Showing posts with label கயன். Show all posts
Showing posts with label கயன். Show all posts

Friday, August 25, 2017

சப்தசாரஸ்வதம்! - சல்லிய பர்வம் பகுதி – 38

Sapta-Saraswata! | Shalya-Parva-Section-38 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 7)


பதிவின் சுருக்கம் : சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை என ஏழு வடிவங்களாக வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தோன்றிய சரஸ்வதி ஆறு; அந்த ஏழு ஆறுகளும் ஒன்று கலந்த சப்தசாரஸ்வதத் தீர்த்தம்; மங்கணகர் வரலாறு; சிவனின் அருள்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஏன் அந்தத் தீர்த்தம் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்டது? யாரந்தத் தவசி மங்கணகர்? எவ்வாறு அந்தப் போற்றுதலுக்குரியவர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார் {எவ்வாறு சித்தரானார்}? அவரது நோன்புகளும், நியமங்களும் என்ன?(1) அவர் யாருடைய குலத்தில் பிறந்தவராவார்? மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான அவர் எந்தெந்த புத்தகங்களைப் படித்தார் {எவற்றை அத்யயனம் செய்தார்}? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இவையாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(2)

Friday, June 03, 2016

மன்னன் கயன்! - துரோண பர்வம் பகுதி – 066

King Gaya! | Drona-Parva-Section-066 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 36)

பதிவின் சுருக்கம் : மன்னன் கயனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, அமார்த்தரயசின் {Amartarayas} [1] மகன் கயனும் [2] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {கயன்}, வேள்வி நெருப்பில் காணிக்கையாக ஊற்றப்படும் தெளிந்த நெய்யில் எஞ்சுவதைத் தவிர வேறு எதையும் நூறு ஆண்டுகள் உண்ணாதிருந்தான். (அவனது பெரும் அர்ப்பணிப்பின் சான்றால் மனம் நிறைந்த) அக்னி அவனுக்கு ஒரு வரத்தை அளிக்க முன்வந்தான்.


[1] வேறொரு பதிப்பில் இவனது பெயர் அதூர்த்தரஜஸ் என்று குறிக்கப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இவன் பெயர் அமூர்த்தரஜஸ் {Amurtarajas} என்று இருக்கிறது. Puranic Encyclopedia புத்தகத்தில் இவன் பெயர் அமூர்த்தரயஸ் {AmUrtarayas} என்றிருக்கிறது.

[2] வனபர்வம் பகுதி 95லும், பகுதி 121லும் கயன் செய்த வேள்விகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

கயன், "தவத்துறவுகளாலும், பிரம்மச்சரியம் பயில்வதன் மூலமும், நோன்புகள், விதிகள் மற்றும் எனக்கு மேன்மையானவர்களின் அருளின் மூலமும் வேதங்களைக் குறித்த முற்றான அறிவை நான் அடைய விரும்புகிறேன் [3]. என் வகைக்குரிய {க்ஷத்திரியக்} கடமைகளைச் செய்து, பிறருக்கு எந்தத் தீங்கையும் செய்யாமல் வற்றாத செல்வத்தை அடைய விரும்புகிறேன். பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் எப்போதும் பரிசளிக்கவும் விரும்புகிறேன். என் வகையைச் சேர்ந்த {க்ஷத்திரிய} மனைவியரிடமே நான் மகன்களைப் பெற வேண்டுமே அன்றி வேறெவரிடமும் வேண்டாம். அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} உணவைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும். என் இதயம் எப்போதும் அறத்திலேயே {நீதியிலேயே} மகிழ்வடைய வேண்டும். ஓ! உயர்வான தூய்மையாளனே (அக்னியே), அறத்தகுதியை {புண்ணியங்களை} ஈட்ட நான் செயல்களில் ஈடுபடும்போது எந்த இடையூறும் என்னை அணுகாதிருக்கட்டும்" என்று கேட்டான் {கயன்}. "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அக்னி அங்கேயே அப்போதே மறைந்தான்.

