Saturday, July 11, 2015

துரியோதனனின் ஏளனப் பேச்சு! - உத்யோக பர்வம் பகுதி 161ஆ

Duryodhana derisive speech! | Udyoga Parva - Section 161b | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களின் சினத்தைத் தூண்டுமாறு யுதிஷ்டிரன், கிருஷ்ணன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோர் ஒவ்வொருவரிடமும் தான் சொல்லியனுப்பும் வார்த்தைகளைச் சொல்லுமாறு துரியோதனன் உலூகனிடம் சொன்னது...

{யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டியவற்றை உலூகனிடம் துரியோதனன் தொடர்ந்து சொன்னான்.} {யுதிஷ்டிரனிடம் துரியோதனன்}, "ஓ! தீய ஆன்மா கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ கூட அத்தகைய பூனை நடத்தை கொண்டவனே. (கதையில் வந்த அந்தப்) பூனை எலிகளிடம் நடந்து கொண்டதைப் போலத்தான், நீயும் உனது சொந்தங்களிடம் நடந்து கொள்கிறாய். உனது பேச்சு ஒரு வகையில் இருக்கிறது, உனது நடத்தையோ வேறு வகையில் இருக்கிறது. உனது சாத்திரமும் ({சாத்திர} பக்தியும்), அமைதி நிறைந்த உனது நடத்தையும் மனிதர்களுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்த மட்டுமே உன்னால் செய்யப்படுகின்றன. இந்தப் பாசாங்கையெல்லாம் கைவிட்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஒருவன் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வாயாக. ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, நீ அறம்சார்ந்தவன் இல்லையா?


ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உனது கரங்களின் ஆற்றல் மூலம் இந்தப் பூமியை அடைந்து, அந்தணர்களுக்குக் கொடையையும், இறந்து போன தனது மூதாதையருக்கு ஒருவன் செய்ய வேண்டியவற்றையும் அளிப்பாயாக. ஆண்டாண்டுகளாகத் தொடர்ச்சியாகத் துயரத்தில் பீடிக்கப்பட்டுள்ள உனது தாயாருக்கு {குந்திக்கு} நல்லதைச் செய்ய முனைவாயாக. அவளது கண்ணீரை வற்ற செய்வாயாக. போரில் (உனது எதிரிகளை) வீழ்த்தி அவளுக்கான மரியாதைகளைச் செய்வாயாக. மிகவும் பரிதாபகரமாக வெறும் ஐந்து கிராமங்களை மட்டுமே நீ கேட்டாய். அதுவும் கூட எங்களால் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில், "பாண்டவர்களைக் கோபமூட்டுவதில் நாம் வெற்றி காண்பது எப்படி? போரை நாம் நிலைநாட்டுவது எப்படி?" என்பனவற்றை மட்டுமே நாங்கள் முயன்று கொண்டிருந்தோம்.

உன் நிமித்தமாகவே தீய விதுரன் (எங்களால்) விரட்டப்பட்டான், அரக்கு வீட்டில் வைத்து உங்கள் அனைவரையும் எரிக்க முயன்றவர்கள் நாங்களே என்பதை நினைவுகூர்ந்து இப்போது ஆண்மையை அடைவாயாக; (உபப்லாவ்யத்தில் இருந்து) கிருஷ்ணன் குருக்களின் {கௌரவர்களின்} சபைக்குப் புறப்பட்ட போது, அவன் {கிருஷ்ணன்} மூலமாக, "ஓ! மன்னா {துரியோதனா}, கேள். போருக்கோ, அமைதிக்கோ நான் தயாராக இருக்கிறேன்" என்ற செய்தியை நீ (எங்களுக்குச்) சொன்னாய். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, போருக்கான அந்த நேரம் வந்து விட்டது என்பதை அறிவாயாக.

ஓ! யுதிஷ்டிரா, அந்த நோக்கில் நான் இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டேன். போரை விட மதிக்கத்தக்க உயர்வாக (நற்பேறாக) ஒரு க்ஷத்திரியன் வேறு எதைக் கருதுவான்? நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். அப்படியே இந்த உலகத்தில் நீ அறியப்படுகிறாய். துரோணர், கிருபர் ஆகியோரிடம் ஆயுதங்களை அடைந்த நீ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைப் போன்ற அதே வகைக்குச் சொந்தமானவனும், பலத்தில் உன்னைவிட உயர்வில்லாதவனுமான வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏன் நம்புகிறாய்?" என்று {யுதிஷ்டிரனிடம்} கேட்பாயாக.

பாண்டவர்களின் முன்னிலையில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} நீ இந்த {பின்வரும்} வார்த்தைகளைச் சொல்ல வேண்டும், "உன் நிமித்தமாகவும், பாண்டவர்கள் நிமித்தமாகவும் உனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் நீ என்னைத் தாக்குப்பிடி {பார்ப்போம்}. குருக்களின் சபை மத்தியில் நீ எற்ற வடிவத்தை {விஸ்வரூபத்தை}, மீண்டும் ஒருமுறை ஏற்று, அர்ஜுனனுடன் சேர்ந்து (போர்க்களத்தில்) என்னை நோக்கி விரைவாயாக.

