Showing posts with label அர்ஜுனன். Show all posts
Showing posts with label அர்ஜுனன். Show all posts

Sunday, January 12, 2020

நரகம்! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 2

The hell! | Svargarohanika-Parva-Section-2 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : தன்னைச் சேர்ந்தவர்களுடன் வசிக்க விரும்பிய யுதிஷ்டிரன்; உறவினர்களைக் காட்ட யுதிஷ்டிரனை நரகத்திற்கு அழைத்துச் சென்ற தேவதூதன்; காணப் பொறாமல் திரும்பிய யுதிஷ்டிரன்; அவர்கள் தன்னைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து தூதனிடம் வர மறுத்தது; தூதன் இந்திரனுக்குச் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், (யுதிஷ்டிரன் தேவர்களிடம்} "தேவர்களே, அளவற்ற ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கிருஷ்ணன்}, என்னுடன் பிறந்த உயர் ஆன்மாக்கள், யுதாமன்யு, உத்தமௌஜஸ்,(1) போர் நெருப்பில் (ஆகுதிகளாகத்) தங்கள் உடல்களை ஊற்றிய பெரும் வீரர்கள், எனக்காகப் போரில் மரணமடைந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களை நான் இங்கே காணவில்லை.(2) புலிகளின் ஆற்றலைக் கொண்ட அந்தப் பெருந்தேர்வீரர்கள் எங்கே? அந்த முதன்மையான மனிதர்கள் இந்த உலகத்தை அடைந்தனரா?(3) தேவர்களே, அந்தப் பெருந்தேர்வீரர்கள் இந்த உலகத்தை அடைந்திருந்தால் மட்டுமே நான் அந்த உயர் ஆன்மாக்களோடு இங்கே வசிப்பேன் என்பதை அறிவீராக.(4)

Saturday, January 11, 2020

ஒவ்வொருவராக விழுந்தனர்! - மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 2

Falling down one by one! | Mahaprasthanika-Parva-Section-2 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : வரிசையாகச் செல்லும்போது திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக விழுவது; அவர்கள் விழக் காரணம் கேட்ட பீமனுக்குப் பதில் சொல்லி வந்த யுதிஷ்டிரன்; நாய் மட்டும் தொடர்ந்து சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், யோகத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களுமான அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} வடக்கு நோக்கிச் சென்று மிகப் பெரும் மலையான ஹிமவானை {இமயத்தைக்} கண்டனர்.(1) ஹிமவானைக் கடந்த அவர்கள், மணல் நிறைந்த ஒரு பெரிய பாலைவனத்தைக் கண்டனர். பிறகு அவர்கள், உயர்ந்த சிகரங்கள் கொண்ட மலைகளில் முதன்மையான மேரு மலையைக் கண்டனர்.(2) யோகத்தில் குவிந்திருந்த அந்த வலிமைமிக்கவர்கள் அனைவரும் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, யாஜ்ஞசேனி {திரௌபதி} யோகத்தில் இருந்து வீழ்ந்து பூமியில் விழுந்தாள்.(3)

வியாசர் சொன்ன கதி! - மௌஸலபர்வம் பகுதி – 8

The goal said by Vyasa! | Mausala-Parva-Section-8 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : வியாசரைக் கண்டு துவாரகையின் அழிவைக் கூறிய அர்ஜுனன்; பாண்டவர்களும் சொர்க்கமடைவர் என்று சொன்ன வியாசர்; துவாரகையின் செய்தியை யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வாய்மை நிறைந்த முனிவரின் {வியாசரின்} ஆசிரமத்திற்குள் நுழைந்த அர்ஜுனன், ஒரு தனிப்பட்ட இடத்தில் சத்யவதியின் மகன் {வியாசர்} அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தின் அறிவைக் கொண்டவருமான அந்த முனிவரை அணுகிய அவன், "நான் அர்ஜுனன் வந்திருக்கிறேன்" என்று சொல்லி அவருக்காகக் காத்திருந்தான்.(2)

