Showing posts with label சௌனகர். Show all posts
Showing posts with label சௌனகர். Show all posts

Tuesday, November 05, 2013

சௌனகர் உபதேசம் - வனபர்வம் பகுதி 2 ஆ

Saunaka's Sermon | Vana Parva - Section 1 | Mahabharata In Tamil

(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




யுதிஷ்டிரன் சௌனகரிடம் சந்தேகம் கேட்பதும், அதற்கு சௌனகர் விடையளிப்பதும்.

யுதிஷ்டிரன் {சௌனகரிடம்}, "ஓ! அந்தணரே, செல்வத்தை நான் விரும்புவது, அது கிடைத்தவுடன் இன்புற்று இருக்க அல்ல. அந்தணர்களைத் தாங்கிக் கொள்ளவே நான் அதை விரும்புகிறேன். பேராசையின் காரணமாக நான் அதை விரும்பவில்லை. ஓ அந்தணரே, எங்களைப் போன்றோர் எந்த காரியத்திற்காக, இல்லற வாழ்வை மேற்கொண்டோமோ அதற்காக, எங்களைத் தொடர்பவர்களை நாங்கள் பேணி தாங்க வேண்டாமா? 


அனைத்து உயிரினங்களும் (தாங்கள் சம்பாதித்த) உணவை, தங்களைச் சார்ந்தவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதைக் காண்கிறோம். அப்படியே இல்லற வாழ்வை வாழ்பவன், தனது உணவை, தங்களுக்காக சமைத்துக் கொள்ளாதிருக்கும் யதிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். நல்ல மனிதர்களின் வீடுகள் (அமர்ந்து கொள்ள) புல்லில்லாமல், (ஓய்ந்திருக்க) இடமில்லாமல், (கழுவ, தாகம் தணிக்க) நீரில்லாமல், நான்காவதாக இன்சொல் இல்லாமல் இருக்கவே கூடாது. களைப்புற்றவனுக்கு படுக்கையும், நிற்பதால் சோர்ந்தவனுக்கு ஆசனமும், தாகத்திலிருப்பவனுக்கு நீரும், பசித்திருப்பவனுக்கு உணவும் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும். விருந்தினர்களை இனிமையான பார்வையாலும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடும், இனிமையான வார்த்தைகளாலும் வரவேற்க வேண்டும். 

வீட்டின் உரிமையாளன் விருந்தினரைக் கண்டதும், உடனே எழுந்து, அந்த விருந்தினரை நோக்கி முன்னேறி, அவருக்கு ஆசனம் கொடுத்து, அவரை வணங்க வேண்டும். இதுவே நிலைத்த அறநெறியாகும். அக்னிஹோத்ரம் செய்யாதவர்களும், காளைகளைக் {மாடுகள்} கவனிக்காதவர்களும், ரத்த தொடர்புடைய உறவினர்களைப் பேணிக் காக்காதவர்களும், விருந்தினர், நண்பர்கள், மகன்கள், மனைவியர், பணியாட்கள் ஆகியோரைப் புறக்கணிப்பவர்களும் பாவத்தால் உட்கொள்ளப்படுகின்றனர். தன் ஒருவனுக்காக மட்டுமே ஒருவன் உணவு சமைக்கக்கூடாது. தேவர்களுக்கும், பித்ருகளுக்கும், விருந்தினருக்கும் படைக்காமல் ஒருவனும் ஒரு விலங்கையும் கொல்லக்கூடாது. 

தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படைக்கப்படாத உணவை ஒருவன் உண்ணக்கூடாது. காலையிலும் மாலையிலும் உணவை (தகுதியோடு இருக்கும்) நாய்களுக்கும், சண்டாளர்களுக்கும், பறவைகளுக்கும் தரையிலிட்டு, வைஸ்வதேவ வேள்வியைச் செய்ய வேண்டும். விகாசத்தை {மீந்ததை உண்பது என்று நினைக்கிறேன்} உண்பவர்கள், அமிர்தத்தை உண்டதாகக் கருதப்படுகிறார்கள். ஒரு விருந்தினருக்கு உணவளிப்பது ஒரு வேள்விக்கு சமானமாகும், விருந்தினரைப் பார்க்கும் அவனது இனிமையான பார்வை {1}, அர்ப்பணிப்புடன் கூடிய கவனித்தல் {2}, இனிமையான பேச்சு {3}, பின்தொடர்ந்து அவன் அளிக்கும் மரியாதை {4}, அவன் கொடுக்கும் உணவு மற்றும் நீர் {5} ஆகியவையே அந்த வேள்வியின் ஐந்து தட்சணைகள் ஆகும். முன்பு எப்போதும் கண்டிராத களைத்துப் போன வழிப்போக்கனுக்கு அளவற்ற உணவைக் கொடுப்பவன் பெரும் நன்மையை அடைகிறான். இல்லற வாழ்வு வாழ்ந்து இத்தகு செயல்களைச் செய்பவன் பெரும் ஆன்மத் தகுதிகளை அடைகிறான். ஓ அந்தணரே, இதில் உமது கருத்து என்ன?" என்று கேட்டான்.

