Last rites of Pandu! | Adi Parva - Section 127 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 63)
பதிவின் சுருக்கம் : பாண்டு மற்றும் மாத்ரியின் எலும்புகளைப் பல்லக்கில் கங்கைக் கரைக்குக் கொண்டுவந்து, சடங்குகள் செய்து மீண்டும் அவற்றுக்கு எரியூட்டியது...
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அப்போது திருதராஷ்டிரன் விதுரனிடம், "ஓ விதுரா, மன்னர்களில் சிங்கத்தைப் போன்றவனுக்கும் (பாண்டு), மாத்ரிக்கும் ஈமக்கடன்கள் முறையான அரசமுறையில் நடைபெறட்டும்.(1) அவர்களின் ஆன்ம நன்மைக்காகப் பசுக்களையும், ஆடைகளையும், ரத்தினங்களையும், பலவகையான செல்வங்களையும் கேட்பவர்களுக்கு வேண்டிய அளவு கொடுப்பாயாக.(2) மாத்ரியின் இறுதிச் சடங்குகளைக் குந்தி விருப்பத்திற்கேற்றவாறு செய்ய வைப்பாயாக. மாத்ரியின் உடலைச் சூரியனோ, வாயுவோ காணமுடியாதபடி கவனமாக மூட ஏற்பாடு செய்வாயாக.(3) பாவமற்றவனான பாண்டுவுக்காக வருந்தாதே. அவன் மதிப்புமிக்க மன்னனாக இருந்து, தேவர்களுக்குச் இணையான வீரமகன்கள் ஐவரை விட்டுச் சென்றிருக்கிறான்" என்றான்".(4)