Friday, January 10, 2020

துவாரகை மூழ்கியது! - மௌஸலபர்வம் பகுதி – 7

Dwaraka drowned! | Mausala-Parva-Section-7 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : வசுதேவரைத் தேற்றி யாவரையும் இந்திரப்ரஸ்தம் செல்லச் சொன்ன அர்ஜுனன்; யோகத்தால் உடலை விட்ட வசுதேவர்; வசுதேவர், கிருஷ்ணன் ஆகியோரைத் தகனஞ்செய்த அர்ஜுனன்; கள்வர்களால் கொள்ளையிடப்பட்டது; வஜ்ரனுக்கு முடிசூட்டியது; ருக்மிணி தீக்குளித்தது; ஸத்யபாமை தவம் செய்யச் சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பகைவரை எரிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்} இவ்வாறு தன்னுடைய தாய்மாமனால் {வசுதேவரால்} சொல்லப்பட்டதும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனாக, அதேபோல உற்சாகமற்றிருந்த வசுதேவரிடம்,(1) "ஓ! மாமா, விருஷ்ணி குலதைச் சேர்ந்த அந்த வீரனையும் {கிருஷ்ணனையும்}, என்னுடைய உற்றார் உறவினரான வேறு சிலரையும் இழந்திருக்கும் இந்தப் பூமியை என்னால் பார்க்க முடியவில்லை.(2) மன்னர் {யுதிஷ்டிரன்}, பீமசேனர், சகாதேவன், நகுலன், எண்ணிக்கையில் ஆறாவதாக யாஜ்ஞசேனி ஆகியோரும் இக்காரியத்தில் என்னைப் போலவே மனம் கொண்டுள்ளனர்.(3) மன்னர் புறப்படுவதற்கான காலமும் வந்துவிட்டது. நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் மிக அருகில் இருக்கிறது. காலப்போக்கை நன்கு அறிந்தோரில் நீர் முதன்மையானவராக இருக்கிறீர்.(4) எனினும், ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, விருஷ்ணி குலத்தின் பெண்கள், பிள்ளைகள் மற்றும் முதியோரை முதலில் இந்திரப்ரஸ்தத்திற்கு அனுப்புவீராக" என்றான்.(5)

Thursday, January 09, 2020

கிருஷ்ணனின் சொற்கள்! - மௌஸலபர்வம் பகுதி – 6

The words of Krishna! | Mausala-Parva-Section-6 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யாதவ அழிவுக்கான காரணத்தை அர்ஜுனனிடம் சொல்லிப் புலம்பிய வசுதேவர்; கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனிடம் சொன்னது; நாட்டையும் ஒப்படைத்துவிட்டு உயிர்விட நிச்சயித்த வசுதேவர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தமது மகன்கள் குறித்த சோகத்தினால் எரிந்து தரையில் கிடந்தவரும், வீரரும், உயர் ஆன்மாவுமான அனகதுந்துபியை {வசுதேவரை} அந்தக் குரு இளவரசன் {அர்ஜுனன்} கண்டான்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அகன்ற மார்பையும், வலி கரங்களையும் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் மாமனைவிட அதிகம் பீடிக்கப்பட்டுக் கண்ணீரில் குளித்த கண்களுடன், தன் மாமனின் பாதங்களைத் தீண்டினான்.(2) ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயனே}, வலிய கரங்களைக் கொண்ட அனகதுந்துபி, தமது தங்கை மகனின் தலையை முகர விரும்பினாலும் அதைச் செய்யத் தவறினார்.(3) வலிய கரங்களைக் கொண்டவரும், ஆழமாகப் பீடிக்கப்பட்டவருமான அந்த முதிய மனிதன் {வசுதேவர்}, தமது கரங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} ஆரத்தழுவிக் கொண்டு, தமது மகன்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், மகள்களின் மகன்கள் மற்றும் நண்பர்களை நினைத்து உரக்க அழுதார்.(4)

