"The Mahabharata" நூலின் தமிழாக்கம்...
முகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | உத்தர ராமாயணம் | தொடர்புக்கு
Showing posts with label வாசுகி. Show all posts
Showing posts with label வாசுகி. Show all posts
Thursday, February 11, 2021
Wednesday, July 05, 2017
நாகர்களும்! ஆஸ்தீகரும்!! (கிண்டில் புத்தகம்)
![]() |
| நாகர்களும்! ஆஸ்தீகரும்!! - ₹.75.00 |
காண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்ததில் இருந்தே தொடங்குகிறது, பாம்புகளுக்கும், பாண்டவர்களுக்குமான தொடர்பு. அக்னியின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜுனன் காண்டவ வனத்தை எரிக்கிறான். அவ்வாறு எரித்ததில் தக்ஷகனின் மனைவி இறக்கிறாள். அவனது மகன் அஸ்வசேனன் தப்பிக்கிறான். எனினும், அவனும் கர்ணனின் அஸ்திரத்தில் புகுந்து அர்ஜுனனைத் தாக்கச் செல்கையில், அர்ஜுனனால் கொல்லப்படுகிறான்.
Wednesday, March 13, 2013
ஆஸ்தீகர் பிறப்பு! | ஆதிபர்வம் - பகுதி 48
The Birth of Astika! | Adi Parva - Section 48 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 36)
பதிவின் சுருக்கம் : வாசுகியும் அவன் தங்கை ஜரத்காருவும் பேசியது; வாசுகி மகிழ்ச்சி; ஆஸ்தீகர் பிறந்தார்...
சௌதி சொன்னார், "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {சௌனகரே}, தனது தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்தவுடன், ஜரத்காரு தனது தமையனிடம் {வாசுகியிடம்} சென்றாள். அவனிடம் {வாசுகியிடம்} நடந்த அனைத்தையும் சொன்னாள்.(1) அந்தப் பாம்புகளின் இளவரசன் {வாசுகி}, பேரழிவு {போன்ற} செய்தியைக் கேட்டு, பரிதாபகரமாக இருந்த தனது சகோதரியிடம் {ஜரத்காருவிடம்}, அதைவிடப் பரிதாபமான நிலையில் இருந்து பேசினான்.(2)
அவன் {வாசுகி}, "ஓ இனிமையானவளே!, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே! {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா? அந்த ஞானமுள்ளவருக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} உன்னை அளித்தது கனியற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் இதயத்தின் விருப்பம்.(5)
அவன் {வாசுகி}, "ஓ இனிமையானவளே!, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே! {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா? அந்த ஞானமுள்ளவருக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} உன்னை அளித்தது கனியற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் இதயத்தின் விருப்பம்.(5)
Sunday, March 10, 2013
ஜரத்காரு கேட்ட பிச்சை! | ஆதிபர்வம் - பகுதி 46
Jaratkaru begged for! | Adi Parva - Section 46 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 34)
பதிவின் சுருக்கம் : திருமணத்திற்காக ஜரத்காரு செய்த முயற்சி; காட்டிலே மணமகளை இரந்து கேட்ட ஜரத்காரு; வாசுகிக்குத் தகவல் தெரிவித்த பாம்புகள்; ஜரத்காரு விதித்த நிபந்தனைகள்...
![]() |
| மானஸா தேவி - ஜரத்காரு |
சௌதி சொன்னார், "இதையெல்லாம் கேட்ட ஜரத்காரு மிகுந்த துயருற்றார். அந்தத் துயரத்தால் உந்தப்பட்டுக் கண்ணீரால் தடைப்பட்டுத் தனது பித்ருக்களிடம் பேசலானார்.(1) ஜரத்காரு, “நீங்களே முன்சென்ற எனது தந்தையும், பாட்டன்களும் ஆவீர்கள். எனவே, நான் உங்கள் நன்மைக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வீராக.(2) நானே உங்கள் மகனான, அந்தப் பாவி ஜரத்காரு. பாதகனான என்னை, எனது பாவங்களுக்காகத் தண்டியுங்கள்" என்றார் {ஜரத்காரு}.(3)
பித்ருக்கள், ”ஓ மகனே! {ஜரத்காருவே}, உனது நற்பேறாலேயே உன் பயணத்தில் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாய். ஓ பிராமணா, நீ ஏன் ஒரு மனைவியை உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை?" என்றனர்.(4)
பித்ருக்கள், ”ஓ மகனே! {ஜரத்காருவே}, உனது நற்பேறாலேயே உன் பயணத்தில் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாய். ஓ பிராமணா, நீ ஏன் ஒரு மனைவியை உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை?" என்றனர்.(4)
Friday, March 01, 2013
வாசுகியின் கவலை! |ஆதிபர்வம் - பகுதி 39
The sorrow of Vasuki! | Adi Parva - Section 39 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 27)
பதிவின் சுருக்கம் : தன் தங்கையை ஜரத்காருவுக்காக வளர்த்த வாசுகி; பெருங்கடல் கடைவதில் வாசுகி செய்த உதவியினால் பாம்பினத்திற்காகப் பிரம்மனிடம் வேண்டிக்கொண்ட தேவர்கள்; ஏலாபத்திரன் கூறியதை உறுதிப்படுத்திய பிரம்மன்; ஜரத்காருவைக் கவனிக்கப் பாம்புகளுக்கு உத்தரவிட்ட வாசுகி ...
