Wednesday, August 31, 2016

கர்ணனும் பீமனும் ஏற்படுத்திய பேரழிவு! - துரோண பர்வம் பகுதி – 137

The great carnage caused by Karna and Bhima! | Drona-Parva-Section-137 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 53)

பதிவின் சுருக்கம் : பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையில் தொடர்ந்த போர்; இருவராலும் உண்டாக்கப்பட்ட பேரழிவு; சாரணர்களும் சித்தர்களும் அவ்விரு போர்வீரர்களின் வீரத்தையும், திறனையும் வியந்து பாராட்டியது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா, ஓ! சஞ்சயா, இந்தத் துன்பகரமான விளைவு, நிச்சயமாக என் தீய கொள்கையின் காரணமாக எங்களை அடைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(1) நடந்தது நடந்ததுதான் என்றே இதுவரை நான் நினைத்து வந்தேன். ஆனால், ஓ! சஞ்சயா, இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?[1](2) ஓ சஞ்சயா, நான் மீண்டும் அமைதியை அடைகிறேன். எனவே, என் தீய கொள்கைகளைக் காரணமாகக் கொண்ட இந்த வீரர்களின் படுகொலை எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(3)


[1] வேறொரு பதிப்பில், “அந்த அநீதியானது இப்போது பலித்துவிட்டதென்று நான் நினைக்கிறேன். சஞ்சய, சென்றது சென்றதேயென்று என் மனத்தில் உறுதியுண்டாகிவிட்டது” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “இதுவரை நடந்ததெல்லாம் நன்மைக்கே என்றே நான் நினைத்தேன். ஆனால், ஓ! சஞ்சயா, இப்போது எந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவோ அவையே பின்பற்றப்பட வேண்டும்” என்று இருக்கிறது. இப்படி மூன்று பதிப்புகளும் மூன்று விதமாகச் சொல்கின்றன.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் மழை நிறைந்த இரு மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தனர்(4) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பீமனின் பெயர் பொறிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் கர்ணனை அணுகி, அவனது உயிரையே துளைத்துவிடுவன போல, அவனது உடலுக்குள் ஊடுருவின.(5) அதே போல அந்தப் போரில் பீமனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தவையுமான கர்ணனின் கணைகளால் மறைக்கப்பட்டான்.(6) அவர்களது கணைகளை அனைத்துப் பக்கங்களிலும் பாயும் வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கடலுக்கு ஒப்பாகத் துருப்புகளுக்கு மத்தியில் கலக்கம் உண்டானது.(7) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பாகப் பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் உமது படையின் போராளிகளில் பலர் உயிரை இழந்தனர்.(8)

மனிதர்களின் உடல்களோடு கலந்து விழுந்து கிடந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் பரவிக் கிடந்த போர்க்களமானது, சூறாவளியால் முறிக்கப்பட்ட மரங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு பாதையைப் போலத் தெரிந்தது.(9) பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், “இஃது என்ன?” என்று சொன்னபடியே தப்பி ஓடினர்.(10) உண்மையில், சிந்துக்கள், சௌவீரர்கள், கௌரவர்கள் ஆகியோரைக் கொண்ட அந்தப் படை, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் மூர்க்கமான கணைகளாலும் பீடிக்கப்பட்டு, பெரும் தொலைவிற்கு அகற்றப்பட்டனர்.(11) துணிச்சல்மிக்க அந்தப் படைவீரர்களில் எஞ்சியோரும், தங்கள் குதிரைகள் மற்றும் யானைகள் கொல்லப்பட்டு, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் அருகாமையை விட்டகன்று, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(12) (மேலும் அவர்கள்), “பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரால் ஏவப்பட்ட கணைகளும் நம் படைகளையே கொல்வதால், உண்மையில், பார்த்தர்களுக்காகத் தேவர்களே நம்மை மலைக்கச் செய்கின்றனர்” என்றனர்.(13) இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது துருப்பினர், அச்சத்தால் பீடிக்கப்பட்டு (கர்ணன் மற்றும் பீமன் ஆகியோரின்) கணைகள் அடையும் தொலைவைத் தவிர்த்து, வெகுதொலைவில் இருந்து அந்த மோதலைக் கண்டனர்.(14)