துவாரகையில் அர்ஜுனன்! - மௌஸலபர்வம் பகுதி – 5

Arjuna in Dwaraka! | Mausala-Parva-Section-5 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரம் சென்ற தாருகன்; யாதவர்கள் அழிந்ததை பாண்டவர்களுக்குத் தெரிவித்தது; துவாரகை சென்று கிருஷ்ணனின் மனைவியரைத் தேற்றி வசுதேவரிடம் சென்ற அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதேவேளையில் தாருகன், குருக்களிடம் சென்று, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிருதையின் {குந்தியின்} மகன்களைக் கண்டு, இரும்பு உலக்கைகளைக் கொண்டு விருஷ்ணிகள் எவ்வாறு ஒருவரையொருவர் கொன்றனர் என்பதைச் சொன்னான்.(1) போஜர்கள், அந்தகர்கள் மற்றும் குகுரர்களுடன் சேர்ந்து விருஷ்ணிகள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கேட்ட பாண்டவர்கள், துயரால் எரிந்து பெருங்கலக்கமடைந்தனர்.(2) கேசவனின் அன்பு நண்பனான அர்ஜுனன், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} விடைபெற்றுக் கொண்டு, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணப் புறப்பட்டுச் சென்றான். அவன் அனைத்திற்கும் அழிவு ஏற்படும் என்று சொன்னான்[1].(3)

Saturday, December 28, 2019

யுதிஷ்டிரனின் ஒப்புதல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 12

The acquiesce of Yudhishthira ! | Asramavasika-Parva-Section-12 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 12)


பதிவின் சுருக்கம் : சிராதத்தத்துக்குப் பொருள் கொடுக்க மறுத்த பீமன்; தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுமாறு திருதராஷ்டிரனுக்குச சொல்லி அனுப்பிய யுதிஷ்டிரன்...


அர்ஜுனன், "ஓ! பீமரே, நீர் என் அண்ணனாகவும், எனக்குப் பெரியவராகவும், ஆசானாகவும் இருக்கிறீர். நான் ஏற்கனவே சொன்னதைவிட அதிகம் சொல்லத் துணியேன். அரசமுனியான திருதராஷ்டிரர் அனைத்து வகையிலும் நம் மதிப்புக்குத் தகுந்தவர்.(1) நல்லோரும், பொதுவான மட்டத்திற்கு மேலே புகழடைந்தவர்களும், நல்லதைக் குறிக்கும் வேறுபாடுகளை உடைக்காதவர்களும், தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை மட்டுமே நினைப்பதில்லை, தாங்கள் அடைந்த நன்மைகளையும் நினைப்பர்" என்றான்.(2)

பீமனின் கோபம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 11

The wrath of Bhima! | Asramavasika-Parva-Section-11 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 11)


பதிவின் சுருக்கம் : பீஷ்மர் முதலியோருக்குச் சிராத்தஞ்செய்யப் பொருள் வேண்டிய திருதராஷ்டிரன்; கொடுக்க மறுத்த பீமன்; அர்ஜுனன் கொடுக்க வேண்டும் என்று சொன்னது; அர்ஜுனனை மெச்சிய யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் கோபமாகப் பேசிய பீமன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த இரவு கடந்ததும், அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு விதுரனை அனுப்பினான்.(1) பெருஞ்சக்தி கொண்டவனும், நுண்ணறிவு பெற்ற மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான விதுரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு வந்து, மனிதர்களில் முதன்மையானவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த மன்னனிடம், இந்தச் சொற்களில்,(2) "மன்னர் திருதராஷ்டிரர், காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய தொடக்கச் சடங்குகளைச் செய்ய வேண்டும். ஓ! மன்னா, கார்த்திகை மாதம் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் அவர் {திருதராஷ்டிரர்} காட்டுக்குப் புறப்பட இருக்கிறார்[1].(3) ஓ! குருக்களில் முதன்மையானவனே, அவர் உன்னிடம் இருந்து சிறிது செல்வத்தை வேண்டுகிறார். உயர் ஆன்ம கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, துரோணர், சோமதத்தன், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பாஹ்லீகர், கொல்லப்பட்ட அவருடைய அனைத்து மகன்கள் மற்றும் நலன்விரும்பிகள், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளனுக்கும் {ஜெயத்ரதனுக்கும்} சிராத்தம் செய்ய விரும்புகிறார்" என்றான்.(5)

