Sunday, May 08, 2016

நீலனைக் கொன்ற அஸ்வத்தாமன்! - துரோண பர்வம் பகுதி – 029

Aswatthama killed Nila! | Drona-Parva-Section-029 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : அணிபிளந்து ஓடிய கௌரவப் படை; துரோணரை மையமாகக் கொண்டு நடைபெற்ற போர்; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான பயங்கரப் போர்; நீலனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையிலான போர்; நீலனைக் கொன்ற அஸ்வத்தாமன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, (என்னுடைய) அந்தப் படைப்பிரிவுகள் பிளக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டு, நீங்கள் அனைவரும் களத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கியபோது, உங்கள் மனங்களின் நிலை எப்படி இருந்தது? {இப்படி} பிளக்கப்பட்டு, நிற்பதற்குக் கூட ஓர் இடத்தைக் காணாமல் ஓடும் படையணியினரை மீண்டும் அணிதிரட்டுவது எப்போதும் மிகக் கடினமானதே. ஓ! சஞ்சயா, அது குறித்து அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, [உமது துருப்புகள் பிளக்கப்பட்டாலும்], உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்யும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட உலகின் முதன்மையான வீரர்கள் பலர், தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் துரோணரைப் பின்தொடர்ந்தனர். அந்தப் பயங்கர நகர்வில் உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடன் பாண்டவத் துருப்புகளை எதிர்த்த அவர்கள், நல்ல சாதனைகளை அடைந்து, யுதிஷ்டிரனை அணுகக்கூடிய தூரத்திலேயே வைத்துக் கொண்டு, அச்சமற்ற வகையில் தங்கள் படைத்தலைவரைத் {துரோணரைத்} தொடர்ந்தனர்.


பெரும் சக்தி கொண்ட பீமசேனன், வீர சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோரின் ஒரு பிழையைக் கூடத் {தங்களுக்குச்} சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கௌரவத் தலைவர்கள் பாண்டவப் படையின் மீது பாய்ந்தனர். “துரோணர், துரோணர்!” என்று சொல்லிப் பாஞ்சாலர்கள் தங்கள் துருப்புகளைத் தூண்டினர். எனினும், உமது மகன்களோ, “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்” என்று சொல்லி குருக்கள் அனைவரையும் தூண்டினர்.

“துரோணரைக் கொல்வீர்”, “துரோணரைக் கொல்வீர்” என்று சொல்லி ஒரு தரப்பும், “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்”, “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்” என்று சொல்லி அடுத்ததும் {அடுத்த தரப்பும்} எனத் துரோணரைத் தங்கள் பந்தயப் பொருளாகக் கொண்டு குருக்களும், பாண்டவர்களும் சூதாடுவதாகத் தெரிந்தது. பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னன், துரோணர் யாரை நசுக்க முயன்றாரோ, அந்தப் பாஞ்சாலர் தேர்வீரர்கள் அனைவரும் இருந்த தரப்புக்குச் சென்றான்.

இப்படியே, போரிடுதவற்காக ஒருவன் {தன்} எதிரிகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்த விதியும் அனுசரிக்கப்படவில்லை. அந்தப் போர் பயங்கரமாக மாறியது. வீரர்களை எதிர் கொண்ட வீரர்கள் உரத்த முழக்கங்களைச் செய்தனர். பாண்டவர்களை அவர்களது எதிரிகளால் நடுங்கச் செய்ய இயலவில்லை. மறுபுறம், தங்கள் துயரங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்த பின்னவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் எதிரிகளின் படையணியினரை நடுங்கச் செய்தனர். தன்மானம் கொண்டவர்களாக இருப்பினும், சினத்தாலும், பழிவாங்கும் உணர்ச்சியாலும் உற்சாகங்கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்}, பலத்தாலும் சக்தியாலும் தூண்டப்பட்டுத் துரோணரைக் கொல்வதற்காகத் தங்கள் உயிரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்தப் பயங்கரப் போரை அணுகினர்.

உயிரையே பணயமாகக் கொண்டு கடும்போரில் விளையாடிய அளவில்லா சக்தி படைத்த அவ்வீரர்களுக்குள் நடந்த அந்த மோதலானது, வச்சிரத்திற்கு எதிரான இரும்பின் மோதலை ஒத்திருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் நடைபெறும் கடும்போரைப் போல இதற்கு முன்னர்த் தாங்கள் பார்த்ததாகவோ, கேட்டதாகவோ வயதில் மிக முதிர்ந்த மனிதர்களாலும் எண்ண முடிவில்லை. பெரும் படுகொலைகளைக் கண்ட அம்மோதலில், அந்தப் பெரும்படையின் எடையால் பீடிக்கப்பட்ட பூமியானது நடுங்கத் தொடங்கியது. எதிரியால் கலங்கடிக்கப்பட்டு, தூக்கிவீசப்பட்ட அந்தக் குரு படை உண்டாக்கிய பயங்கர ஒலி, ஆகாயத்தையே முடக்கிப் பாண்டவப்படைக்குள்ளும் ஊடுருவியது.

