Showing posts with label சுக்ரன். Show all posts
Showing posts with label சுக்ரன். Show all posts

Sunday, June 16, 2019

புஷ்பதூபதீப பலிகள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 98

Vali offerings with flowers, incense and lights! | Anusasana-Parva-Section-98 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 98)


பதிவின் சுருக்கம் : மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளித்து, பலிக்காணிக்கைகளை அளிப்பது குறித்து மன்னன் பலிக்குச் சுக்ரன் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, விளக்குக்கொடை எந்த வகையைச் சார்ந்தது? இக்கொடை எவ்வாறு தோன்றியது? அதைச் செய்வதனால் கிட்டும் பலன்கள் என்னென்ன? இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Wednesday, June 05, 2019

பிருகு, அங்கிரஸ், கவி! - அநுசாஸனபர்வம் பகுதி – 85ஆ

Brighu, Angiras & Kavi! | Anusasana-Parva-Section-85b | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 85)


பதிவின் சுருக்கம் : பிரம்மனின் வேள்வியில் பிறந்தவர்கள்; மஹாதேவனின் மகனான பிருகு; அக்னியின் மகனான அங்கிரஸ்; பிரம்மனின் மகனான சுக்கிரன்; பிருகு, அங்கிரஸ் மற்றும் சுக்கிர சந்ததிகள்; பொற்கொடையளிப்பவர்கள் அடையும் கதி...


வசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், "ஓ! ராமா, பரமாத்மாவோடு அடையாளம் காணப்படும் பெரும்பாட்டனின் சாதனை குறித்த பிரம்ம தரிசனம் என்றழைக்கப்படும் இவ்வரலாற்றை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(87) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, தேவர்களில் முதன்மையானவனும், அச்சந்தர்ப்பத்தில் வருணனின் வடிவை ஏற்றவனுமான தலைவன் ருத்திரன் பழங்காலத்தில் செய்த வேள்விக்கு(88) அக்னியைத் தலைமையாகக கொண்ட தேவர்களும் முனிவர்களும் வந்தனர். (உடல்வடிவத்துடன் கூடிய) வேள்வி அங்கங்கள் அனைத்தும், உடல்வடிவத்துடன் கூடிய வஷத் என்றழைக்கப்படும் மந்திரமும் அந்த வேள்விக்கு வந்தன.(89) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான சாமங்களும், யஜுஸ்களும் தங்கள் உடல்வடிவத்துடன் அங்கே வந்தன. சொற்களை உச்சரிக்கும் வதிகளால் அலங்கரிக்கப்பட்ட ரிக் வேதமும் அங்கே வந்தது.(90) லக்ஷணங்கள், ஸ்வரங்கள், ஸ்தோபங்கள், நிருக்தங்கள், ஸ்வரங்களின் வகைகள், ஓங்கார அசை, நிக்ரகம், பிரக்கிரகம் ஆகியவை அனைத்தும் மஹாதேவனின் கண்களில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டன.(91) உபநிஷத்துகள், வித்யை, சாவித்திரி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை அனைத்தும் அங்கே வந்து சிறப்புமிக்கச் சிவனால் ஆதரிக்கப்பட்டன.(92)

Tuesday, October 09, 2018

சுக்கிராச்சாரியார்! - சாந்திபர்வம் பகுதி – 290

Sukracharya! | Shanti-Parva-Section-290 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 117)


பதிவின் சுருக்கம் : சுக்கிராச்சாரியார் தேவர்களின் பக்கம் சேராமல் அசுரர்களின் நன்மையை நாடிய காரணம்; சுக்கிரன் என்ற பெயர் தோன்றியதற்கான காரணம் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, இந்த ஆவல் எப்போதும் என் மனத்தில் இருக்கிறது. ஓ! குருக்களின் பாட்டா, அது குறித்த அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்.(1) தெய்வீக முனிவரும், கவி என்றும் அழைக்கப்படுபவரும், உயர் ஆன்மா கொண்டவருமான உசனஸ், அசுரர்களுக்கு ஏற்புடையதையும், தேவர்களுக்கு ஏற்பில்லாததையும் செய்வதில் ஏன் ஈடுபட்டார்?(2) தேவர்களின் சக்தியை மங்கச் செய்வதில் அவர் ஏன் ஈடுபட்டார்? தானவர்கள், தேவர்களில் முதன்மையானோரிடம் ஏன் எப்போதும் பகைமையில் ஈடுபட்டனர்.(3) ஒரு தேவனைப் போன்ற காந்தியைக் கொண்ட உசனஸ் என்ன காரணத்தால் சுக்ரன் என்ற பெயரை அடைந்தார்? இக்காரியங்கள் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(4) பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும், அவர் ஏன் ஆகாய மத்தியில் பயணிப்பதில் வெல்லவில்லை? ஓ! பாட்டா, இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்[1].(5)