Sunday, December 15, 2019

சகுனியின் வாரிசு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 84

The heir of Shakuni! | Aswamedha-Parva-Section-84 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 69)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுடன் போரிட்ட சகுனியின் மகன்; அவனைத் தடுத்து அறிவுறுத்திய அர்ஜுனன்; தன் மகனைக் காக்க வந்த சகுனியின் மனைவி; சகுனியின் மகனைக் கொல்லாமல் விட்ட அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காந்தாரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனியின் வீர மகன்[1], ஒரு பெரும்படையின் துணையுடன் சுருள் முடி கொண்ட குரு வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான். அந்தப் படையில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன. மேலும் அப்படை கொடிகள் மற்றும் பதாகைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(1) தங்கள் மன்னனான சகுனி கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அதற்குப் பழிதீர்க்கும் வஞ்சத்தில் எரிந்து கொண்டிருந்தவர்களும், விற்களுடன் கூடியவர்களுமான அந்தப் போர்வீரர்கள் ஒன்றுசேர்ந்தவர்களாகப் பார்த்தனை நோக்கி விரைந்தனர்.(2) அற ஆன்மா கொண்டவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, அவர்களிடம் அமைதியாகப் பேசினாலும், (அர்ஜுனன் மூலமாகச் சொல்லப்பட்ட) யுதிஷ்டிரனின் நல்ல வார்த்தைகளை அவர்கள் ஏற்க விரும்பவில்லை.(3) இனிய சொற்களைக் கொண்டு பார்த்தனால் தடுக்கப்பட்டாலும், அவர்கள் கோபவசப்பட்டவர்களாக அந்த வேள்விக் குதிரையைச் சூழ்ந்தனர். இதனால் பாண்டுவின் மகன் கோபத்தில் நிறைந்தான்.(4)

Saturday, December 14, 2019

சிசுபாலன் மற்றும் ஏகலவ்யனின் வாரிசுகள்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 83

The heirs of Sishupala & Ekalavya! | Aswamedha-Parva-Section-83 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 68)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை வரவேற்ற சிசுபாலனின் மகன் சரபன்; காசி, அந்தகம், கோசலம், கிராதம், தங்கணம் ஆகிய நாடுகளில் வரவேற்பைப் பெற்ற அர்ஜுனன்; தசார்ண மன்னன் சித்ராங்கதனை, நிஷாத மன்னனான ஏகலவ்யன் மகனை வென்றது; திராவிடம், ஆந்திரம், மாஹிஷம் மற்றும் கோல்வ மலை ஆகியவற்றில் அர்ஜுனன் பெற்ற வெற்றி; துவாரகையில் வசுதேவர் மற்றும் உக்ரசேனரால் வரவேற்கப்பட்ட அர்ஜுனன்; பஞ்சநதம் சென்று அங்கிருந்து காந்தாரம் சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், "மகத ஆட்சியாளனால் {மேகசந்தியால்} வழிபடப்பட்டவனும், தேரில் வெண்குதிரைகளைப் பூட்டியவனுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்த (வேள்விக்) குதிரையைப் பின்தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றான்.(1) விருப்பப்படி திரிந்து கொண்டிருந்த அது {வேள்விக் குதிரை}, கிளிஞ்சல்களின் {சிப்பியின்} பெயரால் அழைக்கப்படுவதும், சேதிகளுக்கு உரியதுமான அழகிய நகரத்தை {சுக்திமதியை}[1] நோக்கித் திரும்பி வந்தது. பெரும்பலம் கொண்டவனும், சிசுபாலனின் மகனுமான சரபன், முதலில் அர்ஜுனனுடன் போரிட்டு அதன் பிறகு, உரிய மதிப்புடன் அவனை வழிபட்டான்.(3) ஓ! மன்னா, அவனால் வழிபடப்பட்டு அந்தச் சிறந்த குதிரை, அதன் பிறகு, காசிகள், அங்கர்கள், கோசலர்கள், கிராதர்கள் மற்றும் தங்கணர்களின் நாடுகளுக்குச் சென்றது.(4)

