Sunday, May 03, 2015

"அச்சமா பீமரே?" என்றான் கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 75

"Do you fear Bhima?" asked Krishna! | Udyoga Parva - Section 75 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –4)

பதிவின் சுருக்கம் : பீமனின் மென்மையான பேச்சை எதிர்பாராத கிருஷ்ணன், பீமனை ஏளனம் செய்வது; முன்பெல்லாம் போரை விரும்பிய பீமன் இப்போது ஏன் அமைதியை விரும்புகிறான் எனக் கேட்டது; இதயத்தை அச்சம் பீடிக்கிறதா எனக் கேட்டது; முன்பு கோபத்தில் பீமன் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக இருந்து செய்த செயல்களையெல்லாம் கிருஷ்ணன் சுட்டிக் காட்டுவது; பீமனின் வீரத்தை நினைவூட்டியது; அப்படிப்பட்ட பீமன் இப்படிப் பேடியாக இருக்கலாமா என்று கேட்டது; பீமனுக்கு உற்சாகம் தரும் வார்த்தைகளைக் கிருஷ்ணன் பேசுவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மலைகள் தங்கள் எடையை இழந்தது போலவும், நெருப்புக் குளுமையானதாக ஆனது போலவும் எதிர்பாராதவகையில் இத்தகு மென்மை நிறைந்த பீமனின் வார்த்தைகளைக் கேட்டவனும், சாரங்கம் எனும் வில்லைத் தாங்குபவனும், வலிய கரங்களைக் கொண்டவனும், ராமனின் {பலராமனின்} தம்பியுமான சூர குலத்துக் கேசவன் {கிருஷ்ணன்}, நெருப்பைத் தூண்டும் காற்று போலப் பீமனைத் தனது வார்த்தைகளால் தூண்டும்படி உரக்கச் சிரித்து, கருணையின் உந்துவிசையில் மூழ்கியிருந்த அவனிடம் {பீமனிடம்}, "ஓ! பீமசேனரே, மற்ற பிற நேரங்களில், பிறரை அழித்து மகிழ்ந்து, திருதராஷ்டிரரின் தீய மகன்களை நசுக்க விரும்பிய நீர் போரை மட்டுமே மெச்சினீர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, முகம் கீழ்நோக்கி அமர்ந்தபடி, {அப்போதெல்லாம்} முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தீரே. உமது இதயத்துக்குள் வீசும் புயலைக் குறிக்கும் வகையில் பயங்கரக் கோபத்தை அடிக்கடி வெளிக்காட்டினீரே.


ஓ! பீமரே, உமது கோபமெனும் நெருப்பால் தூண்டப்பட்டு, பெருமூச்சு விட்டபடியும் அமைதியற்ற இதயத்துடனும், புகையோடு கலந்த நெருப்புச் சுடராய் இருந்தீரே. பெரும் சுமையால் அழுத்தப்பட்ட பலவீனமான மனிதன் ஒருவன் போல, கூட்டத்தில் இருந்து விலகி, கீழே படுத்தபடி சூடான பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தீரே. இதற்கான காரணத்தை அறியாதோர், உம்மைப் பைத்தியம் என்றே கருதினர் {தெரியுமா?}. வேரோடு பிடுங்கப்பட்டுத் தரையில் கிடக்கும் மரங்களைத் தூள் தூளாக நொறுக்கி, காலில் போட்டு அவற்றை மிதித்துக் கொண்டு, ஆத்திரத்தில் உறுமும் யானையைப் போல, ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடி, உமது பாதச்சுவடுகளால் உலகத்தைக் குலுக்கியபடி நீர் ஓடிக் கொண்டிருந்தீரே.

இங்கே இந்தப் பகுதியில் கூடக் கூட்டத்துடன் இருப்பதில் மகிழாமல், உமது நேரத்தைத் தனிமையிலேயே கழிக்கிறீர். இரவோ, பகலோ, தனிமையைத் தவிர வேறு எதுவும் உமக்கு மகிழ்ச்சியூட்டுவதில்லை. தனியாக அமர்ந்திருக்கும் நீர், திடீரென உரக்கச் சிரிப்பீர். சில வேளைகளில், உமது கால் முட்டிகள் இரண்டுக்குமிடையில் தலையை வைத்துக் கொண்டு, கண்கள் மூடிக் கொண்டு, அதே நிலையிலேயே தொடர்ந்து நீண்ட நேரம் இருப்பீர்.