சௌதி சொன்னார், "ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சௌனகரே}, ஏலாபத்திரனின் வார்த்தைகளைக் கேட்ட எல்லாப் பாம்புகளும் பெரும் மகிழ்ச்சி கொண்டு, "நன்றாகச் சொன்னாய், நன்றாகச் சொன்னாய்" என்று மகிழ்ச்சி குரல் கொடுத்தனர்.(1) அன்றிலிருந்து வாசுகி, தனது தங்கையான ஜரத்காரு என்ற அந்தப் பெண்ணை {பெண் பாம்பை} கவனமாக வளர்த்து வந்தான். அவளை {ஜரத்காருவை} வளர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டான்.(2)
Wednesday, February 27, 2013
பாம்புகளின் ஆலோசனை! | ஆதிபர்வம் - பகுதி 37
Consultation of the Snakes! | Adi Parva - Section 37 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 25)
பதிவின் சுருக்கம் : தங்கள் தாயுடைய சாபத்திலிருந்து தப்பிக்க ஆலோசனையில் ஈடுபட்ட பாம்புகள்; பாம்புகள் சொன்ன திறனற்ற ஆலோசனைகளைக் கேட்டு கவலை கொண்ட வாசுகி...
சௌதி சொன்னார், "அந்தப் பாம்புகளில் சிறந்தவனான வாசுகி, தனது தாயின் சாபத்தைக் கேட்டு, அதை {அந்தச் சாபத்தை} எப்படிச் செயலிழக்க வைப்பது என்பது குறித்து சிந்தித்தான்.(1) தனது சகோதரர்கள் ஐராவதன் மற்றும் ஏனைய பாம்புகளுடன் சேர்ந்து எந்தக் காரியத்தைச் செய்தால் அது சிறந்ததாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினான்.(2)
Friday, February 08, 2013
காலகூட நஞ்சையுண்ட மகேஸ்வரன்! | ஆதிபர்வம் - பகுதி 18
Maheswara swallowed poisonous Kalakuta! | Adi Parva - Section 18 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 6)
பதிவின் சுருக்கம் : மந்தர மலையைப் பெயர்த்தெடுத்த அனந்தன் என்ற பாம்பு; கடைவதற்காகப் பெருங்கடலை வேண்டிய தேவர்கள்; ஆமையின் முதுகில் மந்தர மலையை வைத்தது; வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி மந்தர மலையைக் கொண்டு அந்தப் பெருங்கடலைக் கடைந்த தேவர்களும், அசுரர்களும்; கடைந்ததில் இறுதியாக வந்த காலகூட நஞ்சு; பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை விழுங்குவது; பெண்ணுரு கொண்ட நாராயணன்...
