Wednesday, May 06, 2015

"என்னை அஞ்சாதே, நம்பு!" என்ற கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 79

"Don't entertain apprehension of myself, Believe me!" said Krishna! | Udyoga Parva - Section 79 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –8)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய இரு தரப்பின் நன்மையையும் தான் விரும்புவதாக அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொன்னது; மனிதர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், தெய்வச்செயலும் அவசியம் என்று சொன்னது; ஏற்கனவே தீயவனான துரியோதனன், சகுனி, கர்ணன் மற்றும் துச்சாசனனின் ஆலோசனைகளைக் கேட்டு மேலும் பாவச் செயல்களைச் செய்வதாகச் சொன்னது; துரியோதனன் சிறு இடத்தையும் கொடுக்கமாட்டான், அதனால் சமாதானத்தை எட்டுவது மிகவும் கடினம் என்று சொன்னது; தூது செல்லும் முன் துரியோதனன் குறித்துத் தான் சிறிது சிந்திக்க வேண்டும் என்று அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொன்னது...

கிருஷ்ணன் வேடத்தில்
என்.டி.ராமாராவ்

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} சொன்னான், "ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {அர்ஜுனா}, ஓ!பாண்டவர்களே, நீங்கள் சொல்வது போலவே ஆகும். நான் பாண்டவர்கள் மற்றும் குருக்கள் {கௌரவர்கள்} ஆகிய இருவருக்குமான நன்மையை அடையவே முயல்வேன். போர் மற்றும் அமைதி ஆகிய இருவித செயல்களில், ஓ! பீபத்சு {அர்ஜுனா}, பின்னது {அமைதி} ஒருவேளை எனது சக்திக்குட்பட்டதாக இருக்கலாம்.

மனித உழைப்பால் களைகள் அகற்றப்பட்டு நீர் தெளித்து ஈரப்படுத்தப்பட்டிருக்கும் மண்ணைப் பார். எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மழையற்றுப் போனால் பயிர் விளையாது. உண்மையில், மழையில்லாமல் போனால், செயற்கை பாசனத்தை வெற்றியடையும் ஒரு வழிமுறையாகக் கொள்வது குறித்துச் சிலர் பேசுகிறார்கள். ஆனால், அப்படிச் செய்யினும், தெய்வாதீனமாக ஏற்படும் வறட்சியின் விளைவால் செயற்கையாகப் பாய்ச்சப்படும் நீர் காய்ந்து போவதையும் நாம் பார்க்கிறோம்.


இவற்றையெல்லாம் கண்ட பழங்கால ஞானிகள், தெய்வாதீன மற்றும் மனித தகுமுறைகள் இரண்டின் ஒத்துழைப்பினாலேயே மனித விவகாரங்கள் நடக்கும் என்று சொல்லியிருக்கின்றனர். மனித முயற்சியால் செய்யக்கூடிய அனைத்தையும் நான் சிறப்பாகச் செய்வேன். ஆனால், தெய்வாதீனமான எதையும் என்னால் எந்த வழிகளிலும் கட்டுப்படுத்த இயலாது.

தீய ஆன்மா கொண்ட துரியோதனன் அறம் மற்றும் உலகம் ஆகிய இரண்டையும் புறக்கணிக்கும் வகையிலேயே செயல்படுகிறான். இவ்வழியில் செயல்படுவதன் விளைவாக அவன் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. மேலும், சகுனி, கர்ணன் மற்றும் அவனது தம்பி துச்சாசனன் ஆகிய அவனது ஆலோசகர்களும் அவனது பாவ புத்தியையே வளர்க்கின்றனர். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தனது உறவினர்களோடு சேர்த்து நமது கைகளால் மொத்தமாக அழிவடையாமல், சுயோதனன் {துரியோதனன்} நாட்டைக் கொடுத்துச் சமாதானம் பெறவே மாட்டான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரும் {துரியோதனனுக்குப்} பணிந்து நாட்டை விட்டுவிட விரும்பவில்லை.