Wednesday, September 26, 2018

விஷ்ணுவின் மகிமை - ஸனத்குமாரர்! - சாந்திபர்வம் பகுதி – 280

The glory of Vishnu sung by Sanatkumara! | Shanti-Parva-Section-280 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 107)


பதிவின் சுருக்கம் : விஷ்ணுவின் மகிமையையும், பிறப்பின் கணக்கையும், ஜீவன்களின் நிறம் முதலியவற்றையும், சுக்ரருக்கும், விருத்திரனுக்கும் எடுத்துச் சொன்ன ஸனத்குமாரரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, "ஆகாயத்துடன் கூடிய இந்தப் பூமியைத் தன் கரங்களில் தாங்கும் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தெய்வீகமானவனை {விஷ்ணுவை} நான் வணங்குகிறேன்.(1) ஓ! தானவர்களில் சிறந்தவனே, (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும்) முடிவிலா இடத்தைத் தலையாகக் கொண்டவனும், அதியனுமான {அனைத்திலும் மேம்பட்டவனான} அந்த விஷ்ணுவின் மகிமையைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்" என்றார் {சுக்கிராச்சாரியார்}.(2)

Monday, September 24, 2018

அறிவு! - சாந்திபர்வம் பகுதி – 279

Knowledge! | Shanti-Parva-Section-279 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 106)


பதிவின் சுருக்கம் : இன்ப துன்பங்களுக்குக் காரணமாக இருக்கும் அறிவைக் குறித்துச் சுக்ராச்சாரியருக்கும், விருத்திரனுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உயர்ந்த நற்பேற்றை அடைந்தவர்களாக மனிதர்கள் அனைவரும் எங்களைக் குறித்துப் பேசுகின்றனர். எனினும் உண்மையில், எங்களைப் போல அதிகத் துக்கத்தை அடைந்தவர்கள் வேறெவரும் இல்லை.(1) ஓ! குருக்களில் சிறந்தவரே, ஓ! பாட்டா, உலகமனைத்திலும் மதிக்கப்பட்டாலும், தேவர்களால் பெறப்பட்டு மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் பிறந்திருந்தாலும், ஓ! மதிப்பிற்குரிய தலைவரே, எங்கள் பங்காக நாங்கள் பெரும் துன்பத்தையே அடைந்திருக்கும்போது, பிறப்பால் உடலைப் பெறுவது மட்டுமே துன்பம் அனைத்திற்கும் காரணமாகத் தெரிகிறது. ஐயோ, துன்பத்தை அழிக்கும் துறவு வாழ்வை நாங்கள் எப்போதும் பின்பற்றப் போகிறோம்?(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள், (ஐந்து மூச்சுகள், மனம், புத்தி, அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்து என்ற) பதினேழில் இருந்தும், (மனிதனை மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த வாழ்வில் கட்டும்) முக்கியக் காரணங்களாக அமைந்த (ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகிய) யோகக் களங்கங்கள் ஐந்தில் இருந்தும், {ஒலி, தீண்டல், வடிவம், சுவை மற்றும் மணம் ஆகிய} புலன் நுகர் பொருட்கள் ஐந்தும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) குணங்கள் மூன்றும் சேர்ந்த எட்டில் இருந்தும் விடுபட்டு, மீண்டும் ஒருபோதும் மறுபிறப்பை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவரே, நாங்கள் அரசுரிமையைக் கைவிட்டு எப்போது துறவு வாழ்வைப் பின்பற்றப் போகிறோம்?" என்று கேட்டான்.(4,5)

Tuesday, August 29, 2017

யயாதி - கிண்டில் புத்தகம்



யயாதி ₹.127.00/-
யயாதியின் கதை மிகப் புராதனமான கதையாகும். யயாதி கருடனின் நண்பன் எனும் போது, இவனது கதை எவ்வளவு பழைமையானது என்பதை நாம் உணரலாம். யயாதி குரு குலத்திற்கும், யாதவக் குலத்திற்கும் பொது மூதாதையாவான். மஹாபாரதம் தவிர்த்து, பாகவத புராணம், வாயு புராணம், பிரமாண்ட புராணம், சிவ புராணம், ஹரிவம்ச புராணம் ஆகியவற்றிலும் இந்த யயாதி பேசப்படுகிறான்.

