Showing posts with label வைசம்பாயனர். Show all posts
Showing posts with label வைசம்பாயனர். Show all posts

Tuesday, January 14, 2020

மஹாபாரத ஸ்ரவணவிதி! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 6

Oridnances for listening Mahabharata! | Svargarohanika-Parva-Section-6 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : மஹாபாரதம் உரைக்கும்போது கேட்பதற்குரிய விதி முறைகள்; மஹாபாரதம் கேட்ட பிறகு கொடுக்கப்பட வேண்டிய சிராத்த காணிக்கைகள்; மஹாபாரதப் பாராயணத்தைக் கேட்ட பிறகு பொதுவாகக் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; பாராயணம் செய்பவருக்குரிய தகுதிகள்; பாராயணம் செய்ய வேண்டிய முறை; ஒவ்வொரு பாராயணத்தின் முடிவிலும் கிட்டும் பலன்கள்; ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; மஹாபாரதத்தின் புண்ணியங்கள்; மஹாபாரதத்தைக் கேட்பதன் மூலம் கொடும்பாவங்களில் இருந்தும் தூய்மையடையலாம் என்பது...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! புனிதமானவரே, கல்விமான்கள் எந்தச் சடங்குகளின்படி பாரதத்தைக் கேட்க வேண்டும். (பாரதத்தைக் கேட்பதன் மூலம் அடையப்படும்) கனிகள் பலன்கள் என்னென்ன? பல்வேறு பாரணங்களின் {உண்ணா நோன்பிருந்து உண்ணும்} போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?(1) ஓ! புனிதமானவரே, ஒவ்வொரு பர்வத்தின் போதும், அல்லது (பாராயணம் தொடர்கையில் வரும்) புனித நாளின் போதும் ஒருவன் கொடுக்க வேண்டிய கொடைகள் என்னென்ன? பாராயணம் செய்பவரின் தகுதிகள் என்ன? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக[1]" என்றான்.(2)

Monday, January 13, 2020

பாரத மகிமை! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 5

The greatness of Bharata! | Svargarohanika-Parva-Section-5 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பீஷ்மர் முதலியோர் ஸ்வர்க்கத்தை அனுபவித்துத் தங்கள் தங்கள் தேவ வடிவில் கலந்ததை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்; ஆஸ்தீகர் முதலியோரை வழிபட்டு, யாகத்தை முடித்து, ஹஸ்தினாபுரம் வந்து அரசாட்சி செய்த ஜனமேஜயன்; பாரதக் கதையை முடித்து அதன் மகிமையைக் கூறிய சௌதி...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "உயர் ஆன்மாக்களான பீஷ்மர் மற்றும் துரோணர் இருவரும், மன்னன் திருதராஷ்டிரன், விராடன், துருபதன், சங்கன், உத்தரன்,(1) திருஷ்டகேது, ஜயத்சேனன், மன்னன் சத்யஜித், துரியோதனனின் மகன், சுபலனின் மகனான சகுனி,(2) பேராற்றல் கொண்ட கர்ணனின் மகன்கள், மன்னன் ஜெயத்ரதன், கடோத்கசன், நீர் குறிப்பிடாத வேறு சிலர்,(3) சுடர்மிக்க வடிவங்களைக் கொண்ட வேறு வீர மன்னர்கள் ஆகியோர் சொர்க்கத்தில் எவ்வளவு காலம் இருந்தனர்.(4) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவர்களுடைய இடம் சொர்க்கத்தில் நித்தியமானதா? அவர்களுடைய செயல்கள் {கர்ம பலன்கள்} தீர்ந்ததும் அந்த முதன்மையானவர்கள் அடைந்த கதியென்ன?(5) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் இதைக் கேட்க விரும்புவதால் உம்மைக் கேட்கிறேன். உமது ஒளிபொருந்திய தவத்தின் மூலம் நீர் அனைத்தையும் காண்பவராவீர்" என்றான் {ஜனமேஜயன்}".(6)

Tuesday, January 07, 2020

மாண்டோர் மீள்வரோ! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 34

Reappearance of the dead! | Asramavasika-Parva-Section-34 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 6)


பதிவின் சுருக்கம் : மாண்டோர் மீள்வதெப்படி என்று கேட்ட ஜனமேஜயன்; காரணத்துடன் விடையளித்த வைசம்பாயனர்...


சௌதி சொன்னார், "பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் ஜனமேஜயன், தன் மூதாதையர்கள் மீண்டும் தோன்றி மறைந்த கதையைக் கேட்டு உயர்வான நிறைவையடைந்தான்.(1) இன்பத்தால் நிறைந்த அவன், மீண்டும் வைசம்பாயனரிடம், இறந்தோர் மீண்டும் தோன்றும் காரியத்தைக் குறித்துக் கேட்கும் வகையில், "உடல் அழிந்தவர்கள் அதே வடிவில் மீண்டும் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்?" என்று கேட்டான்.(2) இவ்வாறு கேட்கப்பட்டவரும், பேசுபவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான அந்த வியாசரின் சீடர் {வைசம்பாயனர்}, ஜனமேஜயனிடம் இவ்வாறு பதிலளித்தார்.(3)

Thursday, December 19, 2019

யாகம், தானம், தவம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 91

Sacrifice, gift and penance! | Aswamedha-Parva-Section-91 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 76)


