"The Mahabharata" நூலின் தமிழாக்கம்...
முகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | உத்தர ராமாயணம் | தொடர்புக்கு
Showing posts with label சமீகர். Show all posts
Showing posts with label சமீகர். Show all posts
Thursday, February 11, 2021
Wednesday, March 13, 2013
பரீக்ஷித் வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 49
The History of Parikshit! | Adi Parva - Section 49 | Mahabharata In Tamil
(ஆஸ்தீகப் பர்வம் - 37)
பதிவின் சுருக்கம் : தன் தந்தையின் வரலாற்றை அமைச்சர்களிடம் கேட்ட ஜனமேஜயன்; பரீக்ஷித்தின் சிறப்பு; அவன் வேட்டையாடச் சென்றது; பரீக்ஷித் சமீகரை அவமதித்தது...
சௌனகர், "மன்னன் ஜனமேஜயன், அவனது அமைச்சர்களிடம், தனது தந்தை {பரீக்ஷித்} தேவலோகத்திற்கு உயர்ந்ததைப் பற்றி கேட்டதனைத்தையும் மறுபடியும் விரிவாக எனக்குச் சொல்" என்றார். (1)
சௌதி சொன்னார், "ஓ பிராமணரே! {சௌனகரே}, பரீக்ஷித்தின் இறப்பைப் பற்றித் தனது அமைச்சர்களிடம் மன்னன் ஜனமேஜயன் கேட்டதனைத்தையும், அவர்கள் சொன்னதனைத்தையும் கேட்பீராக.(2)
ஜனமேஜயன், "உங்கள் எல்லோருக்கும் எனது தந்தைக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அந்தப் புகழ்வாய்ந்த மன்னன் {பரீக்ஷித்}, அந்த நேரத்தில் எப்படித் தனது மரணத்தைச் சந்தித்தார்?(3) எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரமாக உங்களிடம் நான் கேட்டறிந்தால், உலக நன்மைக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் நான் அதற்கு உத்தரவிடுவேன். இல்லையென்றால் நான் எதுவும் செய்யமாட்டேன்" எனக் கேட்டான் {ஜனமேஜயன்}.(4) {உயர் ஆன்ம மன்னன் ஜனமேஜயனால் இவ்வாறு கேட்கப்பட்டவர்களும், அறவோர்களும், விவேகிகளுமான அமைச்சர் இவ்வாறு பதிலுரைத்தனர்}[1].(5)
அதற்கு அமைச்சர்கள், "ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, உனது சிறப்புமிக்கத் தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கை பற்றிய விவரத்தையும், எப்படி அந்த மன்னாதிமன்னன் {பரீக்ஷித்} இந்த உலகத்தை விட்டு அகன்றான் என்பதையும் நீ கேட்டதற்கிணங்க சொல்கிறோம் கேட்பாயாக.(6) உனது தந்தை {பரீக்ஷித்} அறம் சார்ந்த உயர் ஆன்மாவாக, தனது மக்களை எப்போதும் காத்து வந்தான். இந்த உலகத்தில் அந்த உயர் ஆன்மா எப்படி நடந்து கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(7) அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, அறமும் நீதியும் உருவெடுத்தாற் போல் இருந்து, அறம் உணர்ந்து, நான்கு வர்ணங்களையும், அவரவர் கடமைகளுக்கேற்ப அறத்தின்படிக் காத்து வந்தான்.(8) ஒப்பற்ற வீரத்துடன், நற்பேறும் அருளப்பட்ட அவன், பூமாதேவியைக் {உலகைக்} காத்து வந்தான். அவனை {பரீக்ஷித்தை} வெறுத்தவர் யாருமில்லை, அவனும் {பரீக்ஷித்தும்} யாரையும் வெறுத்ததில்லை.(9) பிரஜாபதியைப் (பிரம்மாவைப்) போல அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவித்தான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தங்கள் கடமையை மனநிறைவுடன் செய்து வந்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என,(10) எல்லோரையும் பாரபட்சமின்றிக் காத்துவந்தான், அந்த மன்னன் {பரீக்ஷித்}, விதவைகளையும், அனாதைகளையும், ஊனமுள்ளவரையும், ஏழைகளையும் தாங்கிக் காத்து வந்தான்.(11)