Sunday, April 28, 2013

யயாதியைத் தாக்கிய பலவீனம்! | ஆதிபர்வம் - பகுதி 83

Decrepitude befell Yayati! | Adi Parva - Section 83 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 19)

பதிவின் சுருக்கம் : சர்மிஷ்டையின் மகனைக் கண்ட தேவயானி அது குறித்து அவளிடம் கேட்டது; சர்மிஷ்டைக்குப் பிறந்த மூன்று பிள்ளைகள்; தங்கள் தந்தையை அடையாளம் காட்டிய பிள்ளைகள்; சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்ட தேவயானி; யயாதியைச் சபித்த சுக்கிராச்சாரியார்; சாபவிமோசனம் கேட்ட யயாதி...

வைசம்பாயனர் சொன்னார், "இனிய புன்னகையுடைய தேவயானி அந்தக் குழந்தையின் பிறப்பை கேள்விப்பட்டுப் பொறாமையடைந்தாள். ஓ பாரதா, சர்மிஷ்டை தேவயானியின் சோகச்சிந்தனைகளுக்குக் காரணமானாள். தேவயானி அவளிடம் சென்று,(1) "ஓ அழகான புருவங்கள் கொண்டவளே! காமத்தின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு, என்ன பாவத்தை இழைத்திருக்கிறாய்?" என்றாள்.(2)

சர்மிஷ்டை, "வேதங்களை அறிந்த அறம் சார்ந்த முனிவர் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் வரங்களை அருளக்கூடியவர். எனது தகுதிகளை {புண்ணியங்களைக்} கருத்தில் கொண்டு, நான் விரும்பிய வரத்தை அவர் எனக்குக் கொடுத்தார்.(3) ஓ இனிய புன்னகையுடைவளே! பாவகர வழிகளில் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நான் ஒரு போதும் முயலமாட்டேன். அந்த முனிவராலேயே நான் எனது பிள்ளையைப் பெற்றேன் என்று உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்று பதிலுரைத்தாள்.(4)

Wednesday, April 24, 2013

யயாதியின் திருமணம்! | ஆதிபர்வம் - பகுதி 81

The Marriage of Yayati! | Adi Parva - Section 81 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 17)

பதிவின் சுருக்கம் : தேவயானியை மீண்டும் கண்ட யயாதி; அவளும், சர்மிஷ்டையும் யார் என்று கேட்ட யயாதி; தன்னை மணந்து கொள்ள வேண்டும் என யயாதியைக் கேட்ட தேவயானி; அஞ்சிய யயாதி; யயாதிக்கும், தேவயானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; தேவயானியை யயாதிக்கு மனைவியாக அளித்த சுக்கிராச்சாரியார்...

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே!, சில காலம் கழித்து, அழகான நிறம் கொண்ட தேவயானி, இன்பமாக இருக்கக் கானகத்திற்குச் சென்றாள்.(1) சர்மிஷ்டையுடனும் மற்ற பணிப்பெண்களுடனும் சென்ற தேவயானி, பழைய இடத்திலேயே திரிந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.(2) அத்தனை பணியாட்களின் சேவையையும் ஏற்றுப் பெருமகிழ்வு கொண்டாள். இதயம் இலகுவாகி விளையாடிக்கொண்டு, மலர்களிலிருக்கும் தேனையும், பலதரப்பட்ட கனிகளையும் உண்டு களித்தாள். அந்த நேரத்தில், நகுஷனின் மகன் யயாதி மிகுந்த களைப்புடனும், தாகத்துடனும் மானைத் தேடிக் கொண்டு அங்கு வந்தான். அங்கு, தேவலோக ஆபரணங்கள் பூண்டு, நறுமணத்துடன் திகழ்ந்த தேவயானி, சர்மிஷ்டை மற்றும் பல மங்கையரையும் கண்டான்.(3-5) அங்கிருந்தவர்களிலேயே இனிய புன்னகையுடைய தேவயானி, அழகிய நிறத்துடனும், இணையில்லாத அழகுடனும், இயல்பாகச் சாய்ந்திருந்தாள். அவளது கால்களைச் சர்மிஷ்டை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள்.(6)

Sunday, April 21, 2013

தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை! | ஆதிபர்வம் - பகுதி 80

Sarmishtha became the slave of Devayani! | Adi Parva - Section 80 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 16)

பதிவின் சுருக்கம் : விருஷபர்வனை விட்டு விலகிக் கொள்வதாக சுக்கிராச்சாரியர் சொல்வது; சுக்கிராச்சாரியாரை வேண்டிய விருஷபர்வன்; தேவயானியை வேண்டிய விருஷபர்வன்; சர்மிஷ்டையை அடிமையாகக் கொண்ட தேவயானி...

