Showing posts with label குந்தி. Show all posts
Showing posts with label குந்தி. Show all posts

Sunday, January 05, 2020

குந்தியின் கவலை! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 30

The sorrow of Kunti! | Asramavasika-Parva-Section-30 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 2)


பதிவின் சுருக்கம் : கர்ணனின் பிறப்பைக் கூறிய குந்தி; கர்ணனைப் பார்க்க விரும்புவதாக வியாசரிடம் சொன்னது; குந்தியின் ஐயத்தைக் காரணத்துடன் போக்கிய வியாஸர்...


குந்தி, "ஓ! புனிதமானவரே {வியாசரே}, நீர் என் மாமனாராக இருப்பதால் என்னுடைய தேவர்களுக்குத் தேவராகவும் இருக்கிறீர். உண்மையில், நீர் தெய்வங்களுக்கு தெய்வமாக இருக்கிறீர். நீர் என்னுடைய உண்மையான சொற்களைக் கேட்பீராக.(1) மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவரும், கோபம் நிறைந்தவரும், துர்வாசர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு தவசி பிச்சை கேட்டு உண்பதற்காக என் தந்தையின் வீட்டிற்கு வந்தார்[1]. புறம் மற்றும் அக ஒழுக்கத்தின் தூய்மையினாலும், அவர் {துர்வாசர்} செய்த பல பிழைகளைக் காண மறுத்ததாலும் நான் அவரை நிறைவடையச் செய்தேன். கோபத்தைத் தூண்டும் வகையில் அவரது நடத்தை இருந்தாலும் நான் அவரிடம் கோபங்கொள்ளவில்லை.(3) கவனத்துடன் தொண்டாற்றப்பட்ட அந்தப் பெருந்தவசி என்னிடம் உயர்வான நிறைவை அடைந்து எனக்கு ஒரு வரம் அருளும் மனநிலையை எட்டினார். அவர் {துர்வாசர்}, "நான் கொடுக்கும் வரத்தை நீ ஏற்க வேண்டும்" என்பதே அவருடைய சொற்களாகும்.(4)

Saturday, January 04, 2020

அன்னையைக் கண்ட சகாதேவன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 24

Sahadeva beheld his mother! | Asramavasika-Parva-Section-24 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 24)


பதிவின் சுருக்கம் : சதயூபாஸ்ரமத்தை அடைந்த பாண்டவர்கள்; அங்கே திருதராஷ்டிரனைக் காணாமை; யமுனைக்குச் சென்றிருந்த அவர்களைக் கண்ட பாண்டவர்கள்; தாயைக் கண்டு அழுத சகாதேவன்; ஆசிரமம் திரும்பிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தொலைவிலேயே தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய பாண்டவர்கள், மன்னனின் ஆசிரமத்திற்குப் பணிவுடன் கால்நடையாக நடந்து சென்றார்கள்.(1) போராளிகள் அனைவரும், நாட்டின் குடிமக்கள் மற்றும் குரு தலைவர்களின் மனைவிமார் அனைவரும், கால்நடையாகவே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(2) பிறகு பாண்டவர்கள், மான்கூட்டங்கள் நிறைந்ததும், வாழைமரங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான திருதராஷ்டிரனின் புனித ஆசிரமத்தை அடைந்தனர்.(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் பலர், ஆவலால் நிறைந்தவர்களாக, அந்த ஆசிரமத்திற்கு வந்திருக்கும் பாண்டவர்களைக் காண அங்கே வந்தனர்.(4)

Thursday, January 02, 2020

குந்தியைத் தடுத்த திருதராஷ்டிரன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 18

Dhritarashtra dissuades Kunti! | Asramavasika-Parva-Section-18 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 18)


பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் வருத்தத்துடன் திரும்பியது; திருதராஷ்டிரன் முதலியோர் கங்கைக் கரையில் மாலைக் கடன்களைச் செய்து இரவைக் கழித்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாவமற்ற பாண்டவர்கள், குந்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெட்கமடைந்தனர். எனவே, அவர்களும், பாஞ்சால இளவரசியும் {திரௌபதியும்} அவளைப் பின்தொடர்வதை நிறுத்தினர்[1].(1) குந்தி காட்டுக்குச் செல்வதில் உறுதியாக இருப்பதைக் கண்ட பாண்டவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரக்கக் கதறினர்.(2) பிறகு, பாண்டவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம் வந்து அவனை முறையாக வணங்கினர். அதன்பிறகு, திரும்பி வருவதற்குப் பிருதையை {குந்தியைச்} சம்மதிக்க வைக்கத் தவறிய அவர்கள் மேலும் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.(3)

குந்தியின் சமாதானம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 17

Consolation of Kunti! | Asramavasika-Parva-Section-17 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 17)


பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்குச் சமாதானம் கூறிய குந்தி...


குந்தி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ சொல்வது உண்மைதான். மன்னர்களே, நீங்கள் உற்சாகமற்றிருந்தபோது, அவ்வாறே நான் உங்கள் அனைவரையும் தூண்டினேன்.(1) பகடையாட்டத்தில் உங்கள் நாடு உங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்டும், நீங்கள் மகிழ்ச்சியை இழந்ததைக் கண்டும், உங்கள் உற்றார் உறவினரின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களாக உங்களைக் கண்டும், துணிவையும், உயர்ந்த எண்ணங்களையும் நான் உங்கள் மனத்தில் செலுத்தினேன்.(2) மனிதர்களில் முதன்மையானவர்களே, பாண்டுவின் மகன்கள் வீழ்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும், அவர்கள் புகழை இழந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நான் உங்களுக்கு ஊக்கமளித்தேன்.(3)

