Thursday, February 22, 2018

வரியும், பாதுகாப்பும்! - சாந்திபர்வம் பகுதி – 88

Tax and security! | Shanti-Parva-Section-88 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 88)


பதிவின் சுருக்கம் : குடிமக்களிடம் வரிவாங்கும் முறை குறித்தும், நாட்டை வலுப்படுத்தும் வழிமுறை குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, மன்னன் தன்னிடம் பெருஞ்செல்வம் இருந்தபோதிலும், இன்னும் அதிகமாக விரும்பினால், அவன் எவ்வாறு நடந்து கொள்ள {வரி விதிக்க} வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அறத்தகுதியை ஈட்ட விரும்பும் ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் அறிவையும், சக்தியையும் சிறந்த வகையில் பயன்படுத்தி, இடத்தையும் காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(2) எந்த நடவடிக்கைகள் தனக்கு ஏற்பட்ட நன்மைகளைப் போன்று அவர்களுக்கும் {குடிமக்களுக்கும் நன்மையை} ஏற்படுத்துமோ, அவை அனைத்தையும் அவன் தன் ஆட்சிப்பகுதிகளில் பின்பற்ற வேண்டும்.(3) வண்டானது, செடிகளில் தேனைச் சேகரிப்பதைப் போல, ஒரு மன்னன் தன் நாட்டில் இருந்து {வரியைக்} கறக்க வேண்டும். பசுவின் மடிக்கும் காயமேற்படுத்தாமல், கன்றையும் பட்டினி போடாமல் பால் கறக்கும் ஓர் இடையனைப் போலவே அவன் செயல்பட வேண்டும்.(4) (வரி விதிக்கும் காரியங்களில்) மன்னன், கடுமையில்லாமல் குருதியை உறிஞ்சும் அட்டைப்பூச்சியைப் போலச் செயல்பட வேண்டும். பெண்புலியானது, தன் குட்டிகளைத் தூக்கிச் செல்லும்போது, தன் பற்களால் அவற்றைத் தீண்டினாலும், அவற்றைக் கொண்டு ஒருபோதும் துளைத்திடாததைப் போலவே, அவன் தன் குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.(5) எலியானது கூரிய பற்களைக் கொண்டிருந்தாலும், உறங்கிக்கொண்டிருக்கும் விலங்குகள் அறியாத வண்ணம் அவற்றின் கால்களைக் கடிப்பதைப் போலவே அவன் நடந்து கொள்ள வேண்டும்.(6)

{செழிப்பில்} வளரும் குடிமகனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே எடுக்கவேண்டும், இவ்வழிமுறைகளின் மூலம் அவன் {செல்வத்தை} வெட்டுப்படச் {பகிர்ந்து கொள்ளச்} செய்ய வேண்டும். ஒரு நல்ல விழுக்காட்டை எட்டும் அளவுக்குப் படிப்படியாகத் தேவை {வரி} அதிகரிக்கப்பட்டுப் பெறப்பட வேண்டும்.(7) ஓர் இளங்காளையின் மீது ஒரு மனிதன் படிப்படியாகச் சுமைகளை அதிகரிப்பதைப் போலவே, மன்னனும் தன் குடிமக்களின் மீது படிப்படியாகவே சுமைகளை அதிகரிக்க வேண்டும். அவன், கவனத்துடனும், கடுமையில்லாமலும் செயல்பட்டு, இறுதியாக அவர்களின் மீது கடிவாளங்களைப் பூட்ட வேண்டும்.(8) இவ்வாறு கடிவாளம் பூட்டப்பட்டால், அவர்கள் வசப்படுத்தப்பட முடியாதவர்களாக இருக்க மாட்டார்கள். உண்மையில், அவர்களைக் கீழ்ப்படியச் செய்யப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களைக் கீழ்ப்படிய வைக்க வெறும் கெஞ்சல்கள் மட்டும் போதாது.(9) மனிதர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியாக, சமமாக நடந்து கொள்வது சாத்தியமில்லாதது. முதன்மையானவர்களை இணங்கச் செய்தால் பொதுமக்களும் கீழ்ப்படிவார்கள்.(10)