[3] வேத அறிவை அடைய அவன் விரும்பிய வழிமுறைகள் இவை என இங்கே விளக்குகிறார் கங்குலி.

தான் கேட்ட அனைத்தையும் அடைந்த கயன், நியாயமான போரில் தன் எதிரிகளை அடக்கினான். பிறகு மன்னன் கயன், முழுமையாக நூறு வருடங்களுக்கு, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளுடனும், சாதுர்மாஸ்யங்கள் என்று அழைக்கப்படும் நோன்புகளுடனும் இன்னும் பிறவற்றுடனும் பல்வேறு வகைகளிளான வேள்விகளைச் செய்தான்.

ஒரு நூற்றாண்டில் ஒவ்வொரு வருடமும், அந்த மன்னன் {கயன்} (தன் வேள்விகளின் முடிவில்) எழுந்து (பிராமணர்களுக்கு) நூற்று அறுபதாயிரம் {1,60,000 ஒரு லட்சத்து அறுபதாயிரம்} பசுக்களையும், பத்தாயிரம் குதிரைகளையும், ஒரு கோடி தங்கத்தையும் (நிஷ்கங்களையும்) கொடுத்தான். ஒவ்வொரு நட்சத்திரத்தின் போதும் அவன் {கயன்} அந்தச் சந்தர்ப்பத்திற்கு விதிக்கப்பட்ட பரிசுகளைத் தானமளித்தான். உண்மையில் அந்த மன்னன் {கயன்} மற்றொரு சோமனைப் போலவோ, மற்றுமொரு அங்கீரசைப் போலவோ பல்வேறு வேள்விகளைச் செய்தான்.

மன்னன் கயன், அவனது பெரும் குதிரை வேள்வியில் ஒரு தங்கப் பூமியை உண்டாக்கி அவளை {அந்தப் பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தான். அவ்வேள்வியில் மன்னன் கயனின் வேள்விக்கம்புகள் {யூபஸ்தூபங்கள்} அனைத்தும் தங்கத்தாலானவையாக, மிகுந்த விலைமதிப்புள்ளனவையாக, அனைத்து உயிர்களுக்கும் இன்பமளிக்கும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையாக இருந்தன. அனைத்து ஆசைகளையும் கொல்ல {அழிக்க} இயன்ற கயன், மனம் நிறைந்திருந்த பிராமணர்களுக்கும், பிற மக்களுக்கும் அந்த வேள்விக்கம்புகளை {யூபஸ்தம்பங்களைக்} கொடுத்தான்.

பெருங்கடல், காடுகள், தீவுகள், ஆறுகள், நீர்நிலைகள், நகரங்கள், மாகாணங்கள், சொர்க்கம் ஆகியவற்றில் வசித்த ஆண் மற்றும் பெண் உயிரினங்களில் பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்தவர் அனைவரும் கயனின் வேள்விகளில் விநியோகிக்கப்பட்ட செல்வத்தாலும் உணவாலும் மிகவும் மனம்நிறைந்தனர். அவர்கள் அனைவரும், "கயனின் இந்த வேள்வியைப் போல வேறு எந்த வேள்வியும் கிடையாது" என்றனர். கயனின் வேள்விப்பீடமானது முப்பது யோஜனைகள் நீளமும், இருபத்தாறு யோஜனைகள் அகலமும், இருபது யோஜனைகள் உயரமும் கொண்டதாக இருந்தது. மேலும் அது முற்றிலும் தங்கத்தாலானதாகவும், முத்துகள், வைரங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. அவன் {கயன்} இந்த வேள்விப்பீடத்தையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

அந்த மகத்தான ஏகாதிபதி {கயன்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டுள்ள பிறவகைப் பரிசுகளையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த வேள்வியின் முடிவில், ஆடைகளையும், ஆபரணங்களையும் தவிர, இருபத்தைந்து உணவு மலைகளும், பல தடாகங்களும், சுவைமிக்கச் சாறுகள் கொண்ட பானகங்களால் அழகாகப் பாய்ந்து கொண்டிருந்த பல ஓடைகளும் தொடப்படாமல் எஞ்சின. அந்த வேள்வியின் புண்ணியத்தின் விளைவாக, மூவுலகிலும் கயன் நன்றாக அறியப்பட்டான். அந்த வேள்வியின் காரணமாகவே நித்தியமான ஆலமரமும், புனிதமான பிரம்மசரசும் இருக்கின்றன.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {கயனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English

