Friday, June 05, 2015

மன்னன் சிபியின் பிறப்பு! - உத்யோக பர்வம் பகுதி 118

The Birth of King Sivi! | Udyoga Parva - Section 118 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –47)

பதிவின் சுருக்கம் : போஜர்களின் மன்னனா உசீநரனிடம் சென்று மாதவியை மணந்து கொண்டு நானூறு குதிரைகளை வரதட்சணையாகத் தரும்படி இரந்து கேட்டது; ஹர்யஸ்வன் மற்றும் திவோதாசன் போலவே தன்னிடமும் இருநூறு குதிரைகளே உள்ளன என்று உசீநரன் சொல்வது; காலவர் மாதவியை உசீநரனுக்கு அளிப்பது; உசீநரனுக்குச் சிபி என்ற மகன் பிறப்பது; உரிய நேரத்தில் காலவர் வந்து உசீநரனிடம் இருந்து மாதவியை அழைத்துச் செல்வது ...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "தனது உறுதிமொழியில் பற்றுறுதியுடன் இருந்த ஒப்பற்ற மாதவி, அந்தச் செழிப்பைக் கைவிட்டு மீண்டும் கன்னித்தன்மையை அடைந்து, அந்தணரான காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். தனது சொந்த காரியத்தைச் சாதிக்க மனதில் உறுதி கொண்ட காலவர், அடுத்து என்ன செய்வது என்பதைச் சிந்தித்து மன்னன் உசீநரனுக்குக் காத்திருப்பதற்காகப் போஜர்களின் நகரத்திற்குச் சென்றான்.


கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட அந்த மன்னனின் {உசீநரனின்} முன்னிலையை அடைந்ததும், காலவர் அவனிடம் {உசிநரனிடம்}, "இந்தக் கன்னிகை உனக்கு அரச மகன்கள் இருவரைப் பெற்றுத் தருவாள். ஓ! மன்னா {உசீநரா}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நிகரனான இரு மகன்களை இவளிடம் பெற்று, இவ்வுலகிலும், மறுவுலகிலும் உனது நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. எனினும், ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவனே, அவளுக்கான {மாதவிக்கான} வரதட்சனையாக {சுல்கமாக}, சந்தோரப் பிரகாசம் கொண்டவையும், கரிய நிறம் கொண்ட ஒரு காதைக் கொண்டவையுமான நானூறு {400} குதிரைகளை நீ தர வேண்டும். குதிரைகளை அடைய வேண்டி நான் செய்யும் இந்த முயற்சியும் எனது ஆசானுக்காகவே {விஸ்வாமித்திரருக்காகவே}, மற்றபடி அவற்றைக் கொண்டு எனக்கு வேறு காரியம் எதுவுமில்லை.

(எனது சொற்களை) நீ ஏற்கமுடியுமென்றால், எந்தத் தயக்கமும் இன்றி நான் உனக்குச் சொல்வதைச் செய்வாயாக. ஓ! அரசமுனியே {உசிநரனே}, நீ இப்போது குழந்தையற்று இருக்கிறாய். ஓ! மன்னா, இரண்டு குழந்தைகளைப் பெறுவாயாக. இப்படிப் பெறும் வாரிசைப் படகாகக் கொண்டு, பித்ருகளையும் உன்னையும் காத்துக் கொள்வாயாக. ஓ! அரசமுனியே {உசீநரா}, வாரிசுகளின் வடிவில் கனியைப் பெற்ற ஒருவன், சொர்க்கத்தில் இருந்து விழுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், பிள்ளைகள் அற்றவர்கள் செல்லும் அச்சங்கள் நிறைந்த நரகத்திற்குச் செல்லத் தேவையில்லை.

இவற்றையும், காலவர் சொன்ன பிற வார்த்தைகளையும் கேட்ட மன்னன் உசீநரன், அவரிடம் {காலவரிடம்}, "ஓ! காலவரே, நீர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். நீர் சொல்வதைச் செய்ய எனது இதயமும் விரும்புகிறது. எனினும், பரமாத்மாவே அனைத்திலும் சக்தி வாய்ந்தவன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, நீர் குறிப்பட்ட வகையில் என்னிடம் இருநூறு {200} குதிரைகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வகைகளில், என் ஆட்சிப்பகுதியில் உலவும் ஆயிரக்கணக்கானவற்றை {ஆயிரக்கணக்கான குதிரைகளை} நான் பெற்றிருக்கிறேன்.

ஓ! காலவரே, ஹர்யஸ்வன், திவோதாசன் போன்ற பிறர் சொன்னது போன்ற பாதையிலே நடந்து நானும் இவளிடம் {மாதவியிடம்} ஒரு மகனை மட்டுமே பெறுவேன். வரதட்சணை {சுல்கம்} குறித்த இக்காரியத்தில் நானும் அவர்களைப் போலவே செயல்படுவேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, எனது செல்வங்கள் எனது வசதிகளுக்காகவும் இன்பங்களுக்காகவும் அல்ல, எனது நகரத்திலும் நாட்டிலும் வசிக்கும் குடிமக்களுக்காகவே இருக்கிறது.

ஓ! அறம்சார்ந்தவரே {காலவரே}, தனது சொந்த இன்பங்களுக்காக, பிறர் செல்வத்தைக் கொடுக்கும் மன்னன் அறத்தையோ, புகழையோ ஈட்டவே முடியாது. தெய்வீகப் பெண் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் இந்தக் கன்னிகை எனக்குக் கொடுக்கப்படட்டும். ஒரு மகனைப் பெறுவதற்காக மட்டுமே நான் இவளை {மாதவியை} ஏற்பேன்" என்றான் {உசீநரன்}.

இவற்றையும், உசீநரன் பேசிய பிற வார்த்தைகளையும் கேட்ட அந்த அந்தணர்களில் சிறந்தவரான காலவர், அந்த ஏகாதிபதியை {உசீநரனை} மெச்சியபடி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவனுக்குக் {உசீநரனுக்கு} கொடுத்தான். அந்தக் காரிகையை உசீநரன் ஏற்கும்படி செய்த காலவர் காடுகளுக்குள் சென்றுவிட்டார். (தனது சொந்த செயல்களால் வென்ற) செழிப்பை அனுபவிக்கும் நீதிமிக்க ஒரு மனிதனைப் போல, உசீநரன் மாதவியுடன் பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலுள்ள நீரூற்றுகளிலும், நதிகளின் நீர்வீழ்ச்சிகளிலும், மாளிகைகளிலும், இனிமையான அறைகளிலும் பலவண்ண வேறுபாடுகள் கொண்ட தோட்டங்களிலும், காடுகளிலும், இனிமையான இடங்களிலும், வீடுகளின் மேல்தளங்களிலும் அந்தக் காரிகையுடன் விளையாடி இன்புற்றிருந்தான்.

உரிய நேரத்தில், காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அவனுக்கு {உசீநரனுக்கு} ஒரு மகன் பிறந்தான். பின்னாட்களில் அவன் சிபி என்ற பெயரால் சிறந்த மன்னனாகக் கொண்டாடப்பட்டான். ஓ! மன்னா {துரியோதனா}, அந்த மகனின் பிறப்புக்குப் பிறகு, அந்தணரான காலவர் உசீநரனிடம் வந்து, அந்தக் கன்னிகையைத் {மாதவியைத்} திரும்பப் பெற்றுக் கொண்டு, வினதையின் மகனைக் {கருடனைக்} காணச் சென்றார்" என்றார் {நாரதர்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்