அனைத்துயிர்களுக்கும், தனது அழகால் இரண்டாவது சோமனைப் {சந்திரனைப்} போலத் தோன்றினான். நற்பேறு அருளப்பட்டு, தனது குடிகளை மனத்தில் வைத்து, அவர்களை மனநிறைவுப்படுத்தி, உண்மை பேசி, அளவிலா வீரம்பொருந்தி, சரத்வானின்[2] சீடனாக இருந்து, ஆயுத அறிவியல் பயின்றான். ஓ ஜனமேஜயா, உனது தந்தை {பரீக்ஷித்} கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} அன்பானவனாக இருந்தான்.(12,13) பெரும் புகழை அடைந்து, அனைத்து மனிதர்களாலும் அன்பு பாராட்டப்பட்டான். குரு பரம்பரையே கிட்டதட்ட அழிந்திருந்த காலத்தில் உத்தரையின் கருவறையில் அவன் {பரீக்ஷித்} பிறந்தான்.(14) எனவே, அந்தப் பலம்பொருந்திய அபிமன்யுவின் மகன் பரீக்ஷித் என்று அழைக்கப்பட்டான். மன்னர்களுக்கான கடமைகளைப் {ராஜதர்மங்களைப்} பற்றிய சாத்திரங்களை விளக்குவதில் அவன் நிபுணனாக இருந்தான். எல்லா அறங்களையும் அவன் கொடையாகப் பெற்றிருந்தான். தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, புத்தி கூர்மையுடன், பெருத்த ஞாபகச் சக்தியுடன், எல்லா அறங்களையும் கடைப்பிடித்தான். தனது மனத்தின் சக்தியால் ஆறு உணர்ச்சிகளையும் வென்றான். அவன் அனைவரிலும் மேம்பட்டு இருந்தான். (15,16) அரசியலும் ஒழுக்கமும் அறிந்த உனது தந்தை {பரீக்ஷித்}, தனது குடிகளை அறுபது {60} வருடங்கள் ஆண்டான். அப்படிப்பட்ட அவன் {பரீக்ஷித்} பிறகு தனது குடிகளைப் புலம்பி அழச் செய்யும் வகையில் இறந்து போனான். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, அவனுக்குப் பிறகு, குரு பரம்பரையின் ஆயிரம் வருடப் பரம்பரை {வம்சாவளி} அரசை நீ அடைந்தாய். குழந்தைப் பருவத்திலேயே முடிசூட்டப்பட்டு, {அதுமுதல்} உயிரினங்களனைத்தையும் நீ காப்பாற்றி வருகிறாய்" என்றார் {அமைச்சர்}.(17,18)
ஜனமேஜயன், "குடிகளின் நன்மையைக் கருதாத அல்லது அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகாத எந்த ஒரு மன்னனும் எங்கள் பரம்பரையில் {குரு குலத்தில்} தோன்றியதில்லை. குறிப்பாக என் முப்பாட்டன்களின் நடத்தை, பெரும் சாதனைகளைச் செய்வதாகவே இருந்ததைக் கண்டிருப்பீர்கள்.(19) பல அறங்கள் அருளப்பட்ட எனது தந்தை {பரீக்ஷித்} எப்படி மரணமடைந்தார்? நடந்தது அனைத்தையும் எனக்கு நடந்தபடியே விவரியுங்கள். உம்மிடமிருந்து அதைக் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}."(20)
சௌதி தொடர்ந்தார், "இப்படி அந்த ஏகாதிபதியால் {ஜனமேஜயனால்} கேட்டுக்கொள்ளப்பட்டதும், எப்போதும் மன்னனின் {ஜனமேஜயனின்} நலனில் அக்கறையுள்ள சபை உறுப்பினர்கள் {அமைச்சர்கள்}, அவனிடம் எது எது எப்படி நடந்ததோ அப்படியே மொத்தமாகத் தெரிவித்தனர்"(21)
சபை உறுப்பினர்கள், "ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தை {பரீக்ஷித்}, முழு உலகத்தையும் பாதுகாத்தவன். சாத்திரங்கள் வழி ஒழுகும் மனிதர்களில் முதன்மையானவன். போர்க்களத்தில் வில்தாங்கியவர்களில் முதன்மையான பாண்டுவைப் போல, வேட்டையாடும் விளையாட்டிற்கு அடிமையாக இருந்தான். அவன் சிறு விஷயங்களிருந்து மிக முக்கியமான விஷயங்கள் வரை நாட்டு நடப்பில் எல்லா விஷயங்களையும் எங்களைக் கலந்தாலோசித்தான்.(22,23) அவன் {பரீக்ஷித்}, ஒரு நாள், கானகத்திற்குள் சென்று, ஒரு மானைத் தனது கணையால் துளைத்தான். தனது அம்புறாத்தூணியையும், வாளையும், {வில்லையும்} சுமந்து கொண்டு,(24) அந்த மானைத் துரத்திக் கொண்டு ஓடினான். தொலைந்த மானை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு அறுபது {60} வயது ஆகியிருந்ததால், முதுமையினால் தளர்வுற்று, விரைவிலேயே மிகவும் சோர்ந்து போய்ப் பசியெடுத்து களைத்து இருந்தான். அங்கே அந்த ஆழ்ந்த கானகத்திற்குள் ஓர் உயர் ஆன்ம முனிவரைக் கண்டான்.(25,26) அந்த முனிவர் {சமீகர்} மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். மன்னன் {பரீக்ஷித்} அவரிடம் {சமீகரிடம்} மானைப் பற்றிக் கேட்டான். ஆனாலும் அவர் பதிலளிக்கவில்லை.(27) ஏற்கனவே களைப்பாலும், சோர்வாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த அந்த மன்னன் {பரீக்ஷித்}, முடிவில், அசைவற்று மரக்கட்டை போல் மௌன விரதம் இருந்த முனிவரைக் {சமீகரைக்} கண்டு கோபம் கொண்டான். அவர் {முனிவர் சமீகர்} மௌன விரதம் இருப்பது மன்னனுக்குத் தெரியாது. எனவே, கோபத்தால் உந்தப்பட்ட உனது தந்தை {பரீக்ஷித்} அவரை {முனிவர் சமீகரை} அவமதித்தான்.