![]() |
| பாற்கடல் கடைதல் |
"சௌதி சொன்னார், "மேகம்போன்ற முகடுகளைக் கொண்டதும், மந்தரம் என்றழைக்கப்பட்டதுமான ஒரு மலை இருந்தது. அந்தச் சிறந்த மலையெங்கும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட மூலிகைகள் நிறைந்திருந்தன.(1) எண்ணற்ற பறவைகள் தங்கள் மெல்லிசைகளை எழுப்பியும், விலங்குகள் இரையைத் தேடியும் அலைந்து கொண்டிருந்தன. தேவர்கள், அப்சரஸ்கள் மற்றும் கின்னரர்கள் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.(2) பதினோராயிரம் யோஜனைகள்[1] மேலெழுந்தவாரியும், அதே அளவு {சம பங்கு} கீழிறங்கியவாறும் அஃது இருந்தது.(3) தேவர்கள் கடலைக் கடையும் மத்தாக அந்த மலையைப் பயன்படுத்த எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றுத் தோற்றனர். ஆகவே அவர்கள், ஒன்றாக அமர்ந்திருந்த விஷ்ணு மற்றும் பிரம்மனிடம்,(4) "எங்கள் நன்மைக்காக இந்த மலையை எப்படிப் பெயர்த்தெடுப்பது என்று ஆலோசனை வழங்குவீராக" என்று வேண்டினர்."(5)
Monday, February 04, 2013
வாசுகியின் தங்கை பெயரும் ஜரத்காரு! | ஆதிபர்வம் - பகுதி 14
The name of Vasuki's Sister is also Jaratkaru
| Adi Parva - Section 14 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : தனக்கான மணப்பெண்ணைத் தேடி உலகம் முழுவதும் அலைத்த ஜரத்காரு; வாசுகி என்ற பாம்பு தன் தங்கையை ஜரத்காருவுக்கு அளிக்கச் சம்மதித்தது; ஜரத்காருவின் திருமணம்...
சௌதி சொன்னார், "அந்தக் கடுமையான விரதங்களை மேற்கொள்ளும் பிராமணன் {ஜரத்காரு}, உலகம் முழுதும் தேடி அலைந்தும் மனைவி கிடைத்தாளில்லை.(1) ஒருநாள், அடர்ந்த கானகத்தின் ஆழத்திற்குள் சென்று, தனது மூதாதையர் சொன்னதை நினைவுகூர்ந்து, மெல்லிய குரலில் தனக்கு மனைவி வேண்டும் என்று மூன்று முறை வேண்டினார்.(2) அப்பொழுது வாசுகி {என்ற பாம்பு மன்னன்} எழுந்து, தனது தங்கையை {மனைவியாக} ஏற்றுக்கொள்ள அந்த முனிவருக்கு {ஜரத்காருவிற்குக்} கொடுத்தான். ஆனால், அந்தப் பிராமணர் அவளுக்கும் தனது பெயர் {ஜரத்காரு என்று} இருக்காது என்று நினைத்து அவளைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினார்.(3) அந்த உயரான்ம ஜரத்காரு தனக்குள் 'எனது பெயரில்லாத எந்தப் பெண்ணையும் நான் ஏற்க மாட்டேன்' என நினைத்துக் கொண்டு,(4) வாசுகியிடம், "ஓ பாம்பே, உனது தங்கையின் பெயர் என்ன என்ற உண்மையைக் கூறுவாயாக" என்று கேட்டார் {ஜரத்காரு}.(5)
