"The Mahabharata" நூலின் தமிழாக்கம்...
முகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | உத்தர ராமாயணம் | தொடர்புக்கு
Showing posts with label ஆஸ்தீகர். Show all posts
Showing posts with label ஆஸ்தீகர். Show all posts
Thursday, February 11, 2021
Wednesday, July 05, 2017
நாகர்களும்! ஆஸ்தீகரும்!! (கிண்டில் புத்தகம்)
![]() |
| நாகர்களும்! ஆஸ்தீகரும்!! - ₹.75.00 |
காண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்ததில் இருந்தே தொடங்குகிறது, பாம்புகளுக்கும், பாண்டவர்களுக்குமான தொடர்பு. அக்னியின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜுனன் காண்டவ வனத்தை எரிக்கிறான். அவ்வாறு எரித்ததில் தக்ஷகனின் மனைவி இறக்கிறாள். அவனது மகன் அஸ்வசேனன் தப்பிக்கிறான். எனினும், அவனும் கர்ணனின் அஸ்திரத்தில் புகுந்து அர்ஜுனனைத் தாக்கச் செல்கையில், அர்ஜுனனால் கொல்லப்படுகிறான்.
Tuesday, March 19, 2013
வேள்வி நின்றது! | ஆதிபர்வம் - பகுதி 58
The sacrifice stopped! | Adi Parva - Section 58 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 46)
பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகர் புரிந்த அற்புதம்; வேள்வி முடிந்தது; லோகிதாக்ஷனுக்குப் பரிசளித்த ஜனமேஜயன்; ஆஸ்தீகருக்குப் பாம்புகள் அளித்த வரம்...
சௌதி சொன்னார், "இப்போது, ஆஸ்தீகருடன் தொடர்புடைய ஓர் அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேட்பீராக. மன்னன் ஜனமேஜயன் ஆஸ்தீகருக்கு வரத்தைக் கொடுக்கப் போகும் தருணத்தில்,(1) இந்திரனின் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாம்பு {தஷகன்}, கீழே விழாமல் அந்தரத்தில் மிதந்தது. தக்ஷகன் பெயரைச் சொல்லி ஆகுதி {நெய்} சரியான முறையில் வேள்வித்தீயில் ஊற்றப்பட்டும், அச்சத்துடனிருந்த தக்ஷகன் கீழே நெருப்பில் விழாததைக் கண்ட ஜனமேஜயன் ஆச்சரியப்பட்டான்" என்றார் {சௌதி}.(2,3)
Sunday, March 17, 2013
தக்ஷகனைக் கைவிட்டான் இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 56
Indra cast off Takshaka! | Adi Parva - Section 56 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 44)
பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரைப் பாராட்டி வரமளிக்க முன்வந்த ஜனமேஜயன்; இந்திரனின் பாதுகாப்பில் தக்ஷகன் இருப்பதாக ஜனமேஜயனுக்குச் சொல்லப்படுவது; அச்சத்தால் தக்ஷகனைக் கைவிட்ட இந்திரன்; வேள்வியை நிறுத்தும் வரத்தைக் கோரிய ஆஸ்தீகர்...