இன்னும் சில நேரங்களில், ஓ! பீமரே, அடிக்கடி உமது புருவங்களைச் சுருக்கி, உதடுகளைக் கடித்தபடி, கடுமையாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பீர். இவை யாவும் கோபத்தின் குறியீடுகளே. ஒரு சமயத்தில், உமது சகோதரர்களுக்கு மத்தியில் கதாயுதத்தைப் பற்றிக் கொண்டு, இந்த உறுதிமொழியை உரைத்தீர், "தனது காந்தியை வெளிப்படுத்திக் கொண்டு சூரியன் கிழக்கில் உதித்து, மேருவைச் சுற்றிப் பயணித்து மேற்கில் மறைவதைப் பார்ப்பது போல {சூரியன் உதித்து மறைவது எப்படி உறுதியானதோ அதைப் போல}, ஆணவமிக்கத் துரியோதனனை, எனது இந்தக் கதாயுதம் கொண்டு கொல்வேன் என்று உறுதி ஏற்கிறேன். இந்த உறுதிமொழி பொய்க்காது" என்றீர்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, அதே இதயத்தைக் கொண்டிருக்கும் நீர், இப்போது சமாதானத்துக்கான ஆலோசனைகளை எப்படிப் பின்பற்றுவீர்? ஐயோ, உண்மையில் போர் உடனடியாக வரும் எனும்போது, இதயத்தில் அச்சம் நுழைந்துவிட்டால், ஓ! பீமரே, {முன்பு} போரை விரும்பியவர்கள் இதயமெல்லாம் வருத்தமடையும்.

ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமரே}, உறங்கும்போதோ, விழித்திருக்கும்போதோ, மங்கலமற்ற சகுனங்களையே நீர் காண்கிறீர். உண்மையில், அதன் காரணமாகவே நீர் சமாதானத்தை விரும்புகிறீர். ஐயோ, அலியைப் போல ஆண்மைக்குரிய எந்த அறிகுறிகளையும் நீர் வெளிக்காட்டவில்லையே. பயத்தால் நீர் பீடிக்கப்பட்டிருக்கிறீர். அதன் காரணமாகவே உமது இதயம் வருத்தமடைகிறது. இதயம் நடுங்குகிறது, உமது மனமோ துயரத்தில் மூழ்கி இருக்கிறது. உமது தொடைகள் நடுங்குகின்றன. அதற்காகவே நீர் சமாதானத்தை விரும்புகிறீர்.

ஓ! பார்த்தரே {பீமரே}, காற்றின் விசைக்கு வெளிப்பட்டு நிற்கும் இலவங்காய் விதையின் நெற்றுகள் {காய்ந்த பருப்புகள்} [Pods of Salmali seed} போல, மனிதர்களின் இதயங்கள் நிலையற்றவை என்பது நிச்சயம். உமது இந்த மனநிலை, அறிவூட்டப்பட்ட பசுக்களின் பேச்சு போல விசித்திரமாக இருக்கிறது. தங்களைக் காக்க ஒரு படகின்றிக் கடலில் நீந்துபவர்களைப் போல, உண்மையில், உமது சகோதரர்களின் இதயங்கள் அனைத்தும் துன்பக் கடலில் மூழ்கப் போகின்றன.

ஓ! பீமசேனரே, நீர் இத்தகு எதிர்பாராத வார்த்தைகளைப் பேசுவது, மலையே நகர்ந்து விட்டது போன்று விசித்திரமாக இருக்கிறது. ஓ! பாரதரே {பீமரே}, உமது சாதனைகளையும், நீர் பிறந்திருக்கும் குலத்தையும் நினைத்துப் பார்த்து எழுந்திரும். ஓ! வீரரே {பீமரே}, துன்பத்துக்கு உம்மைக் கொடுக்காமல் உறுதியாக இருப்பீராக. ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {பீமரே}, இத்தகு தளர்வு உமக்குத் தகுந்ததல்ல. ஏனெனில், தனது வீரத்தால் அடையப்படாத எதிலும் ஒரு க்ஷத்திரியன் மகிழ மாட்டான்" என்றான் {கிருஷ்ணன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்