(28,29) பாரதக் குலத்தில் அருமையானவனே {ஜனமேஜயனே}, அந்த மன்னனான உனது தந்தை {பரீக்ஷித்}, தனது வில்லின் நுனியால் ஓர் உயிரற்ற பாம்பை எடுத்து களங்கமற்ற ஆன்மாவான அந்த முனிவரின் {முனிவர் சமீகரின்} தோளில் போட்டான்.(30) ஆனாலும் அந்த முனிவர் {சமீகர்} நன்மை தரும் சொல்லோ, தீமை தரும் சொல்லோ ஒன்றும் கூறாமல், கோபமற்று இருந்தார். அவர் {முனிவர் சமீகர்} அந்த உயிரற்றப் பாம்பைத் தாங்கிக் கொண்டு அதே நிலையிலேயே இருந்தார்" என்றனர் {அமைச்சர்கள்}."(31)
சௌதி சொன்னார், "ஓ பிராமணரே! {சௌனகரே}, பரீக்ஷித்தின் இறப்பைப் பற்றித் தனது அமைச்சர்களிடம் மன்னன் ஜனமேஜயன் கேட்டதனைத்தையும், அவர்கள் சொன்னதனைத்தையும் கேட்பீராக.(2)
ஜனமேஜயன், "உங்கள் எல்லோருக்கும் எனது தந்தைக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அந்தப் புகழ்வாய்ந்த மன்னன் {பரீக்ஷித்}, அந்த நேரத்தில் எப்படித் தனது மரணத்தைச் சந்தித்தார்?(3) எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரமாக உங்களிடம் நான் கேட்டறிந்தால், உலக நன்மைக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் நான் அதற்கு உத்தரவிடுவேன். இல்லையென்றால் நான் எதுவும் செய்யமாட்டேன்" எனக் கேட்டான் {ஜனமேஜயன்}.(4) {உயர் ஆன்ம மன்னன் ஜனமேஜயனால் இவ்வாறு கேட்கப்பட்டவர்களும், அறவோர்களும், விவேகிகளுமான அமைச்சர் இவ்வாறு பதிலுரைத்தனர்}[1].(5)
[1] இந்த சுலோகம் கங்குலியில் விடுபட்டிருக்கிறது. ஆதிபர்வம் முதல் உத்யோக பர்வம் வரை மன்மதநாததத்தரின் பதிப்பை ஒட்டியே சுலோக எண்களைக் குறிக்க இருப்பதால், மேற்கண்ட சுலோகத்தையும் அப்பதிப்பில் இருந்தே எடுத்துக் கையாண்டிருக்கிறேன்.
அதற்கு அமைச்சர்கள், "ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, உனது சிறப்புமிக்கத் தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கை பற்றிய விவரத்தையும், எப்படி அந்த மன்னாதிமன்னன் {பரீக்ஷித்} இந்த உலகத்தை விட்டு அகன்றான் என்பதையும் நீ கேட்டதற்கிணங்க சொல்கிறோம் கேட்பாயாக.(6) உனது தந்தை {பரீக்ஷித்} அறம் சார்ந்த உயர் ஆன்மாவாக, தனது மக்களை எப்போதும் காத்து வந்தான். இந்த உலகத்தில் அந்த உயர் ஆன்மா எப்படி நடந்து கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(7) அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, அறமும் நீதியும் உருவெடுத்தாற் போல் இருந்து, அறம் உணர்ந்து, நான்கு வர்ணங்களையும், அவரவர் கடமைகளுக்கேற்ப அறத்தின்படிக் காத்து வந்தான்.(8) ஒப்பற்ற வீரத்துடன், நற்பேறும் அருளப்பட்ட அவன், பூமாதேவியைக் {உலகைக்} காத்து வந்தான். அவனை {பரீக்ஷித்தை} வெறுத்தவர் யாருமில்லை, அவனும் {பரீக்ஷித்தும்} யாரையும் வெறுத்ததில்லை.(9) பிரஜாபதியைப் (பிரம்மாவைப்) போல அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவித்தான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தங்கள் கடமையை மனநிறைவுடன் செய்து வந்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என,(10) எல்லோரையும் பாரபட்சமின்றிக் காத்துவந்தான், அந்த மன்னன் {பரீக்ஷித்}, விதவைகளையும், அனாதைகளையும், ஊனமுள்ளவரையும், ஏழைகளையும் தாங்கிக் காத்து வந்தான்.(11)