Monday, December 30, 2019

பின்தொடர்ந்த குந்தி! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 16

Kunti followed! | Asramavasika-Parva-Section-16 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 16)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் காட்டுக்குப் புறப்படும்போது, விதுரனும், சஞ்சயனும் உடன் புறப்பட்டது, யுதிஷ்டிரனும், பீமனும் தடுத்தும் குந்தியும் அவர்களுடன் சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, அந்த நேரத்தில் பூமியிலோ, மாளிகைகளின் மாடியிலோ {உப்பரிகைகளிலோ} நின்று கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் செய்த முழக்கம் பெரிதாக இருந்தது.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, கைகளைக் கூப்பி, பலவீனத்தால் நடுங்கி, இரு பாலினத்தாராலும் நிறைந்திருந்த முக்கிய வீதியின் {ராஜமார்க்கத்தின்} வழியே சிரமத்துடன் நடந்து சென்றான்.(2) யானையின் பெயரால் அழைக்கப்பட்ட {ஹஸ்தினாபுரம்} நகரத்தின் முக்கிய வாயில் வழியே வெளியேறி, மக்கள் கூட்டத்தினரிடம் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் சொன்னான்.(3) மன்னனுடன் {திருதராஷ்டிரனுடன்} செல்வதில் விதுரன் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். கவல்கணன் மகனும், திருதராஷ்டிரனின் முதல் அமைச்சருமான சூதன் சஞ்சயனும் அதே இதயம் கொண்டவனாகவே இருந்தான்![1].(4)

Thursday, December 05, 2019

கிருஷ்ணனிடம் வேண்டிய குந்தி! - அஸ்வமேதபர்வம் பகுதி – 66

Kunti's prayer to Krishna! | Aswamedha-Parva-Section-66 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 51)


பதிவின் சுருக்கம் : சுபத்திரை, பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; இறந்த குழந்தையை உத்தரை ஈன்றது; குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனை வேண்டிய குந்தி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதேவேளையில், விருஷ்ணிகளுடன் கூடிய பெருஞ்சக்தி கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(1) தன் சொந்த நகரமான துவாரகை திரும்புவதற்காக அந்த நகரத்தைவிட்டுச் சென்ற போது, மீண்டும் திரும்பி வருமாறு தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அவன் வேண்டப்பட்டான். எனவே, குதிரை வேள்விக்கெனக் குறிக்கப்பட்ட வேளை வருவதை அறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் (குரு தலைநகரத்திற்குத்) திரும்பி வந்தான்.(2) ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, யுயுதானன் {சாத்யகி}, சாருதேஷ்ணன், சாம்பன், கதன், கிருதவர்மன், சாரணன், நிசடன், உன்முகன் ஆகியோருடனும், சுபத்திரையுடனும், அணிவகுப்பின் தலைமையில் பலதேவனுடனும் வாசுதேவன் {கிருஷ்ணன்} வந்தான்.(4)

Sunday, October 22, 2017

பெண்களைச் சபித்த யுதிஷ்டிரன்! - சாந்திபர்வம் பகுதி – 06

The curse of Yudhishthira on women! | Shanti-Parva-Section-06 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 02)


பதிவின் சுருக்கம்: யுதிஷ்டிரின் சோகத்தைக் கண்டு அவனைத் தேற்றிய குந்தி; குந்தியின் பிழையால் உலகத்தின் பெண்கள் அனைவரையும் சபித்த யுதிஷ்டிரன்; உறவினர்களின் மரணத்தை எண்ணி மனத்தளர்ச்சியடைந்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தெய்வீக முனிவரான நாரதர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார். அரசமுனியான யுதிஷ்டிரன், துயரால் நிறைந்து, தியானத்தில் மூழ்கினான்.(1) உற்சாகமற்று, கவலையில் மூழ்கி, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்த(2) அவ்வீரனை {யுதிஷ்டிரனைக்} கண்ட குந்தி, தானே துயரில் மூழ்கியவளாக, கவலையில் கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்தவளாக, அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவையும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையுமான இந்த இனிய வார்த்தைகளைக் கொண்டு அவனிடம் பேசினாள்:(3) "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, நீ இத்தகு கவலையில் மூழ்குவது உனக்குத் தகாது. ஓ! பெரும் ஞானியே, இந்த உன் கவலையைக் கொன்று, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(4) கர்ணனை, உன்னுடனான சகோதரத்துவத்தை ஏற்கும்படி செய்யக் கடந்த காலங்களில் நான் முயற்சி செய்தேன். ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவனே, தேவன் சூரியனும் அதையே செய்தார்.(5)

Tuesday, October 17, 2017

கர்ணன் உங்கள் அண்ணன்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 27

Karna is your elder brother! | Stri-Parva-Section-27 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 12) [ஜலப்ரதானிக பர்வம் - 01]


பதிவின் சுருக்கம் : கங்கையின் கரைக்கு நீர்க்கடன்களைச் செய்ய வந்த குருக்கள்; கர்ணன் பாண்டவர்களின் அண்ணன் என்ற உண்மையைத் துயரத்துடன் பாண்டவர்களுக்குச் சொன்ன குந்தி; பெருங்கலக்கமடைந்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனின் புலம்பல்; கர்ணனின் குடும்பத்தை வரவழைத்து அவர்களோடு சேர்ந்து நீர்க்கடனைச் செய்த யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "புனித நீர் நிரம்பியதும், பல தடாகங்கள் அடங்கியதும், உயர்ந்த, அகன்ற கரைகளைக் கொண்டதும், பரந்த படுகையைக் கொண்டதுமான மங்கலக் கங்கையை அடைந்த அவர்கள், தங்கள் ஆபரணங்கள், மேலாடைகள், கச்சைகள் மற்றும் இடைக்கச்சைகளைக் களைந்தனர். பெருந்துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருந்த குரு குலப் பெண்கள், தங்கள் தந்தைமார், பேரர்கள், சகோதரர்கள், உறவினர்கள், மகன்கள், மதிப்புக்குரிய பெரியோர்கள், கணவர்கள் ஆகியோருக்கு நீர்த்தர்ப்பணம் செய்தார்கள். கடமைகளை அறிந்த அவர்கள், தங்கள் நண்பர்களுக்காகவும் நீர்ச்சடங்கைச் செய்தனர்.(1-3) அந்த வீரர்களின் மனைவியர், தங்கள் வீரத் தலைவர்களுக்கான இந்தச் சடங்கைச் செய்த போது, (பலரின் பாதங்களால் உண்டான) பாதைகள் மறைந்து போனாலும், அந்த ஓடைக் கடப்பதற்கு எளிதானதாகவே இருந்தது.(4) அந்த ஓடையின் கரைகள், வீரர்களின் துணைவர்களால் {மனைவியரால்} நிறைந்து, அகன்ற பெருங்கடலைப் போலக் கவலையை வெளிப்படுத்தும் வகையில் காட்சியளித்தது.(5)