சௌனகர், "ஐயோ, இந்த உலகம் முரண்பாடுகள் நிறைந்தது. நல்லோரை அவமதிக்கவும், தீயோரை திருப்திப்படுத்தவும் செய்கிறது. ஐயோ, அறியாமையாலும், ஆசையாலும், தங்கள் புலன்களுக்கு அடிமைகளாகி, முட்டாள்கள் கூட, தங்கள் வாழ்வுக்குப் பிறகு ஏற்படப்போகும் பசியைத் திருப்திப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். புலன்களால் மயக்கப்பட்டு, புலன்களை இழந்த சாரதி, மூர்க்கமான தீய குதிரைகளால் இழுத்து செல்லப்படுவதைப் போல, மனிதர்கள், கண்களைத் திறந்து கொண்டே பாவ வழியில் இழுத்துச் செல்லப்படுகின்றனர். 

ஆறு புலன்களும் தனக்குரிய பொருளைக் காணும்போது, அந்தப் பொருளைக் குறித்து இதயத்தில் ஆசை எழுகிறது. ஒரு குறிப்பிட்ட புலனுக்கு இன்பம் தரும் பொருளை அடைந்து இன்புற இதயம் முன்னேறும் போது, ஒரு விருப்பம் ஊக்கப்படுத்தப்படுகிறது. ஆகையால் ஒரு தீர்க்கம் {தீர்க்கமான முடிவு} அங்கே பிறக்கிறது. கடைசியில் வெளிச்சம் கண்டு அசை கொண்டு நெருப்புச்சுடரில் விழும் பூச்சியைப் போல, இன்பம் நுகர் பொருட்களால் துளைக்கப்பட்ட அவன் சபலம் என்ற நெருப்பில் விழுகிறான். புலன்களின் இன்பத்தால் குருடான அவன் அறியாமை இருளில் மூழ்குகிறான். தான் இன்பம் என்று நினைக்கும் முட்டாள்தனத்தில் மூழ்கி, தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்கிறான். எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்தைப் போல அனைத்து உயிர்களும் உலகத்தின் பல நிலைகளில் இருந்து விழுந்து, ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவி எடுத்து, பிரம்மனின் இருப்பிடத்தில் இருந்து, புல்லின் முனை வரை, அறியாமை, செயல், ஆசை ஆகியவற்றால் நீரிலும், தலையில், காற்றிலும் சுற்றிக் கொண்டிருப்பர்.

இவையே அறிவற்றவர்களின் நடைமுறையாக இருக்கிறது. இனி, லாபம் தரும் அறம் மற்றும் சுய விடுதலையில் முனைப்புடன் இருக்கும் ஞானமுள்ளோர் வழிகளைக் கேள். வேதங்கள் செயல்பட கட்டளையிடுகின்றன. ஆனால் செயல்பாட்டை (செயல்பாட்டில் உள்ள ஆர்வத்தை) துறக்கின்றன. ஆகையால், அபிமானத்தைத் {அபிமானம் = நோக்கமற்ற நிலை} துறந்து செயல்பட வேண்டும் வேள்விகள் {1}, (வேத) கல்வி {2}, பரிசளிப்பு {3}, தவம் {4}, (பேச்சிலும் செயலிலும்) உண்மை {5}, மன்னிக்கும் தன்மை {6}, புலனடக்கம் {7}, ஆசையைத் துறத்தல் {8}, ஆகிய எட்டு கடமைகளும் உண்மையி்ன் வழியை உண்டாக்குகின்றன என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் முதல் நான்கும் பித்ருக்களின் உலகத்திற்கு பாதையை அமைக்கின்றன. இவை அபிமானம் {நோக்கமின்மை} இல்லாமல் செய்யப்பட வேண்டும். நல்லவர்களால் எப்போதும் பின்பற்றப்படும் கடைசி நான்கும், தேவர்களின் சொர்க்கத்தை அடைய வழிவகுக்கின்றன. ஆன்ம சுத்தி கொண்ட அனைவரும் இந்த எட்டு வழிகளையும் பின்பற்ற வேண்டும். 