அனைத்துயிர்களுக்கும், தனது அழகால் இரண்டாவது சோமனைப் {சந்திரனைப்} போலத் தோன்றினான். நற்பேறு அருளப்பட்டு, தனது குடிகளை மனத்தில் வைத்து, அவர்களை மனநிறைவுப்படுத்தி, உண்மை பேசி, அளவிலா வீரம்பொருந்தி, சரத்வானின்[2] சீடனாக இருந்து, ஆயுத அறிவியல் பயின்றான். ஓ ஜனமேஜயா, உனது தந்தை {பரீக்ஷித்} கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} அன்பானவனாக இருந்தான்.(12,13) பெரும் புகழை அடைந்து, அனைத்து மனிதர்களாலும் அன்பு பாராட்டப்பட்டான். குரு பரம்பரையே கிட்டதட்ட அழிந்திருந்த காலத்தில் உத்தரையின் கருவறையில் அவன் {பரீக்ஷித்} பிறந்தான்.(14) எனவே, அந்தப் பலம்பொருந்திய அபிமன்யுவின் மகன் பரீக்ஷித் என்று அழைக்கப்பட்டான். மன்னர்களுக்கான கடமைகளைப் {ராஜதர்மங்களைப்} பற்றிய சாத்திரங்களை விளக்குவதில் அவன் நிபுணனாக இருந்தான். எல்லா அறங்களையும் அவன் கொடையாகப் பெற்றிருந்தான். தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, புத்தி கூர்மையுடன், பெருத்த ஞாபகச் சக்தியுடன், எல்லா அறங்களையும் கடைப்பிடித்தான். தனது மனத்தின் சக்தியால் ஆறு உணர்ச்சிகளையும் வென்றான். அவன் அனைவரிலும் மேம்பட்டு இருந்தான். (15,16) அரசியலும் ஒழுக்கமும் அறிந்த உனது தந்தை {பரீக்ஷித்}, தனது குடிகளை அறுபது {60} வருடங்கள் ஆண்டான். அப்படிப்பட்ட அவன் {பரீக்ஷித்} பிறகு தனது குடிகளைப் புலம்பி அழச் செய்யும் வகையில் இறந்து போனான். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, அவனுக்குப் பிறகு, குரு பரம்பரையின் ஆயிரம் வருடப் பரம்பரை {வம்சாவளி} அரசை நீ அடைந்தாய். குழந்தைப் பருவத்திலேயே முடிசூட்டப்பட்டு, {அதுமுதல்} உயிரினங்களனைத்தையும் நீ காப்பாற்றி வருகிறாய்" என்றார் {அமைச்சர்}.(17,18)
[2] சரத்வானின் மகன் கிருபர் ஆவார். அவர் குரு வம்சத்து குலகுரு. அப்படி இருக்க சரத்வான் பரீக்ஷித்தின் குரு என்பது நெருடலாய் இருக்கிறது. மூல ஸ்லோகத்தை ஆராய்ந்ததில், சரத்வன் எனப்படும் கௌதமர் வழிவந்தவர் என்பதைக் குறிக்கும் சரத்வத் (சரத்வன் என்னும் கௌதம பரம்பரையைச் சேர்ந்தவன்) என்ற சொல்லே உபயோகப் படுத்தப்பட்டிருப்பதால் கிருபரே பரீக்ஷித்துக்கும் குருவாக இருந்தார் எனத் தெரிகிறது.
ஜனமேஜயன், "குடிகளின் நன்மையைக் கருதாத அல்லது அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகாத எந்த ஒரு மன்னனும் எங்கள் பரம்பரையில் {குரு குலத்தில்} தோன்றியதில்லை. குறிப்பாக என் முப்பாட்டன்களின் நடத்தை, பெரும் சாதனைகளைச் செய்வதாகவே இருந்ததைக் கண்டிருப்பீர்கள்.(19) பல அறங்கள் அருளப்பட்ட எனது தந்தை {பரீக்ஷித்} எப்படி மரணமடைந்தார்? நடந்தது அனைத்தையும் எனக்கு நடந்தபடியே விவரியுங்கள். உம்மிடமிருந்து அதைக் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}."(20)
சௌதி தொடர்ந்தார், "இப்படி அந்த ஏகாதிபதியால் {ஜனமேஜயனால்} கேட்டுக்கொள்ளப்பட்டதும், எப்போதும் மன்னனின் {ஜனமேஜயனின்} நலனில் அக்கறையுள்ள சபை உறுப்பினர்கள் {அமைச்சர்கள்}, அவனிடம் எது எது எப்படி நடந்ததோ அப்படியே மொத்தமாகத் தெரிவித்தனர்"(21)
சபை உறுப்பினர்கள், "ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தை {பரீக்ஷித்}, முழு உலகத்தையும் பாதுகாத்தவன். சாத்திரங்கள் வழி ஒழுகும் மனிதர்களில் முதன்மையானவன். போர்க்களத்தில் வில்தாங்கியவர்களில் முதன்மையான பாண்டுவைப் போல, வேட்டையாடும் விளையாட்டிற்கு அடிமையாக இருந்தான். அவன் சிறு விஷயங்களிருந்து மிக முக்கியமான விஷயங்கள் வரை நாட்டு நடப்பில் எல்லா விஷயங்களையும் எங்களைக் கலந்தாலோசித்தான்.(22,23) அவன் {பரீக்ஷித்}, ஒரு நாள், கானகத்திற்குள் சென்று, ஒரு மானைத் தனது கணையால் துளைத்தான். தனது அம்புறாத்தூணியையும், வாளையும், {வில்லையும்} சுமந்து கொண்டு,(24) அந்த மானைத் துரத்திக் கொண்டு ஓடினான். தொலைந்த மானை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு அறுபது {60} வயது ஆகியிருந்ததால், முதுமையினால் தளர்வுற்று, விரைவிலேயே மிகவும் சோர்ந்து போய்ப் பசியெடுத்து களைத்து இருந்தான். அங்கே அந்த ஆழ்ந்த கானகத்திற்குள் ஓர் உயர் ஆன்ம முனிவரைக் கண்டான்.