Friday, October 13, 2017

களங்காணப் புறப்பட்ட அரசமகளிர்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 10

Royal ladies set out to the battlefield! | Stri-Parva-Section-10 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 10) [ஸ்திரீ பர்வம் - 01]


பதிவின் சுருக்கம் : அரச மகளிரை அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் செல்லத் தீர்மானித்த திருதராஷ்டிரன்; குருகுலப் பெண்களைத் தேரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்த விதுரன்; அரச குடும்பமும், பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களுக்கும் ஹஸ்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தப் பாரதக் குலத்தின் காளை (திருதராஷ்டிரன்), விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டான்.(1) மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் {விதுரனிடம்}, "காந்தாரியையும், பாரதக்குல பெண்கள் அனைவரையும் தாமதிக்காமல் இங்கே கொண்டு வருவாயாக. குந்தியையும், அவளுடன் உள்ள பிற பெண்கள் அனைவரையும் இங்கே கொண்டு வருவாயாக" என்றான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன், ஒவ்வொரு கடமையையும் அறிந்த விதுரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, கவலையால் உணர்வுகளை இழந்து தன் தேரில் ஏறினான்.(3) அப்போது, தன் மகன்களின் மரணத்தின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரி, தன் தலைவனின் {திருதராஷ்டிரனின்} ஆணையினால், குந்தி மற்றும் அரச குடும்பத்தின் பிற மகளிரின் துணையுடன், பின்னவன் {திருதராஷ்டிரன்} தனக்காகக் காத்திருந்த இடத்திற்கு வந்தாள்.(4) பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் ஒன்றாக மன்னனிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் சந்தித்தபோது, ஒருவரையொருவர் கைவிரித்து அழைத்து, கவலையால் உரத்த ஓலமிட்டனர்.(5)

Friday, June 26, 2015

"அர்ஜுனனைத் தவிர நால்வரை கொல்லேன்!" என்ற கர்ணன் - உத்யோக பர்வம் பகுதி 146

Except Arjuna, four will not be slained by me!" said Karna| Udyoga Parva - Section 146 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –75)

பதிவின் சுருக்கம் : குந்தி சொன்ன கதை உண்மையே எனச் சூரியன் கர்ணனுக்கு உறுதி அளித்தது; குந்தியை நிந்தித்த கர்ணன், அவள் செய்த குற்றங்களையும், தான் இழந்த சுகங்களையும் சுட்டிக் காட்டியது; துரியோதனானால் விரும்பிய அனைத்தையும் அடைந்த தான் உரிய நேரத்தில் அவனைக் கைவிட முடியாது என்று கர்ணன் சொன்னது; அர்ஜுனனைத் தவிரக் குந்தியின் மற்ற நான்கு மகன்களைக் கொல்ல மாட்டேன் எனக் குந்தியிடம் உறுதியளித்த கர்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குந்தி இப்படிச் சொன்னதும்) சூரிய வட்டிலில் இருந்து வெளிவந்ததும், பாசம் மிகுந்ததுமான ஒரு குரலைக் கர்ணன் கேட்டான். வெகு தூரத்தில் இருந்து வந்த அந்தக் குரல், தந்தையின் பாசத்துடன் சூரியனால் பேசப்பட்டதாகும். (அது {அந்தக் குரல்}), "பிருதை {குந்தி} சொன்ன வார்த்தைகள் உண்மையே. ஓ! கர்ணா, உனது தாயின் {குந்தியின்} வார்த்தைகளின்படி நீ செயல்படுவாயாக. ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, அந்த வார்த்தைகளை நீ முழுமையாகப் பின்பற்றினால், பெரும் நன்மை உனக்கு விளையும்" என்றது {சூரியனின் குரல்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தனது தாயாலும், தனது தந்தையான சூரியனாலேயும் கூட இப்படிச் சொல்லப்பட்டும், கர்ணனின் இதயம் தடுமாற்றமடையவில்லை. அவன் {கர்ணன்} உண்மைக்கு {சத்தியத்துக்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தான்.

அவன் {கர்ணன் குந்தியிடம்}, "ஓ! க்ஷத்திரியப் பெண்மணியே, உனது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதே கடமைகளில் உயர்ந்தது என்று, (என் காரியத்தில்) நீ சொன்னதை என்னால் ஏற்க முடியாது.

ஓ! தாயே, நான் பிறந்த உடனேயே, உன்னால் நான் கைவிடப்பட்டேன். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, எனக்கு நீ செய்த இந்தப் பெருந்தீங்குதான், எனது சாதனைகளுக்கும், புகழுக்கும் அழிவைச் செய்து வந்திருக்கிறது. உண்மையில், நான் க்ஷத்திரியனே என்றாலும், க்ஷத்திரியனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் நான் உன்னால் இழந்தேன். இதைவிடப் பெரிய தீங்கை, வேறு எந்த எதிரியால் எனக்கு இழைத்துவிட முடியும்? இரக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் எனக்கு இரக்கம் காட்டாத நீ, (நான் பிறந்த {க்ஷத்திரிய} வகைக்குண்டான கட்டாயச்) சடங்குகள் மற்றும் எனக்குச் செய்யப்பட வேண்டிய அனைத்திலும் இருந்து என்னை விலக்கி வைத்த நீ, இன்று எனக்கு உன் கட்டளைகளை இடுகின்றாய். {க்ஷத்திரியன் ஒருவனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை உரிய காலத்தில் செய்ய எனக்குக் கருணை காட்டாமல், நன்மைகள் அற்றுப் போன என்னிடம் இன்று நீ கட்டளை இடுகின்றாயா?}