Thursday, March 13, 2014

கயன் செய்த வேள்விகள் - வனபர்வம் பகுதி 121

The sacrifices preformed by Gaya | Vana Parva - Section 121 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கயன் செய்த வேள்விகள்; பயோஷ்ணி ஆறின் பெருமை; நர்மதை ஆறு; நீலரத்தின மலை; சியவனர் கோபம்...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிருகன் {மன்னன் கயன்} இங்கே வேள்வி செய்த போது, அவன் சோமச் சாறைக் கொடுத்து எதிரிகளின் நகரங்களை அழிக்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். இதனால் இந்திரன் புத்துணர்ச்சி பெற்று மிகவும் திருப்தி கொண்டான். இங்கே தேவர்களோடு சேர்ந்த இந்திரனும், அனைத்து உயிரினங்களின் பாதுகாவலர்களும், புரோகிதர்களுக்குப் பெரும் அளவில் பரிசுகள் கொடுத்து அந்த வேள்வியைக் கொண்டாடினர். இங்கே உலகத்தின் தலைவனான மன்னன் அமிர்தராயசன் {கயன்} ஏழு குதிரை வேள்விகளைச் செய்தபோது, சோமச் சாறால் இடியைத் {வஜரத்தை} தாங்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். மற்ற வேள்விகளில் மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட இன்றியமையாத பொருட்கள் அனைத்தும், அவனால் செய்யப்பட்ட ஏழு வேள்விகளிலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. ஏழு குச்சி கட்டுகள், வேள்வி வளையங்கள், இடங்கள், அகப்பைகள், பாத்திரங்கள், கரண்டிகள் ஆகியன அவனால் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு வேள்வி குச்சியின் மேலும், ஏழு வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தன.


ஓ! யுதிஷ்டிரா, இந்திரனுடன் கூடிய தேவர்கள் சேர்ந்து அவனது புனித சடங்குக்குத் தேவையான வேள்விக் குச்சிகளைப் பளபளக்கும் தங்கத்தில் செய்தார்கள். பூமியின் பாதுகாவலனான கயன் நடத்திய அந்தச் சிறப்பு வாய்ந்த வேள்விகளிலெல்லாம், சோமச்சாற்றைக் குடித்து இந்திரன் திருப்தியடைந்தான். அந்த வேள்விகளை நடத்திய புரோகிதர்களும் அவர்களுக்குக் கிடைத்த பணிக்கொடையில் திருப்தி கொண்டார்கள். சொல்லொணா செல்வத்தைப் பெற்ற அந்தப் புரோகிதர்கள் அவற்றை எண்ணிப் பார்த்தனர். பூமியின் மண் துகள்கள் போல, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல, மழையில் விழும் துளிகள் போல, அவை எவராலும் எண்ண முடியாதவையாக இருந்தன. கயன் கொடுத்த செல்வங்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாதவையாக இருந்தன. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு வேள்விகளில் அவற்றை நடத்திய புரோகிதர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றில் மேற்சொன்னவையைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், அவனால் அளிப்பட்ட பணிக்கொடைகளின் நிறைவை யாராலும் எண்ணிக்கையில் அடக்க முடியாது.

