Thursday, June 25, 2015

கர்ணன் முதுகைச் சுட்ட சூரியன்! - உத்யோக பர்வம் பகுதி 144

Karna's back got hot by the sun ! | Udyoga Parva - Section 144 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –73)

பதிவின் சுருக்கம் : விரும்பியது ஈடேறாமல் செல்லும் கிருஷ்ணனைச் சுட்டிக்காட்டி குந்தியிடம் வருந்திய விதுரன்; குந்தி மனதிற்குள் அடைந்த தீர்மானம்; கங்கைக் கரையில் தனது துதிகளைச் செய்து கொண்டிருந்த கர்ணன்; கர்ணனைக் காண குந்தி சென்றது; குந்தியைக் கண்ட கர்ணன் ஆச்சரியம் அடைந்தது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனின் (அமைதிக்கான) வேண்டுதல்கள் தோல்வியில் முடிந்த பிறகு, அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் இருந்து பாண்டவர்களிடம் புறப்பட்டுச் சென்ற போது, பிருதையை {குந்தியை} அணுகிய க்ஷத்ரி {விதுரன்} துயரத்துடன், "ஓ! வாழும் பிள்ளைகளின் தாயே {குந்தியே}, எனது விருப்பம் எப்போதும் சமாதானமே என்பதையும், என்னதான் நான் அடித்தொண்டையில் இருந்து கதறினாலும், சுயோதனன் {துரியோதனன்} எனது வார்த்தைகளைக் கேட்கவில்லை என்பதையும் நீ அறிவாய். 


சேதிகள், பாஞ்சாலர்கள், கேகயர்கள், பீமன், அர்ஜுனன், கிருஷ்ணன், யுயுதானன் மற்றும் இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைத் தனது கூட்டாளிகளாகக் கொண்டிருந்தும், மன்னன் யுதிஷ்டிரன் இன்னும் உபப்லாவ்யத்திலேயே தங்கியிருக்கிறான். தனது சொந்தங்களிடம் தான் கொண்ட பாசத்தால், பெரும்பலத்தைக் கொண்டிருந்தும் பலவீனமான மனிதனைப் போல நீதியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். வயதில் முதிர்ந்திருந்தாலும், இங்கே இருக்கும் திருதராஷ்டிரர் சமாதானத்தை எட்டாமல், தனது பிள்ளைகள் மேல் கொண்ட கர்வத்தால், பாவம் நிறைந்த பாதையில் நடக்கிறார்.

ஜெயத்ரதன், கர்ணன், துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடைய தீமையின் விளைவால் சொந்தங்களுக்குள்ளே வேற்றுமை {உட்பூசல்} உண்டாகப்போகிறது. நீதிமிக்க ஒருவனிடம் நீதியற்று நடந்து கொள்பவர்கள், அந்தப் பாவத்தின் விளைவுகளை விரைவில் காண்பார்கள். இவ்வழியில் நீதியைத் துன்புறுத்தும் குருக்களைக் காணும் எவன்தான் வருந்தமாட்டான்? சமாதானத்தை எட்ட முடியாமல் திரும்பும் கேசவனைக் {கிருஷ்ணனைக்} கண்டதும், பாண்டவர்கள் நிச்சயம் போருக்குத் தயாராவார்கள். அதன்பேரில், குருக்களின் பாவம், வீரர்களின் அழிவுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தையும் நினைத்துக் கொண்டிருப்பதால், பகலும் இரவும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை" என்றான் {விதுரன்}.

குந்தி பிள்ளைகளின் {பாண்டவர்களின்} நோக்கங்கள் ஈடேறுவதை எப்போதும் விரும்பும் விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட அவள் {குந்தி}, துன்பத்தால் பெருமூச்சுவிடத் தொடங்கித் தனக்குள், "எதன் பொருட்டுச் சொந்தங்களுக்குள் இந்தப் பெரும்படுகொலை நேரப்போகிறதோ அந்தச் செல்வத்துக்கு ஐயோ. {அந்த செல்வத்தை நிந்திக்க வேண்டும்}. உண்மையில், இந்தப் போரில் நண்பர்களாக இருப்பவர்கள் தோல்வியை அடையப்போகிறார்கள். பாண்டவர்கள், சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் யாதவர்கள் அனைவரும் கூடி, பாரதர்களுடன் {கௌரவர்களுடன்} போரிடுவதைவிடப் பெரிய துயர் ஏது? போரில் நான் குற்றத்தையே காண்கிறேன்.

(மறுபுறம்) நாம் போரிடவில்லையெனில் வறுமையும், அவமானமும் நமதாகும். ஏழையைப் பொறுத்தவரை, (அவனுக்கு) மரணமே நன்மை. (மறுபுறம்) ஒருவன் தனது சொந்தங்களையே அழிப்பது வெற்றியாகாது. இதை நினைக்கையிலேயே எனது இதயத்தில் துயர் பெருகுகிறது. சந்தனுவின் மகனான பாட்டன் {பீஷ்மர்}, வீரர்களில் முதன்மையானவரான ஆசான் (துரோணர்), கர்ணன் ஆகியோர் துரியோதனனின் பக்கத்தில் இருந்து எனது அச்சத்தை அதிகரிக்கின்றனர். ஆசானான துரோணர், தனது மாணாக்கர்களுக்கு எதிராக எப்போதும் விருப்பத்துடன் போர் புரியமாட்டார். பாட்டனைப் {பீஷ்மரைப்} பொறுத்தவரை, அவர் {பீஷ்மர்} பாண்டவர்களிடம் சிறு பாசத்தையாவது கொண்டிருக்க மாட்டாரா?