ஒரு தாயைப் போல, எனது நன்மைக்காக இதற்கு முன் நீ எப்போதும் முற்பட்டதில்லை. எனினும், உனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பியே நீ இன்று என்னிடம் பேசுகிறாய். கிருஷ்ணனைத் (தனது தேரோட்டியாகத்) தன்னுடன் கொண்டிருக்கும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எவன்தான் அஞ்சமாட்டான்? இன்று நான் பார்த்தர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றால், நான் அச்சத்தாலேயே அப்படிச் செய்கிறேன் என்று எவன்தான் கருதமாட்டான்? இதுவரை, அவர்களது {பாண்டவர்களின்} அண்ணனாக என்னை யாரும் அறியமாட்டார்கள். போர் நெருங்கும் சமயத்தில், நான் பாண்டவர்களின் அண்ணன் என்று சொல்லி, அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றுவிட்டால், க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன சொல்வார்கள்? விரும்பிய பொருட்கள் அனைத்தும் அளித்து, என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நோக்கம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால், எப்போதும் வணங்கப்பட்டு வரும் நான், அவர்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட நட்பை எப்படி முழுமையாகப் பயனற்றதாக்க முடியும்? மற்றவர்களுடன் பகைமையால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவர்கள்}, வாசவனிடம் {இந்திரனிடம்} தலைவணங்கும் வசுக்களைப் போல எப்போதும் என்னை வணங்கி, எனக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள் {பணிவிடை செய்கிறார்கள்}. எனது பலத்தின் துணையால், எதிரிகளுடன் மோதும் திறனைப் பெற்றுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அப்படிப் பேணப்பட்ட அவர்களது நம்பிக்கையை எப்படி நான் கெடுப்பேன்? என்னைத் தங்கள் படகாகக் கொண்டு, போர் எனும் கடக்க முடியாத கடலைக் கடக்க அவர்கள் விரும்புகிறார்கள். வேறு எந்தப் படகுகளும் அற்ற கடலைக் கடக்க விரும்பும் அவர்களை நான் எப்படிக் கைவிட முடியும்?

இதுவரை திருதராஷ்டிரர் மகன்களால் தாங்கப்பட்டு வந்த யாவரும், தங்கள் தலைவர்களுக்கு {எஜமானர்களுக்கு} உதவ வேண்டிய நேரம் இதுவே. எனது உயிரையும் துச்சமாக நினைத்து, நிச்சயம் நான் அவர்களுக்காகவே {கௌரவர்களுக்காகவே} செயல்படுவேன். தங்கள் தலைவர்களால் நன்கு ஊட்டப்பட்டு, (தேவையான அனைத்தும்) நன்கு அளிக்கப்பட்டும், உரிய நேரத்தில் தக்க உதவியைச் செய்யாத உறுதியற்ற இதயம் படைத்த, பாவம் நிறைந்த மனிதர்கள், தங்கள் தலைவனின் {சோறிடுபவனின்} சோற்றைத் திருடுவதால், அவர்களுக்கு இம்மையும் இல்லை; மறுமையும் கிடையாது. நான் உன்னிடம் வஞ்சகமாக {ஏமாற்றுகரமாகப்} பேச மாட்டேன். {நான் உன்னை ஏமாற்ற மாட்டேன்}. திருதராஷ்டிரர் மகனுக்காக {துரியோதனனுக்காக}, என் சக்தியிலும், பலத்திலும் சிறந்ததைக் கொண்டு உனது மகன்களுடன் நான் போரிடுவேன். எனினும், நான் அன்பையும், நன்னடத்தையையும் கைவிட மாட்டேன். எனவே, உனது வார்த்தைகள் என்னதான் எனக்கு நன்மையை அளித்தாலும், இப்போது என்னால் அதற்குக் கீழ்ப்படிய முடியாது. எனினும் இந்த உனது வேண்டுதல்கள் பலனற்றதாகாது.

அர்ஜுனனைத் தவிர, உனது மற்ற மகன்களான யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைப் போரில் தாக்குப்பிடித்து, என்னால் அவர்களைக் கொல்ல முடியும் என்றாலும், அவர்கள் என்னால் கொல்லப்பட மாட்டார்கள். யுதிஷ்டிரனின் போராளிகள் அனைவரிலும் நான் அர்ஜுனனிடம் மட்டுமே போரிடுவேன். *போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன். ஓ! புகழ்பெற்ற பெண்மணியே {குந்தியே}, உனது மகன்களின் எண்ணிக்கை எப்போதும் ஐந்துக்குக் குறையாது. {அர்ஜுனன் கொல்லப்பட்டால்} என்னுடனாவது, அல்லது நான் கொல்லப்பட்டால் அர்ஜுனனுடனாவது சேர்த்து, அது {உனது மகன்களின் எண்ணிக்கை} எப்போதும் ஐந்தாகவே இருக்கும்" என்றான் {கர்ணன்}.

கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, துயரில் நடுங்கிய குந்தி, மனோபலத்தின் விளைவால் அதிராமல் இருந்த தனது மகனை {கர்ணனை} அணைத்துக் கொண்டாள். அவள் {குந்தி கர்ணனிடம்}, "உண்மையில், ஓ! கர்ணா, நீ சொல்வது சாத்தியமாகத் தோன்றினாலும், கௌரவர்கள் நிச்சயம் அழிக்கப்படுவார்கள். அனைத்தும் விதியே. எனினும், ஓ! எதிரிகளை வாட்டுபவனே {கர்ணா}, உனது தம்பிகள் நால்வருக்கு, பாதுகாப்புக்கான உறுதியை நீ வழங்கியிருக்கிறாய். போரில் நீ ஆயுதங்களை அடிக்கும் நேரத்தில், இந்த உறுதிமொழியை நினைவில் தாங்குவாயாக" என்றாள். இவை அனைத்தையும் சொன்ன பிருதை {குந்தி}, மேலும் கர்ணனிடம், "நீ அருளப்பட்டிருப்பாயாக. உடல்நலம் {ஆரோக்கியம்} உனதாகட்டும்" என்றாள். கர்ணன் அவளிடம் {குந்தியிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான். பிறகு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெவ்வேறு திசைகளில் சென்றனர்."



*போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன்...
திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைச்செருக்கு/ குறள்:779.

இழைத்தது        இகவாமைச்     சாவாரை            யாரே        
பிழைத்தது        ஒறுக்கிற்            பவர்.

தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா :
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

Thursday, June 25, 2015

"கர்ணா, நீ என் மகனே!" என்ற குந்தி! - உத்யோக பர்வம் பகுதி 145

"Karna, you are my son!" said Kunti ! | Udyoga Parva - Section 145 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –74)

பதிவின் சுருக்கம் : குந்தி வந்த நோக்கத்தைக் கர்ணன் கேட்பது; கர்ணன் தனது மகனே என்று குந்தி கர்ணனிடம் சொல்வது; பாண்டவர்களுடன் சேர்ந்திருக்குமாறு கர்ணனிடம் குந்தி கேட்பது ...

