Wednesday, June 03, 2015

அரிமாக்களின் உதவிக்கரம்!


அரிமா சங்கத்தின் நினைவுப்பரிசு
மயிலையில் இருந்து ஆர்கே திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, மயிலாப்பூர் ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் 30.05.2015 அன்று மாலை 7.30 மணியளவில் நடைபெறும் அரிமா சங்கத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார். நான் அவரிடம் நிச்சயம் கலந்து கொள்கிறேன் என்று உறுதியளித்தேன்.


அதேவேளையில் எனது நண்பரும், விக்ரம் அச்சக உரிமையாளருமான திரு.சீனிவாசன் அவர்கள், ஒரு சுழற்சங்கத்தின் புத்தகங்களை வடிவமைத்துத் தரமுடியுமா என்று என்னிடம் கேட்டார். நான் செய்து தருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன். மொத்தம் 10 புத்தகங்கள். முதலில் ஒரு புத்தகத்தை மட்டும் எனது அலுவலகத்திலேயே மேலோட்டமாக வடிவமைத்து பிழைதிருத்ததிற்காகவும் ஒரு முன்னோட்டத்திற்காகவும் அந்தச் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். அதில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.

நான் வடிவமைக்கும்போது எனது அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையான படி அப்புத்தகத்தை அமைத்துக் கொள்ள அச்சங்கத்தின் நிர்வாகிகள் விரும்பினார்கள். எனது அலுவலகமோ சிறியது. ஏசியிலேயே இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு எனது அலுவலகம் மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். எனவே, நான் எனது நண்பர் ஜெயவேலன் அவர்களைத் தொடர்பு கொண்டு, மேற்கண்ட தகவலைச் சொல்லி, அண்ணா நகரில் இருக்கும் அவரது நண்பர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களின் அலுவலகத்தில் வைத்து நான் அப்புதகங்களை வடிவமைத்துக் கொடுக்கலாமா என்று கேட்டேன்.

நண்பர்கள் திரு.ஜெயவேலனும், திரு.சீனிவாசனும் கூடப் புத்தகங்களை வடிவமைக்கக் கொடுத்திருக்கும் அந்தச் சங்கத்தின் உறுப்பினர்களே. 

அண்ணா நகரில் உள்ள அந்த அலுவலகத்தில் வைத்தே புத்தகங்களை வடிவமைக்க ஆரம்பித்தோம். இந்த வேலையிலேயே நான் கவனமாக இருந்தேன். காலையில் அண்ணா நகர் சென்றால், இரவில்தான் திருவொற்றியூரில் இருக்கும் எனது இல்லத்திற்கு வரவேண்டிய நிலை இருந்தது. வீட்டிற்கு வந்ததும் மஹாபாரதம் மொழிபெயர்ப்பைச் செய்வேன். இப்படியிருக்கையில் வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்கள் இணைய இணைப்பு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்த பகுதிகளைக் கூட இணையத்தில் பதிவேற்ற முடியவில்லை. எனவே, எனது தனிப்பட்ட மின்னஞ்சல்களைச் சரி பார்க்க என்னால் முடியவில்லை.

இந்நிலையில் ஆர்கே திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இதை நான் கவனிக்கவில்லை. 29ந்தேதி புத்தகங்களின் வடிவமைப்புப் பணிகள் நடந்து கொண்டு இருக்கையில் அப்புத்தகங்களை வடிவமைக்கக் கொடுத்த சுழற்சங்கத்தின் நிர்வாகிகள், முட்டுக்காட்டில் தாங்கள் நடத்த இருக்கும் பயிலரங்கில் என்னைக் கலந்து கொள்ளச் சொன்னார்கள். தங்கள் சங்கத்தைக் குறித்து நான் புரிந்து கொள்வதற்கு அது ஏதுவாக இருக்கும் என்றும் சொன்னார்கள்.

