Thursday, July 30, 2015

கர்ணனின் பேச்சைக் கேட்டு சிரித்த பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 196

Bhishma laughed aloud at Karna! | Udyoga Parva - Section 196 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 23)

பதிவின் சுருக்கம் : கண்ணுக்கு எதிரே நின்ற பெரும் பாண்டவப்படையைக் கண்ட துரியோதனன், அந்தப் படையைப் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன் ஆகியோர் ஒவ்வொராலும் தனித்தனியாக எவ்வளவு காலத்தில் அழிக்க முடியும் என்று கேட்டது; ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற காலத்தைச் சொன்னது; கர்ணன் சொன்னதைக் கேட்ட பீஷ்மர் உரக்கச் சிரித்தது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இரவு கடந்து, காலை வந்ததும், துருப்புகள் அனைத்தின் மத்தியில் வைத்து, உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் ஒருமுறை தனது பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, "ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, போரிடத் தயாராக இருக்கும் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் படை, மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை நிரம்பி, மஹாரதர்கள் கூட்டத்தால் நிரம்பி, லோகபாலர்களைப் போன்றோரும், ஒப்பற்றவர்களும், தாக்குப்பிடிக்கப்பட இயலாதவர்களுமான பெரும் பலத்தைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளிகளான பீமன், அர்ஜுனன், திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பிறர் ஆகியோருடன் கட்டுக்கடங்காத கடலைப் போல இருக்கிறது. போரில் தேவர்களாலும் கலங்கடிக்கப்பட முடியாத வீரர்கள் அடங்கிய இந்தப் படையை, ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே {பீஷ்மரே}, உம்மால் எத்தனை நாட்களில் அழிக்க முடியும். வலிமைமிக்க வில்லாளியான எங்கள் ஆசானால் {துரோணரால்} எவ்வளவு காலத்தில் முடியும், வலிமைமிக்கக் கிருபரால் எவ்வளவு காலத்திலும், போரில் விருப்பம் கொண்ட கர்ணனால் எவ்வளவு காலத்திலும், அந்தணர்களில் சிறந்தவரான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} எவ்வளவு காலத்திலும் அழிக்க முடியும்? எனது படையில் இருக்கும் நீங்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களை அறிந்தவராவீர்! எனது இதயத்தில் நான் உணரும் ஆவல் பெரிதாக இருப்பதால், இதை அறிய நான் விரும்புகிறேன்! ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்", என்றான் {துரியோதனன்}.


பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! குருக்களில் முதன்மையானவனே, ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, எதிரியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து நீ விசாரிக்கிறாய். உண்மையில், இஃது உனக்குத் தகுந்ததே. போரில் எனது சக்தி, அல்லது எனது ஆயுதங்களின் ஆற்றல், அல்லது எனது கரங்களின் வலிமை ஆகியவற்றின் எல்லையை நான் சொல்கிறேன் கேள். சாதாரணப் போராளிகளைப் பொறுத்தவரை, இடைவிடாமல் அவர்களுடன் ஒருவன் போரிட வேண்டும். மாயசக்திகள் கொண்டோரைப் பொறுத்தவரை, அவர்களுடன் ஒருவன் மாய வழிகளின் துணை கொண்டே ஒருவன் போரிட வேண்டும். இதுவே போராளிகளின் கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! அருளப்பட்ட ஏகாதிபதி {துரியோதனா}, ஒவ்வொரு காலையிலும் பத்தாயிரம் {10000} (சாதாரண) போராளிகளையும், ஓராயிரம் {1000} தேர்வீரர்களையும் எனது பங்காகக் கொண்டு, பாண்டவப்படையை நான் அழிப்பேன். கவசம்பூண்டபடி, எப்போதும் சுறுசுறுப்பாக உழைக்கும் நான், ஓ! பாரதா {துரியோதனா}, எண்ணிக்கை மற்றும் காலத்துடைய இந்த ஏற்பாட்டின் படி இந்தப் பெரும் படையை அழிப்பேன். எனினும், போரில் நிலைத்திருக்கும் நான், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லும் எனது பெரும் ஆயுதங்களை அடித்தால், ஓ! பாரதா {துரியோதனா}, என்னால் ஒரு மாதத்தில் இந்தப் படுகொலையை முடிக்க முடியும்" என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் பிறகு,  அங்கிரச குலத்தின் முதன்மையானவரான துரோணரிடம், "ஓ! ஆசானே {துரோணரே}, எவ்வளவு காலத்தில் நீர் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} துருப்பபுகளை அழிப்பீர்?" என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்ட துரோணர் புன்னகையுடன், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் கிழவன். எனது சக்தி, செயல்பாடு ஆகிய இரண்டும் பலவீனமடைந்திருக்கிறது. எனது ஆயுதங்களின் நெருப்பால், சந்தனுவின் மகனான பீஷ்மரைப் போலவே, என்னால் இந்தப் பாண்டவப் படையை ஒரு மாத காலத்தில் எரிக்க முடியும் என நான் நினைக்கிறேன். இதுவே எனது சக்தியின் எல்லை. இதுவே எனது பலத்தின் எல்லையுமாகும்" என்றார். பிறகு சரத்வானின் மகனான கிருபர் இரண்டு {2} மாத காலத்தில் எதிரியைத் தன்னால் அழிக்க முடியும் என்றார். துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), பத்து {10} இரவுகளில் பாண்டவப் படையை அழிப்பதாக உறுதி அளித்தான். எனினும், உயர் திறம் படைத்த ஆயுதங்களைக் கொண்டிருந்த கர்ணன், தன்னால் ஐந்து {5} நாட்களில் அந்தச் சாதனையைச் செய்ய முடியும் என்று உறுதியளித்தான். கடலுக்குச் செல்பவளுடைய (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, சூதனின் மகனுடைய {கர்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு உரக்க சிரித்தபடி, "ஓ! ராதையின் மகனே {கர்ணா}, கணைகள், சங்கு, விற்கள் ஆகியவற்றுடன் கூடியவனும், வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தனது துணைவனாகக் கொண்டு மோதலுக்கு விரைந்து வருபவனுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போரில் நீ மோதாத வரை நீ அப்படி நினைத்துக் கொள்வாயாக. இதற்கு மேலும் உன் விருப்பப்படி எதையும் சொல்ல இயன்றவன்தான் நீ" என்றார் {பீஷ்மர்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்