கர்ணன் {குந்தியிடம்} சொன்னான், "ராதைக்கும், அதிரதருக்கும் மகனான நான் கர்ணன் ஆவேன். ஓ! மங்கையே, நீ எதற்காக இங்கு வந்தாய்? நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்வாயாக" என்றான் {கர்ணன்}.

அதற்குக் குந்தி {கர்ணனிடம்}, "நீ ராதையின் மகனில்லை; குந்தியின் மகனாவாய். அதிரதனும் உனது தந்தையில்லை. ஓ! கர்ணா, நீ சூத வகையில் பிறந்தவனில்லை. நான் சொல்வதை நம்புவாயாக. நான் கன்னிகையாக இருந்தபோது, நீ என்னால் ஈன்றெடுக்கப்பட்டாய். முதலில், உன்னைக் கருவறையில் சுமந்தவள் நானே. ஓ! மகனே {கர்ணா}, நீ குந்திராஜனின் அரணன்மனையில் பிறந்தாய். ஓ! ஆயுதம் தாங்குபவர் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணா}, ஓ! கர்ணா, அனைத்தையும் காணச் செய்பவரும், ஒளியால் சுடர்விடுபவரும், தெய்வீகமானவருமான சூரியனே, என்னிடம் உன்னைப் பெற்றார்.


ஓ! வெல்லப்பட இயலாதவனே, ஓ! மகனே {கர்ணா}, (இயற்கையான) காது குண்டலங்களுடனும், (இயற்கையான} கவசத்துடனும், சுடர்மிகும் அழகுடனும், எனது தந்தையின் வசிப்பிடத்தில் என்னால் நீ ஈன்றெடுக்கப்பட்டாய். உனது தம்பிகளை அறியாத நீ, அறியாமையின் காரணமாகத் திருதராஷ்டிரர் மகனுக்குச் {துரியோதனனுக்குச்} சேவகம் செய்வது முறையாகாது. ஓ! மகனே, அதிலும் குறிப்பாக உனக்கு {உன்னைப் போன்ற ஒருவனுக்கு} அது முறையாகாது.

ஓ! மகனே, மனிதர்களின் கடமைகளை உறுதி செய்கையில், ஒருவனின் தந்தையும், (தான் பெற்ற பிள்ளையிடம்) முழுப் பாசத்தையும் காட்டும் தாயும் எக்காரியத்தில் மனநிறைவு கொள்கின்றனரோ, அதுவே கடமைகள் அனைத்திலும் உயர்ந்ததாகும் {அறப்பயனாகும்}. அர்ஜுனனால் முன்பு அடையப்பட்டதான யுதிஷ்டிரனின் செழிப்பை, பேராசையின் காரணமாகத் தீயவர்கள் பறித்துக் கொண்டார்கள். திருதராஷ்டிரர் மகன்களிடம் இருந்து மீண்டும் பறித்து, அந்தச் செழிப்பை நீ அனுபவிப்பாயாக.

கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குருக்கள் இன்று காணட்டும். சகோதரப் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் {கர்ணனான} உன்னையும், உனது தம்பியையும் {அர்ஜுனனையும்} காணும் அந்தத் தீயவர்கள் உனக்குத் தலைவணங்கட்டும். ராமனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} அழைக்கப்படுவது போல, கர்ணனும், அர்ஜுனனும் {இவ்வுலகத்தால்} அழைக்கப்படட்டும். நீங்கள் இருவரும் ஒன்றுசேர்ந்தால், இவ்வுலகில் அடையமுடியாததுதான் எது?

ஓ! கர்ணா, தம்பிகளால் சூழப்பட்டிருக்கும் நீ, பெரும் வேள்வி மேடையில் தேவர்களால் சூழப்பட்ட பிரம்மனைப் போலப் பிரகாசிப்பாய் என்பதில் ஐயமில்லை. அனைத்து அறங்களையும் கொண்ட நீ, எனது உறவினர்கள் அனைவரிலும் முதல்வன் {மூத்தவன்} ஆவாய். சூதனின் மகன் என்ற அடைமொழி உன்னைப் பற்றாதிருக்கட்டும். பெரும் சக்தி கொண்ட நீ பார்த்தனாவாய்" என்றாள் {குந்தி}.


கர்ணன் முதுகைச் சுட்ட சூரியன்! - உத்யோக பர்வம் பகுதி 144

Karna's back got hot by the sun ! | Udyoga Parva - Section 144 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –73)

பதிவின் சுருக்கம் : விரும்பியது ஈடேறாமல் செல்லும் கிருஷ்ணனைச் சுட்டிக்காட்டி குந்தியிடம் வருந்திய விதுரன்; குந்தி மனதிற்குள் அடைந்த தீர்மானம்; கங்கைக் கரையில் தனது துதிகளைச் செய்து கொண்டிருந்த கர்ணன்; கர்ணனைக் காண குந்தி சென்றது; குந்தியைக் கண்ட கர்ணன் ஆச்சரியம் அடைந்தது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனின் (அமைதிக்கான) வேண்டுதல்கள் தோல்வியில் முடிந்த பிறகு, அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் இருந்து பாண்டவர்களிடம் புறப்பட்டுச் சென்ற போது, பிருதையை {குந்தியை} அணுகிய க்ஷத்ரி {விதுரன்} துயரத்துடன், "ஓ! வாழும் பிள்ளைகளின் தாயே {குந்தியே}, எனது விருப்பம் எப்போதும் சமாதானமே என்பதையும், என்னதான் நான் அடித்தொண்டையில் இருந்து கதறினாலும், சுயோதனன் {துரியோதனன்} எனது வார்த்தைகளைக் கேட்கவில்லை என்பதையும் நீ அறிவாய். 


சேதிகள், பாஞ்சாலர்கள், கேகயர்கள், பீமன், அர்ஜுனன், கிருஷ்ணன், யுயுதானன் மற்றும் இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைத் தனது கூட்டாளிகளாகக் கொண்டிருந்தும், மன்னன் யுதிஷ்டிரன் இன்னும் உபப்லாவ்யத்திலேயே தங்கியிருக்கிறான். தனது சொந்தங்களிடம் தான் கொண்ட பாசத்தால், பெரும்பலத்தைக் கொண்டிருந்தும் பலவீனமான மனிதனைப் போல நீதியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். வயதில் முதிர்ந்திருந்தாலும், இங்கே இருக்கும் திருதராஷ்டிரர் சமாதானத்தை எட்டாமல், தனது பிள்ளைகள் மேல் கொண்ட கர்வத்தால், பாவம் நிறைந்த பாதையில் நடக்கிறார்.