பதிவின் சுருக்கம் : தானம் மற்றும் தவங்களால் ஸ்வர்க்கம் முதலியன கிட்டுமென்றும், ஜீவ ஹிம்ஸைக்குக் காரணமான யாகம் சிறந்ததல்ல என்றும் சொன்ன வைசம்பாயனர்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பலமிக்க முனிவரே, மன்னர்கள் வேள்விகளில் பற்றுள்ளவர்கள். பெரும் முனிவர்கள் தவங்களில் பற்றுள்ளவர்கள். கல்விமான்களான பிராமணர்கள், மன அமைதி, அமைதியான நடத்தை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயில்கின்றனர்.(1) எனவே, வேள்விகளின் கனிகளுடன் ஒப்பிடத்தக்க வகையில் இவ்வுலகில் வேறு எதுவும் காணக்கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதுவே என் தீர்மானமாகும். மேலும் அந்தத் தீர்மானமும், ஐயமின்றிச் சரியானதாகத் தெரிகிறது.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, எண்ணற்ற மன்னர்கள், வேள்விகளில் தேவர்களை வழிபட்டு இம்மையில் உயர்ந்த புகழையும், மறுமையில் சொர்க்கத்தையும் அடைந்தனர்.(3) பெரும் சக்தியையும், ஆயிரம் கண்களையும் கொண்டவனும், தேவர்களின் பலமிக்கத் தலைவனுமான இந்திரன், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தே தேவர்களின் மீதான அரசுரிமையை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைந்தான்.(4) மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றும் அர்ஜுனனுடன் கூடியவராக, செழிப்பிலும், ஆற்றலிலும் தேவர்களின் தலைவனுக்கு ஒப்பானவனாக இருக்கும்போது,(5) அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியின் பெரும் குதிரை வேள்வியை அந்தக் கீரி ஏன் சிறுமைப்படுத்தியது?" என்று கேட்டான்.(6)

Wednesday, December 12, 2018

வியாசரின் முற்பிறவி - அபாந்தரதமஸ்! - சாந்திபர்வம் பகுதி – 350

The former life of Vyasa - Apantaratamas! | Shanti-Parva-Section-350 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 177)


பதிவின் சுருக்கம் : வியாசர் விஷ்ணுவுக்கு மகனாகப் பிறந்த பழங்கதை; பல்வேறு வழிபாட்டு மரபுகளும்; அவை சுட்டும் இறுதி கதியும்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவரே, சாங்கிய அமைப்பு, பஞ்சராத்திர சாத்திரங்கள், வேத ஆரண்யகங்கள் ஆகிய பல்வேறு ஞான அமைப்புகள் அல்லது அற அமைப்புகளே தற்போது உலகில் இருக்கின்றன.(1) இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரே போன்ற கடமை நடைமுறைகளைப் போதிக்கின்றனவா? அல்லது ஓ! தவசியே, அவற்றால் போதிக்கப்படும் கடமைகளின் நடைமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவையா? என்னால் கேட்கப்படும் நீர், பிரவிருத்தி குறித்து முறையான வகையில் உரைப்பீராக" என்று கேட்டான்.(2)

Friday, November 30, 2018

வியாசரின் நாராயணீயம்! - சாந்திபர்வம் பகுதி – 341

Narayaneeya of Vyasa! | Shanti-Parva-Section-341 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 168)


பதிவின் சுருக்கம் : பிரம்மன் முதலிய தேவர்கள் தவமிருந்ததையும்; நாராயணன் அவர்களுக்கு வரமளித்ததையும், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி அறங்களை நாராயணன் பிரம்மனுக்குச் சொன்னதையும் தமது சீடர்களுக்குச் சொன்ன வியாசர்...


சௌனகர் {சௌதியிடம்}, "வேதங்களையும், அதன் அங்கங்களையும் முழுமையாக அறிந்தவனும், சிறப்புமிக்கத் தேவனும், பலமிக்கவனுமான நாராயணன், ஒரே நேரத்தில் வேள்விகளைச் செய்பவனாகவும், அவற்றை அனுபவிப்பவனாகவும் எவ்வாறு இருக்கிறான்?(1) மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன், (தவிர்க்கும் தன்மையான) நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுகிறான். உண்மையில், நிவிருத்தியின் கடமைகளை அந்தப் பலமிக்கப் புனிதமானவனே விதித்திருக்கிறான்.(2) அவ்வாறிருக்கையில், பிரவிருத்தி அறத்தின் மூலம் விளையும் வேள்விப் பங்குகளைத் தேவர்கள் பலர் ஏன் எடுத்துக் கொள்கின்றனர்? தவிர்க்கும் அறத்தின் விதிகளைச் சிலர் பின்பற்றுகின்றனர், அவன் ஏன் தன் மனோநிலைக்கு முரணாகச் சிலரை படைத்திருக்கிறான்?(3) ஓ! சூதா, இந்த எங்கள் ஐயங்களை விலக்குவாயாக. இந்த ஐயம் நித்தியமானதாகவும், பெரும்புதிர் தொடர்புடையதாகவும் தெரிகிறது. (பிற) சாத்திரங்களுக்கு இணக்கமானவையும், நாராயணன் குறித்தவையுமான கதைகள் அனைத்தையும் நீ கேட்டிருக்கிறாய்" என்றார் {சௌனகர்}.(4)