தேவதச்சனால் {விஸ்வகர்மாவால்} கல்வித் தேவதையின் {சரஸ்வதியின்} உருவம் தங்கத்தில் பொறிக்கப்பட்டு, அனைத்துத் திக்குகளில் இருந்தும் வந்திருந்த புரோகித சாதி உறுப்பினர்களுக்குக் {அந்தணர்களுக்கு} பரிசாகக் கொடுக்கப்பட்டன. ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அந்த உயரான்ம கயன் தனது வேள்விச் சடங்குகளைச் செய்த போது, பல இடங்களில் வேள்வித்தூண்கள் நாட்டப்பட்டதால், பூமியின் பரப்பில் சிறிது இடமே எஞ்சியிருந்தது. ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அந்தப் புனிதச் செயலால் அவன் {கயன்} இந்திரலோகத்தை அடைந்தான். இந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடும் எவரும் கயன் அடைந்த உலகங்களை அடைகிறார்கள். ஆகையால், ஓ! மன்னர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஓ! தடுமாற்றம் இல்லாத இளவரசே! நீயும் உனது தம்பிகளும் இந்த நதியில் நீராட வேண்டும். ஓ! பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அப்போதுதான் நீ இந்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவாய்" என்றார் {லோமசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {ஜனமேஜயனே}, யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன், அந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடினான். பிறகு ஓ! பாவமற்ற இளவரசே {ஜனமேஜயா}, அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் சேர்ந்து நீலரத்தின மலைக்கும், பெரும் ஆறான நர்மதைக்கும் பயணப்பட்டான். அருளப்பட்ட தவசியான லோமசர் அவனிடம் மகிழ்ச்சிகரமான பல புண்ணிய இடங்களையும், தேவர்களின் புனிதக் கோவில்களையும் சொன்னார். பிறகு அவன் தனது தம்பிகளுடன் அந்த இடங்களுக்குத் தனது விருப்பப்படியும், வசதிக்குத்தக்கவாறும் பயணப்பட்டான் பல இடங்களில் அந்தணர்கள் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இருந்து ஆயிரக்கணக்கான பரிசுகளைப் பெற்றனர்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}! நீலரத்தின மலையை அடைந்து, நர்மதையாற்றில் மூழ்குபவன் தேவர்களும் மன்னர்களும் வசிக்கும் உலகங்களை அடைவான். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே! {யுதிஷ்டிர}னே இந்தக் காலம் திரேதா யுகத்துக்கும், கலியுகத்துக்கு இடைப்பட்ட காலமாகும். ஓ! குந்தியின் மகேன {யுதிஷ்டிரா}, இதுவே ஒரு மனிதன் தனது பாவங்களைத் தொலைக்கும் காலமாகும். ஓ மரியாதைக்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில்தான், சர்யாதி வேள்விச்சடங்குகளைச் செய்த போது, இரு தேவ மருத்துவர்களுடன் {அசுவின் தேவர்களுடன்} காணும் உருவத்தில் இந்திரன் வந்து, சோமச்சாற்றைப் பருகினான். கடும் தவமிருந்த பிருகுவின் மகன் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டு, அவனை அசைவற நிற்கச் செய்து, இந்த இடத்தில் தான் சுகன்யா என்ற இளவரசியை மனைவியாக அடைந்தார்."

யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, "பகாசுரனைத் தண்டித்தவனான ஆறு குணங்களைக் கொண்டவன் {இந்திரன்}, சியவனரால் எப்படி அசைவற்று நிற்க வைக்கப்பட்டான்? எக்காரணத்திற்காக அந்தப் பெரும் பலம் வாய்ந்த தவசியானவர் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டார்? ஓ அந்தணரே {லோமசரே}, அவர் தான் தேவ மருத்துவர்களைச் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதிக்கு உயர்த்தியவரா? இவை அனைத்தையும், சரியாக அது நடந்த படியே மதிப்பிற்குரிய நீர் மறுபடி எனக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன் லோமசரிடம்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, February 16, 2014

