Tuesday, July 29, 2014

அசுரர்கள் பாரசீகத்தின் தேவர்களா? - வனபர்வம் பகுதி 219

Are asuras Persian gods?  | Vana Parva - Section 219 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அக்னிகளான உக்தன் மற்றும் தபசின் பிள்ளைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.

காளையைப் பலி கொடுக்கும்
பாரசீகத்தின் {இன்றைய ஈரானின்}
முதன்மைக் கடவுள் மித்திரன்
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவன் (உக்தன்), பிரம்மனின் புகழுக்கு ஒப்பான ஒரு பக்திமிக்க மகனைப் பெற பல வருடங்களாக நீடித்த கடுந்தவத்தைச் செய்தான். காசியபர், வசிஷ்டர், பிராணனின் மகனான பிராணன், அங்கிரசின் மகனான சியவணன், சுவர்ச்சகர் ஆகிய ஐந்து புனித நெருப்புகளின் துணைகொண்டு வியாஹிருதி மந்திரங்களை உச்சரித்துப் பிரார்த்தனை செய்யப்பட்டபோது, இயக்கம் தொடர்பான (படைப்பு) கொள்கைகளுடனும் ஐந்து வெவ்வேறு வண்ணங்களும் நிறைந்த மிகவும் பிரகாசமான ஆற்றல் (சக்தி) அங்கே எழுந்தது.

சுடர் விடும் நெருப்பின் நிறத்தில் அதன் தலை இருந்தது, அதன் கரங்கள் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தன. அதன் தோலும், கண்களும் தங்க நிறத்தில் இருந்தன. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அதன் பாதங்கள் கறுமையாக இருந்தன. அதன் ஐந்து வண்ணங்களும், அந்த ஐந்து மனிதர்களின் பெரும் தவத்தின் காரணமாக அதற்குக் கொடுக்கப்பட்டன. எனவே, இந்தத் தெய்வீகமானவன் {ஐந்து வண்ணமுள்ளவன் - பிரபாவனன்}, ஐந்து மனிதர்களுக்கு உடையவனாக விவரிக்கப்படுகிறான். அவனே ஐந்து இனங்களின் {கோத்திரங்களின்} முன்னோடியாவான். 


இப்படியே பத்தாயிரம் வருடம் தவம் செய்த பிறகு, அந்தப் பெரும் தவத்தகுதி படைத்தவன் {உக்தன்} படைப்புப் பணியைத் தொடங்கும் பொருட்டுப் பித்ருக்களுக்கு உடையதான பயங்கர நெருப்பு உற்பத்தியானது. தனது தலை மற்றும் வாயிலிருந்து அவன், வேகமாக வாழ்நாளை {ஆயுளை - உயிரை} அபகரிக்கும் பிருகத் மற்றும் ரதந்தாரா (பகல் மற்றும் இரவு) ஆகியவற்றைப் படைத்தான். சிவனைத் தனது தொப்புளிலும் {நாபியிலும்}, இந்திரனைத் தனது பலத்தில் இருந்தும், காற்று மற்றும் நெருப்பைத் தனது ஆன்மாவிலிருந்தும் படைத்தான். அவனது இரு கரங்களில் இருந்து உதத்தையும், அனுதத்தையும் படைத்தான்.

மனம், ஐம்புலன்கள் மற்றும் பிற உயிர்களையும் அவன் படைத்தான். இவற்றையெல்லாம் படைத்த அவன் {உக்தன்} பித்ருக்களின் ஐந்து மகன்களையும் படைத்தான். அவர்களில் பிரணிதி பிருகத்ரதனின் மகனாவான், பிருகத்ரதன் காசியபரின் மகனாவன். பானு சியவனனின் தெய்வமகனாவான். சௌபரன் சுவர்ச்சகனின் மகனாவான், அனுதாத்தன் பிராணனின் மகனாவான். இந்த இருபத்தைந்து பேரும் (அவனால் படைக்கப்பட்டதால்) புகழ்பெற்றவர்களாவர். தபஸ் என்பவன் வேள்விகளைத் தடுக்கும் பதினைந்து பிற தேவர்களையும் படைத்தான்.[1] அவர்கள் சுபீமன், பீமன், அதிபீமன், பீமபலன், அபலன், சுமித்ரன், மித்ரவந்தன், மித்ரசீனன், மித்ரவர்த்தனன், மித்ரதரமனனை {மித்ரதாமா} [2] மற்றும் சூரபிரவீரன், வீரன், சுவேகன், சூரவார்ச்சஸ், சூரஹந்திரி ஆகியோராவர். 

