Tuesday, May 31, 2016

ராமராஜ்ஜியம்! - துரோண பர்வம் பகுதி – 059

The Kingdom of Rama! | Drona-Parva-Section-059 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 29)

பதிவின் சுருக்கம் : தசரதனின் மகனான ராமனின் கதையைச் சொன்ன நாரதர்; அசுரர்களையும் ராவணனையும் கொன்ற ராமன்; அவன் செய்த வேள்விகள்; அநீதியான போக்கு, பேராசை, அறியாமை, பிணி ஆகியவையற்ற ராமராஜ்ஜியத்தின் மகிமை; ராமன் சொர்க்கம் புகுந்தது…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, தசரதனின் மகனான ராமனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம்.


தன் மடியில் பிறந்த மக்களிடம் {பிள்ளைகளிடம்} மகிழ்ச்சி கொள்ளும் ஒரு தந்தையைப் போல அவனது குடிமக்கள் அவனிடம் மகிழ்ச்சி கொண்டனர். அளவிலா சக்தி கொண்ட அவனிடம் {ராமனிடம்} எண்ணற்ற நற்குணங்களும் இருந்தன. லக்ஷ்மணனின் அண்ணனான அந்த மங்காப் புகழ் கொண்ட ராமன், தனது தந்தையின் கட்டளையின் பேரில், தன் மனைவியுடன் {சீதையுடன்} பதினான்கு ஆண்டுக் காலம் காட்டில் வாழ்ந்தான். அந்த மனிதர்களில் காளை {ராமன்}, துறவிகளின் பாதுகாப்புக்காக ஜனஸ்தானத்தில் பதினாலாயிரம் ராட்சசர்களைக் கொன்றான். அங்கே {ஜனஸ்தானத்தில்} வசித்தபோது, ராவணன் என்று அழைக்கப்பட்ட ராட்சசன், அவனையும் {ராமனையும்}, அவனது தோழனையும் (லக்ஷ்மணனையும்) வஞ்சித்து, விதேஹ இளவரசியான அவனது {ராமனது} மனைவியை {சீதாவை} அபகரித்துச் சென்றான்.

முக்கண்ணன் (மகாதேவன்), பழங்காலத்தில் (அசுரன்) அந்தகனைக் கொன்றதைப் போலக் கோபத்தில் ராமன், அதற்கு முன் எந்த எதிரியிடமும் வீழாத புலஸ்திய குலத்தின் குற்றவாளியைப் {இராவணனைப்} போரில் கொன்றான். உண்மையில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ராமன், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்தாலும் கொல்லப்பட முடியாதவனும், தேவர்கள் மற்றும் பிராமணர்களுக்கு முள்ளாக இருந்த இழிந்தவனும், புலஸ்திய குலத்தின் வழித்தோன்றலுமான அந்த ராட்சசனை {இராவணனை}, அவனது சொந்தங்கள், அவனைப் பின்தொடர்பவர்கள் ஆகியோரோடு சேர்த்துப் போரில் கொன்றான்.

தன் குடிகளைக் கருணையோடு நடத்தியதன் விளைவாக, ராமனைத் தேவர்களும் வழிபட்டனர். தன் சாதனைகளால் முழுப் பூமியையும் நிறைத்த அவன் {ராமன்} தெய்வீக முனிவர்களாலும் மிகவும் புகழப்பட்டான். அனைத்து உயிரினங்களிடமும் கருணையோடிருந்த அந்த மன்னன் {ராமன்}, பல்வேறு நாடுகளை அடைந்து, தன் குடிகளை அறத்தோடு பாதுகாத்து, எந்தத் தடங்கலும் இல்லாத ஒரு பெரும் வேள்வியை நடத்தினான். அந்தத் தலைவன் ராமன், நூறு குதிரை வேள்விகளையும், ஜாரூத்யம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வியையும் நடத்தினான். தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாகச் செலுத்தி இந்திரனை அவன் மகிழ்வித்தான் [1]. இப்படிப்பட்ட தன் செயல்களால் ராமன், உயிரினங்களுக்கு நேரும் பசி, தாகம் மற்றும் அனைத்து நோய்களையும் வென்றான். அனைத்துச் சாதனைகளையும் கொண்ட அவன் {ராமன்}, தன் சக்தியாலேயே எப்போதும் சுடர்விட்டுப் பிரகாசித்தான். உண்மையில், தசரதனின் மகனான அந்த ராமன், உயிரினங்கள் அனைத்தையும் விடப் பெரிதும் பிரகாசித்தான்.

[1] “Havisha mudamavahat; அல்லது havisham udam avahat, என்று மூலத்தில் உள்ளது. இரண்டாம் முறையில் படித்தால், ’அவன் {ராமன்}, நீரைப் போல அபரிமிதமாகக் காணிக்கைகளை இந்திரனுக்கு அளித்தான்’ என்று பொருள்படும்” என இங்கே கங்குலி விளக்குகிறார்.

ராமன் தன் நாட்டை ஆண்டபோது, முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும் பூமியில் ஒன்றாகவே வாழ்ந்தனர். உயிரினங்களின் வாழ்வும் வேறுமாதிரியாகவில்லை {பலவீனமடையவில்லை}. ராமன் தன் நாட்டை ஆண்ட போது, பிராணன், அபானன், சமானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளும், இன்னும் பிறவும் [2] தங்கள் செயல்பாடுகளை {சரியாகச்} செய்தன. ஒளிக்கோள்கள் அனைத்தும் பிரகாசமாக ஒளிர்ந்தன. பேரிடர் ஏதும் நேரவில்லை.

