Ganga Mahabhisha lust! | Adi Parva - Section 96 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 32)
பதிவின் சுருக்கம் :
பிரம்மனால் சபிக்கப்பட்ட மஹாபிஷன்; வசுக்களுக்கு வரமளித்த கங்கை...
வைசம்பாயனர் சொன்னார், "இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் முழு உலகத்திற்கும் தலைவனாக இருந்தான். அவன் உண்மையான ஆற்றலும், உண்மை நிறைந்த பேச்சும உடையவனாக இருந்தான்.(1) அவன் ஆயிரம் குதிரை வேள்விகளையும் (அஸ்வமேத யாகங்களையும்), நூறு ராஜசூய வேள்விகளையும் செய்து தேவர்கள் தலைவனை மனநிறைவு கொள்ளச் செய்து சொர்க்கத்தை அடைந்தான்.(2)
"ஒரு நாள் தேவர்கள் ஒன்றாகக் கூடிப் பிரம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். பல அரச முனிகளும் மன்னன் மஹாபிஷனும் அந்த இடத்தில் இருந்தனர்.(3) ஆறுகளின் அரசியான கங்கையும் அங்கே பெரும்பாட்டனை வழிபட வந்திருந்தாள். சந்திரனின் கதிர்களைப் போன்ற அவளது வெண்ணிற ஆடை காற்றினால் சிறிது அகன்றது.(4)
"ஒரு நாள் தேவர்கள் ஒன்றாகக் கூடிப் பிரம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். பல அரச முனிகளும் மன்னன் மஹாபிஷனும் அந்த இடத்தில் இருந்தனர்.(3) ஆறுகளின் அரசியான கங்கையும் அங்கே பெரும்பாட்டனை வழிபட வந்திருந்தாள். சந்திரனின் கதிர்களைப் போன்ற அவளது வெண்ணிற ஆடை காற்றினால் சிறிது அகன்றது.(4)