(25,26) அந்த முனிவர் {சமீகர்} மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். மன்னன் {பரீக்ஷித்} அவரிடம் {சமீகரிடம்} மானைப் பற்றிக் கேட்டான். ஆனாலும் அவர் பதிலளிக்கவில்லை.(27) ஏற்கனவே களைப்பாலும், சோர்வாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த அந்த மன்னன் {பரீக்ஷித்}, முடிவில், அசைவற்று மரக்கட்டை போல் மௌன விரதம் இருந்த முனிவரைக் {சமீகரைக்} கண்டு கோபம் கொண்டான். அவர் {முனிவர் சமீகர்} மௌன விரதம் இருப்பது மன்னனுக்குத் தெரியாது. எனவே, கோபத்தால் உந்தப்பட்ட உனது தந்தை {பரீக்ஷித்} அவரை {முனிவர் சமீகரை} அவமதித்தான்.(28,29) பாரதக் குலத்தில் அருமையானவனே {ஜனமேஜயனே}, அந்த மன்னனான உனது தந்தை {பரீக்ஷித்}, தனது வில்லின் நுனியால் ஓர் உயிரற்ற பாம்பை எடுத்து களங்கமற்ற ஆன்மாவான அந்த முனிவரின் {முனிவர் சமீகரின்} தோளில் போட்டான்.(30) ஆனாலும் அந்த முனிவர் {சமீகர்} நன்மை தரும் சொல்லோ, தீமை தரும் சொல்லோ ஒன்றும் கூறாமல், கோபமற்று இருந்தார். அவர் {முனிவர் சமீகர்} அந்த உயிரற்றப் பாம்பைத் தாங்கிக் கொண்டு அதே நிலையிலேயே இருந்தார்" என்றனர் {அமைச்சர்கள்}."(31)
| ஆங்கிலத்தில் | In English |
Sunday, March 03, 2013
பரீக்ஷித்துக்குச் செய்தி வந்தது! | ஆதிபர்வம் - பகுதி 42
The message reached Parikshit! | Adi Parva - Section 42 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 30)
பதிவின் சுருக்கம் : சிருங்கியை அறிவுறுத்திய சமீகர்; சாபம் குறித்த செய்தி மன்னனுக்கு அனுப்பிய சமீகர்; பரீக்ஷித்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்; தக்ஷகனின் விஷத்தை முறிக்க வந்த கசியபர்; கசியபரைச் சந்தித்த தக்ஷகன்...
சௌதி சொன்னார், "அதன்பிறகு சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்}, "ஓ தந்தையே! நான் இந்தச் செயலை அவசரத்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}.(1) ஓ தந்தையே! நான் உங்களுக்குச் சொல்கிறேன், (ஒரு சாபமானது) வேறு விதமாகாது. நான் விளையாட்டுக்காகக் கூடப் பொய் சொன்னதில்லை" என்றான்.(2)
தந்தையின் கண்டிப்பு! | ஆதிபர்வம் - பகுதி 41
Father rebuked the son! | Adi Parva - Section 41 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 29)
பதிவின் சுருக்கம் : சிருங்கியின் கோபம்; பரீக்ஷித்தைச் சபித்த சிருங்கி; தன் சாபத்தைக் குறித்துத் தனது தந்தையிடம் தெரிவித்த சிருங்கி; தன் மகனைக் கண்டித்த சமீகர்...
சௌதி சொன்னார், "இப்படிச் {கிருசனால்} சொல்லப்பட்டதையும், தன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்த சிருங்கி கோபத்தால் எரிந்தான்.(1) கிருசனைப் பார்த்து, மென்மையாக, "வேண்டிக் கேட்கிறேன், இன்று ஏன் எனது தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமக்கிறார்?" என்று கேட்டான்.(2) அதற்குக் கிருசன், "ஓ அன்புக்குரியவனே, மன்னன் பரீக்ஷித்வேட்டைக்காகத் திரிந்து கொண்டிருக்கும்போது, அவன் அந்தச் இறந்த பாம்பை உனது தந்தையின் {சமீகரின்} தோளில் போட்டுச் சென்றான்" என்றான்.(3) சிருங்கி, "அந்தத் தீய ஏகாதிபதிக்கு {பரீக்ஷித்} எனது தந்தை {சமீகர்} என்ன தீங்கு செய்தார்? ஓ கி்ருசா, இதைச் சொல்லி, எனது ஆன்ம பலத்தைக் காண்பாயாக" என்றான்.(4)
Saturday, March 02, 2013
பரீக்ஷித் செய்த பிழை! | ஆதிபர்வம் - பகுதி 40
The wrong done by Parikshit! | Adi Parva - Section 40 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 28)
பதிவின் சுருக்கம் : ஜரத்காருவின்
பெயர்க்காரணம்; பரிக்ஷித் அடித்த மான்; பேசாத சமீகர்; சமீகரை அவமதித்த
பரிக்ஷித்; கிருசனும் சிருங்கியும் பேசிக் கொண்டது; சிருங்கியை கோபமடைய
வைத்த கிருசன் ...
