Wednesday, April 15, 2015

விதுரன் சொன்ன வேடர்கள் கதை! - உத்யோக பர்வம் பகுதி 64

The story of fowlers said by Vidura! | Udyoga Parva - Section 64 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 24) {யானசந்தி பர்வம் - 18}

பதிவின் சுருக்கம் : வேடன் மற்றும் பறவைகளின் கதை; உறவினர்களுடன் பேண வேண்டிய உறவு குறித்து விதுரன் சொன்னது; மலையில் தேனைக் கண்டு, அதை எடுக்கப் போய் இறந்த வேடர்களைக் குறித்து விதுரன் சொன்னது; அர்ஜுனனுடன் துரியோதனன் மோத நினைப்பது விவேகமல்ல என்று விதுரன் சொன்னது...

விதுரன் {திருதராஷ்டிரரிடம்} சொன்னான், “ஓ! ஐயா, ஒருகாலத்தில் காற்றுவாசிகளான இறகு பெற்றவைகளை {பறவைகளைப்} பிடிப்பதற்காக, ஒரு வேடன், தரையில் தனது வலையை விரித்து வைத்தான் என்பதை முதியவர்களிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஒன்றாக வாழ்ந்து வந்த இரு பறவைகள் ஒரே நேரத்தில் அந்த வலையில் சிக்கின. இறகு பெற்ற அந்த உயிரினங்கள் {பறவைகள்} இரண்டும், அந்த வலையைத் தூக்கிக் கொண்டு காற்றில் பறந்தன. அவை வானத்தில் பறப்பதைக் கண்ட வேடன், துயரத்திற்கு ஆட்படாமல், அவை பறந்த திசையிலேயே அவற்றைப் பின்தொடர்ந்து {துரத்திச்} சென்றான். அப்போது, அங்கே அருகே வசித்திருந்த ஒரு துறவி, தனது காலை துதிகளை முடித்துக் கொண்டு திரும்பும்போது, பறவைகளைப் பிடிக்க அதன் பின்னே ஓடிக்கொண்டிருந்த வேடனைக் கண்டார்.


அந்தக் காற்றுவாசிகளை {பறவைகளைத்} துரத்திச் செல்லும் பூலோகவாசியைக் {வேடனைக்} கண்ட அந்தத் துறவி, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, ஒரு சுலோகத்தின் மூலம் அவனிடம் பேசினார், "ஓ! வேடா, பூமியில் நடப்பவனான நீ, காற்றுவாசிகளான உயிரினங்கள் இரண்டைத் துரத்திச் செல்வது மிகவும் விசித்திரமாகவும் அற்புதமாகவும் எனக்குத் தோன்றுகிறது" என்றார். அதற்கு அந்த வேடன் {துறவியிடம்}, "ஒன்றாக இருக்கும் இவை இரண்டும் எனது வலையைத் தூக்கிச் செல்கின்றன. எனினும், எப்போது அவை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனவோ, அப்போது அவை எனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வரும்" என்றான் {வேடன்}.

விதுரன் தொடர்ந்தான், "மரணமடைய விதிக்கப்பட்ட அந்தப் பறவைகள் இரண்டும் விரைவில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டன. அந்த இணை, மடத்தனமாகத் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு பூமியில் விழுந்தன. மரண வலைக்குள் சிக்கிய அவை {அந்த பறவைகள்}, தங்களுக்குள் கோபத்துடன் சண்டையிட்டுக் கொண்ட போது, அவை காணாதவகையில் அங்கு வந்த வேடன், அவை இரண்டையும் பிடித்துக் கொண்டான்.

