Sushena slained by Uttamaujas! | Karna-Parva-Section-75 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் புறப்பட்ட பிறகு ஏற்பட்ட போரின் தன்மையைத் திருதராஷ்டிரனுக்கு விளக்கிய சஞ்சயன்; அர்ஜுனன் ஏற்படுத்திய அழிவு; எவரெவர் எவரெவரோடு மோதினர் என்ற குறிப்பு; கர்ணனின் மகனான சுஷேணனைக் கொன்ற உத்தமௌஜஸ்; உத்தமௌஜஸைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன்; கிருபரின் குதிரைகளைத் தாக்கிவிட்டு சிகண்டியின் தேரில் ஏறிக் கொண்ட உத்தமௌஜஸ்; தேரிழந்த கிருபரைக் கொல்லாமல் விட்ட சிகண்டி; கிருபரை மீட்ட அஸ்வத்தாமன்; பீமனின் ஆவேசத் தாக்குதல்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! ஐயா {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும், என் படையின் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்ததும், பயங்கரமானதும், நிலைகாண முடியாததுமான அம்மோதலில் தனஞ்சயன் {அர்ஜுனன்} போரிடச் சென்ற போது, உண்மையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது?” என்று கேட்டான்.(1)