Wednesday, December 28, 2016

ஜனமேஜயன் கேள்வி! - கர்ண பர்வம் பகுதி – 01

Janamejaya's enquiry! | Karna-Parva-Section-01 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துரோணர் இறந்த பிறகு, துரியோதனனும், பிற மன்னர்களும் அவரது மகனிடம் சென்றது; கர்ணனைத் தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு போரிடச் சென்றது; இரண்டு நாட்கள் கடும் போருக்குப் பிறகு அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்படுவது ஆகியவற்றை வைசம்பாயனர் சொல்வது; போரை விவரமாகச் சொல்லும்படி ஜனமேஜயன் கேட்டுக் கொண்டது…


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, துரோணர் கொல்லப்பட்டதும், துரியோதனன் தலைமையிலான (கௌரவப் படையின்) அரசப் போர்வீரர்கள் அனைவரும், இதயம் நிறைந்த பெருங்கவலையுடன், துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்றனர்.(1) துரோணரின் இழப்பால் அழுதபடியே இருந்த தங்கள் உற்சாகமற்ற நிலையின் விளைவால், சக்தியை இழந்து, துயரால் பீடிக்கப்பட்ட அவர்கள், சரத்வான் மகளின் {கிருபியின்} மகனை {அஸ்வத்தாமனைச்} சுற்றி அமர்ந்தனர்.(2) சாத்திரங்களில் காணப்படும் கருத்துகளால் சற்று ஆறுதலடைந்த அந்தப் பூமியின் ஆட்சியாளர்கள், இரவு வந்ததும் தங்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர்.(3)


எனினும், ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, தங்கள் வசிப்பிடங்களில் இருந்த அந்தப் பூமியின் தலைவர்களால் எந்த மகிழ்ச்சியையும் உணரமுடியவில்லை. மிகப்பெரும் படுகொலைகளை நினைத்துப் பார்த்த அவர்களால் உறங்கவும் முடியவில்லை.(4) குறிப்பாகச் சூதன் மகன் (கர்ணன்), மன்னன் சுயோதனன் {துரியோதனன்}, துச்சாசனன், சகுனி ஆகியோரால் உறங்கவே முடியவில்லை.(5) இந்த நால்வரும், உயர் ஆன்மப் பாண்டவர்களுக்குத் தாங்கள் ஏற்படுத்திய துயரங்களை நினைத்துப் பார்த்தபடியே அவ்விரவை துரியோதனனின் பாசறையில் ஒன்றாகக் கழித்தனர்.(6) முன்பு அவர்கள், பகடையாட்டத்தால் துயரில் மூழ்கியிருந்த திரௌபதியைச் சபைக்குக் கொண்டு வந்தனர்.

அதை நினைத்துப் பார்த்த அவர்கள், கவலை நிறைந்த இதயங்களுடன் பெரும் வருத்தத்தை அடைந்தனர்.(7) சூதாட்டத்தின் விளைவால் (பாண்டவர்களுக்கு) ஏற்படுத்தப்பட்ட அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அவ்விரவை நூறு வருடங்களைப் போலக் கழித்தனர்.(8)

காலை விடிந்ததும், அவர்கள் அனைவரும் இயல்பு விதிகளை நோற்று, வழக்கமான தங்கள் சடங்குகளைச் செய்தனர்.(9) வழக்கமான சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓரளவுக்கு ஆறுதலை அடைந்த அவர்கள், தங்கள் துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, போரிட வெளியே வந்து,(10) கர்ணனின் மணிக்கட்டில் மங்கல நாணைக் கட்டி, அவனைத் {கர்ணனைத்} தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு, தயிர்ப்பாத்திரங்கள், தெளிந்த நெய், அக்ஷதங்கள் [1], தங்க நாணயங்கள், பசுக்கள், ரத்தினங்கள், நகைகள், விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தும், கட்டியங்கூறுவோர் {சூதர்கள்}, இசைக்கலைஞர்கள் {மாகதர்கள்}, துதிபாடிகள் {வந்திகள்} ஆகியோரை வெற்றித் துதிகளால் தங்களைப் பாடச் செய்தும், அவர்களைத் தங்களின் வெற்றிக்காக வேண்டச் செய்தனர்.(11,12) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்களும், தங்கள் காலைச் சடங்குகளைச் செய்த பிறகு, போரிடும் தீர்மானத்துடன் தங்கள் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(13)

[1] "அக்ஷதங்கள் என்பன, ஒருவேளை பூர்ண பாத்திரங்கள், அதாவது, சோளம் மற்றும் பிற பயனுள்ள பொருட்களால் விளிம்பு வரை நிறைந்த குறிப்பிட்ட பாத்திரங்கள் என்று பொருள் கொள்ளலாம். முழுமையாகப் பார்த்தால் இது மங்கலத்தன்மையைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கடும்போர் தொடங்கியது.(14) கர்ணனுடைய படைத்தலைமையின் போது, குரு மற்றும் பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இரண்டு நாட்களுக்கு நீடித்தது.(15) போரில் தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற விருஷன் (கர்ணன்), இறுதியாகத் தார்தராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(16) பிறகு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பிய சஞ்சயன், குருஜாங்கலத்தில் நடைபெற்ற அனைத்தையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(17)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பீஷ்மர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்டவனும், அம்பிகையின் மகனுமான முதிர்ந்த மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தான்.(18) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, துரியோதனனின் நலன் விரும்பியான கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரில் மூழ்கியும், எவ்வாறு அவன் {திருதராஷ்டிரன்} உயிரோடு இருந்தான்?(19) தன் மகன்களின் வெற்றி எவனிடம் இருக்கிறது என அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} நினைத்தானோ, அவன் {கர்ணன்} வீழ்ந்த போதும், எவ்வாறு அவனால் {திருதராஷ்டிரனால்} உயிர் தரித்திருக்க முடிந்தது?(20) 