வைசம்பாயனர் சொன்னார், "பிருகு குலத்தில் வந்த காவியர் மிகுந்த கோபம் கொண்டு, அவனது மண்டபத்தில் அமர்ந்திருந்த விருஷபர்வனை அணுகிக் கடினமான வார்த்தைகளால் பேசினார்.(1) அவர், "இந்தப் பூமியைப் போலவே, பாவகரக் காரியங்கள் உடனே பலனளிக்காது! ஆனால் படிப்படியாகவும், இரகசியமாகவும் அதைச் செய்தவனை அஃது அழிக்கும்.(2) அந்தக் கனி {பலன்} தன்னையோ அல்லது தனது மகனையோ அல்லது தனது பேரனையோ கண்டிப்பாக அணுகும். பாவங்கள் அதன் கனியைக் கொடுத்தே தீரும். ஆடம்பர உணவுகளைப் போல, அது செரிக்கவே செரிக்காது.(3) தனது கடமைகளில் அக்கறையோடும், அறம் சார்ந்த தனது ஆன்மிகக் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டும், எனது இல்லத்தில் தங்கியிருந்த அங்கீரஸின் பேரனைக் கொன்றீர்கள்.(4) பிராமணனான அந்தக் கசனைக் கொன்ற பாவத்தின் காரணமாகவும், எனது மகளை நீங்கள் நடத்திய விதத்தின் காரணமாகவும், என்னால் உங்களுடன் இனியும் இருக்க முடியாது.(5) ஓ அசுரர் தலைவனே! {விருஷபர்வா}, பிதற்றல் பேச்சு பேசும் பொய்யனாக என்னை நினைக்காதே? உங்களுடைய குற்றங்களையெல்லாம் திருத்திக் கொள்ளாமல் அதை நீங்கள் எளிதாகக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.(6)

Saturday, April 20, 2013

சுக்ரன் தேவயானி உரையாடல்! | ஆதிபர்வம் - பகுதி 79

The speech between Sukra and Devayani! | Adi Parva - Section 79 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 15)

பதிவின் சுருக்கம் : பொறுமையின் சிறப்பு குறித்து தேவயானிக்கு எடுத்துரைத்த சுக்கிராச்சாரியார்; தவறு செய்யும் சீடனைக் குரு தண்டிக்க வேண்டும் என்று தன் தந்தையிடம் சொன்ன தேவயானி...

சுக்ரன் தொடர்ந்தார், "ஓ தேவயானி! மற்றவர்களின் தீய பேச்சுகளைப் பொருட்படுத்தாதவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள்வாயாக.(1) குதிரைகளின் கடிவாளத்தை இறுகப்பற்றாமல் தளர்ந்தவாறு பற்றுபவனே உண்மையான சாரதி என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். எனவே, தனது வளரும் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே உண்மையான மனிதன்.(2) ஓ தேவயானி! தனது வளரும் கோபத்தை அமைதியாகக் கட்டுப்படுத்தி இருப்பவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள்வாயாக.(3) மன்னிப்புக்கு அடைக்கலம் கொடுத்து தனது வளரும் கோபத்தைச் சதுப்பு நிலத்தைவிட்டு அகலும் பாம்பைப் போல அசைத்து, உண்மையான மனிதனாகிறான்.(4) தனது கோபத்தைக் கட்டுப்படுத்துபவன், மற்றவர்களின் தீய பேச்சைப் பற்றி அக்கறைகொள்ள மாட்டான். காரணமிருந்தும் கோபமடையாதவன், நாம் வாழ்வதற்கு அவசியமான நான்கு நிலைகளையும் அடைவான் (அறம், பொருள், இன்பம், வீடு).(5) சோர்வடையாமல் நூறு வருடங்களுக்கு மாதாமாதம் வேள்விகள் செய்பவனுக்கும், இவனுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. எப்போதுமே கோபமடையாதவன் உயர்ந்தவனாவான்.(6) நன்மைக்கும், தீமைக்கும் வித்தியாசம் தெரியாத ஆண்களும், பெண்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வர். ஞானமுள்ளோர் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள்" என்றார்.