ஜெயத்ரதன், கர்ணன், துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடைய தீமையின் விளைவால் சொந்தங்களுக்குள்ளே வேற்றுமை {உட்பூசல்} உண்டாகப்போகிறது. நீதிமிக்க ஒருவனிடம் நீதியற்று நடந்து கொள்பவர்கள், அந்தப் பாவத்தின் விளைவுகளை விரைவில் காண்பார்கள். இவ்வழியில் நீதியைத் துன்புறுத்தும் குருக்களைக் காணும் எவன்தான் வருந்தமாட்டான்? சமாதானத்தை எட்ட முடியாமல் திரும்பும் கேசவனைக் {கிருஷ்ணனைக்} கண்டதும், பாண்டவர்கள் நிச்சயம் போருக்குத் தயாராவார்கள். அதன்பேரில், குருக்களின் பாவம், வீரர்களின் அழிவுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தையும் நினைத்துக் கொண்டிருப்பதால், பகலும் இரவும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை" என்றான் {விதுரன்}.

குந்தி பிள்ளைகளின் {பாண்டவர்களின்} நோக்கங்கள் ஈடேறுவதை எப்போதும் விரும்பும் விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட அவள் {குந்தி}, துன்பத்தால் பெருமூச்சுவிடத் தொடங்கித் தனக்குள், "எதன் பொருட்டுச் சொந்தங்களுக்குள் இந்தப் பெரும்படுகொலை நேரப்போகிறதோ அந்தச் செல்வத்துக்கு ஐயோ. {அந்த செல்வத்தை நிந்திக்க வேண்டும்}. உண்மையில், இந்தப் போரில் நண்பர்களாக இருப்பவர்கள் தோல்வியை அடையப்போகிறார்கள். பாண்டவர்கள், சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் யாதவர்கள் அனைவரும் கூடி, பாரதர்களுடன் {கௌரவர்களுடன்} போரிடுவதைவிடப் பெரிய துயர் ஏது? போரில் நான் குற்றத்தையே காண்கிறேன்.

(மறுபுறம்) நாம் போரிடவில்லையெனில் வறுமையும், அவமானமும் நமதாகும். ஏழையைப் பொறுத்தவரை, (அவனுக்கு) மரணமே நன்மை. (மறுபுறம்) ஒருவன் தனது சொந்தங்களையே அழிப்பது வெற்றியாகாது. இதை நினைக்கையிலேயே எனது இதயத்தில் துயர் பெருகுகிறது. சந்தனுவின் மகனான பாட்டன் {பீஷ்மர்}, வீரர்களில் முதன்மையானவரான ஆசான் (துரோணர்), கர்ணன் ஆகியோர் துரியோதனனின் பக்கத்தில் இருந்து எனது அச்சத்தை அதிகரிக்கின்றனர். ஆசானான துரோணர், தனது மாணாக்கர்களுக்கு எதிராக எப்போதும் விருப்பத்துடன் போர் புரியமாட்டார். பாட்டனைப் {பீஷ்மரைப்} பொறுத்தவரை, அவர் {பீஷ்மர்} பாண்டவர்களிடம் சிறு பாசத்தையாவது கொண்டிருக்க மாட்டாரா?

பாவம் நிறைந்த கர்ணன் மட்டுமே, தனது அறிவின் மயக்கத்தாலும், தீய துரியோதனனால் வஞ்சக வழியை எப்போதும் பின்பற்றுவதாலும், பாண்டவர்களை வெறுக்கிறான். பாண்டவர்களுக்குத் தீங்கிழைப்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தக் கர்ணன் மிகவும் சக்தி வாய்ந்தவனாகவும் இருக்கிறான். இதுவே என்னை இப்போது எரித்துக் கொண்டிருக்கிறது. அவன் {கர்ணன்} மனநிறைவு கொள்ளும் வகையில், இன்று நான் அவனிடம் சென்று உண்மையை வெளிப்படுத்தி, பாண்டவர்களின்பால் அவனது {கர்ணனின்} இதயத்தை ஈர்க்க முயற்சிக்கப் போகிறேன்.

{குந்தியாகிய} நான் எனது தந்தையான குந்திபோஜனின் அரண்மனையில் உள்ள அந்தப்புரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, என்னிடம் மனநிறைவு கொண்ட புனிதரான துர்வாசர், {தேவர்களை} அழைக்கும் {வழிபாட்டு} வடிவங்கள் அடங்கிய மந்திரங்களை வரமாக எனக்கு அளித்தார்.

நம்பிக்கையான செவிலியால் பாதுகாக்கப்பட்டு, பணிப்பெண்களால் சூழப்பட்டிருந்த நான், {இயற்கையாகப்} பெண்கள் கொண்டிருக்கும் மனநிலையின் விளைவாகவும், வயதில் முதிராத பெண்ணான எனது இயல்பாலும் மீண்டும் மீண்டும் ஆலோசித்து, எந்த நிந்தனையும் அடையாமல் இருப்பது எப்படி? என் தந்தையின் {வளர்ப்பு தந்தை குந்திபோஜனின்} மரியாதையைப் பராமரிப்பது எப்படி? விதியை மீறும் குற்றம் எதையும் செய்யாமல் நற்பேறை அடைவது எப்படி? என்று சிந்தித்தேன். அந்த மந்திரங்களின் பலம் அல்லது பலவீனத்தையும், அந்த அந்தணரின் {துர்வாசரின்} வார்த்தைகளில் உள்ள சக்தியையும், நடுங்கும் இதயத்துடன் நீண்ட நேரம் சிந்தித்தேன்., இறுதியாக, அந்த அந்தணரை {துர்வாசரை} நினைவு கூர்ந்து அவரை {துர்வாசரை} வணங்கினேன். அவரிடம் {துர்வாசரிடம்} பெற்ற மந்திரத்தால் உண்டான பெரும் ஆவலாலும் அறியாமையாலும், எனது கன்னிப்பருவத்தில் நான் சூரிய தேவனை அழைத்தேன்.