கர்ணனின் மரணத்தைக் கேட்ட பிறகும் மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடாமல் இருந்தான் எனும்போது, எத்தகு பெரும் துயரச் சூழ்நிலைகளிலும் மனிதர்கள் தங்கள் உயிரை விடுவது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(21) ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, சந்தனுவின் மதிப்புமிக்க மகன் {பீஷ்மர்}, பாஹ்லீகன், துரோணர், சோமதத்தன், பூரிஸ்ரவஸ், பிற நண்பர்கள், தன் மகன்கள், பேரன்கள் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடவில்லை எனும்போது, ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, ஒருவன் உயிரை விடுவது என்பது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(22,23) உண்மையாக நடந்தவாறே இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் மூதாதையரின் உயர்ந்த சாதனைகளைக் கேட்பதில் நான் நிறைவை அடையவில்லை" என்றான் {ஜனமேஜயன்}.(24)
----------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 1-ல் உள்ள சுலோகங்கள் : 24


ஆங்கிலத்தில் | In English

Monday, August 03, 2015

போர் உடன்படிக்கைகள்! - பீஷ்ம பர்வம் பகுதி -001

War Covenants! | Bhishma Parva - Section 001 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : கௌரவர்களும், பாண்டவர்களும் குருக்ஷேத்திரத்தில் கூடியது; தங்களுக்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும்...

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரத  என்ற இதிகாசம்}  சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "குருக்கள் {கௌரவர்கள்}, பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கூடியிருந்த உயர் ஆன்ம மன்னர்கள் ஆகிய அந்த வீரர்கள் எப்படிப் போரிட்டனர்?" என்று கேட்டான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, சொன்னார் "ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, குருக்கள், பாண்டவர்கள், சோமகர்கள் ஆகிய அந்த வீரர்கள், புனிதவெளியான [1] குருக்ஷேத்திரத்தில் எப்படிப் போரிட்டார்கள் என்பதைக் கேட்பாயாக. சோமகர்களுடன் குருக்ஷேத்திரத்திற்குள் நுழைந்த பெரும் பலம் படைத்த பாண்டவர்கள், கௌரவர்களுக்கு எதிரான வெற்றியை விரும்பி முன்னேறினர். வேதங்களின் கல்வியில் சாதித்த (அவர்கள் {பாண்டவர்கள்}) அனைவரும் போரில் பெருமகிழ்ச்சியை அடைந்தனர். போரில் வெற்றியை எதிர்பார்த்து, தங்கள் துருப்புகளுடன் (அவர்கள் {பாண்டவர்கள்}) அந்தப் போரை எதிர் கொண்டனர். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படையை அணுகியவர்களும் போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்த வீரர்கள், தங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கி வைத்துக் கொண்டு, (அந்த வெளியில் {களத்தின்}) மேற்குப் பகுதியில் தங்கள் துருப்புகளை நிறுத்தினர். குந்தியின் மகனான யுதிஷ்டிரன் சமந்தபஞ்சகம் {குருஷேத்திரம்} என்று அழைக்கப்பட்ட பகுதிக்கும் அப்பால், ஆயிரக்கணக்கான கூடாரங்களை விதிப்படி அமைத்தான்.

[1] தபஸ்-க்ஷேத்திரம் = இந்தப் பகை வீடுகளுக்கு {கௌரவ மற்றும் பாண்டவர்களுக்கு) பொதுவான மூதாதையான குரு என்பவன் இங்கே தனது தவத்துறவுகளை மேற்கொண்டான். அந்தக் குருவின் காலத்தில் இருந்து, இங்கே பல தவசிகள் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டனர். எனவே இது குருக்ஷேத்திரம் என்றும் தபக்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுவதாகக் கங்குலி குறிப்பிடுகிறார்.

(வீட்டில்) குழந்தைகள் மற்றும் முதியவர்களை மட்டுமே விட்டுவிட்டு, குதிரைகள் மற்றும் மனிதர்களும் இன்றி, தேர்கள் மற்றும் யானைகளும் இன்றி இருந்த முழுப் பூமியும் வெறுமையாகத் தெரிந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, சூரியன் தனது கதிர்களை வடிக்கும் [2] ஜம்பூத்வீபப் பகுதி முழுவதிலும் இருந்து படைகள் சேகரிக்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள், ஆறுகள், மலைகள், வனங்கள் ஆகியவற்றில் பல யோஜனைகளுக்குப் பரந்த பகுதியில் அனைத்து இனங்களைச் [3] சார்ந்த மனிதர்களும் கூடினர். மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், தங்கள் விலங்குகளோடு சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் அற்புத உணவையும், பிற இன்பநுகர் பொருட்களையும் வழங்கினான். மேலும் யுதிஷ்டிரன், அவர்களுக்குப் பல்வேறு நோட்ட மொழிகளை {அடையாளச் சொற்களை} நிர்ணயித்தான். அவற்றைச் சொல்லும் ஒருவன், பாண்டவர்களைச் சேர்ந்தவன் என்பதை அறிவதற்காக இதைச் செய்தான். அந்தக் குரு குலத்தின் வழித்தோன்றல் {யுதிஷ்டிரன்}, போர் நடைபெறும் நேரத்தில் அவர்களை அறிந்து கொள்வதற்காக அவர்கள் அனைவருக்கும் பதக்கங்களையும், பெயர்களையும் தீர்மானித்தான்.