Subscribe to:
Posts (Atom)
Kindle E-Books
மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்
அகம்பனன்
அகலிகை
அகஸ்தியர்
அகிருதவரணர்
அக்னி
அக்ருதவ்ரணர்
அங்கதன்
அங்காரபர்ணன்
அங்கிரஸ்
அசமஞ்சன்
அசலன்
அசுவினிகள்
அஞ்சனபர்வன்
அதிரதன்
அத்புதன்
அத்ரி
அத்ரிசியந்தி
அனுகம்பகன்
அனுவிந்தன்
அன்சுமான்
அபிமன்யு
அம்பரீஷன்
அம்பா
அம்பாலிகை
அம்பிகை
அம்பை
அயோதா தௌம்யா
அரிஷ்டநேமி
அருணன்
அருணி
அருந்ததி
அர்ஜுனன்
அர்வாவசு
அலம்பலன்
அலம்புசன்
அலம்புசை
அலர்க்கன்
அலாயுதன்
அவிந்தியன்
அவுர்வா
அஷ்டகன்
அஷ்டவக்கிரர்
அஸ்மர்
அஸ்வசேனன்
அஸ்வத்தாமன்
அஸ்வபதி
அஹல்யை
ஆங்கரிஷ்டன்
ஆஜகரர்
ஆணிமாண்டவ்யர்
ஆதிசேஷன்
ஆத்ரேயர்
ஆர்யகன்
ஆர்ஷ்டிஷேணர்
ஆஸ்தீகர்
இக்ஷ்வாகு
இந்திரசேனன்
இந்திரசேனை
இந்திரஜித்
இந்திரத்யும்னன்
இந்திரன்
இந்திரோதர்
இராவான் {அரவான்}
இல்வலன்
உக்கிரசேனன்
உக்தன்
உக்ரசேனன்
உசீநரன்
உச்சைஸ்ரவஸ்
உதங்கர்
உதங்கா
உதத்யர்
உத்தமௌஜஸ்
உத்தரன்
உத்தரை
உத்தவர்
உத்தாலகர்
உபமன்யு
உபரிசரன்
உபஸ்ருதி
உமை
உலூகன்
உலூபி
ஊர்வசி
எலபத்திரன்
ஏகதன்
ஏகதர்
ஏகலவ்யன்
ஐராவதன்
ஓகவதி
ஔத்தாலகர்
ஔத்தாலகி
கங்கன்
கங்கை
கசன்
கசியபர்
கடோத்கசன்
கணிகர்
கண்வர்
கதன்
கத்ரு
கந்தன்
கனகன்
கபிலர்
கபோதரோமன்
கயன்
கராளன்
கருடன்
கர்ணன்
கலி
கல்கி
கல்மாஷபாதன்
கவந்தன்
கஹோடர்
காகமா
காக்ஷிவத்
காசியபர்
காதி
காந்தாரி
காமதேனு
காயத்ரி
காயவ்யன்
கார்க்கோடகன்
கார்க்யர்
கார்த்தவீரியார்ஜுனன்
கார்த்திகை
காலகவிருக்ஷீயர்
காலகேயர்
காலன்
காலவர்
காளி
கிந்தமா
கிரது
கிரந்திகன்
கிராதன்
கிரிசன்
கிரிடச்சி
கிருதவர்மன்
கிருதவீர்யன்
கிருதாசி
கிருபர்
கிருபி
கிருஷ்ணன்
கிர்மீரன்
கீசகன்
கீசகர்கள்
குசிகன்
குணகேசி
குணி-கர்க்கர்
குண்டதாரன்
குந்தி
குந்திபோஜன்
குபேரன்
கும்பகர்ணன்
குரு
குரோதவாசர்கள்
குவலாஸ்வன்
கேசினி
கேசின்
கேதுவர்மன்
கைகேயன்
கைகேயி
கைடபன்
கோடிகன்
கோமுகன்
கௌசிகர்
கௌசிகி
கௌதமன்
கௌதமர்
கௌதமி
க்ஷத்ரபந்து
க்ஷேமதர்சின்
க்ஷேமதூர்த்தி
சகரன்
சகாதேவன்
சகுந்தலை
சகுனி
சக்திரி
சக்ரதேவன்
சங்கன்
சசபிந்து
சச்சி
சஞ்சயன்
சஞ்சயன் 1
சதயூபன்
சதானீகன்
சத்தியசேனன்
சத்தியஜித்
சத்தியபாமா
சத்தியர்
சத்தியவதி
சத்யசேனன்
சத்யபாமா
சத்யவான்
சத்ருஞ்சயன்
சந்தனு
சந்திரன்
சனத்சுஜாதர்
சமங்கர்
சமீகர்
சம்சப்தகர்கள்
சம்பரன்
சம்பா
சம்பாகர்
சம்பை
சம்வர்ணன்
சம்வர்த்தர்
சரபன்
சரஸ்வதி
சர்மின்
