Sunday, March 08, 2015

நீயும் பிரம்மத்தைக் காணலாம்? - உத்யோக பர்வம் பகுதி 43இ

You can too behold Brahman! | Udyoga Parva - Section 43c | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 3)
பதிவின் சுருக்கம் : பிரம்மஞானம் கொண்டது எது என்று திருதராஷ்டிரன் சனத்சுஜாதரிடம் கேட்பது;  எது பிரம்மம்?  பல்வேறு இறைமைகள் இருப்பதாக ஏன் கருதப்படுகிறது? யார் வேத உரைகளின் உண்மையை நம்பி இருக்கிறார்கள்? வேள்விகள் எவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன? பேசா நோன்புகளை ஒருவன் ஏன் கைக்கொள்ள வேண்டும்? பிராமணனாக யார் அறியப்பட வேண்டும்? சந்தங்கள் என்றால் என்ன? வேதங்களைப் படித்தால் மட்டும் சந்தங்களை அறிய முடியுமா? பிரம்மத்தை அடையும் வழிமுறை எது? வேதங்களின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? பொருட்களின் தன்மைகளை யார் அறிவார்? எவனால் ஆத்மாவை அறிய முடியாது? முனிவன் என்பவன் யார்? வியாகரணம் என்பது என்ன? என்பது போன்றவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு விளக்குவது...

திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “ஆக்யானங்களைத் (புராணங்களைத்) தங்களில் ஐந்தாவதாகக் கொண்ட வேதங்கள், அசைவன மற்றும் அசையாதன ஆகியவை அடங்கிய இந்த அண்டமே பரமாத்மா என்று தீர்மானிக்கின்றன. பிறர், நான்கு இறைமைகள் {கடவுள் தன்மைகள்} {வேதங்கள் என்றும் கொள்ளலாம்} உள்ளன என்றும், இன்னும் பிறர் மூன்று உள்ளன என்றும், மேலும் பிறர் இரண்டு என்றும்; இன்னும் பிறர் ஒன்றே ஒன்று என்றும், மேலும் பிறர், (சுய இருப்பு என்று வேறு ஏதும் இல்லாத) பிரம்மன் மட்டுமே ஒரே இருப்பு என்றும் கருதுகிறார்கள். இவற்றில் எதை நான் பிரம்மஞானம் கொண்டதாக அறிய வேண்டும்?” என்று கேட்டான்.


அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மை என்ற ஒரே பிரம்மம்தான் இருக்கிறது. அந்த ஒன்றைக் குறித்த அறியாமையால்தான் பல்வேறு இறைமைகள் {வேதங்கள்} இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உண்மையின் சுயத்தையோ, பிரம்மத்தையோ அடைந்தவன் எவன் இருக்கிறான்? அறிவுப்பொருளான {ஞானப்பொருளான} அந்த ஒன்றை {பிரம்மத்தை} அறியாமலேயே ஒரு மனிதன் தன்னைத்தானே அறிஞன் {ஞானி} என்று கருதிக்கொள்கிறான். மகிழ்ச்சியின் மீது கொண்ட ஆசையால் அவன் கல்வியிலும், ஈகை மற்றும் வேள்வி நடைமுறைகளிலும் ஈடுபடுகிறான். (பிரம்மம்) என்ற உண்மையில் இருந்து விலகிய அவர்கள், (தங்கள் நிலையுடன்) தொடர்புடைய நோக்கங்களில் இன்புற வேத உரைகளின் உண்மையைச் சார்ந்து இருக்கிறார்கள். சிலர் வேள்விகளை மனதால் (தியானத்தின் மூலம்) செய்கிறார்கள் (அல்லது வேள்வியின் பொருளை அடைகிறார்கள்). சிலர் (குறிப்பிட்ட துதிகளை உரைப்பதாலும், அல்லது ஜபத்தின் மூலமும்} வார்த்தைகளாலும்; சிலர் செயல்களாலும் (யதிஸ்தோமத்தின் உண்மையான நிறைவாலும் மற்றும் பிற விலையுயர்ந்த சடங்குகளாலும்) செய்கிறார்கள்.