சுழற்சங்கப் பயிலரங்கில்
ஜெயவேலன் அவர்களிடம் 30ந்தேதி நான் அரிமா சங்கத்திற்குச் செல்ல வேண்டியிருக்குமே. அப்படியிருக்கையில் என்னால் அந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ள முடியாதல்லவா என்று கேட்டேன். அதற்கு அவர் காலையில் இருந்து மாலை வரைதான் பயிலரங்கு, மாலையில் விளையாட்டும் கேளிக்கையும்தான் இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் அரிமா சங்கத்தின் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் பயிலரங்கிற்குத் திரும்பிவிடுங்கள் என்று சொன்னார். எனக்கும் அது சரியான யோசனையாகவே பட்டது. எனவே, 30ந்தேதி நான், ஜெயவேலன் மற்றும் சீனிவாசன் ஆகிய மூவரும் முட்டுக்காட்டில் நடந்த பயிலரங்கிற்கு அதிகாலையிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டோம்.

பயிலரங்கும் கூடியது. பயிலரங்கை நடத்தியவர்கள் தங்கள் சங்கத்தின் சேவைகளையும், அது எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதையும், அச்சங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்றும் சொல்லி புதிய உறுப்பினர்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சிகள் அனைத்தும் சுவாரசியமாக இருந்தன. உணவு இடைவேளையின் போது, நண்பர் ஜெயவேலனிடம் நான், அரிமா சங்கத்தில் இருந்து ஒரு போனும் வரவில்லை. ஒருவேளை நிகழ்ச்சி ரத்தாகியிருக்குமோ என்று கேட்டேன். அப்படியெல்லாம் நாமே ஊகிக்க முடியாது, நீங்களே ஒருமுறை தொலைபேசியில் கேட்டுவிடுங்களேன் என்று அவர் சொன்னார். மாலை 4 மணியிருக்கும், என் கைபேசியில் நான் பதிந்து வைத்திருந்த எண்ணில் தொடர்பு கொண்டேன். "சார் நான் எத்தனை மணிக்கு வர வேண்டும்" என்று நான் கேட்டேன். மறுமுனையில் பேசியவர், "சார், இன்னிக்கு வர வேண்டாம். நான் திங்கட்கிழமை உங்களைத் தொடர்பு கொள்கிறேன்" என்றார். சரி நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது போல என்று நினைத்து அந்தப் பயிலரங்கின் நிகழ்ச்சியிலேயே மூழ்கிப் போனேன். காலையில் இருந்து சார்ஜ் செய்யாததால் எனது கைபேசி ஆஃப் ஆகிவிட்டது.

சுழற்சங்கப் பயிலரங்கில்
மாலை 6 மணிக்குப் பயிலரங்கு முடிந்தது. அனைவரும் விளையாட்டு மற்றும் கேளிக்கைகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அப்போது, திரு.ஜெயவேலன் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் கைபேசியை என்னிடம் கொடுத்தார். மறுமுனையில் ஆர்கே திரு.ராமகிருஷ்ணன் அவர்கள், "கைபேசியில் உங்களைப் பிடிக்க முடியவில்லையே, புறப்பட்டுவிட்டீர்களா?" என்று கேட்டார். "சார், நான் ஏற்கனவே உங்களிடம் பேசினேனே. திங்கட் கிழமை தொடர்பு கொள்வதாகச் சொன்னீர்களே" என்று நான் கேட்டேன். அவர், "நான் உங்களிடம் பேசவே இல்லையே!" என்றார். எனக்கு உடல் வியர்த்துப் போனது. "எத்தனை பேர் காத்திருப்பார்கள். நாம் இங்கிருக்கிறோமே. பேருந்தில் சென்றால் இரண்டு மணிநேரம் ஆகிவிடுமே. என்ன செய்வது?" என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, திரு.ஜெயவேலனும், திரு.சீனிவாசனும் என்னை மேலும் விரைவுபடுத்தி, தங்களது நண்பர் திரு.ஜெகதீஸ் அவர்களின் காரை எடுத்துக் கொண்டு என்னை அழைத்துச் சென்றார்கள்.

மயிலை, ஆர்கே கன்வென்சன் (Arkay Convention Center) சென்டரை நாங்கள் அடையும்போது மணி எட்டாகிவிட்டது. வழியெங்கும் ஆர்கே அவர்களும், திரு.கஸ்தூரிரங்கன் அவர்களும் நாங்கள் எவ்விடம் வந்திருக்கிறோம் என்பதை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் இருவரும் எங்களுக்காக மாடியில் இருந்த அந்த மையத்தின் கீழேயே காத்திருந்தார்கள்.