சர்மிஷ்டை
சர்யாதி
சலன்
சல்லியன்
சஹஸ்ரபத்
சாகரன்
சாண்டிலி
சாண்டில்யர்
சாத்யகி
சாத்யர்கள்
சாந்தை
சாம்பன்
சாம்யமணி
சாரங்கத்வஜன்
சாரஸ்வதர்
சாரிசிரிகன்
சாருதேஷ்ணன்
சார்வாகன்
சால்வன்
சாவித்ரி
சிகண்டி
சிங்கசேனன்
சிசுபாலன்
சித்திரசேனன்
சித்திரன்
சித்திராங்கதை
சித்ரகுப்தன்
சித்ரவாஹனன்
சிநி
சிந்துத்வீபன்
சிபி
சியவணன்
சியவனர்
சிரிகாரின்
சிரிங்கின்
சிருஞ்சயன்
சிவன்
சீதை
சுகன்யா
சுகர்
சுகுமாரி
சுகேது
சுக்ரது
சுக்ரன்
சுக்ரீவன்
சுசர்மன்
சுசோபனை
சுதக்ஷிணன்
சுதசோமன்
சுதன்வான்
சுதர்சனன்
சுதர்மை
சுதாமன்
சுதேவன்
சுதேஷ்ணை
சுநந்தை
சுந்தன் உபசுந்தன்
சுனந்தை
சுனஸ்ஸகன்
சுபத்திரை
சுப்ரதீகா
சுமித்திரன்
சுமுகன்
சுரதன்
சுரதை
சுரபி
சுருதகர்மன்
சுருதசேனன்
சுருதர்வன்
சுருதர்வான்
சுருதாயுதன்
சுருதாயுஸ்
சுருவாவதி
சுலபை
சுவர்ணஷ்டீவின்
சுவாகா
சுவேதகேது
சுஷேணன்
சுஹோத்திரன்
சூதன்வான்
சூரன்
சூரியதத்தன்
சூரியன்
சூரியவர்மன்
சூர்ப்பனகை
சேகிதானன்
சேதுகன்
சேனஜித்
சைகாவத்யர்
சைப்யை
சைரந்திரி
சோமகன்
சோமதத்தன்
சௌதி
சௌதியும்னி
சௌனகர்
ஜடாசுரன்
ஜடாயு
ஜந்து
ஜனகன்
ஜனதேவன்
ஜனபதி
ஜனமேஜயன்
ஜனமேஜயன் 1
ஜமதக்னி
ஜரத்காரு
ஜராசந்தன்
ஜரிதை
ஜரை
ஜலசந்தன்
ஜாஜலி
ஜாம்பவதி
ஜாரிதரி
ஜிமூதன்
ஜீவலன்
ஜெயத்சேனன்
ஜெயத்ரதன்
ஜைகிஷவ்யர்
ஜோதஸ்நாகாலி
தக்ஷகன்
தக்ஷன்
தண்டதாரன்
தண்டன்
தண்டி
ததீசர்
தத்தாத்ரேயர்
தனு
தபதி
தபஸ்
தமனர்
தமயந்தி
தம்போத்பவன்
தர்மதர்சனர்
தர்மதேவன்
தர்மத்வஜன்
தர்மவியாதர்
தர்மாரண்யர்
தளன்
தாத்ரேயிகை
தாரகன்
தாருகன்
தார்க்ஷ்யர்
தாலப்யர்
தியுமத்சேனன்
திரஸதஸ்யு
திரிசிரன்
திரிஜடை
திரிதர்
திருதராஷ்டிரன்
திருதவர்மன்
திருஷ்டத்யும்னன்
திரௌபதி
திலீபன்
திலோத்தமை
திவோதாசன்
தீர்க்கதமஸ்
துச்சலை
துச்சாசனன்
துந்து
துரியோதனன்
துருபதன்
துருபதன் புரோகிதர்
துரோணர்
துர்க்கை
துர்ஜயன்
துர்மதன்
துர்மர்ஷணன்
துர்முகன்
துர்வாசர்
துலாதாரன்
துவஷ்டிரி
துவாபரன்
துவிதன்
துஷ்கர்ணன்
துஷ்யந்தன்
தேவ
தேவகி
தேவசர்மன்
தேவசேனா
தேவசேனை
தேவமதர்
தேவயானி
தேவராதன்
தேவலர்
தேவஸ்தானர்
தேவாபி
தௌமியர்
நகுலன்
நகுஷன்
நமுசி
நரகாசுரன்
நரன்
நளன்
நளன்2
நாகன்
நாசிகேதன்
நாடீஜங்கன்
நாரதர்
நாராயணன்
நாராயணர்கள்
நிருகன்
நிவாதகவசர்கள்
நீலன்
நைருதர்கள்
பகதத்தன்
பகன்
பகர்
பகீரதன்
பங்காஸ்வனன்
பசுஸகன்
பஞ்சசிகர்
பஞ்சசூடை
பத்மநாபன்
பத்மன்
பத்ரகாளி
பத்ரசாகன்
பத்ரா
பப்ருவாஹனன்