முக்திக்காக இந்த உலகை வெல்ல நினைப்பவர்கள், நோக்கங்களைத் துறந்து, புலன்களை அடக்கி, குறிப்பிட்ட கடும் நோன்புகள் நோற்று, அர்ப்பணிப்புடன் தங்கள் ஆசானைச் சேவித்து, தங்கள் தட்சணையை நிச்சயம் கொடுத்து, விடாமுயற்சியுடன் வேதம் கற்று, செயலை இழிவாகக் கருதி கைவிட்டு, மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆசையையும் வெறுப்பையும் கைவிட்டே தேவர்கள் செழுமையை அடைந்தனர். யோக செல்வத்தின் அறத்தாலேயே ருத்திரர்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோர் உயிரினங்களை ஆளுகின்றனர். ஆகையால், ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ பாரதா, அவர்களைப் போலவே நீயும், நோக்கம் கொண்ட செயலில் இருந்து முழுமையாக விடுபட்டு, தவச் செயல்களால் யோகத்தில் வெற்றியடைய முயற்சி செய். உனது மூதாதையர்களில் ஆண்களிடமும் பெண்களிடமும் நீ பெற்றிருந்த கடனை உனது செயல்களால் (வேள்விகளால்) உண்டாகும் வெற்றியால் தீர்த்துவிட்டாய். மறுபிறப்பாளர்களை {அந்தணர்களைச்} சேவிக்க தவத்தில் வெற்றியடை. தவ வெற்றி எனும் மகுடம் அணிந்தவர்கள், அந்த வெற்றியின் அறத்தால், தாங்கள் விரும்புவதைச் செய்ய முடியும்; ஆகையால், தவத்தைக் கைக்கொண்டு விருப்பங்களை அடை" என்றார் {சௌனகர்}.


சௌனகர் உபதேசம் - வனபர்வம் பகுதி 2

Saunaka's sermon | Vana Parva - Section 2 | Mahabharata In Tamil

(ஆரண்யக பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் தங்களைத் தொடர்ந்து வந்த பிராமணர்களைத் திரும்பிச் செல்ல சொன்னது; சௌனகர் யுதிஷ்டிரனுக்கு சில அறிவுரைகள் கூறியது; யுதிஷ்டிரன் சௌனகரிடம் சந்தேகம் கேட்டது; அதற்கு சௌனகர் விடையளித்தது...

Saunaka's sermon to Yudhishthira

வைசம்பாயனர் சொன்னார், "இரவு வெடித்துப் பகல் உதித்த போது, இரந்துண்டு {பிச்சையெடுத்து} தங்களைத் தாங்கிவந்த பிராமணர்கள் {பிராமணர்கள்}, செயற்கரிய செயல்களைச் செய்து கானகத்திற்குள் நுழையக் காத்திருந்த பாண்டவர்களின் முன்பு நின்றனர்.(1) குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அவர்களிடம், "செல்வங்களும், நாடும் என அனைத்தும் களவாடப்பட்டவர்களாகப் பெரும் துயரத்தில் இருக்கும் நாங்கள், கனிகளையும், கிழங்குகளையும் மட்டுமே உணவாகக் கொண்டு காட்டுக்குள் நுழையப்போகிறோம். இந்தக் கானகம் முழுவதும் எண்ணிலடங்கா ஊர்வனவும், இரை தேடி அலையும் விலங்குகளும் என ஆபத்துகள் நிறைந்தது. அங்கே நீங்கள் நிச்சயமாகப் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. பிராமணர்களின் பாதிப்புகள் தேவர்களைக் கூடச் சக்தி இழக்கச் செய்யக்கூடும். எனது சக்தியையும் அஃது இழக்கச் செய்யும் என்பது நிச்சயமே. எனவே, ஓ பிராமணரே, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கே செல்லுங்கள்" என்று சொன்னான்.(2-4)

Wednesday, January 23, 2013

சௌனகருக்கு அந்தணர்கள் காத்திருப்பு! | ஆதிபர்வம் - பகுதி 4

Brahmins waiting for Saunaka! | Adi Parva - Section 4 | Mahabharata In Tamil

(பௌலோம பர்வம்)

பதிவின் சுருக்கம் : நெருப்பு கடனில் {அக்னிஹோத்ரத்தில்} ஈடுபட்டுக் கொண்டிருந்த சௌனகருக்காக அந்தணர்களும் சௌதியும் காத்திருப்பு...

நைமிச வனத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததும், குலபதி என்று அழைக்கப்பட்ட சௌனகரால் நடத்தப்பட்டதுமான பனிரெண்டு வருட வேள்வியில் பங்கெடுத்த முனிவர்கள் முன்பு, புராணங்களில் தெளிந்த புலமை கொண்ட லோமஹர்ஷணரின் மகனான சௌதி நின்று கொண்டிருந்தார்.(1)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்