Wednesday, April 15, 2015

அண்டத்தின் நண்பன் யார்? - உத்யோக பர்வம் பகுதி 63

Who is a friend of this Universe! | Udyoga Parva - Section 63 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 23) {யானசந்தி பர்வம் - 17}

பதிவின் சுருக்கம் : கௌரவர்களும் பாண்டவர்களும் சமமானவர்களே என்றும், தானும், கர்ணனும், துச்சாசனனும் சேர்ந்து பாண்டவர்களைக் கொன்று விட முடியும் என்றும் பீஷ்மரிடம் துரியோதனன் சொன்னது; அப்படிப் பாண்டவர்களை வென்று அவர்களைத் தங்கள் வீரர்கள் இழுத்து வரும்போது, பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணனின் செருக்கு அழியும் என்று திருதராஷ்டிரனிடம் துரியோதனன் சொன்னது; இதைக் கேட்டுக் கொண்டிருந்த விதுரன் சுயக்கட்டுப்பாடு குறித்த விளத்தைச் சொல்வது...

துரியோதனன் {பீஷ்மரிடம்} சொன்னான், “பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரும் பிற மனிதர்களைப் போன்றோரே. உண்மையில், அவர்கள் {பாண்டவர்கள்} பிற மனிதர்களைப் போலப் பூலோகப் பிறப்புக் கொண்டவர்களே. பிறகு ஏன் அவர்களது வெற்றி உறுதி என்று நீர் நினைக்கிறீர்? சக்தி, ஆற்றல், வயது, புத்திக்கூர்மை, சாத்திர அறிவு, ஆயுதங்கள், போர்க்கலை, கரங்களின் வேகம், திறன் ஆகிய அனைத்திலும் நாங்களும் {கௌரவர்களும்}, அவர்களும் {பாண்டவர்களும்} சமமானவர்களே. அனைவரும் மனிதராய் இருப்பதால், நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. பிறகு, ஓ! பாட்டா {பீஷ்மரே}, வெற்றி அவர்களுடையது என்று எப்படி நீர் அறிகிறீர்? எனது குறிக்கோளை அடைய நான் {பீஷ்மரான} உம்மையோ, துரோணர், கிருபர், பாஹ்லீகர் {சோமதத்தன்} அல்லது பிற மன்னர்களையோ நம்பி இருக்கவில்லை. {என்று பீஷ்மரிடம் சொன்ன துரியோதனன், திருதராஷ்டிரன் பக்கம் திரும்பி}


போர்க்களத்தில் {துரியோதனனான} நான், விகர்த்தனன் மகனான கர்ணன், என் தம்பி துச்சாசனன் ஆகியோர் சேர்ந்து எங்கள் கூரிய கணைகளால் பாண்டுவின் ஐந்து மகன்களையும் கொல்வோம். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, பல்வேறு வகையான பெரும் வேள்விகளைச் செய்து, அபரிமிதமான தட்சணைகளையும், பசு, குதிரை, செல்வம் ஆகிய தானங்களையும் கொடுத்து அந்தணர்களை மனம் நிறையச் செய்வோம்.

வேடர்களால் வலையில் இழுத்துவரப்படும் மான்கூட்டம் போலவோ, நீழ்ச்சுழியால் இழுக்கப்படும் படகோட்டிகளில்லா படகைப் போலவோ, போர்க்களத்தில் எனது வலிய கரங்களின் உதவியைப் பெற்ற என் படையால் அந்தப் பாண்டவர்கள் இழுத்து வரப்படும்போது, மக்கள் திரள், தேர்கள் மற்றும் யானைகளால் ஆதரிக்கப்படும். அவர்களது எதிரியான எங்களைக் கண்டதும், {பாண்டவர்கள்} தங்கள் செருக்கைக் கைவிடுவார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} மட்டுமல்ல கேசவனும் {கிருஷ்ணனும்} {தனது செருக்கைக்} கைவிடுவான்" என்றான் {துரியோதனன்}.

இதைக் கேட்ட விதுரன், "பிழையற்ற அறிவு கொண்ட மதிப்புமிக்க மனிதர்கள், 'சுயக்கட்டுப்பாடே' இவ்வுலகில் மிகவும் நன்மையானது என்று சொல்கிறார்கள். குறிப்பாக அந்தணர்கள் வழக்கில், இது {சுயக்கட்டுப்பாடே} அவர்களது கடமையாகிறது. சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒருவன், ஈகை, தவம், அறிவு, வேத கல்வி ஆகியவற்றைப் பின்பற்றி, வெற்றி, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, தன் தானங்களுக்கான கனி {பலன்} ஆகியவற்றை வெல்கிறான் {அடைகிறான்}. சுயக்கட்டுப்பாடு, சக்தியைப் பெருக்குகிறது. அது {சுயக்கட்டுப்பாடு என்பது} அற்புதமான புனிதமான ஒரு பண்பாகும். பாவத்தில் இருந்து விடுபட்டு, சுயக்கட்டுப்பாட்டால் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் ஒருவன், பிரம்மத்தையும் அதன்மூலமே {சுயக்கட்டுப்பாட்டின் மூலமே} அடைந்துவிடுகிறான்.