எனினும், உண்மையின் {சத்தியத்தின்} மூலம் பிரம்மத்தைத் தேடும் மனிதன், தனது ஆசைக்குகந்த பொருட்களைத் தனது வீட்டில் பெறுகிறான்.[1] இருப்பினும், ஒருவனது நோக்கங்கள் (தன்னறிவற்ற தனது நிலையின் காரணமாக) அழிகின்றன. ஒருவன் தீக்ஷவிரதம் போன்ற மௌன நோன்புகளைக் கைக்கொள்ள வேண்டும். உண்மையில் தீக்ஷை என்பது நோன்பு நோற்றல் என்ற பொருள் கொண்ட தீக்ஷையின் வேரில் இருந்தே வருகிறது. தன்னறிவு {சுயஞானம்} உடையவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உண்மையை {சத்தியத்தை} உயர்ந்த பொருளாகக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்களாவர்.

[1] இங்கே, தியானத்தால் சித்தியடைந்த மனிதன், தான் விரும்பிய உலகங்களை அடைகிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.

அறிவின் {ஞானத்தின்} கனிகள் {பலன்கள்} காட்சிக்குப் புலப்படுபவையே; அதற்கு மேல் தவமே கனிகளை {பலன்களை} விளையச் செய்யும். அதிகமாகப் படிக்க மட்டுமே செய்திருக்கும் (அறிவும் தவமும் அற்ற) ஓர் அந்தணன், பெரும் படிப்பாளியாக {வாசிப்பாளனாக} மட்டுமே அறியப்பட வேண்டும். எனவே, ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, சாத்திரங்களைப் படித்ததால் மட்டும் ஒருவனைப் பிராமணன் (பிரம்மத்தை அறிந்தவன்) என்று எப்போதும் எண்ணிவிடாதே. மறுபுறம், உண்மையில் இருந்து வழுவாமல் இருப்பவன் மட்டுமே பிரம்மத்தை அறிந்தவன் {பிராமணன்} என்று உன்னால் அறியப்பட வேண்டும். [2]

[2] ஒருவன் படித்திருப்பதால் மட்டுமே அவனை அந்தணன் என்று எண்ணிவிடாதே, உண்மையிலிருந்து விலகாதிருப்பவனே உன்னால் பிராமணனாக அறியத்தக்கவன்.

ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, பெரும் முனிவர்களின் கூட்டத்திற்கு அதர்வாவால் {அதர்வா என்ற முனிவரால்}, பழங்காலத்தில் உரைக்கப்பட்ட உரைகள் சந்தங்கள் [3] என்ற பெயரால் அறியப்படுகின்றன. வேதங்களின் மூலமாக அறியப்படுபவனின் {பரமாத்மாவின்} அறிவை அடையாமல், வேதங்களைப் படித்ததால் மட்டுமே அவர்களைச் சந்தங்களை அறிந்தவர்கள் என்று கருதமுடியாது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {திருதராஷ்டிரா}, அந்நியமான எதன் தேவைகளும் இல்லாமல் முழு உரிமையுடன் {சுதந்திரமாக} பிரம்மத்தை அடையும் வழிமுறையாகச் சந்தங்கள் திகழ்கின்றன. வேதங்களில் கடமை என்று விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்யும் முறைகளை மட்டுமே அறிந்தவர்களைச் சந்தங்களை அறிந்தவர்கள் என்று கருத முடியாது. மறுபுறம், வேதங்களை அறிந்தவர்களுக்குக் காத்திருக்கும் {பணிவிடை செய்யும்} நெறிசார்ந்தவர்கள், வேதங்களின் மூலம் அறிந்து கொள்ளத்தக்க பொருளை அடைந்ததில்லையா? வேதங்களின் உண்மையான உணர்வை {பொருளை} உணர்ந்தவர்கள் யாரும் இல்லை. அல்லது, அந்த உணர்வைப் பெற்றவர்கள் சிலரே இருக்கலாம்.

[3] வேறு பதிப்பில் வேத வித்துகள் என்று இது {சந்தங்கள்} குறிப்பிடப்படுகிறது.

வேதங்களை மட்டுமே படித்தவர்கள், தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய பொருளை அறிவதில்லை. எனினும், உண்மையில் {சத்தியத்தில்} நிறுவப்பட்டுள்ள ஒருவன், வேதங்களால் அறியத்தக்க பொருளை அறிகிறான். உடல் உணர்வுகளுக்கு வழிவகுக்கும் செயல்படு பொருளாக இருக்கும் கல்விகளால், உண்மையான ஞானத்தை அடைந்தவன் என்று எவனும் இல்லை. மனத்தால் மட்டுமே ஒருவன் தன்னறிவையும் {சுயஞானத்தையும்} தானற்ற அறிவையும் {சுயமற்ற ஞானத்தையும்} அடைய முடியும். உண்மையில் தன்னறிவை அறிந்த ஒருவன், தானற்ற நிலையையும் அறியவே செய்கிறான். மறுபுறம், தானற்ற நிலையை மட்டுமே அறிந்த ஒருவன் உண்மையை அறிய மாட்டான்.