தீய மனம் கொண்ட துரியோதனன், நமது கோரிக்கையால் நாட்டைக் கொடுக்கமாட்டான். எனவே, யுதிஷ்டிரரின் செய்தியை அவனுக்குச் சொல்வது முறையல்ல என்றே நான் நினைக்கிறேன். குருகுலத்தின் பாவம் நிறைந்த துரியோதனன், ஓ! பாரதா {அர்ஜுனா}, யுதிஷ்டிரர் பேசும் பொருள்களைச் {தனக்கு வேண்டும் என்று கேட்டவற்றைச்} செய்ய மாட்டான். இணங்க மறுத்தாலோ, அவன் {துரியோதனன்} அனைவரின் கைகளாலும் மரணம் அடையத் தகுந்தவனாவான். ஓ! பாரதா {அர்ஜுனா}, குழந்தை பருவத்தில் இருந்தே உங்கள் அனைவரையும் அவன் {துரியோதனன்} துன்புறுத்தியிருக்கிறான் என்பதாலும், யுதிஷ்டிரரின் செழிப்பைக் கண்டு பொறாத தீயவனான அந்தப் பாவம் நிறைந்த இழிந்தவன் {துரியோதனன்}, உங்கள் நாட்டைத் திருடிக் கொண்டதாலும், அனைவரையும் போலவே அவன் {துரியோதனன்} என் கையாலும் கொல்லப்படத்தக்கவனே.

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பல நேரங்களில் அவன் {துரியோதனன்} உன்னை என்னிடம் இருந்து பிரிக்க முயன்றிருக்கிறான். ஆனால் அவனது அந்தத் தீய முயற்சிகளை நான் எண்ணிப்பார்த்ததில்லை {கண்டுகொண்டதில்லை}. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, துரியோதனனின் நோக்கங்கள் என்ன என்பதை நீ அறிவாய். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் நலத்தை நான் விரும்புகிறேன் என்பதையும் நீ அறிவாய். துரியோதனனின் இதயத்தையும், எனது விருப்பங்களையும் அறிந்திருந்தும், ஓ! அர்ஜுனா, எதையும் அறியாதவனைப் போல, என்னைக் குறித்த இத்தகு அச்ச உணர்வுகளை நீ ஏன் ஊக்கப்படுத்துகிறாய்?

சொர்க்கத்தில் விதிக்கப்பட்ட அந்தப் பயங்கரச் செயலை நீ அறிவாய். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிறகு எப்படி எதிரியுடன் சமாதானம் ஏற்படும்? எனினும், ஓ! பாண்டவர்களே, பேச்சு, செயல் ஆகிய இரண்டினால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அத்தனையும் என்னால் செய்யப்படும். எனினும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, எதிரியுடன் சமாதானம் சாத்தியம் என்று எதிர்பாராதே. ஒரு வருடத்திற்கு முன்னால், விராடனின் பசுக்களைத் தாக்கிய சந்தர்ப்பத்தில், {தோல்வியுற்று} அவர்கள் {கௌரவர்கள்} திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த அமைதியே அனைவருக்கும் நன்மையைத் தரும் என்று துரியோதனனிடம், பீஷ்மர் சொல்லவில்லையா?

அவர்கள் தோற்பார்கள் என்று நீ தீர்மானித்தபோதே அவர்கள் தோற்றுவிட்டார்கள். என்னை நம்பு. உண்மையில், நாட்டில் உள்ளதிலேயே சிறுபகுதியையேனும் மிகக் குறுகிய காலத்திற்குக் கூடப் பிரிய சுயோதனன் {துரியோதனன்} சம்மதிக்கமாட்டான். என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரரின் கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனே. எனவே, அந்தத் தீய இழிந்தவனின் {பொல்லாத பாதகனான துரியோதனனின்} பாவச் செயல்களை, மீண்டும் என் மனதில் சுழலச்செய்யவேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்