ஒரு மாயக்காரனின் தந்திரங்கள் அல்லது மாயைகள் (சில சமயங்களில்) அச்சத்தைத் தோற்றுவிக்கக்கூடும். ஆனால், போருக்காக ஆயுதம் தாங்கி நிற்பவனைப் பொறுத்தவரை, இத்தகு மோசடிகள் (போருக்கு எழுச்சியூட்டுவதைவிட) கோபத்தை மட்டுமே {அவனிடம்} தூண்டுகின்றன. *எங்களது மாய சக்திகளால், சொர்க்கம், அல்லது, வானத்திற்கு உயர்வதற்கோ, பாதாள உலகம், அல்லது இந்திரனின் நகரத்திற்குள் ஊடுறுவுவதற்கோ நாங்களும் திறன் பெற்றவர்களாகவே இருக்கிறோம். எங்கள் உடலில் பல்வேறு உருவங்களை எங்களாலும் காட்சிப்படுத்த இயலும்! பெரும் ஆணையாளன் {பிரம்மன்}, (அத்தகைய மாயக்காரனின் தந்திரங்களால்) ஒருபோதும் உயிரினங்கள் அனைத்தையும் அடக்க வில்லை. அவனது {பிரம்மனின்} சுய விருப்பத்தின் பேரிலேயே அஃது அடக்கப்படுகிறது.

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, "திருதராஷ்டிரர் மகன்களைப் போரில் கொல்லச் செய்து, எதிர்ப்பில்லாத அரசுரிமையைப் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} நான் வழங்குவேன்" என்று எப்போதும் நீ சொல்லும் வார்த்தைகளைச் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தான். "கௌரவர்களே, என்னை இரண்டாவதாக {தனக்கு அடுத்தவனாகக்} கொண்டிருக்கும் அர்ஜுனனிடம் நீங்கள் பகைமையைத் தூண்டுகிறீர்கள் என்பதை அறிவீர்களாக", என்றும் நீ சொல்லி இருக்கிறாய். அந்த {உனது} உறுதிமொழியைக் கடைப்பிடித்து, பாண்டவர்களுக்காக உனது சக்தியைச் செலுத்தி, உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக!

{கிருஷ்ணா!} நீ ஆண்மையுள்ளவன் என்பதை எங்களுக்குக் காட்டுவாயாக! `உண்மையான ஆண்மையை நாடுவதால், பகைவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்த உறுதி செய்பவனே உண்மையில் உயிரோடு இருப்பவனாகச் சொல்லப்படுகிறான்`. ஓ! கிருஷ்ணா, எக்காரணமும் இன்றி உனது புகழ் இவ்வுலகில் பெரிதாகப் பரவி இருக்கிறது! எனினும், {மீசை முதலிய} ஆண்மையின் குறிகளைத் தன்னிடம் கொண்டும், உண்மையில் அலிகளாக இருப்போர் இவ்வுலகில் பலர் இருக்கின்றனர் என்பது இப்போது அறியப்படும். குறிப்பாக நீ கம்சனின் அடிமையாவாய். உனக்கு எதிராக ஏகாதிபதியான நான் கவசம் தரித்து என்னை மறைத்துக்கொள்ளக்கூடாது!" என்று {கிருஷ்ணனிடம்} சொல்வாயாக.

(அடுத்ததாக), ஓ! உலூகா, மதிகெட்டவனும், அறியாமை நிறைந்தவனும், பெருந்தீனிக்காரனும், கொம்புகள் அகற்றப்பட்ட காளையைப் போன்றவனுமான பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வாயாக. அவனிடம் {பீமனிடம்} "ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, விராடனின் நகரத்தில், வல்லவன் {வல்லன்} என்ற பெயரில் அறியப்பட்ட சமையற்காரனாக இருந்தவன் நீ! இவை அனைத்தும் உனது ஆண்மையின் சாட்சிகளாகும்! குருக்களின் சபைக்கு மத்தியில் நீ செய்த சூளுரை {சபதம்} பொய்க்காதிருக்கட்டும்! உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தம் குடிக்கப்படட்டும்! {உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தத்தைக் குடி பார்ப்போம்}.