ராட்சசர்களைக் கண்டது போல, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களைக் கண்டு, எப்போதும் மக்கள் அஞ்சுவார்கள். இவர்களைப் போன்றோருக்காகத்தான் {சுயக்கட்டுப்பாடு இல்லாதோருக்காகத்தான்}, க்ஷத்திரியர்களைச் சுயம்பு படைத்தான். வாழ்வுமுறைகள் நான்கிலும் சுயக்கட்டுப்பாடே சிறந்த நோன்பாகும் எனச் சொல்லப்படுகிறது. சுயக்கட்டுப்பாட்டின் மூலமாக {பிறப்பிடமாக} இருக்கும் பண்புகளை அதன் {சுயக்கட்டுப்பாட்டை நோக்கிச் செல்லும்} அறிகுறிகளாக நான் கருதுகிறேன். மன்னிக்கும் தன்மை, மன உறுதி, ஊறிழையாமை {அஹிம்சை}, அனைத்தையும் சமமாகக் கருதல், உண்மை நிறைந்த பேச்சு, எளிமை, புலனடக்கம், பொறுமை, பேச்சில் மென்மை, பணிவு, உறுதி, பரந்த {தாராள} மனம், மென்மை, மனநிறைவு, நம்பிக்கை ஆகியவையே {இந்தப் பண்புகளே} அந்த அறிகுறிகள். சுயக்கட்டுப்பாடு உடையவன் இச்சை, பேராசை, செருக்கு, சினம், உறக்கம், தற்புகழ்ச்சி, அகங்காரம், கெட்ட எண்ணம் மற்றும் கவலை ஆகியவற்றைக் கைவிடுவான்.

தூய்மை, கோணல் புத்தியின்மை, வஞ்சமின்மை ஆகியவையே சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதனின் தனித்துவமான அறிகுறிகள். பேராசையின்றி எவன் இருக்கிறானோ, கொஞ்சம் வைத்திருந்தாலும் மனநிறைவுடன் எவன் இருக்கிறானோ, கடலைப் போன்று பயங்கரமான காமத்தைத் தூண்டும் பொருட்களை எவன் விரும்பவில்லையோ, அவனே சுயக்கட்டுப்பாடுடைய மனிதன் என்று அறியப்படுகிறான். நன்னடத்தையும், நல்ல மனநிலையும், நிறைவான ஆன்மாவும் கொண்டு, அறிவுடையவனாகத் தன்னை அறியும் ஒருவன் இங்கே {இவ்வுலகத்தில்} பெரும் மரியாதையைப் பெறுகிறான். இதற்குப் பிறகு {அடுத்த உலகத்தில்} அருள் நிலையை அடைகிறான்.

முதிர்ச்சி கொண்ட அறிவுடன், பிற உயிர்களிடம் அச்சம் கொள்ளாதவன் எவனோ, பிற உயிர்களுக்கு அச்சத்தைத் தராதவன் எவனோ அவனே மனிதர்களில் முதன்மையானவனாகச் சொல்லப்படுகிறான். அனைவருக்கும் நன்மையை விரும்பும் அவன் {பிற உயிர்களுக்கு அச்சம் தராதவன்} இந்த அண்டத்திற்கே நண்பனாகக் கருதப்படுகிறான். யாரும் அவனால் மகிழ்வின்மையை {துயரை} அடைவதில்லை. கடல் போன்ற ஈர்ப்புடன் இருக்கும் ஒரு மனிதன், அறிவின் விளைவால் கிடைத்த மனநிறைவுடன் எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான்.

நீதிமிக்கப் பழங்காலங்களிலும், தங்கள் கண்களுக்கு முன்னிலையிலும் {தற்காலத்திலும்} பயிலப்படும் செயல்களின் படி தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் சுயக்கட்டுப்பாடு உடைய ஒருவன், அமைதிக்குத் தன்னை அர்ப்பணித்து, இவ்வுலகில் இன்புற்று இருக்கிறான். அல்லது, அறிவின் விளைவால் ஏற்பட்ட மனநிறைவால் செயலைத் துறக்கும் அத்தகு மனிதன், தனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து இவ்வுலகில் விரைந்து நகர்ந்து, பிரம்மத்திற்குள் தான் கரைந்து போகும் அந்தத் தவிர்க்க முடியாத நேரத்திற்காகக் காத்திருக்கிறான்.

இறகு படைத்த உயிரினங்கள் {பறவைகள் பறந்து} செல்லும்  பாதை காணப்படாததுபோல, அறிவின் விளைவால் மனநிறைவில் மகிழ்ந்திருக்கும் ஒரு துறவியின் பாதையும் கண்களுக்குத் தெரியாது. உலகைத் துறக்கும் அவன், விடுதலையைப் பெறும் நோக்கில் சந்நியாச வகை வாழ்வு முறையை ஏற்று, சொர்க்கத்தில் தனக்காகப் பிரகாசமான நித்தியமான உலகங்களை ஒதுக்கிக் கொள்கிறான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்