தேவயானியின் கோபம்! | ஆதிபர்வம் - பகுதி 78

The wrath of Devayani! | Adi Parva - Section 78 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 14)

பதிவின் சுருக்கம் : பெண்களின் ஆடைகளைக் கலைத்த இந்திரன்; சர்மிஷ்டைக்கும், தேவயானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; கிணற்றில் இருந்து தேவயானியைக் காத்த யயாதி; மகளுக்கு ஆறுதல் சொன்ன சுக்ராச்சாரியார்...

வைசம்பாயனர் சொன்னார், "தேவலோகத்தில் வசிப்பவர்கள், அற்புதமான அறிவியலைப் பயின்று வந்த கசனை வரவேற்பதில் மிகுந்த மகிழ்வு கொண்டனர். ஓ பாரதக் குலத்தின் காளையே! கசனிடமிருந்து தேவர்கள் அந்த அறிவியலை அறிந்து கொண்டு தங்கள் குறிக்கோள் நிறைவேறியதாகக் கருதினர்.(1) எல்லோரும் ஒன்றாகக் கூடி, ஆயிரம் வேள்விகள் செய்தவனிடம் {இந்திரனிடம்}, "ஓ புரந்தரா! உனது வீரத்தைக் காட்ட நேரம் வந்துவிட்டது. உனது எதிரிகளைக் கொல்வாயாக" என்றனர்.(2) அப்போது தேவர்களுடன் இருந்த மகவத் {இந்திரன்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். ஆனால் அப்படிப் போகும் வழியில் நிறைய மங்கையரைக் கண்டான்.(3) அந்த மங்கையர் கந்தர்வ மன்னன் சித்ரரதனின் நந்தவனத்திற்கு அருகில் இருந்த தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவன் தன்னைக் காற்றாக மாற்றிக் கொண்டு, கரையில் இருந்த அவர்களது ஆடைகளைக் கலைத்துப் போட்டான்.(4) சிறிது நேரம் கழித்து, அந்த மங்கையர் நீரிலிருந்து எழுந்து, தங்கள் ஆடைகளை எடுக்க முற்பட்டு, அந்த ஆடைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து கலைந்திருந்ததைக் கண்டனர்.(5) அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தேவயானியின் ஆடைகளை விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை எடுத்துக் கொண்டாள்.(6) ஓ மன்னா! அதன் பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சச்சரவு ஏற்பட்டது. (7)

Tuesday, April 16, 2013

உயிர்மீட்பு ஞானத்தை அடைந்த கசன்! | ஆதிபர்வம் - பகுதி 76

Kacha obtained knowledge of Sanjivani! | Adi Parva - Section 76 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 12)

பதிவின் சுருக்கம் : பிருஹஸ்பதியின் மூத்த மகன் கசனிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள்; பிருஹஸ்பதியின் மகன் கசன் என்பதை அறிந்தும் சுக்கிராச்சாரியார் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டது; சுக்ராச்சாரியரின் மகள் தேவயானிக்குப் பணிவிடை செய்த கசன்; கசனைக் கொன்ற அசுரர்கள்; கசனுக்காகத் தேவயானி அழவே, அவனை உயிர்மீட்ட சுக்ராச்சாரியார்; மீண்டும் மீண்டும் கசனைக் கொன்ற அசுரர்கள்; மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்த சுக்ராச்சாரியர்; பிராமணர்கள் மதுவருந்தக்கூடாது என்ற விதிமுறையைக் கொண்டு வந்த சுக்கிராச்சாரியார்; வந்த காரியம் வெற்றியடைந்தாலும் சுக்ராச்சாரியாரிடமே பல காலம் தங்கிப் பணிவிடை செய்த கசன்...

ஜனமேஜயன், "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! பிரஜாபதியைத் தொடர்ந்து பத்தாவது நபராக வரும் எங்கள் மூதாதையர் யயாதி, எப்படிக் கிடைக்க முடியாதவளான சுக்ரனின் மகளை மனைவியாகக் கொண்டார்.(1) இது குறித்து விவரமாக அறிய நான் விரும்புகிறேன். வம்சங்களை நிறுவிய ஒவ்வொரு ஏகாதிபதிகளைக் குறித்தும் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்