ஜனமேஜயன், "இவர் சிறுவனைப் போல இருந்தாலும், விவேகமுள்ள முதிர்ந்தவர் போலப் பேசுகிறார். இவர் சிறுவனில்லை. விவேகி. முதிர்ந்தவர். இவருக்கு நான் வரமளிக்கலாம் என்று நினைக்கிறேன். பிராமணர்களே, அதற்கான அனுமதியை எனக்கு அளியுங்கள்" என்றான்.(1)
அதற்குச் சதயஸ்யர்கள், "பிராமணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல " என்றனர்."(2)
அதற்குச் சதயஸ்யர்கள், "பிராமணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல " என்றனர்."(2)
ஆஸ்தீகர் புகழ்ச்சி! | ஆதிபர்வம் - பகுதி 55
Adoration of Astika! | Adi Parva - Section 55 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 43)
பதிவின் சுருக்கம் : ஜனமேஜயனையும், மற்றவர்களையும் புகழ்ந்த ஆஸ்தீகர்; அனைவரும் ஆஸ்தீகரிடத்தில் மனநிறைவு அடைந்தனர்…
ஆஸ்தீகர் சொன்னார், "பழங்காலத்தில் பிரயாகையில் சோமனும் வருணனும், பிரஜாபதியும் வேள்விகளைச் செய்தனர். ஆனால் உனது வேள்வி, அவற்றில் எதிலும் குறைந்ததில்லை. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே! {ஜனமேஜயனே} நம் அன்பிற்குரியவர்கள்[1] அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(1) சக்ரன் (இந்திரன்) நூறு வேள்விகளை நடத்தினான். ஆனால் உனது இந்த வேள்வி, அந்தச் சக்ரனின் பத்தாயிரம் வேள்விகளுக்குச் சமமானதாகும். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே {ஜனமேஜயனே}, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(2) யமன், ஹரிமேதன், ரந்திதேவ மன்னன் ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(3) மயன், மன்னன் சசபிந்து, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(4) நிருகன், அஜமீடன், தசரத மைந்தன் {ஸ்ரீராமன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(5)
ஆஸ்தீகர் உறுதி! | ஆதிபர்வம் - பகுதி 54
Promise of Astika! | Adi Parva - Section 54 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 42)
பதிவின் சுருக்கம் : ஆஸ்திகருக்கு ஜரத்காரு பழைய வரலாறுகளைத் தெரிவித்தாள்; ஆஸ்தீகர் பாம்புகளை விடுவிக்க உதவுவதாக வாக்களிப்பது; வேள்வி அரங்கில் நுழைந்த ஆஸ்தீகர்...
சௌதி சொன்னார், "அதன்பிறகு, அந்த நாகமங்கை ஜரத்காரு, தனது மகனை {ஆஸ்தீகனை} அழைத்து, பாம்புகளின் மன்னன் வாசுகி சொன்னபடி பேசினாள்.(1) அவள், "ஓ மகனே! {ஆஸ்தீகனே} எதற்காக நான் எனது தமையனால் {வாசுகியால்} உனது தந்தைக்கு {ஜரத்காருவுக்கு} அளிக்கப்பட்டேனோ அந்தக் குறிக்கோளை அடைய இப்போது நேரம் வந்து விட்டது. எனவே, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்" என்றாள் {பெண் பாம்பு ஜரத்காரு}.(2)
ஆஸ்தீகர், "ஓ தாயே!{ஜரத்காருவே}, மாமா {பாம்பு மன்னன் வாசுகி} ஏன் உன்னை எனது தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} மணமுடித்துக் கொடுத்தார்? உண்மை முழுமையும் சொல்வாயானால், அதைக் கேட்டதும் நான் தகுந்ததைச் செய்ய ஏதுவாக இருக்கும்" என்றார்.(3)
ஆஸ்தீகர், "ஓ தாயே!{ஜரத்காருவே}, மாமா {பாம்பு மன்னன் வாசுகி} ஏன் உன்னை எனது தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} மணமுடித்துக் கொடுத்தார்? உண்மை முழுமையும் சொல்வாயானால், அதைக் கேட்டதும் நான் தகுந்ததைச் செய்ய ஏதுவாக இருக்கும்" என்றார்.(3)
Wednesday, March 13, 2013
ஆஸ்தீகர் பிறப்பு! | ஆதிபர்வம் - பகுதி 48
The Birth of Astika! | Adi Parva - Section 48 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 36)
பதிவின் சுருக்கம் : வாசுகியும் அவன் தங்கை ஜரத்காருவும் பேசியது; வாசுகி மகிழ்ச்சி; ஆஸ்தீகர் பிறந்தார்...