போர்க்களத்தில் திரிந்த துரோணர், பாண்டவப் படைப்பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரிடம் வந்து, கூர்மையான தன் கணைகளால் அவர்களைப் பிளந்தார். அற்புதமான சாதனைகளைக் கொண்ட துரோணரால் இப்படி அவர்கள் நசுக்கப்பட்ட போது, பாண்டவப்படையின் தலைவன் திருஷ்டத்யும்னன், சினத்தால் நிறைந்து துரோணரைத் தானே தடுத்தான். துரோணருக்கும், பாஞ்சாலர்களின் இளவரசனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதலானது மிக அற்புதமானதாக இருந்ததை நாங்கள் கண்டோம். அஃது {அம்மோதல்} ஈடு இணையற்றது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

அப்போது, நெருப்புக்கு ஒப்பானவனாகத் தன் கணைகளையே தீப்பொறிகளாகவும், தன் வில்லையே தீச்சுடராகவும் கொண்ட {அநூப நாட்டு ஆட்சியாளன்} நீலன், உலர்ந்த புற்குவியலை எரிக்கும் காட்டுத்தீயைப் போல, குரு படைகளை எரிக்கத் தொடங்கினான். துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, நீலனோடு ஒரு மோதலை முன்பிலிருந்தே விரும்பியதால், துருப்புகளை எரித்தபடியே பின்னவன் {நீலன்} வந்த போது, அவனிடம் சிரித்துக் கொண்டே, கண்ணியமான வார்த்தைகளால், “ஓ! நீலா, சாதாரணப் படைவீரர்கள் பலரை உன் கணைகளின் தீச்சுடர்களால் எரிப்பதால் நீ ஈட்டப் போவது {ஈட்டப்போகும் பயன்} என்ன? உதவியற்ற என்னிடம் நீ போரிடுவாயாக, சினத்தால் நிறைந்து என்னைத் தாக்குவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.

இப்படிச் சொல்லப்பட்டதும், முற்றாக மலர்ந்த தாமரையின் காந்திக்கு ஒப்பான பிரகாசமான முகத்தைக் கொண்ட நீலன், தாமரைக் கூட்டங்களுக்கு ஒப்பான உடலையும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும் கொண்ட அஸ்வத்தாமனைத் தன் கணைகளால் துளைத்தான். திடீரென நீலனால் ஆழத் துளைக்கப்பட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மூன்று பல்லங்களைக் கொண்டு தன் எதிராளியின் {நீலனின்} வில், கொடிமரம் மற்றும் குடையை அறுத்தான். அப்போது, தன் தேரில் இருந்து விரைவாகக் குதித்த நீலன், ஒரு சிறந்த வாளையும் கேடயத்தையும் கொண்டு, (தன் நகங்களால், தன் இரையைத் தூக்கிச் செல்லும்) ஒரு பறவையைப் போல, அஸ்வத்தாமனின் உடலில் இருந்து அவனது தலையைத் துண்டிக்க விரும்பினான். எனினும், ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, இறகுகள் கொண்ட கணை ஒன்றின் மூலமாக, அழகான மூக்கால் அருளப்பட்டதும், சிறந்த குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், உயர்ந்த தோள்களில் இருந்ததுமான தன் எதிராளியின் {நீலனின்} தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.

அப்போது, முழு நிலவின் காந்திக்கு ஒப்பான பிரகாசமான முகமும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களும், தாமரைக்கு ஒப்பான நிறமும் கொண்ட அந்த உயரமான வீரன் {நீலன்} இப்படியே கொல்லப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான். சுடர்மிகு சக்தி கொண்ட நீலன், ஆசானின் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட பாண்டவப் படை, பெரும் துயரத்தால் நிறைந்து நடுங்கத் தொடங்கியது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், “ஐயோ, போர்க்களத்தின் தென்பகுதியில், இந்திரனின் மகன் (அர்ஜுனன்), எஞ்சியுள்ள சம்சப்தகர்களையும், நாராயணப் படையையும் கொல்வதில் ஈடுபட்டு வரும்போது, எதிரியிடம் இருந்து நம்மைக் காக்க அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} எப்படி இயலும்?” என்று நினைத்தனர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்