Thursday, March 05, 2015

தவத்தின் வேர்? - உத்யோக பர்வம் பகுதி 43அ

Root of asceticism! | Udyoga Parva - Section 43a | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 3)
பதிவின் சுருக்கம் : அமைதி மற்றும் விடுதலையை மௌனத்தால் அடைய முடியுமா? மௌனம் எப்படிச் செய்யப்பட வேண்டும்? வேதங்களை அறிந்தவன் பாவமிழைத்தால், அவன் பாவங்களால் பீடிக்கப்படுவானா?  அறத்தின் துணையில்லாமல் மனிதனைக் காக்கும் திறன் இல்லாத வேதங்களின் மீது ஏற்பட்ட மாயை எப்படி வந்தது? தவங்கள் சில நேரங்களில் வெற்றி தருவதும், சில நேரங்களில் தராததும் எவ்வாறு? என்பது போன்ற திருதராஷ்டிரனின் கேள்விகளுக்குச் சனத்சுஜாதர் விடை பகர்ந்தது...

திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “அந்தத் தவத்தின் (மௌனத்தின்) நோக்கம் என்ன? (பேசாமல் இருத்தல் மற்றும் தியானம் ஆகிய) இரண்டு வகை மௌனங்களில், எது உம்மால் அங்கீகரிக்கப்பட்டது? ஓ! கற்றவரே {சனத்சுஜாதரே}, மௌனத்தின் உண்மையான தன்மையைச் சொல்லும். கல்வியறிவு பெற்ற ஒருவன், அமைதி மற்றும் விடுதலை (மோட்சம்) நிலையை மௌனத்தால் அடைய முடியுமா? ஓ! முனிவரே, அந்தத் தவம் (மௌனம்) எப்படிச் செய்யப்பட வேண்டும்?” என்று கேட்டான்.


சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “வேதங்கள், மனம் ஆகிய இரண்டும் பரமாத்மாவை {பிரம்மத்தை} ஊடுருவ இயலாத காரணத்தால், ஆன்மா மௌனம் என்று அழைக்கப்படுகிறது. எதிலிருந்து வேத அசையான {சொல்லான} ஓம் {என்ற சொல்}, இவை (சாதாரண ஒலிகள்) ஆகிய இரண்டும் எழுகிறதோ, அதுவே {அந்த ஆத்மாவே} சொல்லாக {சொல்லற்ற நிலையே சொல்லாக} காட்சிப்படுகிறது” என்றார். [1]

[1] நீண்ட கேள்விக்குச் சுருக்கமாகப் பதிலளித்துவிடுகிறார். இதில் ஏதோ ஆழ்ந்த கருத்து இருக்க வேண்டும்

திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ரிக், யஜூர் வேதங்களை அறிந்தவனும், சாம வேதத்தை அறிந்தவனும் பாவங்களைச் செய்யும்போது, அவன் பாவங்களால் கறைபடுவானா, இல்லையா?” என்று கேட்டான்.

சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “தனது புலன்களை அடக்காத மனிதன், பாவச் செயல்களைச் செய்தால், அவன் சாம, ரிக், யஜூர் வேதங்களால் மீட்கப்பட மாட்டான் என்று நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஏமாற்றுத்தனத்தில் வாழும் ஏமாற்றுகர மனிதன் செய்யும் பாவத்தில் இருந்து அவனை வேதங்கள் விடுவிக்காது. மறுபுறம், கூட்டைக் கைவிட்டுச் செல்லும் புதிய இறகுபடைத்த பறவைகளைப் போல, முடிவில், வேதங்கள் அந்த மனிதனை கைவிட்டுச் செல்லும்” என்றார்.

திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! புலன்களை அடக்கியவரே {சனத்சுஜாதரே}, அறத்தின் துணையில்லாமல் ஒரு மனிதனைக் காக்கும் திறன் வேதங்களுக்கு இல்லை என்றால், பின்னர் வேதங்கள் பாவங்களை அழிக்கும் என்ற அந்தணர்களின் மாயை எப்படி வந்தது?”

சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மேன்மைமிக்கவனே, பரமாத்மாவின் பெயர், உருவம் மற்றும் இன்னும் பிற குணங்கள் ஆகிய நிலைகளின் கலவையால் இந்த அண்டம் எழுந்தது {உருவானது}. அதை முறையாகக் குறிப்பிடும் வேதங்களும் அதையே தீர்மானித்து, பரமாத்மாவும், இந்த அண்டமும் வெவ்வேறானவை என்றும் ஒரே மாதிரியானவை அல்ல என்றும் கற்பிக்கின்றன. அந்தப் பரமாத்மாவை அடையவே, அந்தத் தவமும் {மௌனமும்}, வேள்விகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டால் தான் கல்வி கொண்ட மனிதன் அறத்தை ஈட்டுகிறான். அறம் கொண்டு பாவத்தை அழிப்பதால் அவனது ஆன்மா அறிவை {ஞானத்தை} உணர்கிறது. அறிவு {ஞானம்} கொண்ட மனிதன், அந்த அறிவின் துணை கொண்டு, பரமாத்மாவை அடைகிறான். இல்லையேல், நான்கு வகையான மனித நாட்டங்களில் ஆசை கொள்ளும் அவன், தன்னுடன் இங்கே இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, தனது பலன்களை மறுஉலகத்தில் அனுபவித்து, அஃது (அந்தப் பலன்கள்) அழியாத் தன்மை கொண்டதல்ல என்பதால் (அவனது மகிழ்ச்சி முடிந்ததும்) மீண்டும் செயல்களின் உலகத்திற்கே திரும்பி வருகிறான்.

உண்மையில், இவ்வுலகில் செய்யப்படும் தவத் துறவுகளின் கனிகள் {அவற்றின் பலன்}, (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெறாத நபர்களைப் பொறுத்தவரை) மறு உலகத்தில் அனுபவிக்கப்படுகிறது. துறவுப் பயிற்சிகளில் ஈடுபடும் (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெற்ற) அந்தணர்களைப் பொறுத்தவரை, இந்தப் பகுதிகளும் கனிகளை விளைவிக்கும் {பலன்களை ஈட்டும்} திறன் கொண்டதாகவே உள்ளன” என்றார் {சனத்சுஜாதர்} [2]

[2] அஃதாவது இவ்வுலகத்தில் தவம் செய்யப்படுகிறது. பரலோகத்தில் பயன் அனுபவிக்கப்படுகிறது. தங்கள் தவம் வளர்வதற்காக இவ்வுலகங்கள் மனிதர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மத்தை அறிந்த பிராமணர்களின் தவம் பெரிதும் வளர்கிறது. பிரம்மத்தை அறியாத மற்ற பிராமணர்களின் தவம் குறைவாகவே வளர்கிறது. பலனை விரும்பாமல் செய்யப்படும் தவம் வளர்ந்து, வளர்ந்து மேலும் அதிகமாக வளர்கிறது என்கிறார்.

திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! சனத்சுஜாதரே, ஒரே வகையான அனைத்து தவத்துறவுகளும் சில நேரங்களில் வெற்றியைத் தருவதும், சில நேரங்களில் வெற்றியைத் தராததும் எவ்வாறு? நாங்களும் அறிந்து கொள்ளும்படி எங்களுக்கு அதைச் சொல்லும்!” என்று கேட்டான்.

சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்},  “(ஆசை மற்றும் பிறவற்றால்) {பயனில் விருப்பம் முதலிய} தவறுகளால் கறை படியாத துறவே விடுதலையைப் {முக்தியைப்} பெறும் திறம் கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே அது {அப்படி செய்யப்படும் துறவு} வெற்றியைத் தருகிறது. அதே வேளையில் பகட்டால் கறைபடும் துறவும், உண்மையான அர்ப்பணிப்பு இல்லாத துறவும் வெற்றியடையாது எனக் கருதப்படுகிறது. ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, உனது விசாரணைகள் அனைத்தும் துறவின் வேரையே தொடுகிறது. கற்றவர்கள் துறவினாலேயே பிரம்மத்தை அறிந்து அழியா {இறவா} நிலையை {பரமாத்மாவை} அடைகின்றனர்!” என்றார் {சனத்சுஜாதர்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்