Grahadevi created by the Self create! | Sabha Parva - Section 18 | Mahabharata In Tamil
(ராஜசூய ஆரம்ப பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பிருஹத்ரதனிடம் ஜரை தன்னை அறிமுகம் செய்து கொள்ளல்; தான் கிரகதேவி என்று சொல்லல்; பிருஹத்ரதன் அந்த ராட்சசிக்கு மரியாதை செலுத்த ஒரு விழாவை ஏற்பாடு செய்து; தனது பிள்ளைக்கு ஜரையின் பெயரையும் சேர்த்து ஜராசந்தன் என்ற பெயரைச் சூட்டல்...
கிருஷ்ணன் தொடர்ந்தான், "மன்னனின் {பிருஹத்ரதனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த ராட்சசப் பெண் {ஜரை}, "நீ அருளப்பட்டிரு. ஓ மன்னர்களுக்கு மன்னா, நினைத்த வடிவை அடையக்கூடிய ராட்சசப் பெண்ணான நான் ஜரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைவராலும் வழிபடப்பட்டு மகிழ்ச்சியுடன் உனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறேன்.(1) ஒவ்வொரு நாளும் நான் ஒரு மனிதனின் இல்லத்தில் இருந்து மற்றொரு மனிதனின் இல்லத்திற்கு சென்று வருகிறேன். உண்மையில் நான் பழங்காலத்தில் சுயம்புவால் படைக்கப்பட்ட போது, கிருகதேவி (வீட்டில் குடியிருக்கும் பெண் தெய்வம்) என்று பெயரிடப்பட்டேன்.(2)