ஒன்றாக உண்பதும், ஒன்றாகப் பேசுவதுமே உறவினர்களின் கடமையாகும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தங்களுக்குள் சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது. அன்பு கொண்ட இதயங்களுடன் முதியோருக்காகக் காத்திருக்கும் {பணிவிடை செய்யும்} உறவினர்கள், சிங்கங்களால் பாதுகாக்கப்பட்ட காடு போல வீழ்த்தப்பட முடியாதவர்கள் ஆகிறார்கள். அதே வேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அபரிமிதமான செல்வத்தை அடையும் மனிதர்கள், கோணல் புத்தியுடன் நடந்து கொள்ளும்போது, தங்கள் எதிரிகளின் செழிப்பிற்கே அவர்கள் பங்களிக்கிறார்கள். ஓ! திருதராஷ்டிரரே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உறவினர்கள் என்போர் எரியும் கொள்ளிகளைப் போன்றோராவர். சேர்ந்திருக்கும்போது அந்தக் கொள்ளி சுடர்விட்டு எரியும், பிரிந்தாலோ வெறும் புகைதான் மிஞ்சும். {உறவினர்கள் சேர்ந்திருந்தால் புகழோடு வாழலாம், பிரிந்தால் வெறும் மனப்புகைச்சல்தான் இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்}.

மலையின் மார்பில் நான் கண்ட வேறு ஒன்றை நான் இப்போது உமக்குச் சொல்கிறேன். அதையும் கேட்ட பிறகு, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, உமக்கு நன்மையானது எதுவோ அதைச் செய்யும். நாங்கள் ஒருகாலத்தில், மருத்துவத் தாவரங்கள் மற்றும் குணங்களைக் குறித்து விவாதிக்க விரும்பும் எண்ணற்ற பிராமணர்கள் மற்றும் சில வேடர்களுடன், வடக்கில் இருக்கும் மலைக்கு சென்றோம். வடக்கில் இருக்கும் மலையான கந்தமாதனம் {புதர்களோடு கூடிய} ஒரு தோப்பைப் போலத் தெரிந்தது. தனது மார்பின் அனைத்துப் புறங்களிலும் மரங்களையும், பல்வேறு வகையிலான பிரகாசமான மருத்துவ மூலிகைகளையும் அது {கந்தமாதனம்} கொண்டிருந்ததால், அங்கே சித்தர்களும், கந்தர்வர்களும் வசித்து வந்தனர்.

அங்கே, அந்த மலையில் அணுக முடியாத செங்குத்தான ஒரு பாறையில் ஒரு குடுவையின் அளவில், பிரகாசமான மஞ்சள் நிறத்தில், நிறையத் தேன் இருப்பதை நாங்கள் அனைவரும் கண்டோம். குபேரனுக்குப் பிடித்தமான பானமான அந்தத் தேன், கடும்நஞ்சு கொண்ட பாம்புகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அந்தத் தேனைக் குடித்தால், ஒரு மனிதன் இறவா நிலையை அடையலாம், பார்வையற்ற மனிதன் பார்வையை அடையலாம், முதிர்ந்த மனிதன் இளைஞனாகலாம். மந்திரங்கள் அறிந்த அந்தப் பிராமணர்களால், அந்தத் தேன் குறித்து இவ்வாறே பேசப்பட்டு வந்தது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைக் கண்ட வேடர்கள், அந்தத் தேனை அடைய விரும்பினார்கள். பாம்புகள் நிறைந்த அந்த அணுக முடியாத மலைக்குகையிலேயே அவர்கள் {அந்த வேடர்கள்} அனைவரும் மாண்டுபோனார்கள். அதே வழியில்தான், இந்த உமது மகன் {துரியோதனன்}, போட்டியில்லாமல் இந்த முழு உலகத்தையும் அனுபவிக்க விரும்புகிறான். அவன் தேனைக் காண்கிறான், ஆனால் தனது மடமையால், அந்தப் பயங்கரப் பள்ளத்தை அவன் காணவில்லை.

சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} போரில் மோத துரியோதனன் விரும்புகிறான் என்பது உண்மையே. ஆனால், இவனிடத்தில் பாதுகாப்பாக இருக்கத்தக்க சக்தியையோ ஆற்றலையோ நான் காணவில்லை. அர்ஜுனன், ஒரே தேரில் தனியாகச் சென்று முழு உலகத்தையும் வென்றான். பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரை முன்னணியில் கொண்ட இவனது {துரியோதனனது} படை அர்ஜுனனால் அச்சுறுத்தப்பட்டு, விராட நகரத்தில் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாரும்" என்றான் {விதுரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்