கயனின் வேள்விகள்! - வனபர்வம் பகுதி 95

The sacrifices of Gaya! | Vana Parva - Section 95| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனும் அவனைத் தொடர்பவர்களும் பிரம்மசிரசை அடைவது;  யுதிஷ்டிரனுக்கு ஷாமந்தர், கயனின் வேள்விகளைக் குறித்துச் சொல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் வீர மகன்கள், தங்களைத் தொடர்பவர்களுடன் ஒரு இடம் விட்டு மறு இடம் முன்னேறி கடைசியாக நைமிசத்தை அடைந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கோமதியை {கோமதி நதியை} அடைந்த பாண்டவர்கள், அந்த ஓடையிலிருக்கும் புனித தீர்த்தத்தில் நீராடி, நீர்க்கடன் செலுத்தி ஓ! பாரதா பசுக்களையும், செல்வங்களையும் தானம் அளித்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, கன்யா, அஸ்வ, கோ தீர்த்தங்களில் தொடர்ச்சியாகத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், அந்தணர்களுக்கும் நீர்க்கடன்கள் செலுத்தி, காலகோடியிலும் மற்றும் விஷப்பிரஸ்த மலைகளிலும் தங்கிய கௌரவர்கள் {பாண்டவர்கள்}, ஓ! மன்னா, பாகுதா {நதியை} அடைந்து அந்த ஓடையில் தங்கள் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.


ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, அடுத்ததாக, தேவர்களின் வேள்விப்பகுதியான பிரயாகைக்குச் சென்று, கங்கை யமுனையின் சங்கமத்தில் நீராடி பெரும் பலன்களைக் கொடுக்கும் தவ நோன்புகளைப் பயின்றார்கள். உண்மை நிறைந்த சத்தியங்களுடைய பாண்டவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடி தங்களுடைய அனைத்துப் பாவங்களையும் கழித்துக் கொண்டனர். ஓ! பாரதக் குலத்தின் மன்னா {ஜனமேஜயா}, பிறகு பாண்டுவின் மகன்கள் அந்தணர்களுடன் சேர்ந்து, படைப்பாளனுக்கே {பிரம்மாவுக்கே} புனிதமானதும், தவசிகளால் வழிபடப்படுவதுமான வேதி என்ற தீர்த்தத்திற்குச் சென்றனர். அங்கே சிறிது காலம் தங்கி அந்தணர்களுக்குப் பழங்களும், கிழங்குகளும், தெளிந்த நெய்யும் கொடுத்து திருப்தி செய்த அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, பெரும் பலன்கள் தரக்கூடிய தவ நோன்புகளை அங்கே பயின்றனர்.

பிறகு அவர்கள், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட அறம்சார்ந்த அரச முனி கயனால் புனிதப்படுத்தப்பட்ட {பிரதிஷ்டை செய்யப்பட்ட} மஹிதரத்திற்குச் சென்றனர். அந்தப் பகுதியில் கயசிரஸ் என்ற மலையும், பிரம்பு புதர்கள் நிறைந்த அழகிய கரைகளுடைய காண்பதற்கினிய நதியான மஹாநதியும் இருக்கின்றன. அந்தத் தெய்வீக மலையின் புனிதமான சிகரங்களில் தவசிகளால் பெரிதும் வழிபடப்படும் பிரம்மசிரஸ் என்ற புனிதமான தீர்த்தம் இருக்கிறது. அங்கிருக்கும் தடாகத்தின் கரைகளில், பழங்காலத்தில், தர்மத்தின் நித்திய தேவன் {தர்ம தேவன் = யமன்} வசித்தான். அங்கேதான் சிறப்புமிக்க முனிவரான அகஸ்தியர் அந்தத் தெய்வத்தைக் {யமனைக்} காண வந்தார். அந்தத் தடாகத்தில்தான் அனைத்து ஆறுகளும் உற்பத்தியாகின்றன. அந்தத் தீர்த்தத்தில்தான் பிநாக தாங்கியான மகாதேவன் {சிவன்} வசித்திருக்கிறான்.

