Aruna became the charioteer of Surya! | Adi Parva - Section 24 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : தன் பெரிய உடலைச் சுருக்கிக் கொண்ட கருடன்; சூரியனின் கோபம்; உலகைச் சுட்டெரித்த சூரியன்; சூரியனின் தேரோட்டியான அருணன்...
![]() |
| கதிரவனும் அருணனும் |
சௌதி சொன்னார், "அனைத்தையும் கேட்டுவிட்டு, அந்த அழகான இறகுகளுடைய பறவையானவன் தனது உடலைக் கண்டு, தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டான்.(1)
அந்தப் பறவையான கருடன், "எவ்வுயிரும் அச்சப்பட வேண்டாம், எனது பயங்கர உருவைக் கண்டு நீங்கள் அச்சத்திலிருப்பதால், எனது சக்தியைச் சுருக்கிக்கொள்கிறேன்" என்றான்."(2)
சௌதி தொடர்ந்தார், "விருப்பப்பட்ட இடத்திற்குத் தங்குதடையின்றிச் செல்லக்கூடியவனும், எவ்வளவு சக்தியையும் விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்ளக்கூடியவனுமான அந்தப் பறவையானவன் {கருடன்}, {தனது அண்ணன்} அருணனை முதுகில் ஏற்றிக் கொண்டு தனது தந்தையின் {கசியபரின்} இல்லத்தைத் தொடர்ந்து, பெருங்கடலுக்கு அக்கரையில் இருக்கும் தனது அன்னையின் {வினதையின்} பக்கத்தில் உள்ள கடற்கரையில் வந்து சேர்ந்தான். கதிரவனோ உலகங்களைத் தனது கொடுங்கதிர்களால் சுட்டெரிக்கத் தீர்மானிக்கும் நேரத்தில் பெரும் காந்திமிக்க அருணனைக் கிழக்குப் பகுதியில் அமர்த்தியிருந்தான்".(3,4)
அந்தப் பறவையான கருடன், "எவ்வுயிரும் அச்சப்பட வேண்டாம், எனது பயங்கர உருவைக் கண்டு நீங்கள் அச்சத்திலிருப்பதால், எனது சக்தியைச் சுருக்கிக்கொள்கிறேன்" என்றான்."(2)
சௌதி தொடர்ந்தார், "விருப்பப்பட்ட இடத்திற்குத் தங்குதடையின்றிச் செல்லக்கூடியவனும், எவ்வளவு சக்தியையும் விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்ளக்கூடியவனுமான அந்தப் பறவையானவன் {கருடன்}, {தனது அண்ணன்} அருணனை முதுகில் ஏற்றிக் கொண்டு தனது தந்தையின் {கசியபரின்} இல்லத்தைத் தொடர்ந்து, பெருங்கடலுக்கு அக்கரையில் இருக்கும் தனது அன்னையின் {வினதையின்} பக்கத்தில் உள்ள கடற்கரையில் வந்து சேர்ந்தான். கதிரவனோ உலகங்களைத் தனது கொடுங்கதிர்களால் சுட்டெரிக்கத் தீர்மானிக்கும் நேரத்தில் பெரும் காந்திமிக்க அருணனைக் கிழக்குப் பகுதியில் அமர்த்தியிருந்தான்".(3,4)