![]() |
| சமீகரை அவமதித்த பரிக்ஷித் |
சௌனகர், "ஓ சூத மைந்தா! {சௌதியே}, அந்தச் சிறப்புமிக்க முனிவர் ஜரத்காரு, இந்த உலகத்தில் அந்தப் பெயரால் ஏன் அழைக்கப்பட்டார். ஜரத்காரு என்ற பெயருக்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்று கேட்டார்.(1,2)
சௌதி சொன்னார், "`ஜரை’, என்றால் உதவாதது என்றும், காரு என்றால் பெரியது என்று பொருள் எனச் சொல்லப்படுகிறது. இந்த முனிவர் {ஜரத்காரு} பெரும் உடலுடையவராக இருந்தார்[1]. ஆனால் அதைத் தனது கடுமையான தவத் துறவுகளால் படிப்படியாகக் குறைத்தார். ஓ பிராமணர்களே, அதே காரணத்துக்காகவே, வாசுகியின் சகோதரியும் ஜரத்காரு {பெரியதைக் குறைத்தவள்} என்று அழைக்கப்பட்டாள்" {என்றார் சௌதி}.(3,4)
சௌதி சொன்னார், "`ஜரை’, என்றால் உதவாதது என்றும், காரு என்றால் பெரியது என்று பொருள் எனச் சொல்லப்படுகிறது. இந்த முனிவர் {ஜரத்காரு} பெரும் உடலுடையவராக இருந்தார்[1]. ஆனால் அதைத் தனது கடுமையான தவத் துறவுகளால் படிப்படியாகக் குறைத்தார். ஓ பிராமணர்களே, அதே காரணத்துக்காகவே, வாசுகியின் சகோதரியும் ஜரத்காரு {பெரியதைக் குறைத்தவள்} என்று அழைக்கப்பட்டாள்" {என்றார் சௌதி}.(3,4)
Subscribe to:
Comments (Atom)
Kindle E-Books
மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்
அகம்பனன்
அகலிகை
அகஸ்தியர்
அகிருதவரணர்
அக்னி
அக்ருதவ்ரணர்
அங்கதன்
அங்காரபர்ணன்
அங்கிரஸ்
அசமஞ்சன்
அசலன்
அசுவினிகள்
அஞ்சனபர்வன்
அதிரதன்
அத்புதன்
அத்ரி
அத்ரிசியந்தி
அனுகம்பகன்
அனுவிந்தன்
அன்சுமான்
அபிமன்யு
அம்பரீஷன்
அம்பா
அம்பாலிகை
அம்பிகை
அம்பை
அயோதா தௌம்யா
அரிஷ்டநேமி
அருணன்
அருணி
அருந்ததி
அர்ஜுனன்
அர்வாவசு
அலம்பலன்
அலம்புசன்
அலம்புசை
அலர்க்கன்
அலாயுதன்
அவிந்தியன்
அவுர்வா
அஷ்டகன்
அஷ்டவக்கிரர்
அஸ்மர்
அஸ்வசேனன்
அஸ்வத்தாமன்
அஸ்வபதி
அஹல்யை
ஆங்கரிஷ்டன்
ஆஜகரர்
ஆணிமாண்டவ்யர்
ஆதிசேஷன்
ஆத்ரேயர்
ஆர்யகன்
ஆர்ஷ்டிஷேணர்
ஆஸ்தீகர்
இக்ஷ்வாகு
இந்திரசேனன்
இந்திரசேனை
இந்திரஜித்
இந்திரத்யும்னன்
இந்திரன்
இந்திரோதர்
இராவான் {அரவான்}
இல்வலன்
உக்கிரசேனன்
உக்தன்
உக்ரசேனன்
உசீநரன்
உச்சைஸ்ரவஸ்
உதங்கர்
உதங்கா
உதத்யர்
உத்தமௌஜஸ்
உத்தரன்
உத்தரை
உத்தவர்
உத்தாலகர்
உபமன்யு
உபரிசரன்
உபஸ்ருதி
உமை
உலூகன்
உலூபி
ஊர்வசி
எலபத்திரன்
ஏகதன்
ஏகதர்
ஏகலவ்யன்
ஐராவதன்
ஓகவதி
ஔத்தாலகர்
ஔத்தாலகி
கங்கன்
கங்கை
கசன்
கசியபர்
கடோத்கசன்
கணிகர்
கண்வர்
கதன்
கத்ரு
கந்தன்
கனகன்
கபிலர்
கபோதரோமன்
கயன்
கராளன்
கருடன்
கர்ணன்
கலி
கல்கி
கல்மாஷபாதன்
கவந்தன்
கஹோடர்
காகமா
காக்ஷிவத்
காசியபர்
காதி
காந்தாரி
காமதேனு
காயத்ரி
காயவ்யன்
கார்க்கோடகன்
கார்க்யர்
கார்த்தவீரியார்ஜுனன்
கார்த்திகை
காலகவிருக்ஷீயர்
காலகேயர்
காலன்
காலவர்
காளி
கிந்தமா
கிரது
கிரந்திகன்
கிராதன்
கிரிசன்
கிரிடச்சி