[2] "வெப்பத்தைக் கொடுக்கும்" என்பதே உண்மை பொருள் என்கிறார் கங்குலி.

[3] மூலத்தில் இந்த இடத்தில் "வர்ணம்" என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அது சாதிகளைக் குறிப்பதல்ல, இனங்களையே குறிக்கும் என்கிறார் கங்குலி.

பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனின்} கொடிநுனியைக் கண்டவனும், தனது தலைக்கு மேலே வெண்குடையைக் கொண்டவனும், ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் இருப்பவனும், தனது நூறு தம்பிகளால் சூழப்பட்டவனுமான உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, (தனது தரப்பில் உள்ள) மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எதிராகத் தனது துருப்புகளை அணிவகுத்தான். போரில் மகிழ்ச்சி கொள்ளும் பாஞ்சாலர்கள் துரியோதனனைக் கண்டதும், மகிழ்ச்சியால் நிறைந்து, உரத்த ஒலியைத் தரும் தங்கள் சங்குகளை ஊதினர், இனிய ஒலி தரும் பேரிகைகளையும் முழங்கினர்.

அந்தத் துருப்புகள் இப்படி மகிழ்ச்சியடைவதைக் கண்ட பாண்டுவின் மகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் சக்தி கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் இதயத்தில் மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஒரே தேரில் அமர்ந்திருந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்து, தங்கள் தெய்வீகச் சங்குகளை முழங்கினர். அந்த இருவருக்கும் சொந்தமான பெரியதின் {Gigantea} {சங்கான பாஞ்சஜன்யத்தின்} முழக்கத்தையும், பெருக்கத்தின் {Theodotes} {சங்கான தேவதத்தத்தின்} உரத்த வெடிப்பையும் கேட்ட எதிராளிகள் மலம் மற்றும் சிறுநீரைக் {மலஜலத்தைக்} கழித்தனர். கர்ஜிக்கும் சிங்கத்தின் குரலைக் கேட்டு அச்சத்தால் நிறையும் பிற விலங்குகளைப் போல, அந்த உரத்த வெடிப்புகளைக் கேட்ட படையும் அப்படியே அச்சத்தால் நிறைந்தன. அச்சம்நிறைந்த புழுதியெழுந்ததால் ஏதும் காணப்படவில்லை, ஏனெனில் திடீரெனச் சூரியனும் அவற்றால் மூடப்பட்டதால், அது {சூரியன்} மறைந்ததைப் {அஸ்தமித்ததைப்} போலத் தெரிந்தது. கருநிற மேகம் ஒன்று சுற்றிலும் இருந்த அந்தத் துருப்புகளின் மேல் இறைச்சியையும் இரத்தத்தையும் பொழிந்தது. இவையாவும் இயல்புக்கு மிக்கதாகத் தெரிந்தது.

மண்ணோடு சேர்ந்த பருக்கைக் கற்களைச் சுமந்து, அங்கே எழுந்த காற்றானது நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் போராளிகளை துன்புறுத்தியது. (இவை அனைத்தையும் விட) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா} மகிழ்ச்சி நிறைந்து போரைச் சந்திக்க நின்ற அந்தப் படைகள் இரண்டும், கலங்கிய கடல்கள் இரண்டைப் போலக் குருக்ஷேத்திரக் களத்தில் நின்றன. உண்மையில், அந்த இருபடைகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது, யுகத்தின் முடிவின் போது ஏற்படும் இரண்டு கடல்களின் மோதலைப் போல இருந்தது. கௌரவர்களால் மொய்க்கப்பட்ட அந்தப் பெரும் படையின் விளைவாக (வீட்டில்) சிறுவரும் முதியவரும் மட்டுமே இருந்ததால் முழுப் பூமியும் வெறுமையாக இருந்தது.

பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {ஜனமேஜயா}, குருக்களும், பாண்டவர்கள் மற்றும் சோமகர்களும் சில உடன்படிக்கைகளையும், பல்வேறு விதமான மோதல்கள் சம்பந்தமாக விதிகளையும் தங்களுக்குள் நிர்ணயித்துக் கொண்டனர்.

