Showing posts with label தேவராதன். Show all posts
Showing posts with label தேவராதன். Show all posts

Saturday, November 03, 2018

பரமஞானம்! - சாந்திபர்வம் பகுதி – 319

Supreme Knowledge! | Shanti-Parva-Section-319 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 146)


பதிவின் சுருக்கம் : சூரியனிடமிருந்து யஜுர் வேதத்தை அடைந்தது; கந்தர்வ மன்னன் விஸ்வாவசுவின் இருபத்தைந்து கேள்விகள்; அவற்றுக்குத் தாம் அளித்த விடைகள்; பிரகிருதி, ஜீவாத்மா, பரமாத்மா தொடர்புடைய மோக்ஷ அறிவியல்; ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "ஓ! ஏகாதிபதி, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} வசிக்கும் பரப்பிரம்மத்தைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்வி ஆழ்ந்த புதிருடன் தொடர்புடையதாகும். ஓ! மன்னா, குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, முனிவர்களால் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பணிவுள்ளவனாக என்னை ஒழுங்கு செய்து கொண்டு சூரியனிடமிருந்து நான் யஜுஸ்களை {யஜுர் வேதத்தைப்} பெற்றேன்.(2) முன்பு நான், வெப்பம் தரும் தேவனை {சூரியனைத்} துதித்தபடியே கடுந்தவத்தில் ஈடுபட்டேன். ஓ! பாவமற்றவனே, என்னிடம் நிறைவடைந்த பலமிக்கச் சூரியன், என்னிடம்,(3) "ஓ! மறுபிறப்பாள முனிவரே, எவ்வளவுதான் அடைவதற்கரிதாக இருந்தாலும் எதில் உமது இதயத்தை நிலைபெறச் செய்திருக்கிறீரோ, அந்த வரத்தைக் கேட்பீராக. உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் நான் அஃதை உமக்கு அருள்வேன். எனது அருளை அடைவது மிக அரிதானதாகும்" என்றான்.(4)

Friday, November 02, 2018

மரணக்குறியீடுகள்! - சாந்திபர்வம் பகுதி – 318

The indications of death! | Shanti-Parva-Section-318 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 145)


பதிவின் சுருக்கம் : உயிர் வெளியேறும் உறுப்புகள் குறிப்பிடும் கதி; மரணக் குறியீடுகள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "ஓ! மன்னா, மரணமடைபவர்கள் செல்லும் இடங்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன், கவனத்துடன் கேட்பாயாக. ஜீவாத்மா கால்களின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் விஷ்ணுலோகத்திற்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.(1) ஆடுதசைகளின் வழியே வெளியேறினால் அவன் வசுக்களின் உலகத்திற்குச் செல்கிறான் என நாம் கேள்விப்படுகிறோம். முழங்கால் முட்டிகளின் வழியே வெளியேறினால் அவன் சத்யஸ்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(2) குதத்தின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் மித்ரனின் உலகத்தை அடைகிறான். பின்தட்டுகளின் வழியே வெளியேறினால் அம்மனிதன் பூமிக்குத் திரும்புகிறான். தொடைகளின் வழியே வெளியேறினால் அவன் பிரஜாபதியின் உலகத்திற்குச் செல்கிறான்.(3)

Thursday, November 01, 2018

யோகம்! - சாந்திபர்வம் பகுதி – 317

Yoga! | Shanti-Parva-Section-317 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 144)


பதிவின் சுருக்கம் : யோக நிலைகளான சகுண பிராணாயாமம், நிர்க்குண பிராணாயாமம், சமாதி ஆகியவை குறித்தும் யோகிகளின் தத்துவம் குறித்தும் ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனுக்கு}, "நான் சாங்கியர்களின் அறிவியலை உனக்குச் சொன்னேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இப்போது, யோகிகளின் அறிவியலை நான் கேள்விப்பட்டவகையிலும், பார்த்த வகையிலும் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(1) சாங்கிய ஞானத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு ஞானம் ஏதும் இல்லை. யோக பலத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு பலம் ஏதும் கிடையாது. ஒரே நடைமுறைகளை விதிக்கும் இவ்விரண்டும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கவல்லவையாகக் கருதப்படுகின்றன.(2) புத்தியால் அருளப்படாத மனிதர்களே சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருப்பதாகக் கருதுகிறார்கள். எனினும், ஓ! மன்னா, அவற்றை (கற்று, சிந்தித்த பிறகு) நாம் அடையும் தீர்மானத்தின்படி அவற்றை ஒன்றாகவே நாம் காண்கிறோம்.(3) சாங்கியர்கள் பார்ப்பதையே யோகிகளும் பார்க்கிறார்கள். சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளை ஒன்றாகக் காண்பவன், அண்டத்தை விதிக்கும் தத்துவங்கள், அல்லது கோட்பாடுகளை உண்மையில் அறிந்தவனாகக் கருதப்படுகிறான்.(4)