கிருதவர்மன்
கிருதவீர்யன்
கிருதாசி
கிருபர்
கிருபி
கிருஷ்ணன்
கிர்மீரன்
கீசகன்
கீசகர்கள்
குசிகன்
குணகேசி
குணி-கர்க்கர்
குண்டதாரன்
குந்தி
குந்திபோஜன்
குபேரன்
கும்பகர்ணன்
குரு
குரோதவாசர்கள்
குவலாஸ்வன்
கேசினி
கேசின்
கேதுவர்மன்
கைகேயன்
கைகேயி
கைடபன்
கோடிகன்
கோமுகன்
கௌசிகர்
கௌசிகி
கௌதமன்
கௌதமர்
கௌதமி
க்ஷத்ரபந்து
க்ஷேமதர்சின்
க்ஷேமதூர்த்தி
சகரன்
சகாதேவன்
சகுந்தலை
சகுனி
சக்திரி
சக்ரதேவன்
சங்கன்
சசபிந்து
சச்சி
சஞ்சயன்
சஞ்சயன் 1
சதயூபன்
சதானீகன்
சத்தியசேனன்
சத்தியஜித்
சத்தியபாமா
சத்தியர்
சத்தியவதி
சத்யசேனன்
சத்யபாமா
சத்யவான்
சத்ருஞ்சயன்
சந்தனு
சந்திரன்
சனத்சுஜாதர்
சமங்கர்
சமீகர்
சம்சப்தகர்கள்
சம்பரன்
சம்பா
சம்பாகர்
சம்பை
சம்வர்ணன்
சம்வர்த்தர்
சரபன்
சரஸ்வதி
சர்மின்
சர்மிஷ்டை
சர்யாதி
சலன்
சல்லியன்
சஹஸ்ரபத்
சாகரன்
சாண்டிலி
சாண்டில்யர்
சாத்யகி
சாத்யர்கள்
சாந்தை
சாம்பன்
சாம்யமணி
சாரங்கத்வஜன்
சாரஸ்வதர்
சாரிசிரிகன்
சாருதேஷ்ணன்
சார்வாகன்
சால்வன்
சாவித்ரி
சிகண்டி
சிங்கசேனன்
சிசுபாலன்
சித்திரசேனன்
சித்திரன்
சித்திராங்கதை
சித்ரகுப்தன்
சித்ரவாஹனன்
சிநி
சிந்துத்வீபன்
சிபி
சியவணன்
சியவனர்
சிரிகாரின்
சிரிங்கின்
சிருஞ்சயன்
சிவன்
சீதை
சுகன்யா
சுகர்
சுகுமாரி
சுகேது
சுக்ரது
சுக்ரன்
சுக்ரீவன்
சுசர்மன்
சுசோபனை
சுதக்ஷிணன்
சுதசோமன்
சுதன்வான்
சுதர்சனன்
சுதர்மை
சுதாமன்
சுதேவன்
சுதேஷ்ணை
சுநந்தை
சுந்தன் உபசுந்தன்
சுனந்தை
சுனஸ்ஸகன்
சுபத்திரை
சுப்ரதீகா
சுமித்திரன்
சுமுகன்
சுரதன்
சுரதை
சுரபி
சுருதகர்மன்
சுருதசேனன்
சுருதர்வன்
சுருதர்வான்
சுருதாயுதன்
சுருதாயுஸ்
சுருவாவதி
சுலபை
சுவர்ணஷ்டீவின்
சுவாகா
சுவேதகேது
சுஷேணன்
சுஹோத்திரன்
சூதன்வான்
சூரன்
சூரியதத்தன்
சூரியன்
சூரியவர்மன்
சூர்ப்பனகை
சேகிதானன்
சேதுகன்
சேனஜித்
சைகாவத்யர்
சைப்யை
சைரந்திரி
சோமகன்
சோமதத்தன்
சௌதி
சௌதியும்னி
சௌனகர்
ஜடாசுரன்
ஜடாயு
ஜந்து
ஜனகன்
ஜனதேவன்
ஜனபதி
ஜனமேஜயன்
ஜனமேஜயன் 1
ஜமதக்னி
ஜரத்காரு
ஜராசந்தன்
ஜரிதை
ஜரை
ஜலசந்தன்
ஜாஜலி
ஜாம்பவதி
ஜாரிதரி
ஜிமூதன்
ஜீவலன்
ஜெயத்சேனன்
ஜெயத்ரதன்
ஜைகிஷவ்யர்
ஜோதஸ்நாகாலி
தக்ஷகன்
தக்ஷன்
தண்டதாரன்
தண்டன்
தண்டி
ததீசர்
தத்தாத்ரேயர்
தனு
தபதி
தபஸ்
தமனர்
தமயந்தி
தம்போத்பவன்
தர்மதர்சனர்
தர்மதேவன்
தர்மத்வஜன்
தர்மவியாதர்
தர்மாரண்யர்
தளன்
தாத்ரேயிகை
தாரகன்
தாருகன்
தார்க்ஷ்யர்
தாலப்யர்
தியுமத்சேனன்
திரஸதஸ்யு
திரிசிரன்
திரிஜடை
திரிதர்
திருதராஷ்டிரன்
திருதவர்மன்
திருஷ்டத்யும்னன்
திரௌபதி
திலீபன்
திலோத்தமை
திவோதாசன்
தீர்க்கதமஸ்
துச்சலை
துச்சாசனன்
துந்து
துரியோதனன்
துருபதன்
துருபதன் புரோகிதர்
துரோணர்
துர்க்கை
துர்ஜயன்
துர்மதன்
துர்மர்ஷணன்
துர்முகன்
துர்வாசர்
துலாதாரன்
துவஷ்டிரி
துவாபரன்
துவிதன்
துஷ்கர்ணன்
துஷ்யந்தன்
தேவ
தேவகி
தேவசர்மன்