மன்னன், சுமைகளைச் சுமக்கப் போகும் பொதுமக்களுக்கு மத்தியில் (அவர்களது தலைவர்களுடைய அமைப்புகளின் மூலம்) ஒற்றுமையின்மையை உண்டாக்கி, தானே முன்வந்து அவர்களோடு இணக்கம் செய்த பிறகு, அவர்களிடம் கிடைப்பவற்றைக் கொண்டு அவன் மகிழ்ச்சியடைய வேண்டும்.(11) மன்னன், உரியதல்லாத காலத்திலும், சுமக்க முடியாத மனிதர்களுக்கும் ஒருபோதும் வரிவிதிக்கக் கூடாது. அவன் படிப்படியாக இணங்கச் செய்வதன் மூலமும், உரிய காலத்திலும், முறையான வடிவங்களிலும் அவற்றை விதிக்க வேண்டும்.(12) நான் அறிவிக்கும் இந்தச் சூழ்ச்சிகள் {திட்டங்கள்} சட்டப்படியான ஆட்சித்திறன் வழிமுறைகளாகும். இவை வஞ்சகம் நிறைந்த வழிமுறைகளாக அறியப்படுவதில்லை. முறையற்ற வழிகளில் குதிரைகளை வசப்படுத்தும் வழிமுறைகள் அவற்றைச் சீற்றமடையவே செய்யும்.(13) மதுவிடுதிகளும், பொது மகளிர், காமத்தரகர்கள், நடிகர்கள், சூதாடிகள், சூதாட்ட விடுதி நடத்துவோர் மற்றும் இதே வகையைச் சேர்ந்த பிறர் அனைவரும் {மன்னனால்} தடுக்கப்பட {தடைசெய்யப்பட} வேண்டும். நாட்டுக்குள்ளேயே வசித்து, குடிமக்களில் சிறந்த வர்க்கத்தினரைப் பீடித்துத் துன்புறுத்துபவர்கள் இவர்களே.(15)

எந்தத் துயரமும் இல்லாதபோது, யாரும் எதையும் யாரிமும் கேட்கக் கூடாது. மனிதர்கள் யாவரையும் குறித்த இந்தத் தடையாணையைப் பழங்காலத்தில் மனுவே விதித்திருக்காறர்[1].(16) மனிதர்கள் யாவரும் பணிசெய்யாமல் யாசித்து, அல்லது பிச்சையெடுத்து வாழ நேர்ந்தால், உலகமே அழிவடையும் என்பதில் ஐயமில்லை.(17) மன்னன் மட்டுமே அடக்கவும், தடுக்கவும் தகுந்தவனாவான். தன் குடிமக்களை (பாவத்திலிருந்து) தடுக்காத மன்னன், (அரச பாதுகாப்பின்மையின் விளைவாக) தன் மக்களால் இழைக்கப்படும் பாவத்தின் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான். இதுவே சுருதிகளின் தீர்மானமாகும்.(18) குடிமக்களின் தகுதிகளை {புண்ணியங்களைப்} போலவே மன்னன் அவர்களது பாவங்களையும் பகிர்ந்து கொள்வதால், ஓ! ஏகாதிபதி, அவன் தன் குடிமக்களில் பாவிகளை அடக்க வேண்டும்.(19) அவர்களை அடுக்குவதைப் புறக்கணிக்கும் மன்னன் தானே பாவியாகிறான். (ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல) அவன் அவர்களது தகுதிகளில் நான்கில் ஒரு பாகத்தை ஏற்பதைப் போலவே, அவர்களது பாவங்களிலும் நான்கில் ஒரு பாகத்தை ஏற்கிறான்.(20)

[1] வங்க உரையில் இந்தச் சுலோகத்தின் முதல்வரி தவறாக இருக்கிறது. பம்பாய் உரையில் (கார்யாஞ்சிதாபடி Karyaanchidapadi என்பதற்குப் பதில்) உள்ள கிஞ்சிதனாபடி kinchidanaapadi என்பதே சரியானதாகும். இது பிச்சை, கடன், வரிகளைச் சுட்டுகிறது என உரையாசிரியர் விளக்குகிறார். வங்க மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் இந்தச் சுலோகத்தையும், பின்வரும் சுலோகத்தையும் பொருளற்றதாகச் செய்திருக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், ""ஆபத்தில்லாத ஸமயத்தில் எவனும் எந்த மனிதனையும் எதையும் யாசிப்பது கூடாது" எனும் வியவஸ்தையானது முன்காலத்தில் மனுவினால் பிராணிகளுக்குச் செய்யப்பட்டது. யாவரும் அப்படியே ஒத்துப் பிழைக்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "எந்தப் பெருங்கேடும் இல்லாத போது, எவனும் பிச்சையெடுக்கக்கூடாது. பழங்காலத்தில் மனுவே இந்த விதியை அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறார். எவரும் எந்த வேலையும் செய்ய வில்லையெனில், எதனாலும் நிலைக்க முடியாது. இதனால் மூவுலகங்களும் அழிந்துவிடும் என்பதில் ஐயமில்லை" என்றிருக்கிறது.