Friday, December 13, 2019

ஜராசந்தன் வாரிசு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 82

The heir of Jarasandha! | Aswamedha-Parva-Section-82 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 67)


பதிவின் சுருக்கம் : ஜராசந்தன் பேரனும், சகாதேவன் மகனுமான மேகசந்தியை அர்ஜுனன் வென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெருங்கடலால் சூழப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த அந்த (வேள்விக்) குதிரை, நின்று, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கித் தன் முகத்தைத் திருப்பியது. அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற கிரீடம் தரித்த அர்ஜுனனும், குரு தலைநகரத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான். விருப்பப்படி திரும்பிய அந்தக் குதிரை ராஜகிருஹ நகருக்கு வந்தது.(2) ஓ! ஏகாதிபதி, அவன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கண்டவனும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமான சகாதேவன் மகன் {ஜராசந்தனின் பேரனான மேகசந்தி}அவனைப் போருக்கு அறைகூவி அழைத்தான்.(3) தன் தேரில் ஏறி, வில் மற்றும் கணைகளையும், தோலாலான கையுறையும் தரித்துக் கொண்டு தன் நகரத்தைவிட்டு வெளியே வந்த மேகசந்தி, தரையில் நின்று கொண்டிருந்த தனஞ்சயனை நோக்கி விரைந்தான்.(4)

அர்ஜுனன் சாபவிமோசனம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 81

Arjuna's curse expiated! | Aswamedha-Parva-Section-81 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 66)


பதிவின் சுருக்கம் : சித்ராங்கதை போர்க்களத்திற்கு வந்ததற்கும், அர்ஜுனன் தன் மகனிடம் தோற்றதற்கும் காரணம் கூறிய உலூபி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குரு குலத்தின் (மரு)மகளே, உன்னை இங்கே கொண்டு வந்த காரியம் என்ன? மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாகனனுடைய} அன்னை {சித்ராங்கதை} போர்க்களத்திற்கு வருவதற்கான காரணம் என்ன?(1) ஓ! பாம்பின் மகளே {உலூபியே, பன்னக கன்னிகையே}, இந்த மன்னனின் நட்பு நாடி வந்தாயா? ஓ! ஓய்வற்ற பார்வைகளைக் கொண்டவளே, எனது நன்மையை விரும்பி வந்தாயா?(2) ஓ! பருத்த இடை கொண்டவளே {உலூபியே}, ஓ! அழகிய பெண்ணே, நானோ, இங்கே இருக்கும் இந்தப் பப்ருவாஹனனோ தெரியாமல் உனக்கு எத்தீங்கையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்.(3) சித்திரவாஹன குலத்தின் வழித்தோன்றலும், களங்கமற்ற அங்கங்களைக் கொண்டவளுமான சித்ராங்கதை உனக்கு எத்தீங்கையும் இழைத்தாளா?" என்று கேட்டான்.(4)

Thursday, December 12, 2019

வீழ்ந்தான் அர்ஜுனன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 79

Arjuna fell down! | Aswamedha-Parva-Section-79 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 64)