சௌதி சொன்னார், "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {சௌனகரே}, தனது தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்தவுடன், ஜரத்காரு தனது தமையனிடம் {வாசுகியிடம்} சென்றாள். அவனிடம் {வாசுகியிடம்} நடந்த அனைத்தையும் சொன்னாள்.(1) அந்தப் பாம்புகளின் இளவரசன் {வாசுகி}, பேரழிவு {போன்ற} செய்தியைக் கேட்டு, பரிதாபகரமாக இருந்த தனது சகோதரியிடம் {ஜரத்காருவிடம்}, அதைவிடப் பரிதாபமான நிலையில் இருந்து பேசினான்.(2)
அவன் {வாசுகி}, "ஓ இனிமையானவளே!, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே! {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா? அந்த ஞானமுள்ளவருக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} உன்னை அளித்தது கனியற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் இதயத்தின் விருப்பம்.(5)
அவன் {வாசுகி}, "ஓ இனிமையானவளே!, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே! {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா? அந்த ஞானமுள்ளவருக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} உன்னை அளித்தது கனியற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் இதயத்தின் விருப்பம்.(5)
Tuesday, February 05, 2013
பெண் பாம்பை மணந்த ஜரத்காரு! | ஆதிபர்வம் - பகுதி 15
Jaratkaru married she serpent! | Adi Parva - Section 15 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : பாம்புகளின் தாய் கத்ரு அளித்த சாபத்தில் இருந்து விடுபடவே வாசுகி தனது தங்கையை ஜரத்காருவுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் எனச் சௌதி சொல்லும் பீடிகை; ஆஸ்திகரின் வரலாறு சுருக்கமாக...
![]() |
| பாம்பு வேள்வி |
சௌதி சொன்னார், "பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களே, முன்பொரு சமயம் பாம்புகளின் தாய் {கத்ரு}, "காற்றைத் தேரோட்டியாகக் கொண்டவன் (அக்னி), ஜனமேஜயன் வேள்வியில் உங்களைச் சுட்டெரிப்பான்" என அந்தப் பாம்புகளைச் சபித்தாள்.(1) அந்தச் சாபத்தைச் சமன்செய்யவே {சாபத்தின் கொடுமையைத் தணிக்கவே} அந்தப் பாம்புகளின் தலைவன் {வாசுகி}, உயர்ந்த நோன்புகளை நோற்ற அந்த உயரான்ம முனிவருக்குத் {ஜரத்காருக்குத்} தனது தங்கையைக் {ஜரத்காருவை மணமுடித்து} கொடுத்தான்.(2) அந்த முனிவரும் {ஜரத்காருவும்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டிருக்கும் முறையான சடங்குகளுடன் அவளை மணமுடித்தார். அவர்களுக்கு மகனாக உயரான்ம ஆஸ்தீகர் பிறந்தார்.(3) வேதங்களிலும் அதன் கிளைகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த அந்தப் புகழ்பெற்ற முனிவர் {ஆஸ்தீகர்} அனைத்திலும் சமமான கண்ணோட்டம் கொண்டவராக, தனது பெற்றோர் இருவரின் அச்சத்தையும் போக்கினார்.(4)
Saturday, February 02, 2013
ருருவுக்கு சஹஸ்ரபத்தின் அறிவுரை! | ஆதிபர்வம் - பகுதி 11
Sahasrapat addressing Ruru! | Adi Parva - Section 11 | Mahabharata In Tamil
(பௌலோம பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : சஹஸ்ரபத்தும் ககமனும்; ககமனை அச்சமூட்டிய சஹஸ்ரபத்; சஹஸ்ரபத் பெற்ற சாபம்; சகஸ்ரபத்துக்கு அளிக்கப்பட்ட சாப விமோசனம்...
