Saturday, July 11, 2015

அர்ஜுனனை நிந்தித்த துரியோதனன்! - உத்யோக பர்வம் பகுதி 161இ

Duryodhana reproached Arjuna! | Udyoga Parva - Section 161c | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; அர்ஜுனன், திரௌபதி மற்றும் பாண்டவர்கள் அனுபவித்த துயரங்களைச் சொல்லி துரியோதனன் அர்ஜுனனைச் சீண்டுவது; ஆண்மையுடன் நடந்து கொள்ளுமாறு அர்ஜுனனுக்குச் சொல்லி அனுப்பிய துரியோதனன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், "{உலூகனிடம்} இதைச் சொன்ன மன்னன் துரியோதனன் உரக்கச் சிரித்தான். பிறகு மீண்டும் உலூகனிடம் பேசிய அவன் {துரியோதனன்}, "வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில் மீண்டும் ஒருமுறை தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. "ஓ! வீரா {அர்ஜுனா}, எங்களை வீழ்த்தி இந்த உலகை ஆண்டுகொள், அல்லது எங்களால் வீழ்த்தப்பட்டு (உயிரிழந்து) களத்தில் விழுவாயாக! நாட்டில் இருந்து நீங்கள் துரத்தப்பட்டது, காட்டில் நீங்கள் அனுபவித்த துயரங்கள், கிருஷ்ணையின் {திரௌபதியின்} துன்பம் ஆகிய உங்கள் பாடுகளை நினைவுகூர்ந்து, ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா} உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக! க்ஷத்திரியப் பெண் ஒருத்தி மகனைப் பெற்றெடுக்கும் காரணத்திற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. எனவே, உனது பலம், சக்தி, வீரம், ஆண்மை, ஆயுதங்களின் திறம் மற்றும் வேகம் ஆகியவற்றைப் போரில் வெளிப்படுத்தி, உனது சினத்தைத் தணித்துக் கொள்வாயாக!


துயரால் பாதிப்படைந்து, உற்சாகமிழந்து, (வீட்டில் இருந்து) நீண்ட நாட்களுக்குத் துரத்தப்பட்டு, தன் நாட்டில் இருந்தும் கடத்தப்பட்ட எவனது இதயம்தான் உடையாதிருக்கும்? நற்பிறப்பு, வீரம், பிறரின் செல்வத்தில் பேராசையின்மை கொண்ட எவன் தான், தலைமுறை தலைமுறையாக ஆண்டு வரும் தனது நாடு தாக்கப்படும்போது கோபப்பட மாட்டான்? நீ சொன்ன அந்த உயர்ந்த வார்த்தைகளைச் செயலில் காட்டுவாயாக.

எதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர். எதிரிகளின் உடைமையாக இருக்கும் உனது பொருட்களையும், உனது நாட்டையும் மீட்பாயாக! போரை விரும்பும் மனிதனின் நோக்கம் இந்த இரு காரணங்களையே கொண்டிருக்கும். எனவே, உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக! பகடையில் நீ (அடிமையாக) வெல்லப்பட்டாய்! கிருஷ்ணை {திரௌபதி} எங்களால் சபைக்கு இழுத்து வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதும் மனிதன், நிச்சயம் இதற்குத் தனது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்!

பனிரெண்டு {12} நீண்ட வருடங்களாக வீட்டில் இருந்து துரத்தப்பட்ட நீங்கள் காட்டில் வசித்தீர்கள்; ஒரு முழு வருடத்தை விராடனின் சேவையில் கழித்தீர்கள். நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதையும், காடுகளில் சில காலம் வாழ நேர்ந்ததையும், கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த துயரத்தையும் உங்கள் வேதனைகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து ஆண்மையுடன் இருப்பாயாக. உன்னிடமும், உனது சகோதரர்களிடமும் மீண்டும் மீண்டும் {எங்களால்} சொல்லப்பட்ட கடுமொழிகளுக்கான உனது கோபத்தை வெளிப்படுத்துவாயாக. உண்மையில், கோபம் (போன்றவை) ஆண்மையுள்ளவனிடமே இருக்கும்.