பதிவின் சுருக்கம் : மணிபுரம் வந்த அர்ஜுனன்; மதிப்புடன் வரவேற்ற பப்ருவாஹனன்; கோபித்துக் கொண்ட அர்ஜுனன்; உலூபியின் தூண்டலால் கணை ஏவிய பப்ருவாஹனன்; அர்ஜுனன் வீழ்ந்தது; மயங்கி விழுந்த பப்ருவாஹனன்; நடுங்கியவாறு போர்க்களம் வந்த சித்திராங்கதை...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மணிப்புரத்தின் ஆட்சியாளனான பப்ருவாஹனன், தன் தந்தையான அர்ஜுனன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் மற்றும் செல்வத்தை முன்னணியில் கொண்டு பணிவுடன் {அர்ஜுனனை வரவேற்பதற்காக} வெளியே புறப்பட்டுச் சென்றான்.(1) எனினும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்வாறு வந்த மணிப்புர ஆட்சியாளனைக் கண்டு, அதை அங்கீகரிக்காமல் இருந்தான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, கோபத்துடன், "இவ்வொழுக்கம் உனக்குத் தகாது. நீ நிச்சயம் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து விழுந்துவிட்டாய்.(3) யுதிஷ்டிரருடைய வேள்விக் குதிரையின் பாதுகாவலனாக நான் இங்கே வந்துள்ளேன். ஓ! மகனே, உன் நாட்டுக்குள் நான் வந்திருப்பதைக் கண்டும் என்னுடன் ஏன் நீ போரிடாமல் இருக்கிறாய்?(4) ஓ! மூடப் புத்தி கொண்டவனே, உனக்கு ஐயோ!, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட உனக்கு ஐயோ!. உன்னுடன் போர்புரிவதற்காக நான் இங்கு வந்திருந்தாலும், அமைதிநிறைந்தவனாக என்னை வரவேற்கும் உனக்கு ஐயோ!(5) இவ்வாறு அமைதிநிறைந்தவனாக வரவேற்பதன் மூலம் நீ ஒரு பெண்ணைப் போலச் செயல்படுகிறாய். ஓ! இழிந்த புத்தி கொண்டவனே, நான் என் ஆயுதங்களைக் கைவிட்டு வந்திருந்தால்,(6) ஓ! மனிதர்களில் இழிந்தவனே, அப்போது உன்னுடைய இந்த நடத்தை தகுந்ததாக இருந்திருக்கும்" என்றான்.

Wednesday, December 11, 2019

ஜெயத்ரதன் வாரிசு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 78

The heir of Jayathrada! | Aswamedha-Parva-Section-78 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 63)


பதிவின் சுருக்கம் : மீண்டும் திரண்டு அர்ஜுனனைத தாக்கிய சைந்தவர்கள்; அர்ஜுனன் செய்த பெரும்போர்; அர்ஜுனனைச் சந்தித்த துச்சலை; சமாதானத்துக்கு மன்றாடியது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "போரிட்டுக் கொண்டிருந்தவனும், தடுக்கப்பட முடியாதவனுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, போர்க்களத்தில் இமயத்தைப் போல அசைக்க முடியாதவனாக நின்றான்.(1) மீண்டும் அணிதிரண்ட சைந்தவப் போர்வீரர்கள், பெரும் கோபத்துடன் மீண்டும் மீண்டும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(2) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன், மீண்டும் அணிதிரண்டு வந்திருப்பவர்களும், மரணத்தின் விளிம்பில் நிற்பவர்களுமான தன் பகைவர்களைக் கண்டு சிரித்து, அவர்களிடம் மென்மையான சொற்களில்,(3) "உங்கள் சக்திக்கு முடிந்த அளவில் என்னுடன் போரிட்டு என்னை வெல்ல முயற்சிப்பீர். எனினும், உங்கள் அனைவருக்கும் பேராபத்துக் காத்திருப்பதால், அவசியமான செயல்கள் அனைத்தையும் செய்துவிடுவீராக.(4) உங்கள் கணை மேகங்கள் அனைத்தையும் கலங்கடித்து நான் உங்கள் அனைவருடன் போரிடுவதைக் காண்பீர். போரில் விருப்பம் உள்ள நீங்கள் சற்றே பொறுப்பீராக. நான் விரைவில் உங்கள் செருக்கைத் தணிப்பேன்" என்றான்.(5)