சௌதி தொடர்ந்தார், ``அந்தத் துந்துபா பாம்பானது {சஹஸ்ரபத்} ருருவிடம், "முன்பு ஒரு காலத்தில், ககமன் என்ற பெயரில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(1) அவன் பேச்சில் அவசரப்படுபவனாகவும், கடுந்தவங்களின் பயனால் ஆன்மச் சக்தி கூடியவனாகவும் இருந்தான். ஒருநாள் அவன் {ககமன்} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி விளையாட்டுக்காக அவனை {ககமனை} அச்சுறுத்தினேன். அவன் உடனே மயக்கமுற்று விழுந்தான்.(2) உண்மை பேசுபவனும், தனது விரதங்களில் உறுதியாய் இருக்கும் துறவியுமான அவன் புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு,(3) "சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை அச்சுறுத்தினாய் ஆதலால், என் சாபத்தினால் நீ நஞ்சில்லாப் பாம்பாகப் போவாயாக" என்ற சபித்தான்.(4) ஓ துறவியே, எனக்கு அவனது தவமகிமை தெரியும், ஆகையால்,(5) கலங்கிய உள்ளத்துடன், கைகூப்பிக் குனிந்து, "நண்பா, விளையாட்டுக்காக, உன்னை மகிழ்விக்கவே அப்படிச் செய்தேன்.(6) என்னை மன்னிப்பதே உனக்குத் தகும். உன் சாபத்தைத் திருப்பி எடுத்துக் கொள்வாயாக" என்றேன்.
Subscribe to:
Comments (Atom)
Kindle E-Books
மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்
அகம்பனன்
அகலிகை
அகஸ்தியர்
அகிருதவரணர்
அக்னி
அக்ருதவ்ரணர்
அங்கதன்
அங்காரபர்ணன்
அங்கிரஸ்
அசமஞ்சன்
அசலன்
அசுவினிகள்
அஞ்சனபர்வன்
அதிரதன்
அத்புதன்
அத்ரி
அத்ரிசியந்தி
அனுகம்பகன்
அனுவிந்தன்
அன்சுமான்
அபிமன்யு
அம்பரீஷன்
அம்பா
அம்பாலிகை
அம்பிகை
அம்பை
அயோதா தௌம்யா
அரிஷ்டநேமி
அருணன்
அருணி
அருந்ததி
அர்ஜுனன்
அர்வாவசு
அலம்பலன்
அலம்புசன்
அலம்புசை
அலர்க்கன்
அலாயுதன்
அவிந்தியன்
அவுர்வா
அஷ்டகன்
அஷ்டவக்கிரர்
அஸ்மர்
அஸ்வசேனன்
அஸ்வத்தாமன்
அஸ்வபதி
அஹல்யை
ஆங்கரிஷ்டன்
ஆஜகரர்
ஆணிமாண்டவ்யர்
ஆதிசேஷன்
ஆத்ரேயர்
ஆர்யகன்
ஆர்ஷ்டிஷேணர்
ஆஸ்தீகர்
இக்ஷ்வாகு
இந்திரசேனன்
இந்திரசேனை
இந்திரஜித்
இந்திரத்யும்னன்
இந்திரன்
இந்திரோதர்
இராவான் {அரவான்}
இல்வலன்
உக்கிரசேனன்
உக்தன்
உக்ரசேனன்
உசீநரன்
உச்சைஸ்ரவஸ்