அந்தப் பகுதிக்கு வந்த பாண்டுவின் வீர மைந்தர்கள், ரிஷியக்ஞப் பெரு வேள்விக்கான முறைப்படியும் சடங்குகளின் படியும் சாதுர்மாஸ்ய நோன்பைப் பயின்றனர். அங்கேதான் நித்திய ஆலம் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் மரம் நிற்கிறது. அங்கே செய்யப்படும் எந்த வேள்வியும் நித்தியமான பலன்களை அளிக்கிறது. நித்திய பலன்களை அருளும் தேவர்களின் அந்த வேள்வி மேடையில், ஒருமித்த ஆன்மாவுடன் பாண்டவர்கள் உண்ணா நோன்பிருக்க ஆரம்பித்தனர். மேலும் அங்கே தவத்தைச் செல்வமாகக் கொண்ட அந்தணர்கள் நூற்றுக்கணக்கில் வந்து சேர்ந்தனர். முனிவர்களால் அருளப்பட்ட விதிப்படி சாதுர்மாஸ்ய வேள்வியை அங்கு வந்த அந்தணர்களும் மேற்கொண்டனர். வேதமறிந்தவர்களும், ஞானத்திலும் தவப்பயன்களிலும் முதிர்ந்தவர்களுமான அந்தணர்கள், பாண்டவர்கள் முன்னிலையில் புனிதமான காரியங்கள் குறித்த விவரங்களை அத்தீர்த்தத்தில் வைத்து விவாதித்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இடத்தில்தான், நோன்பு நோற்பவரும் கற்றவரும், பிரம்மச்சாரியுமான புனிதமான ஷாமந்தர் அவர்களிடம் ஆமூர்த்தராயனின் மகன் கயனைக் குறித்துப் பேசினார்.

ஷாமந்தர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஆமூர்த்தராயனின் மகனான கயன் அரச முனிகளில் முதன்மையானவனாக இருந்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நான் சொல்லப்போகும் அவனது நற்செயல்களைக் குறித்துக் கேள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இங்கேதான் கயன் (விநியோகிப்பதற்கு) அபரிமிதமான உணவுடனும் (அந்தணர்களுக்கு) பெரும் பரிசுகளுடனும் பல வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சமைத்த அரிசி {சோறு} நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மலைகளாகவும், தெளிந்த நெய் தடாகமாகவும், தயிர் நூற்றுக்கணக்கான ஆறுகளாகவும், ஆடம்பரமான குழம்புகள் ஓடைகளாகவும் இருந்தன. நாளுக்கு நாள் இவை அனைத்து மூலைகளுக்கும், அந்தணர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அனைவரும் சுத்தமான உணவைப் பெற்றனர். (அனைத்து வேள்விகளின்) முடிவில் அந்தணர்களுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்ட போது, வேத ஒலி சொர்க்கத்தை அடைந்தது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவ்வளவு சத்தமாக வேத மந்திரங்களைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே அந்தப் புனிதமான ஒலி அனைத்துப் புள்ளிகளையும், பூமியையும், விண்ணையும், ஏன் சொர்க்கத்தையும் கூட நிறைத்தன.

சிறப்புமிக்கக் கயனால் அளிக்கப்பட்ட அற்புதமான உணவுப்பொருட்களாலும், பானங்களாலும் திருப்தியடைந்த மனிதர்கள், ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இந்த வரிகளைப் பாடிக் கொண்டே சென்றனர். "கயனின் பெரும் வேள்வியில் இன்று இருக்கும் எந்த உயிரினம் தான் இன்னும் உண்ண விரும்புகின்றன? அனைவரும் உண்ட பிறகும், இன்னும் இருபத்தைந்து மலைகள் உணவு இருக்கின்றன! மகத்தான பிரகாசமிக்க அரச முனி கயனால் அடையப்பட்ட வேள்விப் பயனை இதுவரை எந்த மனிதனும் அடைந்ததில்லை. இனி அடையப்போவதுமில்லை. கயன் அளித்த தெளிந்த நெய்யால் தெவிட்டிப் போய் இருக்கும் தேவர்கள், இனியும் யார் கொடுக்கும் படையலையும் ஏற்கும் நிலையில் இல்லை. பூமியில் மணற்துகள்களைப் போல, ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் போல, மழையால் நிறைந்திருக்கும் மேகங்கள் பொழியும் துளிகளைப் போல, வேள்வியில் கயன் அளிக்கும் பரிசுகளை ஒருவனால் எண்ண முடியாதே" என்று பாடினர்.

"ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த வர்ணனைகளுக்கு ஏற்ற பல வேள்விகளை மன்னன் கயன், இந்தப் பிரம்மசிரசின் அருகில் செய்திருக்கிறான்" என்றார் {ஷாமந்தர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்