அப்போது, வீரர்களின் மகிழ்ச்சியையும், மருண்டோரின் அச்சத்தையும் அதிகரிக்கும் வகையில் அந்தப் போர்க்களத்தில் ஒரு பயங்கர ஆறு பாயத் தொடங்கியது.(15) மேலும் அது யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் குருதியால் உண்டானதாக இருந்தது. மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உயிரற்ற உடல்கள்,(16) கொடிக்கம்பங்கள், தேர்த்தட்டுகள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றாலும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் அலங்காரப் பொருட்கள், உடைந்து போன தேர்கள், சக்கரங்கள், அக்ஷங்கள் {அச்சுகள்}, கூபரங்கள் {ஏர்க்கால்கள்}(17) ஆகியவற்றாலும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் நாணொலி கொண்டவையுமான விற்கள், கர்ணன் மற்றும் பீமனால் ஏவப்பட்டவையும், சட்டையுதிர்த்த பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகள், நாராசங்கள், எண்ணற்ற வேல்கள், ஈட்டிகள், கத்திகள், போர்க்கோடரிகள்,(18,19) கதாயுதங்கள், தண்டங்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோடரிகள், பல்வேறு வடிவங்களிலான தண்டங்கள், ஈட்டிகள், பரிகங்கள்,(20), அழகிய சதாக்னிகள் ஆகியவற்றாலும் மறைக்கப்பட்டுப் பூமியானது பிரகாசமாகத் தெரிந்தது. தங்கத்தாலான காது குண்டலங்கள், ஆரங்கள், (மணிக்கட்டுகளில் இருந்து) தளர்ந்து விழுந்த கைவளைகள், வளையங்கள், கிரீடங்களில் அணியப்படும் மதிப்புமிக்க ரத்தினங்கள், தலைப்பாகைகள், தலைக்கவசங்கள், பல்வேறு வகைகளிலான தங்க ஆபரணங்கள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கவசங்கள், தோலுறைகள், யானைகளின் கயிறுகள், (தங்கள் நிலைகளில் இருந்து தவறிய) குடைகள், சாமரங்கள், விசிறிகள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் துளைக்கப்பட்ட உடல்கள், குருதிக் கறையுடன் கூடிய கணைகள், தங்கள் நிலைகளில் இருந்து தளர்ந்து விழுந்து கிடந்த பல்வேறு பிற பொருட்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.

அற்புதம் நிறைந்தவையும், நினைத்துப் பார்க்க முடியாதவையும், மனித சக்திக்கு அப்பாற்பட்டவையுமான அவ்விரு வீரர்களின் சாதனைகளைக் கண்டு சாரணர்களும், சித்தர்களும் மிகவும் ஆச்சரியமடைந்தனர். காற்றைத் தன் கூட்டாளியாகக் கொண்ட சுடர்மிக்கக் காட்டுத் தீயானது (பரந்து கிடக்கும்) உலர்ந்த புற்குவியலின் ஊடாகச் செல்வதைப் போலவே பீமனிடம் சினம் கொண்ட அதிரதன் மகனும் {கர்ணனும்}, அந்தப் போரில் சீற்றத்துடன் திரிந்தான் [2]. அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருந்தபோது, நாணற்காடுகளை நசுக்கும் இரு யானைகளைப் போல எண்ணற்ற கொடிமரங்களையும், தேர்களையும் வீழ்த்தி, குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகள் ஆகியவற்றைக் கொன்றனர்.(21-27) ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையானது மேகத் திரள்களைப் போலத் தெரிந்தது, மேலும், கர்ணன் மற்றும் பீமனால் அந்தப் போரில் விளைந்த பேரழிவு பெரியதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(28)

[2] கர்ணனும் பீமனும் நெருப்பாகவும் காற்றாகவும் பொருள் கொள்ளப்படுவதாகத் தெரிகிறது என இங்கே விளக்குகிறார் கங்குலி.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்