சான்றுகளை அறிந்த ஒருவன், எது மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் அறிவான். ஆனால், வேதங்களோ, வேதத்தை அறிந்தவர்களோ அறியாத {மெய்ப்பிக்கப்பட வேண்டிய} பொருட்களின் தன்மைகள் தான் என்ன இருக்கின்றன? எனினும், இவை யாவுக்குமாக, (உண்மையில்) வேதங்களை அறிந்த பிராமணர்கள், வேதங்களின் மூலமாக (வேதங்களால்) அறியப்பட வேண்டிய பொருளின் அறிவை அடைவதில் வெற்றி பெறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கிளை சில நேரங்களில் வளர்பிறையில் வரும் முதல்நாள் நிலவின் இலக்கத்தைச் {சந்திர கலையை} சுட்டிக்காட்டுவது [4] போலவே, வேதங்களும், பரமாத்மாவின் உயர்ந்த பண்புகளைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படுகின்றன.

[4] அஃதாவது இருளில் மரம் தெரிந்தால் நிலவின் ஒளி அங்கே இருக்கிறது என்பதை நாம் அறிவது போல, வேதங்களின் துணை கொண்டு பரமாத்மாவை நாம் அறிய முடியும் என்பது இங்கே பொருள்.

தனது சொந்த ஐயங்கள் அனைத்தையும் தானே தீர்த்துக் கொண்டு, பிறரின் ஐயங்களுக்கு விளக்கமளிக்கும் (பிரம்ம ஞானம் கொண்டிருக்கும்) தன்னறிவு {சுயஞானம்} கொண்டவனையே நான் பிராமணன் என்று அறிந்து கொள்கிறேன். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்காகவோ, துணைத்திசைகளிலோ, கிடைமட்டமாகவோ தேடிக் கொண்டிருப்பவனால் ஆத்மா என்பது என்ன என்பதை அறிய முடியாது. இந்த உடலையே தான் என்று கருதும் ஒருவனால் மிக அரிதாகவே அதை {ஆத்மாவை} அறிய முடியும். வேதங்களின் கருத்துருக்களுக்கு அப்பால், யோக தியானம் கொண்ட மனிதனால் மட்டுமே பரமாத்மாவைக் காண முடியும். உனது புலன்கள் அனைத்தையும், உனது மனதையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி, உனது {அவனவனின்} சொந்த ஆத்மாவுக்குள் வசிப்பதாக அறியப்படும் பிரம்மத்தை நாடுவாயாக {பிரம்மத்தை அடைய முயல்வாயாக}.

யோக தியானத்தை மட்டுமே பயில்பவன் முனிவனாக மாட்டான்; அதே போல (உலகத்தில் இருந்து ஓய்ந்து {விடுபட்டு}) காட்டில் மட்டுமே வாழ்பவனும் முனிவனாக மாட்டான். எனினும், தனது சொந்த இயல்பை அறிந்த ஒருவனே முனிவனும் அனைவரிலும் மேன்மையானவனும் ஆவான். அனைத்து பொருட்களையும் {அர்த்தங்களையும்} விளக்கும் திறன் பெற்றதன் (வியாகரணத்தின்) விளைவால் {பொருட்களின் இலக்கணம் அறிந்த} ஒருவன் அண்ட அறிவை {உலகாளவிய அறிவை} (வையாகரணத்தை) அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஒவ்வொரு பொருளையும் {அர்த்தத்தையும்} (பிரம்மம் என்று அறியப்படும்) அதன் வேர்வரை விளக்க வல்ல அறிவியலே வியாகரணம் {இலக்கணம்} என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உலகங்களும் தன் கண் முன்னே இருப்பது போலக் காணும் ஒரு மனிதனே அண்ட அறிவைப் பெற்றவனாகச் சொல்லப்படுகிறான். எவன் உண்மையில் நிலைத்திருக்கிறானோ, எவன் பிரம்மத்தை அறிகிறானோ அவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான். ஒரு பிராமணன் அண்ட அறிவைப் பெற்றவனாவான். இத்தகு அறங்களைப் பயிலும் ஒரு க்ஷத்திரியனாலும் பிரம்மத்தைக் காண இயலும். அந்த உயர்ந்த நிலையை அவன் {க்ஷத்திரியன்}, வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி படிப்படியாக அடையலாம். இதை உறுதியாக அறிந்ததாலேயே நான் இதை உனக்குச் சொல்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்