Sunday, April 26, 2015

அர்ஜுனனின் எச்சரிக்கை! - உத்யோக பர்வம் பகுதி 66

The warning of Arjuna! | Udyoga Parva - Section 66 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 26) {யானசந்தி பர்வம் - 20}

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் மேலும் என்னென்ன சொன்னான் என்று சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்டது; அர்ஜுனன் பேசிய வார்த்தைகளைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படிச் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} சொன்ன பிறகு, உயர்ந்த அருள் கொண்டவனும், ஞானியுமான திருதராஷ்டிரன், மீண்டும் சஞ்சயனிடம், "ஓ! சஞ்சயா, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பேச்சுக்குப் பிறகு பேசிய அர்ஜுனனின் வார்த்தைளில் இன்னும் உன்னால் சொல்லப்படாதவற்றை எனக்குச் சொல்வாயாக. அதைக் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது", என்றான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வாசுதேவனின் பேச்சைக் கேட்டதும், கட்டுப்படுத்த இயலாதவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனக்குச் சந்தர்ப்பம் வாய்த்த போது, வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையிலேயே இவ்வார்த்தைகளைச் சொன்னான். "ஓ! சஞ்சயரே, சந்தனுவின் மகனான எங்கள் பாட்டன் {பீஷ்மர்}, திருதராஷ்டிரர், துரோணர், கிருபர், கர்ணன், மன்னன் பாஹ்லீகன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சோமதத்தன், சுபலனின் மகன் சகுனி, துச்சாசனன், சலன், புருமித்ரன், விவிங்சதி, விகர்ணன், சித்திரசேனன், மன்னன் ஜயத்சேனன், அவந்தியின் இரு தலைவர்களான விந்தன் மற்றும் அனுவிந்தன், பூரிஸ்ரவஸ், மன்னன் பகதத்தன், மன்னன் ஜராசந்தன் {ஜராசந்தனின் மகனாக இருக்க வேண்டும்} மற்றும் கௌரவர்களின் நன்மைக்காக அங்கே கூடியிருக்கும் பூமியின் இன்னும் பிற ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார்கள்.

சுடர்விடும் பாண்டவ நெருப்பில், நீர்க்காணிக்கைகளாக அளிக்கப்படவே திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} அவர்களைக் கூட்டியிருக்கிறான். சஞ்சயரே, அப்படிக் கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரின் நலத்தையும் எனது பெயரில் விசாரிப்பீராக. அதேவேளையில், அவரவர் தகுதிக்கேற்றபடி அவரவர்களுக்குரிய மரியாதையை  {என் சார்பாக} செலுத்துவீராக.

மேலும், ஓ! சஞ்சயரே, கோபக்காரனும், தீயவனும், பாவ ஆன்மா கொண்டவனும், அதீத பேராசை கொண்டவனும், பாவிகள் அனைவரிலும் முதன்மையானவனும், தனது ஆலோசகர்களுடன் கூடியவனுமான அந்த முட்டாள் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} நான் சொல்வதனைத்தையும் அவன் {துரியோதனன்} கேட்குமாறு அனைத்து மன்னர்களின் முன்னிலையிலும் சொல்லும்", என்றான் {அர்ஜுனன்}.

இப்படி முன்னுரை கொடுத்தவனும், கடைக்கண்கள் சிவந்த  பெரிய விழிகளுடையவனும், பெரும் அறிவுடையவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பார்த்தபடியே, அறம், பொருள் ஆகிய இரண்டும் நிறைந்த இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னான். "உயர் ஆன்மா கொண்ட மது குலத்தலைவன் {கிருஷ்ணன்}, அளவான வார்தைகளால் பேசியதை ஏற்கனவே நீர் கேட்டீர். அவ்வார்த்தைகள் என்னுடையவையுமாகும் என்பதை அங்கே கூடியிருக்கும் மன்னர்களிடம் சொல்லும்.

மேலும் அந்த மன்னர்களிடம் என் சார்பாக இதையும் சொல்லும். "தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி மந்திரங்களாகவும், படையணித் தலைவர்களை நிர்மூலமாக்கும் வில் கரண்டியாகவும், செயல்படும் நெருப்பக்கணைகளால் ஆன போர்க்களம் எனும் பெரும் வேள்வியில், நீர்க்காணிக்கைகள் ஊற்றப்பட வேண்டியதில்லை {மனித உயிர்கள் கொல்லப்பட வேண்டியதில்லை} எனும்படி ஒன்று சேர்ந்து முயற்சியுங்கள். பகைவர்களைக் கொல்பவரான யுதிஷ்டிரர் திருப்பிக் கேட்கும் அவரது பங்கான நாட்டை, உண்மையில் நீங்கள் அவருக்குக் கொடுக்கவில்லையெனில், குதிரைப்படை, காலாட்படை யானைகள் ஆகியவற்றோடு கூடிய உங்கள் அனைவரையும், எனது கணைகளின் மூலமாக, {உடல்விட்டுப்} பிரிந்த ஆவிகளின் அமங்கலமான உலகங்களுக்கு அனுப்பி வைப்பேன்" என்றான் {அர்ஜுனன்}. 

பின்பு, தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, நான்கு கரங்கள் கொண்ட ஹரியிடமும் {கிருஷ்ணனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அவர்கள் இருவரையும் வணங்கிவிட்டு, தேவர்களுக்கு இணையான பிரகாசம் கொண்ட உமக்கு, அந்தப் பயங்கரமான வார்த்தைகளைத் தெரிவிப்பதற்காகப் பெரும் வேகத்துடன் இங்கே வந்தேன்" என்றான் {சஞ்சயன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்