பாவம் நிறைந்த கர்ணன் மட்டுமே, தனது அறிவின் மயக்கத்தாலும், தீய துரியோதனனால் வஞ்சக வழியை எப்போதும் பின்பற்றுவதாலும், பாண்டவர்களை வெறுக்கிறான். பாண்டவர்களுக்குத் தீங்கிழைப்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தக் கர்ணன் மிகவும் சக்தி வாய்ந்தவனாகவும் இருக்கிறான். இதுவே என்னை இப்போது எரித்துக் கொண்டிருக்கிறது. அவன் {கர்ணன்} மனநிறைவு கொள்ளும் வகையில், இன்று நான் அவனிடம் சென்று உண்மையை வெளிப்படுத்தி, பாண்டவர்களின்பால் அவனது {கர்ணனின்} இதயத்தை ஈர்க்க முயற்சிக்கப் போகிறேன்.

{குந்தியாகிய} நான் எனது தந்தையான குந்திபோஜனின் அரண்மனையில் உள்ள அந்தப்புரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, என்னிடம் மனநிறைவு கொண்ட புனிதரான துர்வாசர், {தேவர்களை} அழைக்கும் {வழிபாட்டு} வடிவங்கள் அடங்கிய மந்திரங்களை வரமாக எனக்கு அளித்தார்.

நம்பிக்கையான செவிலியால் பாதுகாக்கப்பட்டு, பணிப்பெண்களால் சூழப்பட்டிருந்த நான், {இயற்கையாகப்} பெண்கள் கொண்டிருக்கும் மனநிலையின் விளைவாகவும், வயதில் முதிராத பெண்ணான எனது இயல்பாலும் மீண்டும் மீண்டும் ஆலோசித்து, எந்த நிந்தனையும் அடையாமல் இருப்பது எப்படி? என் தந்தையின் {வளர்ப்பு தந்தை குந்திபோஜனின்} மரியாதையைப் பராமரிப்பது எப்படி? விதியை மீறும் குற்றம் எதையும் செய்யாமல் நற்பேறை அடைவது எப்படி? என்று சிந்தித்தேன். அந்த மந்திரங்களின் பலம் அல்லது பலவீனத்தையும், அந்த அந்தணரின் {துர்வாசரின்} வார்த்தைகளில் உள்ள சக்தியையும், நடுங்கும் இதயத்துடன் நீண்ட நேரம் சிந்தித்தேன்., இறுதியாக, அந்த அந்தணரை {துர்வாசரை} நினைவு கூர்ந்து அவரை {துர்வாசரை} வணங்கினேன். அவரிடம் {துர்வாசரிடம்} பெற்ற மந்திரத்தால் உண்டான பெரும் ஆவலாலும் அறியாமையாலும், எனது கன்னிப்பருவத்தில் நான் சூரிய தேவனை அழைத்தேன்.

எனவே, கன்னிப்பருவத்தில் எனது கருவறையில் தாங்கப்பட்ட அவன், தனது தம்பிகளுக்கு நிச்சயம் ஏற்புடையதும், நன்மையானதுமான எனது வார்த்தைகளுக்கு ஏன் கீழ்ப்படிய மாட்டான்?" என்று நினைத்தாள். இதே போலச் சிந்தித்த குந்தி, ஓர் அற்புத தீர்மானத்தை அடைந்தாள். தீர்மானத்தை அடைந்த அவள் {குந்தி}, பகீரதன் பெயரால் அழைக்கப்படும் புனித ஓடைக்குச் சென்றாள். கங்கைக்கரையை அடைந்த பிருதை {குந்தி}, பெரும் கருணை கொண்டவனும், உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான தனது மகன் {கர்ணன்}, வேத மந்திரங்களை உரைப்பதைக் கேட்டாள்.

கிழக்கு முகமாக, கரங்களை உயர்த்திக் கர்ணன் நின்று கொண்டிருந்தபோது, ஆதரவற்ற குந்தி, தான் கொண்ட காரியத்தின் நிமித்தம், {கர்ணனது} துதிகள் நிறைவடையக் காத்திருந்தாள். விருஷ்ணி குலத்து மங்கையும், குருக்கள் வீட்டு மனைவியுமான அந்த மங்கை {குந்தி}, சூரியனின் வெப்பத்தால் தாக்கப்பட்டு, வாடிய தாமரைமலர் மாலையைப் போலக் காணப்பட்டாள். இறுதியாக, கர்ணனின் மேலாடை கொடுத்த நிழலில் அவள் {குந்தி} நின்றாள்.

மாறாத நோன்புகளைக் கொண்ட கர்ணன், தனது முதுகு சூரியக் கதிர்களால் வெப்பமடையும்வரை தனது துதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தான் [1]. {துதிகள் முடிந்ததும்} திரும்பிய அவன் {கர்ணன்}, குந்தியைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான். அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தியும், செருக்கும் கொண்டவனுமான அந்த விகர்த்தனன் மகன் விருஷன் {கர்ணன்} அவளைக் {குந்தியை} முறையான வடிவில் குவிந்த கரங்களால் வணங்கிய பிறகு பேசத் தொடங்கினான்."

[1] காலையில் கிழக்கு முகமாகப் பார்த்துத் துதித்துக் கொண்டிருப்பவனின் முதுகில் சூரியன் சுடவேண்டும் என்றால், அவன் நடுப்பகல் வரை துதிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். மாறாத நோன்புகள் என்ற சொற்களும் இருப்பதால், அவன் தினமும் இப்படித் துதித்துக் கொண்டிருக்கிறான் என்றாகிறது.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்