எனவே, கன்னிப்பருவத்தில் எனது கருவறையில் தாங்கப்பட்ட அவன், தனது தம்பிகளுக்கு நிச்சயம் ஏற்புடையதும், நன்மையானதுமான எனது வார்த்தைகளுக்கு ஏன் கீழ்ப்படிய மாட்டான்?" என்று நினைத்தாள். இதே போலச் சிந்தித்த குந்தி, ஓர் அற்புத தீர்மானத்தை அடைந்தாள். தீர்மானத்தை அடைந்த அவள் {குந்தி}, பகீரதன் பெயரால் அழைக்கப்படும் புனித ஓடைக்குச் சென்றாள். கங்கைக்கரையை அடைந்த பிருதை {குந்தி}, பெரும் கருணை கொண்டவனும், உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான தனது மகன் {கர்ணன்}, வேத மந்திரங்களை உரைப்பதைக் கேட்டாள்.

கிழக்கு முகமாக, கரங்களை உயர்த்திக் கர்ணன் நின்று கொண்டிருந்தபோது, ஆதரவற்ற குந்தி, தான் கொண்ட காரியத்தின் நிமித்தம், {கர்ணனது} துதிகள் நிறைவடையக் காத்திருந்தாள். விருஷ்ணி குலத்து மங்கையும், குருக்கள் வீட்டு மனைவியுமான அந்த மங்கை {குந்தி}, சூரியனின் வெப்பத்தால் தாக்கப்பட்டு, வாடிய தாமரைமலர் மாலையைப் போலக் காணப்பட்டாள். இறுதியாக, கர்ணனின் மேலாடை கொடுத்த நிழலில் அவள் {குந்தி} நின்றாள்.

மாறாத நோன்புகளைக் கொண்ட கர்ணன், தனது முதுகு சூரியக் கதிர்களால் வெப்பமடையும்வரை தனது துதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தான் [1]. {துதிகள் முடிந்ததும்} திரும்பிய அவன் {கர்ணன்}, குந்தியைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான். அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தியும், செருக்கும் கொண்டவனுமான அந்த விகர்த்தனன் மகன் விருஷன் {கர்ணன்} அவளைக் {குந்தியை} முறையான வடிவில் குவிந்த கரங்களால் வணங்கிய பிறகு பேசத் தொடங்கினான்."

[1] காலையில் கிழக்கு முகமாகப் பார்த்துத் துதித்துக் கொண்டிருப்பவனின் முதுகில் சூரியன் சுடவேண்டும் என்றால், அவன் நடுப்பகல் வரை துதிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். மாறாத நோன்புகள் என்ற சொற்களும் இருப்பதால், அவன் தினமும் இப்படித் துதித்துக் கொண்டிருக்கிறான் என்றாகிறது.


Thursday, June 18, 2015

கண்ணன் தேரில் கர்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 137

Karna on the chariot of Krishna! | Udyoga Parva - Section 137 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –66)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், பீமன், திரௌபதி, மாத்ரியின் மகன்கள் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டிய  செய்தியை அவள் கிருஷ்ணனிடம் சொல்லியனுப்பியது; கர்ணனைத் தனது தேரில் ஏற்றிக் கொண்ட கிருஷ்ணன் அவனோடு நெடுநேரம் வாதிட்டது; கர்ணனை வழியனுப்பிய கிருஷ்ணன், விரைந்து உபப்லாவ்யத்தை அடைந்தது...

குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், "இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொல்வாயாக, "நீ பிறந்த போது, பிரசவ அறையில் மங்கையர் சூழ நான் அமர்ந்திருந்தேன். அப்போது வானத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சிகரமான தெய்வீகக் குரல், "ஓ! குந்தி, இந்த உனது மகன் ஆயிரம் கண் படைத்த தேவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனாவான். கூடியிருக்கும் குருக்கள் அனைவரையும் இவன் {அர்ஜுனன்} போரில் வீழ்த்துவான். பீமனின் துணை கொண்டு, இவன் முழு உலகையும் வெல்வான். இவனது புகழ் சொர்க்கத்தையே தொடும். வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்ட இவன் {அர்ஜுனன்} போரில் குருக்களைக் கொன்று, தொலைந்து போன தனது தந்தை {பாண்டு} வழி நாட்டை மீட்பான். பெரும் செழிப்புடைய இவன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் கூடி, மூன்று பெரும் வேள்விகளைச் செய்வான்",என்றது.


ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் பீபத்சு {அர்ஜுனன்} எப்படி உண்மையில் {சத்தியத்தில்} நிலையானவன் என்பதையும், எப்படித் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் என்பதையும் நீ அறிவாய். ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, அந்தத் (தெய்வீகக்) குரல் சொன்னது போலவே ஆகட்டும். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நீதி என்ற ஒன்று உண்டென்றால், அந்த வார்த்தைகள் உண்மையாகட்டும். நீயொருவனாகவே அவை அனைத்தையும் சாதிப்பாய். அந்தக் குரல் சொன்ன எதையும் நான் சந்தேகிக்கவில்லை. அனைத்துக்கும் மேன்மையான நீதியை நான் வணங்குகிறேன். நீதியே அனைத்து உயிர்களையும் தாங்குகிறது. நீ இவ்வார்த்தைகளையே தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொல்வாயாக.

மேலும், எப்போதும் உழைக்க {முயற்சி செய்யத்} தயாராக இருக்கும் விருகோதரனிடம் {பீமனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம் {பீமனிடம்}, "ஒரு க்ஷத்திரியப் பெண் ஒரு மகனைப் பெறும் காரணத்திற்கான நேரம் வந்துவிட்டது! பகை இருக்கும்போது, எப்போதும், மனிதர்களில் முதன்மையானவர்கள் உற்சாகமற்றுப் போவதில்லை", என்று சொல்வாயாக. பீமனின் மனநிலையை நீ அறிவாய். எதிரிகளைக் கலங்கடிப்படிப்பவனான அவன் {பீமன்}, தனது எதிரிகளை அழிக்கும் வரை எப்போதும் தணியமாட்டான் {ஓயமாட்டான்}.