Tuesday, December 10, 2019

மீண்டும் நழுவிய காண்டீவம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 77

Gandiva fell down again! | Aswamedha-Parva-Section-77 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 62)


பதிவின் சுருக்கம் : சைந்தவர்களுடன் போர்புரிகையில் மீண்டும் காண்டீவம் நழுவியது; தெய்வீக முனிவர்களின் ஜபத்தால் புதிய பலம் பெற்றுக் கடும் போர்புரிந்த அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்) தங்கள் குலம் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கில் எஞ்சி வாழ்ந்த சைந்தவர்களுக்கும், கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நேர்ந்தது[1]. வெண்குதிரைகளைக் கொண்டவன் தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் {சைந்தவர்கள்}, பாண்டுகுலத்தின் முதன்மையான அவனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனை எதிர்த்து வெளியே வந்தனர்.(2) கடும் நஞ்சைப் போன்ற அந்தப் பயங்கரப் போர்வீரர்கள், அந்தக் குதிரையைத் தங்கள் நாட்டுக்குள் கண்டு, பீமசேனனின் தம்பியான பார்த்தனிடம் எந்த அச்சமும் கொள்ளாமல் அதைக் கைப்பற்றினர்.(3) கையில் வில்லுடன் தரையில் நின்று குதிரையைக் காத்துக் கொண்டிருந்த பீபத்சுவை {அர்ஜுனனை} எதிர்த்த அவர்கள் அருகில் சென்று அவனைத் தாக்கினர்.(4)

வீழ்ந்தான் வஜ்ரதத்தன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 76

Vajradatta defeated! | Aswamedha-Parva-Section-76 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 61)


பதிவின் சுருக்கம் : பகதத்தன் மகனான வஜ்ரதத்தனை வென்ற அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதர்களின் தலைவா, நூறு வேள்வி செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, விருத்திரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அர்ஜுனனுக்கும், அந்த இளவரசனுக்கும் {வஜ்ரதத்தனுக்கும்} இடையில் நடந்த போர் இவ்வாறே மூன்று நாள் நீடித்தது.(1)

பகதத்தத்தன் வாரிசு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 75

The heir of Bhagadatta! | Aswamedha-Parva-Section-75 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 60)


பதிவின் சுருக்கம் : பிராக்ஜோதிஷ நாட்டுக்குச் சென்ற குதிரை; குதிரையைக் கைப்பற்றிய வஜ்ரதத்தன்; அர்ஜுனனுக்கும், வஜ்ரதத்தனுக்கும் இடையில் நடந்த போர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த முதன்மையான குதிரை பிராக்ஜோதிஷ நாட்டுக்குள் சென்று அங்கே திரியத் தொடங்கியது. போரில் வீரமிக்கவனான பகதத்தனின் மகன் இதைக் கண்டு (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) வெளியே வந்தான்.(1) ஓ! பாரதர்களில் தலைவா, மன்னன் வஜ்ரதத்தன் {யஜ்ஞதத்தன்}, தன் நாட்டுக்குள் வந்த (வேள்விக்) குதிரையைக் கண்டு, (அதைப் பிடிப்பதற்காகப்) போரிட்டான்.(2) பகதத்தனின் அரசமகன், தன் நகரத்தைவிட்டு வெளியே வந்து, அங்கே வந்த குதிரையைப் பீடித்து (அதைக் கைப்பற்றி) தன் இடத்தை {பட்டணத்தை} நோக்கித் திரும்பிச் சென்றான்.(3) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குருகுலத் தலைவன் {அர்ஜுனன்} இதைக் கண்டு, விரைவாகத் தன் காண்டீவத்தை வளைத்துத் திடீரெனத் தன் பகைவனை நோக்கி விரைந்தான்.(4) காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகளால் திகைப்படைந்த பகதத்தனின் வீர மகன் {வஜ்ரதத்தன்}, குதிரையை விட்டுவிட்டுப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடினான்[1].(5)