ஓ! குந்தியின் மகனே {பீமா}, "போரில் நான் திருதராஷ்டிரரின் மகன்களை விரைந்து கொல்வேன்!" என்று நீ அடிக்கடி சொல்லியிருக்கிறாய். அதைச் சாதிப்பதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. ஓ! பாரதா {பீமா}, சமையற்கலையில் வெகுமதி பெற நீ தகுந்தவனே! எனினும், உடை, உணவு மற்றும் போர் ஆகியவற்றுக்குள் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போது போரிடுவாயாக. ஆண்மையுடனிருப்பாயாக! உண்மையில், ஓ! பாரதா {பீமா}, உனது கதாயுதத்தை வாரி அணைத்துக் கொள்ளும் நீ பூமியில் உயிரற்று விழுந்து கிடக்க வேண்டியிருக்கும். ஓ! விருகோதரா {பீமா}, உனது சபைக்கு மத்தியில் தற்பெருமை பேசுவதில் நீ ஈடுபட்டதெல்லாம் வீணாகப் போகிறது!" என்று {பீமனிடம்} சொல்வாயாக.

ஓ! உலூகா, நகுலனிடம், நான் சொல்லும் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. {அந்த நகுலனிடம்}, "ஓ! பாரதா {நகுலா}, அமைதியாகப் போரிடுவாயாக! ஓ! பாரதா {நகுலா}, உனது ஆண்மையையும், யுதிஷ்டிரன் மேல் நீ வைத்திருக்கும் மரியாதையையும், என்னிடம் நீ கொண்டுள்ள வெறுப்பையும் நாங்கள் காண விரும்புகிறோம். கிருஷ்ணை {திரௌபதி} பட்ட துயரங்கள் அனைத்தையும் உனது மனதில் நினைவு கூர்வாயாக", என்று {நகுலனிடம்} சொல்வாயாக.

அடுத்ததாக, (கூடியிருக்கும்) ஏகாதிபதிகளுக்கு முன்னிலையில் இந்த எனது வார்த்தைகளைச் சகாதேவனிடம் சொல்வாயாக. அவனிடம் {சகாதேவனிடம்}, "உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி, போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக! உங்கள் துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்வாயாக" என்று சொல்வாயாக.

அடுத்து, விராடன் மற்றும் துருபதனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவர்களிடம், "படைப்பின் ஆரம்பத்தில் இருந்தே, பெரும் காரியங்களைச் செய்யக்கூடிய அடிமைகள் கூடத் தங்கள் முதலாளிகளை {எஜமானர்களை} முழுமையாகப் புரிந்து கொண்டதில்லை. அதே போல, செழிப்பான அரசர்களாலும் தங்கள் அடிமைகளைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. இந்த மன்னன் {யுதிஷ்டிரன்} புகழத்தக்கவனல்ல. இத்தகு நம்பிக்கையிலேயே நீங்கள் எனக்கு எதிராக வந்திருக்கிறீர்கள். எனவே, ஒன்றுகூடி எனக்கெதிராகப் போரிட்டு, என்னைக் கொன்று, பாண்டவர்களும் நீங்களும், உங்கள் கருத்தில் கொண்டுள்ள நோக்கங்களைச் சாதிப்பீராக" என்று சொல்வாயாக.

பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், "{இதோ} உனக்கான நேரம் வந்துவிட்டது, நீயும் உனது நேரத்தின் காரணமாகவே {இங்கு} வந்திருக்கிறாய்! போரில் துரோணரை அணுகி, உனக்குச் சிறந்தது எது என்பதை அறிந்து கொள்வாய்! உனது நண்பனின் காரியத்தைச் சாதிப்பாயாக" என்று சொல்வாயாக.

ஓ! உலூகா, அடுத்ததாக, சிகண்டியிடம் மீண்டும் மீண்டும் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், "வலிய கரங்களைக் கொண்ட கௌரவரும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவருமான கங்கையின் மகன் (பீஷ்மர்), பெண் என்று மட்டுமே உன்னை அறிவதால், உன்னை அவர் கொல்லமாட்டார்! {எனவே}, இப்போது அச்சமில்லாமல் போரிடுவாயாக! உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் சாதிப்பாயாக! நாங்கள் உனது ஆற்றலைக் காண விரும்புகிறோம்" என்று சொல்வாயாக." {என்று உலூகனிடம் சொன்னான் துரியோதனன்}.
********************************************************************************
*{துரியோதனன் கிருஷ்ணனிடம் கூறும்படி உலூகனிடம் சொன்னது}, எங்களது மாய சக்திகளால், சொர்க்கம், அல்லது, வானத்திற்கு உயர்வதற்கோ, பாதாள உலகம், அல்லது இந்திரனின் நகரத்திற்குள் ஊடுறுவுவதற்கோ நாங்களும் திறன் பெற்றவர்களாகவே இருக்கிறோம். எங்கள் உடலில் பல்வேறு உருவங்களை எங்களாலும் காட்சிப்படுத்த இயலும்!”

திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்:குடியியல் / அதிகாரம்: பெருமை/ குறள்: 978.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை   
அணியுமாம் தன்னை வியந்து.

தமிழ் விளக்கவுரை- சாலமன் பாப்பையா :
பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்