நான் சொல்லும் பின்வரும் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இவை அனைவரையும் வறுமையை அடையச் செய்யும். ஆசையின் {காமத்தின்} ஆளுகைக்குள் இருக்கும் ஒரு மனிதன் எந்தத் தீய செயலைத்தான் செய்ய மாட்டான்?(21) ஆசையால் {காமத்தால்} ஆளப்படும் மனிதன், வினையூக்கிகள் {போதை மருந்துகள்}, இறைச்சி ஆகியவற்றை உட்கொண்டு, பிறரின் மனைவியரையும், செல்வத்தையும் தனதுரிமையாக்கி, (பிறரும் அதுபோலச் செய்யும்படி) ஒரு தீய முன்மாதிரியை நிறுவுகிறான்.(22) பிச்சையெடுத்து வாழாதவர்களும் துயர்மிக்கக் காலங்களில் பிச்சையெடுக்கலாம். அறம் நோற்கும் மன்னன், அச்சத்தாலன்றிக் கருணையால் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(23) உன் நாட்டில் பிச்சைக்காரர்களோ, கள்வர்களோ இருக்க வேண்டாம். கள்வர்களே பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள் (நல்லோர் அல்ல). அப்படிக் கொடுப்பவர்கள் உண்மையில் மனிதர்களுக்கு நன்மை செய்பவர்களல்ல.(24) உன் ஆட்சிப்பகுதிகளில் பிறர் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுபவர்களும், பிறருக்கு நன்மை செய்பவர்களும் வசிக்கட்டும், பிறரை அழிப்பவர்கள் அல்ல.(25)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உரியதற்கு மேல் குடிமக்களிடம் இருந்து பெறும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் உரியதை மட்டுமே எடுத்துக் கொள்ளும் வகையில் நீ பிறரை {அவர்களுக்கு மேல்} நியமிக்க வேண்டும்.(26) உழவு, ஆநிரைவளர்த்தல், வணிகம், அதே போன்ற இயல்புடைய பிற செயல்கள் ஆகியன உழைப்புப் பகுப்பு கொள்கையின்படி பலரால் செய்யப்பட வேண்டும்[2].(27) உழவு, கால்நடை வளர்த்தல், அல்லது வணிகத்தில் ஈடுபடும் மனிதன், (கள்வர்கள் மற்றும் கொடுங்கோல் அதிகாரிகளின் விளைவாக) பாதுகாப்பில்லாத உணர்வை அடைந்தால், அதன் விளைவாக மன்னன் புகழ்க்கேட்டையே ஈட்டுவான்.(28) மன்னன் தன் குடிமக்களில் செல்வந்தர்களை எப்போதும் கௌரவித்து, அவர்களிடம், "என்னோடு சேர்ந்து நீங்களும் மக்கள் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுங்கள்" என்று சொல்ல வேண்டும்.(29) அனைத்து நாடுகளிலும் செல்வந்தர்களே அந்த நாட்டின் தோட்டமாக {அங்கமாக} இருக்கிறார்கள். ஒரு செல்வந்தனே மனிதர்களில் முதன்மையானவன் என்பதில் ஐயமில்லை[3].(30)

[2] "இங்கே சொல்லப்படும் கர்மபேதாதஹம் karmabhedatah என்பது நீலகண்டரால் வேறு வகையில் விளக்கப்படுகிறது. அந்தச் செயல்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படக்கூடாது என்று அவர் விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கிருஷியையும், பசுக்காத்தலையும், வர்த்தகத்தையும் மற்றுமுள்ள இவைபோன்ற வேலைகளையும் பல மனிதர்களைக் கொண்டு நடத்தச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காரியத்திற்குக் கேடு வரும்" என்றிருக்கிறது.

[3] உண்மையில் இங்கே சொல்லப்படும் அங்கம் என்பது பகுதியாகும். எனினும், இங்கே சொல்லப்படும் கருத்தானது, செல்வந்தர்களே ஒரு நாட்டின் தோட்டம் என்பதாகும். இங்கே சொல்லப்படும் ககுட் kakud என்பது காளையின் திமிலாகும். செல்வந்தனே மிக மேன்மையான நிலையை அடைகிறான் என்பதே இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓ பாரத, தனமுள்ளவர்கள் ராஜ்யத்திற்குப் பெரிய அங்கமென்பது பிரஸித்தம். தனமுள்ளவன் எல்லாப் பிராணிகளுக்கும் தலைமையாயிருப்பவனென்பதிற் சந்தேகமில்லை" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "செல்வந்தர்களே நாட்டின் பேரங்கம் என்று குறிப்பிடப்படுகிறார்கள். செல்வந்தர்களே மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்கள் என்பதில் எந்த ஐயமும் கிடையாது" என்றிருக்கிறது.

ஞானியாகவோ, துணிவுமிக்கவனாகவோ, செல்வந்தனாகவோ, செல்வாக்குடையவனாகவோ, நீதிமானாகவோ, தவங்களில் ஈடுபடுபவனாகவோ, பேச்சில் உண்மையுள்ளவனாகவோ, நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனாகவோ, இருக்கும் ஒருவனே (சக குடிமக்களைப்) பாதுகாப்பதில் துணைபுரிகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, இக்காரணங்களுக்காகவே நீ உயிரினங்கள் அனைத்தையும் விரும்புபவனாக, உண்மை, நேர்மை, கோபமின்மை, தீங்கிழையாமை ஆகிய பண்புகளை வெளிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.(32) இவ்வாறே தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, உன் கருவூலத்தைப் பெருகச் செய்து, உன் நண்பர்களை ஆதரித்து, உன் நாட்டுக்கு வலுவூட்டும் நீ, உன் நண்பர்கள், கருவூலம் மற்றும் படைகளால் ஆதரிக்கப்பட்டு, உண்மை மற்றும் நேர்மையின் பண்புகளைப் பயில வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(33)

சாந்திபர்வம் பகுதி – 88ல் உள்ள சுலோகங்கள் : 33

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்