[2] மனித உடலில் இருக்கும் ஐந்து வாயுக்கள்:-
வியாணன்: இரத்தத்தை எங்கும் பரவச் செய்து தேகத்தைத் தாங்கி நிற்கும்.
பிராணன்: இருதயத்திலிருந்து சலித்துக்கொண்டே பசி, தாகங்களை உண்டாக்கும்.
அபானன்: உடலிலிருந்து மலஜலங்களை வெளித்தள்ளும்.
சமானன்: நாபியிடமிருந்து உண்ட அன்னபானாதிகளைச் சமானம் செய்யும்.
உதானன்: இது கண்டத்திலிருந்து உஸ்வாசம், நிஸ்வாசம் செய்யும்
தவிர ஐந்து உப வாயுக்களும் உண்டு:
நாகன்: தேகத்தை முறுக்கிக் கொட்டாவி விடச் செய்யும்.
கூர்மன்: விக்கலையும், ஏப்பத்தையும் உண்டாக்கும்.
கிரிகரன்: தும்மலை உண்டாக்கும்.
தேவநந்தன்: சிரித்தல், சோகம் முதலியவற்றை உண்டாக்கும்.
தனஞ்செயன்: இது பிராணன் நீங்கிய பின் தேகத்தில் 5 நாள் தங்கியிருந்து சதை வீங்கி வெடிக்கச் செய்யும்.
- 1943-ல் வெளிவந்த, திருச்சி தென்னூர் தி. அர. நடேசன் பிள்ளை எழுதிய
‘தமிழர் (திராவிடர்) மதச்சுருக்கம்’ நூலிலிருந்து..

அவனது குடிமக்கள் நீண்ட வாழ்நாளோடு வாழ்ந்தனர். இளமையில் எவரும் மாளவில்லை. இதனால் மிக்க நிறைவு கொண்ட சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, நான்கு வேதங்களின் {விதிகளின்} படி, மனிதர்களால் அவர்களுக்குக் காணிக்கை அளிக்கப்படும் நெய், உணவு ஆகியவற்றை அடைந்தனர். அவனது {ராமனின்} ஆட்சிப்பகுதிகளில் ஈக்களோ, கொசுக்களோ, இரைதேடும் விலங்குகளோ, நஞ்சுமிக்க ஊர்வனவோ எதுவும் இல்லை [3]. அநீதியான போக்கு, பேராசை, அறியாமை ஆகியவற்றைக் கொண்ட எவரும் அங்கு இல்லை. அனைத்து (நான்கு) வகைக் குடிமக்களும், நீதிமிக்க இனிமையான செயல்பாடுகளிலேயே ஈடுபட்டனர்.

[3] மன்மதநாததத்தரின் பதிப்பில் இன்னும் சற்றுக் கூடுதலாக "உயிரினங்கள் எதுவும் நீரில் மூழ்கி இறக்கவில்லை; நெருப்பு  எந்த உயிரினத்தையும் எரிக்கவில்லை" என்று இருக்கிறது.
அதே வேளையில், ஜனஸ்தானத்தில் பிதுர்களுக்கு வழங்கப்படும் காணிக்கைகளையும், தேவர்களை வழிபடுவதையும் தடுத்துக் கொண்டிருந்த ராட்சசர்களைக் கொன்ற தலைவன் ராமன், அந்தக் காணிக்கைகளும், வழிபாடுகளும் மீண்டும் பிதுர்களுக்கும், தேவர்களுக்கும் அளிக்கப்படும்படி ஆவன செய்தான். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் பிள்ளைகளால் அருளப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளைத் தங்கள் வாழ்நாளாகக் கொண்டு வாழ்ந்தனர். முதியவர்கள் தங்களின் இளையவர்களுக்கு எப்போதும் சிராத்தம் செய்ததில்லை [4].

[4] அப்படிச் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை. அஃதாவது இளவயது மரணங்கள் ஏற்படவில்லை.

இளமையான வடிவமும், அடர்நீல நிறமும், சிவந்த கண்களும், மதயானையின் நடையும், கால் முட்டுகளை அடையும் கரங்களும் {மிக நீண்ட கைகள்}, சிங்கம் போன்ற அழகிய, பெரிய தோள்களும், பெரும் பலமும் கொண்ட ராமன், அனைத்து உயிர்களாலும் அன்புடன் விரும்பப்பட்டு, பதினோராயிரம் {11,000} ஆண்டுகளுக்குத் தன் நாட்டை ஆண்டான். அவனது {ராமனது} குடிமக்கள் எப்போதும் அவனது பெயரை உச்சரித்தனர். ராமன் தன் நாட்டை ஆண்டுகொண்டிருந்த போது உலகமே மிக அழகாக ஆனது. இறுதியாகப் பூமியில் தன் குலவழியைக் கொண்ட எட்டு வீடுகளை நிறுவிய பிறகு [5], தன் நால்வகைக் குடிகளையும் [6] தன்னுடன் அழைத்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றான்.

[5] எட்டுவிதமான ராஜவம்சத்தைப் பூமியில் நிறுவினான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

[6] “ராமனின் ஆளுகைக்குள் இருந்த நால்வகை உயிரினங்களாவன (1) முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை {Oviparous} (2) குட்டியை ஈன்று பெறுபவை {Viviparous} (3) வியர்வை போன்று கழிவுப்பொருள்களில் இருந்து பிறப்பவை (4) தாவரங்கள் ஆகியவையே” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {ராமனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.



வேறொரு பதிப்பில் இப்பகுதி இன்னும் சற்று விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இவ்வளவே உள்ளது.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்