உதங்கர்
உதங்கா
உதத்யர்
உத்தமௌஜஸ்
உத்தரன்
உத்தரை
உத்தவர்
உத்தாலகர்
உபமன்யு
உபரிசரன்
உபஸ்ருதி
உமை
உலூகன்
உலூபி
ஊர்வசி
எலபத்திரன்
ஏகதன்
ஏகதர்
ஏகலவ்யன்
ஐராவதன்
ஓகவதி
ஔத்தாலகர்
ஔத்தாலகி
கங்கன்
கங்கை
கசன்
கசியபர்
கடோத்கசன்
கணிகர்
கண்வர்
கதன்
கத்ரு
கந்தன்
கனகன்
கபிலர்
கபோதரோமன்
கயன்
கராளன்
கருடன்
கர்ணன்
கலி
கல்கி
கல்மாஷபாதன்
கவந்தன்
கஹோடர்
காகமா
காக்ஷிவத்
காசியபர்
காதி
காந்தாரி
காமதேனு
காயத்ரி
காயவ்யன்
கார்க்கோடகன்
கார்க்யர்
கார்த்தவீரியார்ஜுனன்
கார்த்திகை
காலகவிருக்ஷீயர்
காலகேயர்
காலன்
காலவர்
காளி
கிந்தமா
கிரது
கிரந்திகன்
கிராதன்
கிரிசன்
கிரிடச்சி
கிருதவர்மன்
கிருதவீர்யன்
கிருதாசி
கிருபர்
கிருபி
கிருஷ்ணன்
கிர்மீரன்
கீசகன்
கீசகர்கள்
குசிகன்
குணகேசி
குணி-கர்க்கர்
குண்டதாரன்
குந்தி
குந்திபோஜன்
குபேரன்
கும்பகர்ணன்
குரு
குரோதவாசர்கள்
குவலாஸ்வன்
கேசினி
கேசின்
கேதுவர்மன்
கைகேயன்
கைகேயி
கைடபன்
கோடிகன்
கோமுகன்
கௌசிகர்
கௌசிகி
கௌதமன்
கௌதமர்
கௌதமி
க்ஷத்ரபந்து
க்ஷேமதர்சின்
க்ஷேமதூர்த்தி
சகரன்
சகாதேவன்
சகுந்தலை
சகுனி
சக்திரி
சக்ரதேவன்
சங்கன்
சசபிந்து
சச்சி
சஞ்சயன்
சஞ்சயன் 1
சதயூபன்
சதானீகன்
சத்தியசேனன்
சத்தியஜித்
சத்தியபாமா
சத்தியர்
சத்தியவதி
சத்யசேனன்
சத்யபாமா
சத்யவான்
சத்ருஞ்சயன்
சந்தனு
சந்திரன்
சனத்சுஜாதர்
சமங்கர்
சமீகர்
சம்சப்தகர்கள்
சம்பரன்
சம்பா
சம்பாகர்
சம்பை
சம்வர்ணன்
சம்வர்த்தர்
சரபன்
சரஸ்வதி
சர்மின்
சர்மிஷ்டை
சர்யாதி
சலன்
சல்லியன்
சஹஸ்ரபத்
சாகரன்
சாண்டிலி
சாண்டில்யர்
சாத்யகி
சாத்யர்கள்
சாந்தை
சாம்பன்
சாம்யமணி
சாரங்கத்வஜன்
சாரஸ்வதர்
சாரிசிரிகன்
சாருதேஷ்ணன்
சார்வாகன்
சால்வன்
சாவித்ரி
சிகண்டி
சிங்கசேனன்
சிசுபாலன்
சித்திரசேனன்
சித்திரன்
சித்திராங்கதை
சித்ரகுப்தன்
சித்ரவாஹனன்
சிநி
சிந்துத்வீபன்
சிபி
சியவணன்
சியவனர்
சிரிகாரின்
சிரிங்கின்
சிருஞ்சயன்
சிவன்
சீதை
சுகன்யா
சுகர்
சுகுமாரி
சுகேது
சுக்ரது
சுக்ரன்
சுக்ரீவன்
சுசர்மன்
சுசோபனை
சுதக்ஷிணன்
சுதசோமன்
சுதன்வான்
சுதர்சனன்
சுதர்மை
சுதாமன்
சுதேவன்
சுதேஷ்ணை
சுநந்தை