பரசுராமர்
பரதன்
பரத்வாஜர்
பராசரர்
பராவசு
பரிக்ஷித்
பரீக்ஷித்1
பர்ணாதன்
பர்வதர்
பலன்
பலராமன்
பலி
பலிதன்
பாகுகன்
பாணன்
பாண்டியன்
பாண்டு
பானுமதி
பானுமான்
பாஹ்லீகர்
பிங்களன்
பிங்களை
பிரகலாதன்
பிரதர்த்தனன்
பிரதிவிந்தியன்
பிரதீபன்
பிரத்னஸ்வன்
பிரத்யும்னன்
பிரமாதின்
பிரம்மதத்தன்
பிரம்மத்வாரா
பிரம்மன்
பிரம்மாதி
பிராதிகாமின்
பிருகதஸ்வர்
பிருகத்யும்னன்
பிருகு
பிருது
பிருந்தாரகன்
பிருஹத்சேனை
பிருஹத்பலன்
பிருஹத்ரதன்
பிருஹந்நளை
பிருஹஸ்பதி
பீமன்
பீமன்1
பீஷ்மர்
புரு
புருரவஸ்
புரோசனன்
புலஸ்தியர்
புலஹர்
புலோமா
புஷ்கரன்
பூஜனி
பூமாதேவி
பூரி
பூரிஸ்ரவஸ்
போத்யர்
பௌரவன்
பௌரிகன்
பௌலோமர்
மங்கணகர்
மங்கி
மடன்
மணிமான்
மதங்கன்
மதயந்தி
மதிராக்ஷன்
மது
மதுகைடபர்
மந்தபாலர்
மந்தரை
மனு
மயன்
மருத்தன்
மலயத்வஜன்
மஹாபிஷன்
மஹிஷன்
மஹோதரர்
மாணிபத்ரன்
மாதலி
மாதவி
மாத்ரி
மாந்தாதா
மாரீசன்
மார்க்கண்டேயர்
மாலினி
மிருத்யு
முகுந்தன்
முசுகுந்தன்
முத்கலர்
முனிவர்பகன்
மூகன்
மேதாவி
மேனகை
மைத்ரேயர்
யது
யமன்
யயவரர்
யயாதி
யவக்கிரீ
யாஜ்ஞவல்கியர்
யாதுதானி
யுதாமன்யு
யுதிஷ்டிரன்
யுயுத்சு
யுவனாஸ்வன்
ரந்திதேவன்
ராகு
ராஜதர்மன்
ராதை
ராமன்
ராவணன்
ரிசீகர்
ரிதுபர்ணன்
ரிஷபர்
ரிஷ்யசிருங்கர்
ருக்மரதன்
ருக்மி
ருக்மிணி
ருசங்கு
ருசி
ருத்திரன்
ருரு
ரேணுகன்
ரேணுகை
ரைப்பியர்
ரோமபாதன்
ரோஹிணி
லக்ஷ்மணன்
லட்சுமணன்
லட்சுமி
லபிதை
லோகபாலர்கள்
லோபாமுத்திரை
லோமசர்
லோமபாதன்
லோமஹர்ஷனர்
வசாதீயன்
வசிஷ்டர்
வசு
வசுதேவர்
வசுமனஸ்
வசுமான்
வசுஹோமன்
வஜ்ரன்
வஜ்ரவேகன்
வதான்யர்
வந்தின்
வருணன்
வர்கா
வாசுகி
வாதாபி
வாமதேவர்
வாயு
வார்ஷ்ணேயன்
வாலகில்யர்
வாலி
விகர்ணன்
விசரக்கு
விசாகன்
விசித்திரவீரியன்
விசோகன்
விதுரன்
விதுலை
விந்தன்
வினதை
விபாண்டகர்
விபாவசு
விபீஷணன்
விபுலர்
வியாக்ரதத்தன்
வியாசர்
வியுஷிதஸ்வா
விராடன்
விருத்திரன்
விருபாகஷன்
விருஷகன்
விருஷசேனன்
விருஷதர்பன்
விருஷபர்வன்
விரோசனன்
விவிங்சதி
விஷ்ணு
விஸ்வகர்மா
விஸ்வாமித்ரர்
வீதஹவ்யன்
வீரத்யும்னன்
வீரபத்ரன்
வேதா
வேனன்
வைகர்த்தனன்
வைசம்பாயனர்
வைனியன்
வைவஸ்வத மனு
ஷாமந்தர்
ஸனத்குமாரர்
ஸுமனை
ஸுவர்ச்சஸ்
ஸ்கந்தன்
ஸ்தாணு
ஸ்தூணாகர்ணன்
ஸ்யூமரஸ்மி
ஸ்ரீ
ஸ்ரீமதி
ஸ்ரீமான்
ஸ்வேதகி
ஸ்வேதகேது
ஸ்வேதன்
ஹனுமான்
ஹயக்ரீவன்
ஹரிச்சந்திரன்
ஹர்யஸ்வன்
ஹாரீதர்
ஹிடிம்பன்
ஹிடிம்பை
ஹிரண்யவர்மன்
ஹோத்திரவாஹனர்