  1. சமமான சூழல் கொண்டவர்கள் {சமமானவர்களே} தங்களுக்குள் மோதிக் கொண்டு நன்கு போரிட வேண்டும்.  
  2. நன்கு போராடிய பிறகு, (துன்பத்தைக் கண்டு அஞ்சாமல்) போராளிகள் விலகினாலும், அதுவும் நமக்கு நிறைவையே தர வேண்டும். {போரிட்டு முடிந்த பிறகு, நமக்குள் அன்பு உண்டாக வேண்டும்}. 
  3. சொற்போட்டிகளில் ஈடுபடுபவர்களுடன் சொற்களாலேயே போரிட வேண்டும். [4]  
  4. படையணியை விட்டு விலகியவர்கள் கொல்லப்படக் கூடாது. 
  5. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனையே எதிராளியாகக் கொள்ள வேண்டும்; யானையின் கழுத்தில் இருப்பவன், அதே போன்ற போராளியையே தனது எதிரியாகக் கொள்ள வேண்டும்; ஒரு குதிரை மற்றொரு குதிரையையே சந்திக்க வேண்டும்; ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஒரு காலாட்படை வீரர் மற்றொரு காலாட்படை வீரரையே சந்திக்க வேண்டும். 
  6. உடற்தகுதி, விருப்பம், துணிவு, பலம் ஆகிய கருதுகோள்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஒருவன் மற்றவனுக்கு அறிவிப்பைச் செய்துவிட்டு அடிக்க வேண்டும். எவனும், தயாராக இல்லாதவனையோ [5], பீதியால் தாக்குண்டவனையோ அடிக்கக் கூடாது.
  7. வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒருவன், இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன், பின்வாங்கும் ஒருவன், ஆயுதம் தகுதியற்றுவிட்டதாகக் காண்பிக்கும் ஒருவன், கவசம் தரிக்காதவன் ஆகியோர் எப்போதும் அடிக்கப்படக்கூடாது.  
  8. தேரோட்டிகள், (தேரில் பூட்டப்பட்ட அல்லது ஆயுதங்களைச் சுமந்து வரும்) விலங்குகள், ஆயுதங்களைச் சுமந்து வருவதில் ஈடுபடும் மனிதர்கள், பேரிகைகள் அடிப்பவர்கள் மற்றும் சங்கை முழக்குபவர்கள் ஆகியோர் ஒருபோதும் அடிக்கப்படக்கூடாது. 

[4] தனியாக விடப்பட்டவன் கொல்லப்படக்கூடாது.

[5] உண்மையில், "நம்பிக்கைக்கு உரித்தான" என்பதே இங்குப் பொருள் என்கிறார் கங்குலி. அஃதாவது இப்போது தாக்கமாட்டான் என்ற நம்பிக்கையுடன் தயாரில்லாமல் இருக்கும் ஒருவனை அடிக்கக்கூடாது என்பதே இங்குப் பொருள்.

 {மேற்கண்ட} இந்த உடன்படிக்கைகளைச் செய்து கொண்ட குருக்கள், பாண்டவர்கள் மற்றும் சோமகர்கள், மிகுந்த ஆச்சரியத்துடன் ஒருவருக்கொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர். (இப்படித் தங்கள் படைகளுடன்) நிலை நின்ற அந்த மனிதர்களில் காளைகள், அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள், தங்கள் படைகளுடன் சேர்ந்து, இதயத்தில் மகிழ்ந்தனர்; அந்த மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் பிரதிபலித்தது" என்றார் {வைசம்பாயனர்}.


ஆங்கிலத்தில் | In English

Tuesday, July 30, 2013

அமானுஷ்ய பிறப்புகள்! - ஆதிபர்வம் பகுதி 167

Supernatural Births! | Adi Parva - Section 167 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : பிராமணன் வீட்டிற்கு வந்த புதிய விருந்தினர்; திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதியின் அமானுஷ்ய பிறப்புகளைக் குறித்துச் சொன்னது; திரௌபதிக்கு நடக்க இருக்கும் சுயம்வரத்தைக் குறித்தும் சொன்னது...

{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, "குடிமக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகு, பாண்டவர்கள் அந்த ஏகச்சக்கர நகரத்தில் முன்பு போலவே தொடர்ந்து வசித்தனர்".

Saturday, May 11, 2013

அறம் வளர்க்கும் குல வரலாறு! - ஆதிபர்வம் - பகுதி 95

The History that increases virtue! | Adi Parva - Section 95 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 31)

பதிவின் சுருக்கம் : பூருவின் குல வரலாறு நீட்சி; நாட்டை இழந்து மீண்டும் அடைந்த சம்வர்ணனின் வரலாறு; பாரதம் அறிவதால் உண்டாகும் பலன்...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே! நான் இதுவரை எனது மூதாதையர்களின் பெரும் வரலாறுகளைக் கேட்டறிந்தேன். இந்தக் குலத்தில் பிறந்த பெரும் ஏகாதிபதிகளைப் பற்றியும் அறிந்தேன்.(1) இருப்பினும் நான் மனநிறைவு கொள்ளவில்லை. அந்தப் பெரும் வரலாறுகள் சுருக்கமாகவே உரைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, ஓ பிராமணரே! அந்த வரலாறுகளைப் படைப்புத் தலைவனான மனுவில் தொடங்கி விரிவாகச் சொல்வீராக. இந்த வரலாறுகளை யார் தான் புனிதமாகக் கருதமாட்டார்கள்?(2,3) அவர்கள் கடைப்பிடித்த அறங்கள், சாதனைகள், உயர்ந்த பண்புகள் ஆகியவற்றால் அந்த ஏகாதிபதிகளின் புகழ் மூவுலகங்களுக்கும் பரவும்படி உயர்ந்தது.(4) அவர்களின் ஈகை, ஆற்றல், உடல் பலம், மனோ பலம், சக்தி, விடாமுயற்சி ஆகியவற்றைத் தேன் போன்ற இனிமையான உங்கள் சொற்களால் கேட்டேன். இருப்பினும் நான் மனநிறைவு கொள்ளவில்லை" என்றான்.(5)

Thursday, May 09, 2013

பூருவின் குல வரலாறு! - பகுதி 94

History of Puru's lineage! | Adi Parva - Section 94 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 30)

பதிவின் சுருக்கம் : பூருவின் குல வரலாறு; தன் வம்சத்திற்குத் தனது பெயரையே வைத்த பரதன்...

