Indra completed the sacrifice! | Aswamedha-Parva-Section-10 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : பிருஹஸ்பதியை ஏற்றுக் கொள்ளும்படி மருத்தனுக்குச் சொல்லி அனுப்பிய இந்திரன்; மருத்தன் மறுத்தது; வேள்வியை நிறைவடையச் செய்த இந்திரன்; அங்கிருக்கும் செல்வத்தைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; அஸ்வமேத வேள்வியைச் செய்யச் சொன்னது...
இந்திரன் {அக்னி தேவனிடம்}, "அவ்வாறே இருக்கிறது. பிராமணர்களின் வலிமை பெரியது, பிராமணர்களைவிடப் பலம் நிறைந்தவர்கள் வேறு எவரும் இல்லை, ஆனால், அவிக்ஷித் மகனின் {மருத்தனின்} அற்பச் செருக்கை எல்லாம் ஒருபோதும் உள்ளச்சமநிலையுடன் பொறுத்துக் கொள்ள இயலாது. நான் என் வஜ்ரத்தைக் கொண்டு அவனைத் தாக்கப் போகிறேன்.(1) எனவே, ஓ! திருதராஷ்டிரா, நான் சொல்வது போலச் சம்வர்த்தரால் கவனிக்கப்படும் மன்னன் மருத்தனிடம் சென்று, "ஓ! இளவரசே, பிருஹஸ்பதியை நீ உன் ஆன்ம ஆசானாக ஏற்றுக் கொள்வாயாக, இல்லையெனில் நான் என் பயங்கர வஜ்ரத்தால் உன்னைத் தாக்கப் போகிறேன்" என்ற இந்தச் செய்தியை அவனிடம் சொல்வாயாக" என்றான்".(2)