{[1] இந்து மதப் புராணங்களில் வேள்விகளை அழிக்கும் எந்தத் தேவனும் கிடையாது. அசுரர்களே அவ்வாறு செய்வர். பர்தவான் என்று மொழிபெயர்ப்பாளர் "மேற்கு நாடுகளைச் சார்ந்த பதினைந்து தேவர்கள் அல்லது அசுரர்கள்" என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்துக்களால் அசுரர்கள் என்று கண்டிக்கப்பட்டவர்களை, சரத்துஸ்தர {Zarathustra} மதத்தைப் பின்பற்றுபவர்கள் {பாரசீகர்கள் - பண்டைய ஈரானியர்கள்} தங்கள் தேவர்களாக வழிபட்டது இங்கே கவனிக்கத்தக்கது என்கிறார் கங்குலி}.

{[2} இந்த மித்ரா தேவர்களின் பெயர்கள் தொடர்பாக பார்க்கும்போது, பண்டைய பாரசீகர்களின் முதன்மைக் கடவுளுக்கு மித்ரன் என்ற பெயர் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி}

இந்தத் தேவர்கள் {அசுரர்கள்}, மூன்று வர்க்கமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வர்க்கத்தில் ஐந்து பேர் உள்ளனர். அவர்கள் இவ்வுலகில் நிலைநிறுத்தப்பட்டு, சொர்க்கத்தில் நடைபெறும் தேவர்களின் வேள்விகளை அழிக்கின்றனர்; அவர்கள் {அழிவுத் தேவர்கள் [அ] அசுரர்கள்} அவர்களின் {தேவர்களின்} நோக்கங்களைக் கலங்கடித்து, அவர்களின் {தேவர்களின்} தெளிந்த நெய் காணிக்கையைக் {தானபலியைக்} கெடுக்கின்றனர். இதைத் தேவர்களுக்கு நீர்க்காணிக்கைகளைச் சுமந்து செல்லும் புனித நெருப்புகளை மீறுவதற்காக மட்டுமே இதை அவர்கள் {அசுரர்கள்} செய்கின்றனர். வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் கவனமாக இருந்தால், அவர்கள் {புரோகிதர்கள்}, அவர்களின் {அசுரர்களின்} நினைவாகத் தான பலியை வேள்விப்பீடத்திற்கு வெளியே வைக்கின்றனர். புனித நெருப்பு வைக்கப்படும் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களால் {அசுரர்களால்} செல்ல முடியாது. அடியவர்களின் காணிக்கைகளைத் {தான பலிகளை} தங்கள் இறகுகள் மூலம் அவர்கள் {அசுரர்கள்} சுமந்து செல்கிறார்கள். பாடல்கள் {மந்திரங்கள்} மூலமாக அமைதிப்படுத்தப்படும்போது, அவர்கள் வேள்விச்சடங்குகளைக் கலைப்பதில்லை.

தபசின் மற்றொரு மகனான பிருகதுக்தன், பூமிக்கு சொந்தமானவன் ஆவான். அவன் இவ்வுலகில், அக்னிஹோத்திர வேள்விகள் செய்யும் பக்திமான்களால் வழிபடப்படுகிறான். தபசின் மற்றொரு மகன் ரத்நதரன் என்று அறியப்படுகிறான். அவனது நினைவாகவே வேள்விக் காணிக்கைகள் மித்ரபிந்தனுக்கு வழங்கப்படுகிறது என்று வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் அவனைக் {ரத்னதரன்} குறித்துச் சொல்கிறார்கள். கொண்டாடப்படும் தபஸ் இப்படியே தனது மகன்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்