சாங்கிய தத்துவம்! - சாந்திபர்வம் பகுதி – 316

The philosophy of the Sankyas! | Shanti-Parva-Section-316 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 143)


பதிவின் சுருக்கம் : சாங்கிய அமைப்பைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, "ஓ! மகனே, குணங்கள் அற்ற ஒன்றை, அதன் குணங்களைச் சுட்டி ஒருபோதும் விளக்கமுடியாது. எனினும், எது குணங்களைக் கொண்டதென்றும், எது அவை அற்றதென்றும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) செம்மலரைப் பிரதிபலிக்கும் படிகத்தைப் போலவே, புருஷனானவன் குணங்களை ஏற்கும்போது, அவன் குணங்களைக் கொண்டவனாக அழைக்கப்படுகிறான்; ஆனாலும் பிரதிபலிப்பில் இருந்து விடுபட்ட படிகத்தைப் போல அவன் குணங்களில் இருந்து விடுபடும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்த தன் உண்மையான இயல்பில் அவன் காணப்படுகிறான் என்று தத்துவங்கள், அல்லது கோட்பாடுகள் அனைத்தின் உண்மையை அறிந்த உயர் ஆன்ம முனிவர்கள் சொல்கிறார்கள்[1].(2) புலப்படாத பிரகிருதியானவள், தன் இயல்பிலேயே குணங்களைக் கொண்டவளாக இருக்கிறாள். அவளால் அவற்றைக் கடக்க முடியாது. இயல்பிலேயே புத்தியற்றவளான அவள், குணங்களுடன் பிணைக்கப்பட்டவளாகவே இருக்கிறாள்.(3) புலப்படாத பிரகிருதியால் எதையும் அறிந்து கொள்ள முடியாத அதே வேளையில், புருஷனோ, "என்னைவிட உயர்ந்தது ஏதுமில்லை" என்று எப்போதும் தன் நினைவில் கொண்டிருக்கும் ஞானத்தைத் தன் இயல்பாகவே கொண்டிருக்கிறான்.(4)

Wednesday, October 31, 2018

குணமும் கதியும்! - சாந்திபர்வம் பகுதி – 315

Attributes and end! | Shanti-Parva-Section-315 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 142)


பதிவின் சுருக்கம் : குணங்களும், வினைகளும் அடையும் கதிகளைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) இந்த மூன்றும் பிரகிருதியின் குணங்களாகும். இவை அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுடனும் தொடர்புடையவையாகவும், அவற்றை எப்போதும் உள்ளீர்ப்பவையாகவும் இருக்கின்றன.(1) யோக குணங்கள் ஆறைக் கொண்ட புலப்படாத {அவ்யக்தமான} புருஷன் (இந்த முக்குணங்களைத் தழுவுவதன் மூலம்) நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான வடிவங்களாகத் தன்னைத் தானே மாற்றிக் கொள்கிறான்.(2) அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்கள் சத்வ குணம் அண்டத்தில் உயர்ந்த இடத்திற்கும், ரஜஸ் நடுநிலைக்கும், தமஸ் இழிந்த இடத்திற்கும் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.(3) கலப்பில்லாத அறத்தின் துணையின் மூலம் ஒருவன் (தேவர்களுக்குரிய) உயர்ந்த கதியை அடைகிறான். பாவத்துடன் கலந்த அறத்தின் மூலம் ஒருவன் மனித நிலையை அடைகிறான். அதே வேளையில் கலப்பில்லாத பாவத்தின் மூலம் (விலங்காகவோ, தாவரம் முதலியவையாகியோ) ஒருவன் இழிந்த கதியை அடைகிறான்.(4)

முக்குணக் குறியீடுகள்! - சாந்திபர்வம் பகுதி – 314

The indication of three attributes! | Shanti-Parva-Section-314 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 141)