தேவசேனா
தேவசேனை
தேவமதர்
தேவயானி
தேவராதன்
தேவலர்
தேவஸ்தானர்
தேவாபி
தௌமியர்
நகுலன்
நகுஷன்
நமுசி
நரகாசுரன்
நரன்
நளன்
நளன்2
நாகன்
நாசிகேதன்
நாடீஜங்கன்
நாரதர்
நாராயணன்
நாராயணர்கள்
நிருகன்
நிவாதகவசர்கள்
நீலன்
நைருதர்கள்
பகதத்தன்
பகன்
பகர்
பகீரதன்
பங்காஸ்வனன்
பசுஸகன்
பஞ்சசிகர்
பஞ்சசூடை
பத்மநாபன்
பத்மன்
பத்ரகாளி
பத்ரசாகன்
பத்ரா
பப்ருவாஹனன்
பரசுராமர்
பரதன்
பரத்வாஜர்
பராசரர்
பராவசு
பரிக்ஷித்
பரீக்ஷித்1
பர்ணாதன்
பர்வதர்
பலன்
பலராமன்
பலி
பலிதன்
பாகுகன்
பாணன்
பாண்டியன்
பாண்டு
பானுமதி
பானுமான்
பாஹ்லீகர்
பிங்களன்
பிங்களை
பிரகலாதன்
பிரதர்த்தனன்
பிரதிவிந்தியன்
பிரதீபன்
பிரத்னஸ்வன்
பிரத்யும்னன்
பிரமாதின்
பிரம்மதத்தன்
பிரம்மத்வாரா
பிரம்மன்
பிரம்மாதி
பிராதிகாமின்
பிருகதஸ்வர்
பிருகத்யும்னன்
பிருகு
பிருது
பிருந்தாரகன்
பிருஹத்சேனை
பிருஹத்பலன்
பிருஹத்ரதன்
பிருஹந்நளை
பிருஹஸ்பதி
பீமன்
பீமன்1
பீஷ்மர்
புரு
புருரவஸ்
புரோசனன்
புலஸ்தியர்
புலஹர்
புலோமா
புஷ்கரன்
பூஜனி
பூமாதேவி
பூரி
பூரிஸ்ரவஸ்
போத்யர்
பௌரவன்
பௌரிகன்
பௌலோமர்
மங்கணகர்
மங்கி
மடன்
மணிமான்
மதங்கன்
மதயந்தி
மதிராக்ஷன்
மது
மதுகைடபர்
மந்தபாலர்
மந்தரை
மனு
மயன்
மருத்தன்
மலயத்வஜன்
மஹாபிஷன்
மஹிஷன்
மஹோதரர்
மாணிபத்ரன்
மாதலி
மாதவி
மாத்ரி
மாந்தாதா
மாரீசன்
மார்க்கண்டேயர்
மாலினி
மிருத்யு
முகுந்தன்
முசுகுந்தன்
முத்கலர்
முனிவர்பகன்
மூகன்
மேதாவி
மேனகை
மைத்ரேயர்
யது
யமன்
யயவரர்
யயாதி
யவக்கிரீ
யாஜ்ஞவல்கியர்
யாதுதானி
யுதாமன்யு
யுதிஷ்டிரன்
யுயுத்சு
யுவனாஸ்வன்
ரந்திதேவன்
ராகு
ராஜதர்மன்
ராதை
ராமன்
ராவணன்
ரிசீகர்
ரிதுபர்ணன்
ரிஷபர்
ரிஷ்யசிருங்கர்
ருக்மரதன்
ருக்மி
ருக்மிணி
ருசங்கு
ருசி
ருத்திரன்
ருரு
ரேணுகன்
ரேணுகை
ரைப்பியர்
ரோமபாதன்
ரோஹிணி
லக்ஷ்மணன்
லட்சுமணன்
லட்சுமி
லபிதை
லோகபாலர்கள்
லோபாமுத்திரை
லோமசர்
லோமபாதன்
லோமஹர்ஷனர்
வசாதீயன்
வசிஷ்டர்
வசு
வசுதேவர்
வசுமனஸ்
வசுமான்
வசுஹோமன்
வஜ்ரன்
வஜ்ரவேகன்
வதான்யர்
வந்தின்
வருணன்
வர்கா
வாசுகி
வாதாபி
வாமதேவர்
வாயு
வார்ஷ்ணேயன்
வாலகில்யர்
வாலி
விகர்ணன்
விசரக்கு
விசாகன்
விசித்திரவீரியன்
விசோகன்
விதுரன்
விதுலை
விந்தன்
வினதை
விபாண்டகர்
விபாவசு
விபீஷணன்
விபுலர்
வியாக்ரதத்தன்
வியாசர்
வியுஷிதஸ்வா
விராடன்
விருத்திரன்
விருபாகஷன்
விருஷகன்
விருஷசேனன்
விருஷதர்பன்
விருஷபர்வன்
விரோசனன்
விவிங்சதி
விஷ்ணு
விஸ்வகர்மா
விஸ்வாமித்ரர்
வீதஹவ்யன்
வீரத்யும்னன்
வீரபத்ரன்
வேதா
வேனன்
வைகர்த்தனன்
வைசம்பாயனர்
வைனியன்
வைவஸ்வத மனு
ஷாமந்தர்
ஸனத்குமாரர்
ஸுமனை
ஸுவர்ச்சஸ்
ஸ்கந்தன்
ஸ்தாணு
ஸ்தூணாகர்ணன்
ஸ்யூமரஸ்மி
ஸ்ரீ
ஸ்ரீமதி
ஸ்ரீமான்
ஸ்வேதகி
ஸ்வேதகேது
ஸ்வேதன்
ஹனுமான்
ஹயக்ரீவன்
ஹரிச்சந்திரன்
ஹர்யஸ்வன்
ஹாரீதர்
ஹிடிம்பன்
ஹிடிம்பை
ஹிரண்யவர்மன்
ஹோத்திரவாஹனர்