ஆர்கே கன்வென்ஷன் சென்டரில்
அரிமா சங்கக் கூட்டத்தில்
மாடிக்கு விரைந்து சென்றோம். அங்கே திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார். மேடையின் நடு இருக்கை காலியாக இருந்தது. அதில் அமரும் படி ஆர்கே அவர்கள் சுட்டிக் காட்டினார். பள்ளிக்குத் தாமதமாகச் சென்ற குழந்தை ஆசிரியருக்குப் பயந்து தனது இருக்கையில் ஓடிச்சென்று அமரும் வேகத்துடன் நான் அந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். மேடைக்கு முன் அமர்ந்திருந்தோரைக் காண எனக்கு நாணமாக இருந்தது. "இத்தனை பேரையல்லவா நாம் காத்திருக்க வைத்திருக்கிறோம்!" நான் அந்தப் பக்கம் திரும்பவே இல்லை. பத்ரி அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையே கேட்டுக் கொண்டிருந்தேன்.

தான் தொடங்கிய கிரிக் இன்ஃபோ வலைத்தளம் குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தார். சுவாரசியமாக இருந்தது. உண்மையில், திரு.பத்ரிசேஷாத்ரி அவர்கள் இலவசமாக அளித்திருக்கும் என்.எச்.எம். ரைட்டர் இல்லையென்றால் முழுமஹாபாரத மொழிபெயர்ப்பைச் செய்ய நான் மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும். மகாபாரத மொழிபெயர்ப்பை ஆரம்பிப்பதற்கு முன்னால், எனக்குப் பொழுதுபோக்கே என்.எச்.எம்க்குத் தேவையான xml கோப்புகளை என் தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வதுதான். TAM99 மற்றும் தட்டச்சு முறைப்படியாகத் தட்டெழுதத் தெரியாத நண்பர்களுக்காக, அவர்கள் வைத்திருக்கும் எழுத்துருவுக்கு ஏற்ற வகையிலை Phonetic முறையில் XML-ஐ மாற்றி அமைத்து அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். பத்ரி எவ்வளவு எளிதாகச் சுவாரசியம் குறையாமல் பேசுகிறார். நம்மைப் பேசச் சொல்வார்களே, நாம் என்ன பேசப் போகிறோம் என்றே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நினைவிலேயே மேடையின் அருகே திரும்பிப் பார்த்தால், எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா அவர்கள் அமர்ந்திருக்கிறார். அதிர்ந்து, "வணக்கம் சார்" என்றேன். அவர் அதை ஆமோதிக்கும் வண்ணம் கைசைத்தார். தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் மணித்துளிகளும் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தது. பத்ரி அவர்கள் பேசி முடித்துவிட்டார். அறிவிப்பாளர் என்னை அறிமுகப்படுத்திவிட்டு பேசவும் அழைத்து விட்டார்.


அரிமா கூட்டத்தில் பேசும்போது...
மேடை மைக் முன்பு முதன்முறையாக நின்றேன். எல்லாருக்கும் வணக்கங்க என்று சொல்லிவிட்டு, என்னைக் குறித்துச் சிறிது அறிமுகப் படுத்திக் கொண்டு, நான் செய்யும் தொழில், நான் எந்நேரத்தில் மகாபாரதத்தை மொழிபெயர்க்கிறேன் என்பனவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தேன். வேறு என்ன பேசுவது என்று நினைக்கையில் மனதில் ஒன்றும் தோன்றவில்லை. எனவே, நேரத்தைக் கடத்தாமல், "எனக்கு மேடைப்பேச்சு வராதுங்க. இவ்வளவுதான் எனக்குப் பேசத் தெரியுது. நீங்க என் கிட்ட கேள்வி கேளுங்க, அதுக்கு நான் பதில் சொல்றேன்" என்று சொன்னேன்.