ஜனமேஜயன், "ஓ வழிபடத்தகுந்தவரே {வைசம்பாயனரே}!, பூருவின் வழித்தோன்றல்களான மன்னர்களின் வரலாறுகளைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். பெரும் வீரத்தைக் கொண்டு பெரும் சாதனைகளைச் செய்த அம்மன்னர்களை ஒவ்வொருவராக எனக்குச் சொல்வீராக.(1) பூருவின் பரம்பரையில் வந்த எந்த மன்னனும் நன்னடத்தையில்லாமலோ, வீரமற்றோ, புத்திரப்பேறு இல்லாமலோ இருந்ததாக நிச்சயமாக நான் கேள்விப்படவில்லை.(2) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! சிறந்த கல்வியும், சிறந்த சாதனைகளையும் கொண்ட அந்தப் புகழ்வாய்ந்த ஏகாதிபதிகளின் வரலாறுகளை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(3)

Wednesday, March 20, 2013

பாரதம் படிப்பது வேதம் படிப்பதற்குச் சமம்! | ஆதிபர்வம் - பகுதி 62

Reading Bharatha is equal unto Vedas! | Adi Parva - Section 62 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 4)

பதிவின் சுருக்கம் : மகாபாரதப் பாத்திரங்களின் செயல்பாட்டில் உள்ள தன் சந்தேகங்களைக் கேள்விகளாக வைசம்பாயனரிடம் வைத்த ஜனமேஜயன்; மஹாபாரதத்தை விரிவாகச் சொல்லும்படி வைசம்பாயனரை வேண்டினான்; மகாபாரதத்தின் பெருமைகளை எடுத்துரைத்த வைசம்பாயனர்...

ஜனமேஜயன் "ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {வைசம்பாயனரே} குருக்களின் {குரு குலத்தவர்களின்} பெரும் செயல்களை விளக்குவதும், மஹாபாரதம் என்று அழைக்கப்படுவதுமான வரலாற்றை நீர் சுருக்கமாகச் சொல்லிவிட்ட போதிலும்,(1) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {வைசம்பாயனரே} அந்த அற்புதமான விவரிப்பை முழுமையாகச் சொல்வீராக. அதைக் கேட்பதில் நான் {ஜனமேஜயனாகிய நான்} பெரும் ஆவல் கொண்டுள்ளேன்.(2) எனவே, அதை நீர் முழுமையாகச் சொல்வீராக. இப்படி அந்தப் பெரும் வரலாற்றை மணிச்சுருக்கமாகக் கேட்பதில் நான் மனநிறைவுகொள்ளவில்லை.(3) கொல்லத்தகாதவர்களைக் {ஆசிரியர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும்} கொன்ற அந்த அறவோர் {பாண்டவர்கள்}, அதற்காகக் கொண்டாடப்படுகிறார்கள் என்றால் அதன் காரணம் சிறியதாக இருக்கமுடியாது.(4) நேர்மையானவர்களும், தாங்களே பழி வாங்கும் திறன் கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்}, ஏன், அந்தப் பொல்லாத குருக்களின் {கௌரவர்களின்} துன்புறுத்தலை அமைதியாக ஏற்றனர்?(5)

பாண்டவர் வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 61

The History of Pandavas! | Adi Parva - Section 61 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : மகாபாரதத்தின் கதைச்சுருக்கம்...

வைசம்பாயனர் சொன்னார், "எனது உடலின் எட்டுப் பகுதிகளும் தரையைத் தொட,[1] என் ஆசானை {வியாசரை} பக்தியுடனும், மரியாதையுடனும் முதற்கண் வணங்கி, இந்தச் சபையில் இருக்கும் பிராமணர்களையும், மற்ற கற்றவர்களையும் முழு மனத்துடன் வழிபட்டு, மூவுலகங்களிலும் புத்திசாலிகளில் முதன்மையான இந்த உயரான்ம முனிவர் வியாசரிடம் நான் கேட்டவற்றை முழுமையாக உரைக்கின்றேன்.(1,2) இதை அறியப்போகும் ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நீ பாரதம் என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பைக் கேட்கத் தகுதி வாய்ந்தவனே. எனது ஆசானின் {வியாசரின்} கட்டளையில் தூண்டப்பட்டிருப்பதால் எனது இதயத்தில் அச்சத்தை[2]  நான் உணரவில்லை.(3) "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒற்றுமையின்மை நிலவியது ஏன் என்றும், (குருக்களின்) ஆளும் ஆசையினால் நேர்ந்த சூதாட்டத்தைத் தொடர்ந்து, வனவாசம் ஏன் விதிக்கப்பட்டது என்றும் கேட்பாயாக. பாரதக் குலத்தில் சிறந்தவனே! {ஜனமேஜயனே!} கேட்க விரும்பிய உனக்கு அனைத்தையும் சொல்வேன்.(4,5)

மஹாபாரதம் ஆரம்பம்! | ஆதிபர்வம் - பகுதி 60

Mahabharatham Begins! | Adi Parva - Section 60 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் யாகத்திற்கு வியாசர் வருவது; வியாசரின் பெருமை; பாண்டவர் வரலாற்றை ஜனமேஜயன் வியாசரிடம் கேட்பது; அக்கதையைச் சொல்லும்படி வைசம்பாயனரைப் பணித்த வியாசர்...