உனது கோபம், வலிமை, ஆற்றல், அறிவு, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள உனது கரங்களின் வேகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவாயாக. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, போரிட்டு ஆண்மையுள்ளவனாக உன்னை நிரூபிப்பாயாக. உனது ஆயுதங்கள் அனைத்துக்கான மந்திர வழிபாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. குருக்ஷேத்திரக்களம் புழுதியற்று இருக்கிறது. உனது குதிரைகளும் உடல்நலத்துடன் வலுவாக உள்ளன. உனது போர்வீரர்கள் தங்கள் கூலியைப் பெற்றுவிட்டனர். எனவே, கேசவனை {கிருஷ்ணனை} (உனக்கு) அடுத்தவனாகக் கொண்டு (எங்களுடன்) போரிடுவாயாக! பீஷ்மருடன் இன்னும் மோதாமல், இத்தகு தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய்? கந்தமாதன மலைகளில் ஏறாமல், (தான் செய்யப்போகும் செயலைக் குறித்து) தற்புகழ்ச்சி பேசும் மூடனைப் போலப் பிதற்றி வரும் நீ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} ஆண்மையுள்ளவனாக இருக்கக் கடவாய்!

சூதகுலத்தானான ஒப்பற்ற கர்ணனையோ, மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, வலிமைமிக்கப் போர்வீரர்களில் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவருமான துரோணரையோ போரில் வீழ்த்தாமல், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் உனது நாட்டை எப்படி மீட்க முடியும்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, வேத கல்வியிலும், விற்கலையிலும் ஆசானாக இருப்பவரும், கல்வியின் அந்த இரு கிளைகளையும் கடந்தவரும், போரில் முதன்மையானவரும், (கோபுரம் போல) அமைதியானவரும், வலிமையில் எந்தக் குறைவையும் அறியாதவரும், படைகளின் தளபதியும், பெரும் பிரகாசம் கொண்டவருமான துரோணரையல்லவா நீ வெல்ல விரும்புகிறாய்.

காற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் கேள்விப்பட முடியாது. எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையானால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தங்கள் முறைமைகளை மாற்றிக் கொள்ளும். பார்த்தனோ {அர்ஜுனனோ}, வேறு எவனோ, எதிரிகளைக் கலங்கடிக்கும் அவரை {துரோணரை} அணுகிய பிறகு, உயிரை விரும்பும் எவன் தான் நல்ல உடலுடன் வீட்டுக்குத் திரும்ப முடியும்? தன் கால்களால் பூமியில் நடக்கும் எவன் தான், துரோணர் மற்றும் பீஷ்மரிடம் மோதி, அவர்களின் கணைகளால் அடிக்கப்பட்டு, போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்?

வெல்லப்பட முடியாததும், தேவர்களின் படையைப் போன்றே தெரிவதும், தேவர்களால் காக்கப்படும் தெய்வீகப் படையைப் போன்றதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களாலும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்} ஆகியோராலும், மனிதர்களின் தலைவர்களாலும் பாதுகாக்கப்படுவதும், போருக்குத் தயாராக இருப்பதும், கடக்க முடியாத கங்கையின் ஊற்று போல இருப்பதுமான இந்தப் பல நாட்டுப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய்?

ஓ! சிறுமதி கொண்டவனே, ஓ! மூடனே, எனது யானைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டு, என்னுடன் மோத எப்படி நீ துணிவாய்? ஓ! பார்த்தா, ஓ! பாரதா {அர்ஜுனா}, வற்றாத உனது அம்பறாத்தூணிகள், அக்னியால் உனக்குக் கொடுக்கப்பட்ட உனது தேர், உனது தெய்வீகக் கொடி ஆகியன அனைத்தும் இந்தப் போரில் எங்களால் சோதனைக்குள்ளாக்கப்படும். ஓ! அர்ஜுனா, பிதற்றாமல் போரிடுவாயாக! அதீத தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய்? போரில் வெற்றி என்பது போரிடும் முறையால் விளைவதாகும். ஒரு போரைப் பிதற்றலால் வெல்ல முடியாது".
*********************************************************************************
*எதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர்.

திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்:குடியியல் / அதிகாரம்: பெருமை/ குறள்: 978.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை   
அணியுமாம் தன்னை வியந்து.

தமிழ் விளக்கவுரை- சாலமன் பாப்பையா :
பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.{தற்பெருமை பேசுவர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்