ஒவ்வொருவராகக் கேள்வி கேட்க, நானும் எனக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  கேள்விகளுக்கிடையில் நமது வலைப்பூவில் வெளியாகும் ஆடியோ மற்றும் காணொளிகளைக் குறித்தும் கேட்டது அம்முயற்சியின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது.  இடையில் பத்ரி அவர்களும், சாரு அவர்களும் கேள்வி கேட்டது மகிழ்ச்சியையும், எனக்கு ஒரு தைரியத்தையும் அளித்தது. ஏதோ ஒருவாறு பேசி அமர்ந்தேன்.

சாரு அவர்களிடம் காசோலை பெறும்போது
அருகில் பத்ரி அவர்கள்
அமர்ந்ததும் மற்றுமோர் அதிர்ச்சி, என்னைக் கௌரவிப்பதற்காக நுங்கம்பாக்கம் அரிமாசங்கத்தின் சார்பாக ரூ.25,000 காசோலை வழங்கப்படுகிறது என்று திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் அறிவித்தார். எனக்கு ஊக்கமளிப்பதற்காக நண்பர் ஜெயவேலன் அவர்கள் தரும் பணத்தைத்தவிர வேறு எவரிடமும் நான் பணம் பெற்றதில்லை. தனிப்பட்ட மின்னஞ்சல்களில் என் வங்கிக் கணக்கு எண், கேட்டு அனுப்பும் வாசகர்களிடம், இப்பணிக்கென்று நான் பணம் பெறுவதில்லை என்று மறுத்து வந்திருக்கிறேன். எனினும், இது வேறு! ஒரு சங்கம் என் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில்கொடுக்கும் பரிசு. இதை மறுக்கலாகாது. பரமன் எனக்குச் செய்யும் உதவியாக எண்ணி அதைப் பெற்றுக் கொண்டேன். அதையும் திரு.சாரு அவர்களின் கையால் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆர்கே அவர்கள் பாடிசெனாய்நகர் அரிமா சங்கத்தின் சார்பாக ஒரு நினைவு கேடயத்தையும் அளித்தார். உள்ளம் நெகிழ்ந்தது.

திரு.சாருநிவேதிதா அவர்கள் பேசும்போது...
பிறகு திரு.சாரு நிவேதிதா அவர்கள் நான் செய்து வரும் பணியையும், கும்பகோணம் மஹாபாரதப் பதிப்புக்காக கி.பி.1900-1927 வரை ம.வீ.ராமானுஜாச்சாரியர் அடைந்த துன்பங்களையும், மஹாபாரதத்தின் முக்கியத்துவத்தையும், எதிர்காலச் சந்ததியினரின் கடமைகளையும் எடுத்துரைக்கும் வண்ணம் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். ஆனால் நண்பர்கள் முட்டுக்காட்டில் காத்திருப்பார்கள் என்று சொன்னதும், சரி சென்று வாருங்கள் என்றார்கள். உணவருந்தும் இடத்தில் ஒருவர் பாயசமாவது சாப்பிடுங்கள் என்றார். நாங்கள் மூவரும் பாயசம் அருந்திவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டோம்.
காரில் முட்டுக்காட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையில், நண்பர் சீனிவாசன் அவர்கள், "சார் பெருமையா இருக்கு சார். வெட்டி வேலை செஞ்சுட்டு இருக்கீங்கனு நான் எத்தனையோ தடவ சொல்லியிருக்கேன். ஆனால், இன்னிக்கு உங்களுக்குக் கிடச்ச மரியாதை! உங்கள ஒருமுறை கூட யாரும் பாத்ததில்ல. இருந்தாலும், எல்லாரும் உங்ககிட்ட எவ்வளவு அன்பா நடந்துகிட்டாங்க. இந்த வேலைய எக்காரணம் கொண்டும் விட்டுடாதீங்க" என்றார்.

அரிமா சங்கத்தின் ஆர்கே திரு. A.S.இராமக்கிருஷ்ணன் மற்றும் திரு.கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும், திரு.சாரு நிவேதிதா, திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும் மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

என் உடன் இருந்த நண்பர்கள் ஜெயவேலன், மற்றும் விக்ரம் அச்சக சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி. இவர்கள் இருவர் இல்லையென்றால், அரிமா சங்கத்தின் அன்றைய கூட்டத்திற்குச் சென்றிருக்க முடியாது.



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்