சௌதி சொன்னார், "ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார்.(1) அந்தப் பாண்டவர்களின் பாட்டன் {வியாசர்}, கன்னிகையான கலிக்கும் {சத்தியவதிக்கும்}, சக்தியின்[1] மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார்.(2) அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே {விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே} தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார்.(3)

Wednesday, January 23, 2013

பிருகு பரம்பரை | ஆதிபர்வம் - பகுதி 5

Generations of Bhrigu! | Adi Parva - Section 5 | Mahabharata In Tamil

(பௌலோம பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : பிருகு குலத்தின் வரலாற்றைக் கேட்ட சௌனகர்; அவற்றைச் சௌனகருக்குச் சொன்ன சௌதி; புலோமையை மணந்த பிருகு; அக்னியிடம் கேள்வி கேட்ட ராட்சசன்...

"சௌனகர் சொன்னார், "குழந்தாய் {சௌதியே}, முன்பு, உன் தகப்பனார் அனைத்துப் புராணங்களையும், பாரதத்தையும் கிருஷ்ண துவைபாயனரிடம் கற்றுத் தேர்ந்திருந்தார். நீயும் அவற்றைக் கற்றறிந்திருக்கிறாயா?(1) அந்தப் பண்டைய ஆவணங்களில் வரிசை படுத்தப்பட்டிருப்பனவான, ஆர்வத்தைத் தூண்டும் கதைகள், விவேகமுள்ள முதல் தலைமுறையினரின் வரலாறுகள் ஆகிய அனைத்தையும் உன் தந்தை திரும்பக் கூறும்போது நாங்கள் கேட்டிருக்கிறோம்.(2) முதலில், பிருகு குலத்தின் வரலாற்றையே நான் அறிய விரும்புகிறேன். அந்த வரலாற்றை மறுபடியும் நீ விவரித்துச் சொல்வாயாக, நீ சொல்வதை நாங்கள் கவனத்துடன் கேட்போம்" என்றார்.(3)

Thursday, March 01, 2012

வைசம்பாயனர்

வியாசர் - வைசம்பாயனர்
வைசம்பாயனர் பெயர் மஹாபாரதத்தில் 1238 முறை சொல்லப்பட்டிருக்கிறது. வைசம்பாயனர், வியாசரின் சீடராவார். யஜூர் வேதத்தைக் கற்பித்தவர் இவர் எனச் சொல்லப்படுகிறது. இவர் தனது குருவான வியாசர் எழுதிய 8,800 அடிகள் கொண்ட ஜெயம் என்ற நூலை 24,000 அடிகள் கொண்டதாக விரிவுபடுத்தி அர்ஜுனனின் பேரனும் பரிக்ஷித்தின் மகனுமான ஜனமேஜயன் நடத்திய நாக வேள்வியில் உரைத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஜனமேயன் நடத்திய
நாகவேள்வி
(நாகவேள்வி)

மேலும் விவரத்திற்கு : http://en.wikipedia.org/wiki/Vaisampayana

மஹாபாரதத்தில் வைசம்பாயனர் வரும் சில இடங்கள்
http://mahabharatham.arasan.info/search/label/வைசம்பாயனர்

Mbh.1.1.11
Mbh.1.1.17
Mbh.1.1.80
Mbh.1.1.88
Mbh.1.5.985
Mbh.1.61.2901
Mbh.1.62.2975
Mbh.1.63.3026





ஜனமேயன் நடத்திய
நாகவேள்வி
(நாகவேள்வி)Mbh.1.60.2898
Mbh.1.63.3145
Mbh.1.64.3192
Mbh.1.64.3243
Mbh.1.65.3250
Mbh.1.65.3258
Mbh.1.66.3307
Mbh.1.67.3431
Mbh.15.1.9
Mbh.15.2.38
Mbh.15.2.54
Mbh.15.3.73
Mbh.15.3.172
Mbh.15.3.185
Mbh.15.3.196
Mbh.15.4.225
Mbh.15.4.232
Mbh.15.4.249
Mbh.15.5.256
Mbh.15.8.399
Mbh.15.8.408
Mbh.15.10.458
Mbh.15.10.462
Mbh.15.10.526
Mbh.15.11.531
Mbh.15.12.572
Mbh.15.13.586
Mbh.15.14.609
Mbh.15.15.627
Mbh.15.16.646
Mbh.15.16.671
Mbh.15.18.730
Mbh.15.19.768
Mbh.15.20.793
Mbh.15.20.822
Mbh.15.20.847
Mbh.15.21.851
Mbh.15.22.872
Mbh.15.23.908
Mbh.15.24.928
Mbh.15.25.951
Mbh.15.25.978
Mbh.15.26.999
Mbh.15.26.1008
Mbh.15.27.1053
Mbh.15.28.1087
Mbh.15.29.1138
Mbh.15.29.1175
Mbh.15.31.1285
Mbh.15.32.1291
Mbh.15.33.1317
Mbh.15.34.1354
Mbh.15.34.1356
Mbh.15.35.1392
Mbh.15.35.1420
Mbh.15.36.1422
Mbh.15.36.1461
Mbh.15.36.1472
Mbh.15.37.1529
Mbh.15.37.1595
Mbh.15.39.1653

பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:vaisampayana

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்