந்திபர்வம் பகுதி – 202

The Karma Theory! | Shanti-Parva-Section-202 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 29)


பதிவின் சுருக்கம் : பரம்பொருளுக்கும், ஐம்பூதங்களுக்குமிடையில் உள்ள உறவு; புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுக்கிடையில் உள்ள உறவும் அவற்றின் செயல்பாடுகளும்; ஆன்மாவின் தன்மையை உணரும் வழி; காரணக் காரியங்கள்; கர்மவினைகளின் தொடர்ச்சி; ஆன்மா உடல்களை உடையாகப் பயன்படுத்தல்; உடலின் அழிவுக்குப் பிறகு ஐம்பூதங்களுடன் கலக்கும் முறை; புதிய உடல் அடையும் நன்மை, தீமைகளின் தன்மைகள் ஆகியவற்றை பரத்வாஜருக்குச் சொன்ன மனு...


மனு {பரத்வாஜரிடம்}, "அழிவற்றவனும், சிதைவற்றவனுமான அவனிடமிருந்து {பரம்பொருளிடமிருந்து} முதலில் வெளி {ஆகாயம்} உண்டானது; வெளியில் இருந்து காற்று {வாயு} வந்தது; காற்றில் இருந்து ஒளி வந்தது; ஒளியில் இருந்து நீர் வந்தது. நீரில் இருந்து இந்த அண்டம் உண்டானது; அண்டத்திலிருந்து அதில் தோன்றும் அனைத்துப் பொருட்களும் உண்டாகின.(1) (பிரளயத்திற்குப் பிறகு), (உலகம் சார்ந்த) அனைத்துப் பொருட்களும் முதலில் நீருக்குள் நுழையும், அங்கிருந்து ஒளி அல்லது வெப்பத்திற்கும், அங்கிருந்து காற்றுக்கும் {வாயுவுக்கும்}, அங்கிருந்து வெளிக்குள்ளும் {ஆகாயத்திற்குள்ளும்} நுழையும். விடுதலையை {முக்தியை} நாடுவோர் வெளிக்கு {ஆகாயத்துக்குத்} திரும்ப வேண்டியதில்லை. மறுபுறம் அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள்.(2) முக்தியின் புகலிடமான பிரம்மம் வெப்பமானதோ, குளிந்ததோ, மென்மையானதோ, கடுமையானதோ, புளிப்பானதோ, துவர்ப்பானதோ, இனிமையானதோ, கசப்பானதோ கிடையாது. அவன் {பிரம்மத்தை அடைந்தவன்} ஒலியையோ, மணத்தையோ, வடிவத்தையோ கொண்டிருப்பதில்லை. அவன் இவை அனைத்தையும் விஞ்சியவனாக, அளவுகள் அற்றவனாக இருக்கிறான்.(3) தோலானது தீண்டலை உணர்கிறது; நா சுவையையும், மூக்கு மணத்தையும், காதுகள் ஒலிகளையும், கண்கள் வடிவங்களையும் உணர்கின்றன. அத்யாத்மாவை {ஆன்ம யோகத்தை} அறியாத மனிதர்கள், இவற்றைத் தாண்டிய எதையும் காண மாட்டார்கள்.(4) சுவைகளில் இருந்து நாவையும், மணங்களில் இருந்து மூக்கையும், ஒலிகளில் இருந்து காதுகளையும், வடிவங்களில் இருந்து கண்களையும், தீண்டலில் இருந்து தோலையும் விலக்கிய ஒருவனே, (புலன்கள் மற்றும் மனத்தில் இருந்து விடுபட்ட) சுயத்தின் {ஆன்மாவின்} பண்பியல்புகளைக் {ஆத்மஸ்வபாவத்தைக்} காண்பான்.(5)

Sunday, June 10, 2018

ஜீவாத்மா! - சாந்திபர்வம் பகுதி – 201

The creature-soul! | Shanti-Parva-Section-201 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 28)


பதிவின் சுருக்கம் : செயல், ஞானம், ஜீவன், பிரம்மம் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் மனுவுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


The creature-soul! | Shanti-Parva-Section-201 | Mahabharata In Tamil
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வேதங்கள் அனைத்திலும், (பல்வேறு} சடங்குகளிலும், நோன்புகளிலும் ஞானத்தைப் பிரதிபலிக்கும் யோகத்தின் கனிகள் {பயன்கள்} என்னென்ன? ஜீவனை எவ்வாறு அறியலாம்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)

Friday, January 05, 2018

அரசற்ற நிலையும், மனுவும்! - சாந்திபர்வம் பகுதி – 67

Manu and anarchy! | Shanti-Parva-Section-67 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 67)


பதிவின் சுருக்கம் : அரசற்ற நாட்டின் நிலையை வர்ணித்த பீஷ்மர்; மன்னனால் உண்டாகும் நன்மையையும், அரசற்ற நிலையால் உண்டாகும் தீமையையும் சொன்னது; பழங்காலத்தில் அரசற்ற நிலையில் எவ்வாறு மனு மன்னனானான் என்பதைச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "{இதுவரை} நான்கு வாழ்வு முறைகள் மற்றும் நான்கு வகையினரின் கடமைகள் குறித்து நீர் சொன்னீர். ஓ! பாட்டா, ஒரு நாட்டின் முக்கியக் கடமைகள் என்னென்ன என்பதை எனக்கு இப்போது சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Wednesday, November 29, 2017

உணவும், கொடையும்! - சாந்திபர்வம் பகுதி – 36

Food and gifts! | Shanti-Parva-Section-36 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 36)


பதிவின் சுருக்கம் : உண்ணத்தக்கவை, உண்ணத்தகாதவை, அதற்குரிய பாவக்கழிப்புகள், கொடைக்குத் தகுந்தவர், கொடைக்குத்தகாதவர் ஆகியவற்றைக் குறித்துத் தவசிகளிடம் மனு ஆற்றிய உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர் ...


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! பாட்டா, எந்த உணவு தூய்மையானது? எது தூய்மையற்றது? எந்தக் கொடை புகழத்தக்கது? (கொடைகளுக்குத்) தகுந்தவராக எவரைக் கருதலாம்? எவரைக் கருதலாகாது?" என்று கேட்டான்.(1)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்