பதிவின் சுருக்கம் : அத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம், முக்குணங்கள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "தத்துவங்களை அறிந்த பிராமணர்கள் இரு பாதங்களையும் அத்யாத்மா என்றும், {கால்களால்} நடக்கும் செயல்பாட்டை {மார்க்கத்தை} அதிபூதம் என்றும், விஷ்ணுவையே (அந்தப் பாதங்களின்) அதிதெய்வமாகவும் சொல்கின்றனர்.(1) குதம் {பாயு} அதியாத்மம்; அதன் செயல்பாடான மலம் வெளியேற்றுதல் அதிபூதம், மித்திரன் (சூரியன், அந்த உறுப்பின்) அதிதெய்வம்.(2) பிறப்புறுப்பு {குறி} அத்யாத்மம் என்றழைக்கப்படுகிறது. அதன் ஏற்புடைய செயல்பாடு {ஆனந்தம்} அதிபூதம் என்றழைக்கப்படுகிறது, பிரஜாபதி {பிரம்மன்} அதன் அதிதெய்வமாவான்.(3) கைகள் அத்யாத்மம்; அவற்றின் செயல்களைக் குறிக்கும் செயல்பாடு அதிபூதம்; இந்திரன் அந்த உறுப்பின் அதிதெய்வம்.(4) வாக்கு அத்யாத்மம்; அவற்றின் மூலம் சொல்லப்படும் சொற்கள் {சொல்லக்கூடிய விஷயம்} அதிபூதம்; அக்னி அதன் அதிதெய்வம்.(5) கண்கள் {நேத்திரம்} அதியாத்மம்; பார்வை அல்லது வடிவம் {ரூபம்} அவற்றின் அதிபூதம்; சூரியன் அவற்றின் அதிதெய்வம்..(6) காதுகள் {ஸ்ரோத்ரம்} அத்யாத்மம்; ஒலி {சப்தம்} அதன் அதிபூதம்; திசைப்புள்ளிகள் {திக்குகள்} அதன் அதிதெய்வம்.(7)

Tuesday, October 30, 2018

பிரளயம்! - சாந்திபர்வம் பகுதி – 313

Universal Destruction! | Shanti-Parva-Section-313 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 140)


பதிவின் சுருக்கம் : அண்டம் அழிக்கப்படும் முறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, "நான் ஒன்றன்பின் ஒன்றாகப் படைப்பின் முறையை, அவற்றின் மொத்த எண்ணிக்கை, பல்வேறு கோட்பாடுகள் மற்றும் அவை ஒவ்வொன்றின் காலக்கணக்கீட்டுடன் உனக்குச் சொல்லிவிட்டேன். அவற்றின் அழிவைக் குறித்து இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) நித்தியமானவனும், சிதைவற்றவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமாக இருப்பவன், மீண்டும் மீண்டும் பொருட்கள் அனைத்தையும் எவ்வாறு படைத்து அழிக்கிறான் என்பதைக் கேட்பாயாக.(2) அவனது பகல் முடிந்து, இரவு வந்ததும் அவன் உறங்க விரும்புகிறான். அத்தகைய வேளையில் புலப்படாதவனான {அவ்யக்தனான} அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}, (உலகை அழிப்பதற்கான) தன் பெரும் சக்திகளை அறிந்தவனான {அஹங்காரபிமானியான} மஹாருத்திரன் என்று அழைக்கப்படுபவனைத் தூண்டுகிறான்.(3)

இருபது பூதங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 312

Twenty Bhutas! | Shanti-Parva-Section-312 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 139)


பதிவின் சுருக்கம் : அவ்யக்த முதலியவற்றின் காலக்கணக்கையும், படைப்பையும் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்..


யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, புலப்படாததை (அல்லது பரம புருஷனைப்) பொறுத்தவரையிலான காலக்கணக்கை உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக. பத்தாயிரம் {10000} கல்பங்கள் அவனுடைய ஒரு பகல் என்று சொல்லப்படுகிறது.(1) அவனது இரவின் காலமும் அதே அளவு {10000 கல்பங்கள்} கொண்டதாகும். ஓ! ஏகாதிபதி, அந்த இரவு முடிந்ததும் அவன் முதலில் உடல் கொண்ட உயிரினங்கள் வாழ்வதற்கான செடி கொடிகளைப் படைக்கிறான்.(2) பிறகு அவன் தங்க முட்டையில் இருந்து எழும் பிரம்மனைப் படைக்கிறான். அந்தப் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் வடிவமாவான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு முழு வருடம் அந்த முட்டைக்குள் இருந்தவனும், பெரும் தவசியும், பிரஜாபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றும் அழைக்கப்படுபவனுமான பிரம்மன் அதைவிட்டு {அந்த முட்டையை விட்டு} வெளியே வந்து, மொத்த பூமியையும், மேலுள்ள சொர்க்கத்தையும் படைத்தான்.(4)

Monday, October 29, 2018

யாஜ்ஞவல்கியர்! - சாந்திபர்வம் பகுதி – 311

Yajnavalkya! | Shanti-Parva-Section-311 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 138)


பதிவின் சுருக்கம் : பிரகிருதி மற்றும் படைப்புமுறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கடமையில் இருந்து விடுபட்டதும், அதற்கு மாறானதும் {தர்ம அதர்மங்களில் இருந்து விடுபட்டதும்}, அனைத்து ஐயங்களில் இருந்தும் விடுபட்டதும், பிறப்பு, இறப்பு, அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகியவற்றைக் கடந்திருப்பதும், மங்கலமானதும், நித்திய அஞ்சாமையும், நித்தியமானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததும், எப்போதும் தூய்மையானதும், கடும் உழைப்பில் இருந்து எப்போதும் விடுபட்டதும் எதுவோ, அதைக் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(1,2)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்