சுந்தன் உபசுந்தன்
சுனந்தை
சுனஸ்ஸகன்
சுபத்திரை
சுப்ரதீகா
சுமித்திரன்
சுமுகன்
சுரதன்
சுரதை
சுரபி
சுருதகர்மன்
சுருதசேனன்
சுருதர்வன்
சுருதர்வான்
சுருதாயுதன்
சுருதாயுஸ்
சுருவாவதி
சுலபை
சுவர்ணஷ்டீவின்
சுவாகா
சுவேதகேது
சுஷேணன்
சுஹோத்திரன்
சூதன்வான்
சூரன்
சூரியதத்தன்
சூரியன்
சூரியவர்மன்
சூர்ப்பனகை
சேகிதானன்
சேதுகன்
சேனஜித்
சைகாவத்யர்
சைப்யை
சைரந்திரி
சோமகன்
சோமதத்தன்
சௌதி
சௌதியும்னி
சௌனகர்
ஜடாசுரன்
ஜடாயு
ஜந்து
ஜனகன்
ஜனதேவன்
ஜனபதி
ஜனமேஜயன்
ஜனமேஜயன் 1
ஜமதக்னி
ஜரத்காரு
ஜராசந்தன்
ஜரிதை
ஜரை
ஜலசந்தன்
ஜாஜலி
ஜாம்பவதி
ஜாரிதரி
ஜிமூதன்
ஜீவலன்
ஜெயத்சேனன்
ஜெயத்ரதன்
ஜைகிஷவ்யர்
ஜோதஸ்நாகாலி
தக்ஷகன்
தக்ஷன்
தண்டதாரன்
தண்டன்
தண்டி
ததீசர்
தத்தாத்ரேயர்
தனு
தபதி
தபஸ்
தமனர்
தமயந்தி
தம்போத்பவன்
தர்மதர்சனர்
தர்மதேவன்
தர்மத்வஜன்
தர்மவியாதர்
தர்மாரண்யர்
தளன்
தாத்ரேயிகை
தாரகன்
தாருகன்
தார்க்ஷ்யர்
தாலப்யர்
தியுமத்சேனன்
திரஸதஸ்யு
திரிசிரன்
திரிஜடை
திரிதர்
திருதராஷ்டிரன்
திருதவர்மன்
திருஷ்டத்யும்னன்
திரௌபதி
திலீபன்
திலோத்தமை
திவோதாசன்
தீர்க்கதமஸ்
துச்சலை
துச்சாசனன்
துந்து
துரியோதனன்
துருபதன்
துருபதன் புரோகிதர்
துரோணர்
துர்க்கை
துர்ஜயன்
துர்மதன்
துர்மர்ஷணன்
துர்முகன்
துர்வாசர்
துலாதாரன்
துவஷ்டிரி
துவாபரன்
துவிதன்
துஷ்கர்ணன்
துஷ்யந்தன்
தேவ
தேவகி
தேவசர்மன்
தேவசேனா
தேவசேனை
தேவமதர்
தேவயானி
தேவராதன்
தேவலர்
தேவஸ்தானர்
தேவாபி
தௌமியர்
நகுலன்
நகுஷன்
நமுசி
நரகாசுரன்
நரன்
நளன்
நளன்2
நாகன்
நாசிகேதன்
நாடீஜங்கன்
நாரதர்
நாராயணன்
நாராயணர்கள்
நிருகன்
நிவாதகவசர்கள்
நீலன்
நைருதர்கள்
பகதத்தன்
பகன்
பகர்
பகீரதன்
பங்காஸ்வனன்
பசுஸகன்
பஞ்சசிகர்
பஞ்சசூடை
பத்மநாபன்
பத்மன்
பத்ரகாளி
பத்ரசாகன்
பத்ரா
பப்ருவாஹனன்
பரசுராமர்
பரதன்
பரத்வாஜர்
பராசரர்
பராவசு
பரிக்ஷித்
பரீக்ஷித்1
பர்ணாதன்
பர்வதர்
பலன்
பலராமன்
பலி
பலிதன்
பாகுகன்
பாணன்
பாண்டியன்
பாண்டு
பானுமதி
பானுமான்
பாஹ்லீகர்
பிங்களன்
பிங்களை
பிரகலாதன்
பிரதர்த்தனன்
பிரதிவிந்தியன்
பிரதீபன்
பிரத்னஸ்வன்
பிரத்யும்னன்
