Sannyasa Ashrama! | Shanti-Parva-Section-278 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 105)
பதிவின் சுருக்கம் : பிரம்மத்தை அடையத்தக்க நடத்தை, செயல்கள் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டிரன்; சந்நியாச வழிமுறையை அவனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பிரகிருதியைக் கடந்ததும், மாற்றமில்லாததுமான பிரம்மத்தின் இடத்தை அடைய ஒரு மனிதன் என்ன நடத்தையை, என்ன செயல்களை, என்ன வகை ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும், அவன் எதனிடம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்?" என்று கேட்டான்.(1)