பிறகு நீ, ஓ! மாதவா {கிருஷ்ணா}, பெரும் புகழ்கொண்டவளும், உயர் ஆன்ம பாண்டுவின் மருமகளும், மங்கலகரமானவளுமான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, "ஓ! உயர்ந்த அருள் கொண்டவளே, ஓ! உன்னதமான பெற்றோரைக் கொண்டவளே, ஓ! பெரும்புகழ் கொண்டவளே, எனது மகன்களிடம் எப்போதும் நீ நடந்து கொள்ளும் இனிமையான விதம், உண்மையில் உனக்குத் தகுந்ததே", என்று சொல்வாயாக.

மேலும், க்ஷத்திரிய அறங்களுக்குத் தங்களை எப்போதும் அர்ப்பணித்திருக்கும் மாத்ரியின் மகன்களிடம் {நகுலன் மற்றும் சகாதேவனிடம்}, "உயிரைவிட, வீரத்தினால் பெறப்படும் இன்பங்களைப் பெரிதாக விரும்புங்கள். வீரத்தினால் வெல்லப்பட்ட பொருட்கள், க்ஷத்திரிய நடைமுறைகளின் படி வாழும் ஒருவனின் இதயத்துக்கு எப்போதும் இனிமையானவையாக இருக்கும். அனைத்து வகை அறங்களையும் அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உங்கள் கண் முன்பாகவே பாஞ்சால இளவரசி {திரௌபதி} கொடூரமான, தவறான அடைமொழிகளால் அழைக்கப்பட்டாள். அந்த அவமானத்தை எவனால் மன்னிக்கமுடியும்?", என்று சொல்வாயாக.

அவர்கள் {பாண்டவர்கள்} நாட்டை இழந்தது எனக்குத் துயரை அளிக்கவில்லை. பகடையில் அவர்கள் அடைந்த தோல்வி எனக்குத் துயரை அளிக்கவில்லை. ஆனால், உன்னதமானவளும், அழகானவளுமான திரௌபதி சபைக்கு மத்தியில் அழுதுகொண்டிருந்த போது, அந்தக் கொடூரமான, அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளைக் கேட்க நேர்ந்ததே எனக்குப் பெரும் துயரை அளித்தது. ஐயோ, க்ஷத்திரிய அறங்களுக்குத் தன்னை எப்போதும் அர்ப்பணித்துக் கொண்டவளும், மிக அழகானவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இத்தகு பலம் நிறைந்த பாதுகாவலர்களை மணந்திருந்தாலும், அச்சந்தர்ப்பத்தில் எந்தப் பாதுகாவலனையும் அவள் {திரௌபதி} காணவில்லை.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, மனிதர்களில் புலியும், ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனனிடம், திரௌபதி சுட்டிக் காட்டும் பாதையில் எப்போதும் அவன் நடக்க வேண்டும் என்று சொல்வாயாக. கேசவா {கிருஷ்ணா}, அனைத்தையும் அழிக்கும் யமன்களும், கடுமையான இணையுமான பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர், தேவர்களையே கூட அனைத்து உயிரினங்களின் வழியில் செல்ல வைக்க இயன்றவர்கள் {தேவர்களைப் பரகதி அடையச் செய்வார்கள்} என்பதை நீ நன்கு அறிவாய். (அப்படிப்பட்ட அவர்களுக்கு மனைவியான) கிருஷ்ணை சபையில் இழுத்துவரப்பட்டது அவர்களை அவமதித்ததாகாதா?

ஓ! கேசவா {கிருஷ்ணா}, குருகுலத்தின் வீரர்கள் அனைவரின் முன்னிலையிலும், பீமனிடம் துச்சாசனன் பேசிய கொடூரமான, கடுமையான வார்த்தைகள் அனைத்தையும் அவர்களுக்கு ஞாபகப்படுத்துவாயாக. (என் பெயரால்) பாண்டவர்கள், அவர்களது பிள்ளைகள் மற்றும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} நலன்களை விசாரிப்பாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் நன்றாக இருக்கிறேன் என்று அவர்களிடம் சொல்வாயாக. மங்கலகரமான உனது வழியில் சென்று, நீ எனது மகன்களைக் காப்பாயாக", என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவளை {குந்தியை} வணங்கி வலம் வந்தவனும் வலிய கரங்களைக் கொண்டவனும், சிங்கத்தின் கம்பீரமான நடைக்கு ஒப்பான நடையைக் கொண்டவனுமான கிருஷ்ணன், பிருதையின் {குந்தியின்} இல்லத்தில் இருந்து வெளிப்பட்டான். பிறகு அவன் {கிருஷ்ணன்}, (தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களான) பீஷ்மரைத் தலைமையாகக் கொண்ட குருக்களின் தலைவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி, கர்ணனைத் தனது தேரில் ஏற்றிக் கொண்டு, சாத்யகியுடன் (குருக்களின் நகரை) விட்டுச் சென்றான்.

அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} சென்ற பிறகு, அவனுடன் {கிருஷ்ணனுடன்} தொடர்புடைய அற்புதமான ஆச்சரியமான சம்பவத்தைக் குறித்து, ஒன்றாகக் கூடியிருந்த குருக்கள் பேசத் தொடங்கினர். அவர்கள், "அறியாமையில் மூழ்கியிருக்கும் முழு உலகமும் மரணவலையில் சிக்கியிருக்கிறது" என்றனர். மேலும் அவர்கள், "துரியோதனனின் மூடத்தனத்தால், இவை அனைத்தும் அழிவுக்குள்ளாகப் போகின்றன" என்றும் சொன்னார்கள்.

(குரு) நகரத்தில் இருந்து வெளியேறியவனும், முன்னேறியவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், நீண்ட நேரம் கர்ணனுடன் வாதிட்டுக் கொண்டிருந்தான். யாதவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பவனான அவன் {கிருஷ்ணன்}, பிறகு கர்ணனுக்கு விடைகொடுத்து, தனது குதிரைகளை அதிவேகமாகச் செலுத்தினான். தாருகனால் செலுத்தப்பட்ட அந்த மனோவேகம் கொண்ட குதிரைகள், வானத்தைக் குடித்துவிடுவதைப் போலச் சென்றன. நெடும் வழியை விரைவாகக் கடக்கும் வேகமான பருந்தைப் போல, சாரங்கம் தாங்குபவனை {கிருஷ்ணனைத்} தாங்கிக் கொண்டு, அவை {அந்தக் குதிரைகள்} உபப்லாவ்யத்தை மிக விரைவில் அடைந்தன.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்