Monday, December 09, 2019

வடக்கிலிருந்து கிழக்கே திரும்பிய குதிரை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 73

The steed turned from North to East! | Aswamedha-Parva-Section-73 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 58)


பதிவின் சுருக்கம் : யாகக் குதிரையைப் பின்தொடர்ந்து வடக்குத் திசைக்குச் சென்று, கிழக்கில் திரும்பிய அர்ஜுனன்; அங்கே எதிர்த்த மன்னர்களை வென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "{அவ்வேள்வித்} தொடக்கத்திற்கான வேளை வந்தபோது, குதிரை வேள்வியைக் கருத்தில் கொண்ட பெரும் ரித்விஜர்கள் அனைவரும், மன்னனை {யுதிஷ்டிரனை} முறையாக அதைத் தொடங்கச் செய்தனர் {யுதிஷ்டிரனுக்கு அஸ்வமேத யாகத்திற்கான தீக்ஷையை விதிப்படி செய்வித்தனர்}.(1) பாண்டுவின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேள்வி விலங்குகளைக் கட்டும் சடங்குகளை நிறைவேற்றி {வேள்வியின்} தொடக்கம் {தொடக்கச் சடங்கு} முடிந்தவுடன் ரித்விஜர்களுடன் சேர்ந்து பெரும் காந்தியுடன் ஒளிர்ந்தான்.(2) குதிரை வேள்விக்காகக் கொண்டுவரப்பட்ட குதிரை சாத்திர விதிகளுக்கு ஏற்புடைய வகையில் அளவிலா சக்தி கொண்டவரும், பிரம்மதை ஓதுபவருமான வியாசரால் அவிழ்த்துவிடப்பட்டது.(3) ஓ! ஏகாதிபதி, கழுத்தைச் சுற்றிலும் தங்க மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், {வேள்விக்கான} தன் தொடக்கத்திற்குப் பிறகு சுடர்மிக்க நெருப்பைப் போல அழகில் ஒளிர்ந்தான்.(4) கருப்பு மான்தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், கையில் தண்டத்தைக் கொண்டவனும், வெண்பட்டு உடுத்தியவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, வேள்விப்பீடத்தில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பிரஜாபதியைப் போல ஒளிர்ந்தான்.(5)

யாகக் குதிரை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 72

The horse for sacrifice! | Aswamedha-Parva-Section-72 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 57)


பதிவின் சுருக்கம் : யாகக் குதிரையைச் சுற்றவிடும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; குதிரையைக் காக்க அர்ஜுனனை நியமித்த யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி இச்சொற்களைச் சொன்னான்:(1) "நீர் உண்மையில் அறிந்தவாறு சடங்குக்கு உரிய நேரத்தில் என்னைத் தொடங்கச் செய்வீராக. என்னுடைய இவ்வேள்வி முழுமையாக உம்மைச் சார்ந்தது" {என்றான்}.(2)

Wednesday, December 04, 2019

இமயப்பயணம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 63

Journey to Himavat! | Aswamedha-Parva-Section-63 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 48)


பதிவின் சுருக்கம் : வியாசரின் ஆணைப்படி தம்பிமாருடன் ஆலோச்சித்த யுதிஷ்டிரன்; வேள்விக்குத் தேவையான செல்வத்தைக் கொண்டு வர இமய மலைக்குச் சென்றது...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, குதிரை வேள்வி குறித்து உயர் ஆன்ம வியாசரால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு யுதிஷ்டிரனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?(1) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மருத்தன் பூமிக்கடியில் புதைத்து வைத்த செல்வத்தை அடைவதில் மன்னன் வென்றது எவ்வாறு?" என்று கேட்டான்.(2)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்