பிரமாதின்
பிரம்மதத்தன்
பிரம்மத்வாரா
பிரம்மன்
பிரம்மாதி
பிராதிகாமின்
பிருகதஸ்வர்
பிருகத்யும்னன்
பிருகு
பிருது
பிருந்தாரகன்
பிருஹத்சேனை
பிருஹத்பலன்
பிருஹத்ரதன்
பிருஹந்நளை
பிருஹஸ்பதி
பீமன்
பீமன்1
பீஷ்மர்
புரு
புருரவஸ்
புரோசனன்
புலஸ்தியர்
புலஹர்
புலோமா
புஷ்கரன்
பூஜனி
பூமாதேவி
பூரி
பூரிஸ்ரவஸ்
போத்யர்
பௌரவன்
பௌரிகன்
பௌலோமர்
மங்கணகர்
மங்கி
மடன்
மணிமான்
மதங்கன்
மதயந்தி
மதிராக்ஷன்
மது
மதுகைடபர்
மந்தபாலர்
மந்தரை
மனு
மயன்
மருத்தன்
மலயத்வஜன்
மஹாபிஷன்
மஹிஷன்
மஹோதரர்
மாணிபத்ரன்
மாதலி
மாதவி
மாத்ரி
மாந்தாதா
மாரீசன்
மார்க்கண்டேயர்
மாலினி
மிருத்யு
முகுந்தன்
முசுகுந்தன்
முத்கலர்
முனிவர்பகன்
மூகன்
மேதாவி
மேனகை
மைத்ரேயர்
யது
யமன்
யயவரர்
யயாதி
யவக்கிரீ
யாஜ்ஞவல்கியர்
யாதுதானி
யுதாமன்யு
யுதிஷ்டிரன்
யுயுத்சு
யுவனாஸ்வன்
ரந்திதேவன்
ராகு
ராஜதர்மன்
ராதை
ராமன்
ராவணன்
ரிசீகர்
ரிதுபர்ணன்
ரிஷபர்
ரிஷ்யசிருங்கர்
ருக்மரதன்
ருக்மி
ருக்மிணி
ருசங்கு
ருசி
ருத்திரன்
ருரு
ரேணுகன்
ரேணுகை
ரைப்பியர்
ரோமபாதன்
ரோஹிணி
லக்ஷ்மணன்
லட்சுமணன்
லட்சுமி
லபிதை
லோகபாலர்கள்
லோபாமுத்திரை
லோமசர்
லோமபாதன்
லோமஹர்ஷனர்
வசாதீயன்
வசிஷ்டர்
வசு
வசுதேவர்
வசுமனஸ்
வசுமான்
வசுஹோமன்
வஜ்ரன்
வஜ்ரவேகன்
வதான்யர்
வந்தின்
வருணன்
வர்கா
வாசுகி
வாதாபி
வாமதேவர்
வாயு
வார்ஷ்ணேயன்
வாலகில்யர்
வாலி
விகர்ணன்
விசரக்கு
விசாகன்
விசித்திரவீரியன்
விசோகன்
விதுரன்
விதுலை
விந்தன்
வினதை
விபாண்டகர்
விபாவசு
விபீஷணன்
விபுலர்
வியாக்ரதத்தன்
வியாசர்
வியுஷிதஸ்வா
விராடன்
விருத்திரன்
விருபாகஷன்
விருஷகன்
விருஷசேனன்
விருஷதர்பன்
விருஷபர்வன்
விரோசனன்
விவிங்சதி
விஷ்ணு
விஸ்வகர்மா
விஸ்வாமித்ரர்
வீதஹவ்யன்
வீரத்யும்னன்
வீரபத்ரன்
வேதா
வேனன்
வைகர்த்தனன்
வைசம்பாயனர்
வைனியன்
வைவஸ்வத மனு
ஷாமந்தர்
ஸனத்குமாரர்
ஸுமனை
ஸுவர்ச்சஸ்
ஸ்கந்தன்
ஸ்தாணு
ஸ்தூணாகர்ணன்
ஸ்யூமரஸ்மி
ஸ்ரீ
ஸ்ரீமதி
ஸ்ரீமான்
ஸ்வேதகி
ஸ்வேதகேது
ஸ்வேதன்
ஹனுமான்
ஹயக்ரீவன்
ஹரிச்சந்திரன்
ஹர்யஸ்வன்
ஹாரீதர்
ஹிடிம்பன்
ஹிடிம்பை
ஹிரண்யவர்மன்
ஹோத்திரவாஹனர்








