Thursday, July 30, 2015

"நியாயமான போரைச் செய்வோம்!" என்ற அர்ஜுனன் - உத்யோக பர்வம் பகுதி 197

"We'll have a fair fight!" said Arjuna | Udyoga Parva - Section 197 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 24)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோர் சொன்னதை ஒற்றர்கள் மூலம் அறிந்த யுதிஷ்டிரன், அர்ஜுனனிடம் தங்கள் எதிரிகளான கௌரவர்களை வீழ்த்தும் காலத்தைக் குறித்துக் கேட்டது; கிருஷ்ணனைத் துணையாகக் கொண்ட தன்னால் ஒரு நொடிப்பொழுதில் மூவுலகையும் அழித்துவிட முடியும் என்று அர்ஜுனன் சொன்னது; எனினும் சாதாரண மனிதர்கள் மீது தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், நியாயமான போரைக் கைக்கொண்டே நாம் வென்றுவிடலாம் என்றும் அர்ஜுனன் சொல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குரு {கௌரவப்} படையின் தலைவர்கள் சொன்ன) இவ்வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் அழைத்து, அவர்களிடம் தனிமையில் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

யுதிஷ்டிரன், "திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையில் நான் அமர்த்திய ஒற்றர்கள், இந்தச் செய்தியை இன்று காலை என்னிடம் கொண்டு வந்தார்கள். பெரும் நோன்புகள் கொண்ட கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} துரியோதனன், "ஓ! தலைவா {பீஷ்மரே}, பாண்டு மகன்களின் துருப்புகளை நீர் எவ்வளவு காலத்தில் அழிப்பீர்?" என்று கேட்டான். உண்மையில், அந்தத் தீய துரியோதனனுக்கு அவர் அளித்த பதில், "ஒரு மாதம்!" என்பதாகும். துரோணரும், அதே சாதனையை அதே காலத்தில் {ஒரு மாத காலத்தில்} தன்னால் சாதிக்க முடியும் என்று அறிவித்தார். கௌதமர் (கிருபர்) அந்தக் காலத்தில் இரட்டிப்பானதைக் {இரண்டு மாத காலத்தைக்} குறிப்பிட்டார் என்று நாம் கேள்விப்படுகிறோம். உயர்ந்த திறம் கொண்ட ஆயுதங்களை அறிந்தவரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, (தன்னைப் பொறுத்தவரை) பத்து இரவுகளாகும் என்று அறிவித்தார். உயர்ந்த திறம் கொண்ட ஆயுதங்களை அறிந்தவனான கர்ணனும், குருக்கள் மத்தியில் வைத்துக் கேட்கப்பட்ட போது, ஐந்து நாட்களில் அந்தப் படுகொலையை தன்னால் நிகழ்த்தி விடமுடியும் என்று அறிவித்தான். எனவே, ஓ! அர்ஜுனா, நானும் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன். ஓ! பல்குனா {அர்ஜுனா}, எதிரியை எவ்வளவு காலத்தில் நீ அழிப்பாய்?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.


இப்படி மன்னனால் {யுதிஷ்டிரனால்} கேட்கப்பட்டவனும், சுருள் முடி கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மீது தனது பார்வையை வீசியபடி, "அவர்கள் அனைவரும் (பீஷ்மரும், பிறரும்) உயர் ஆன்மா கொண்டோரும் (போர்வீரர்களும்), ஆயுதங்களில் சாதித்தவர்களும், போர் முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமாவர். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, (நமது படைகளுடன் கூடிய) நம்மை அவர்கள் சொன்னது போலவே அழித்துவிட அவர்களால் முடியும் என்பதில் ஐயமில்லை! எனினும், உமது இதயத்தின் வருத்தம் அகலட்டும்! வாசுதேவனை {கிருஷ்ணனை} எனது கூட்டாளியாகக் கொண்டு, தனித்தேரில் செல்லும் என்னால், உண்மையில், தேவர்களுடன் கூடிய மூன்று உலகையும், அதன் அசையும் மற்றும் அசையா உயிரினங்களுடன் சேர்த்து கண்ணிமைப்பதற்குள் பூண்டோடு அழித்து விட முடியும் என்பதை உமக்கு நான் உண்மையாகச் சொல்கிறேன். இதையே நான் நினைக்கிறேன்.

அனைத்து உயிரினங்களின் தலைவன் (மகாதேவன்) {சிவன்}, வேடனாக (வேடந்தரித்து) என்னோடு கைக்குக் கை மோதிய நிகழ்வின் போது, அவனால் {சிவனால்} எனக்கு அளிக்கப்பட்ட அந்தப் பயங்கரமானதும் வலிமையானதுமான ஆயுதம் {பாசுபத அஸ்திரம்} இன்னும் என்னிடம் இருக்கிறது. உண்மையில், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, யுகத்தின் முடிவின் போது, படைக்கப்பட்ட அனைத்தையும் அழிப்பதற்காக அனைத்து உயிரினங்களின் தலைவனால் {சிவனால்} பயன்படுத்தப்படும் அந்த ஆயுதம் {பாசுபத அஸ்திரம்} என்னிடம் இருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த ஆயுதத்தைக் கங்கையின் மைந்தரோ {பீஷ்மனோ}, துரோணரோ, கௌதமரோ (கிருபதரோ), துரோணரின் மகனோ {அஸ்வத்தாமரோ} அறியமாட்டார்கள்! எனவே, சூதனின் மகனால் {கர்ணனால்} அதை எப்படி அறிந்திருக்க முடியும்? எனினும், இது போன்ற தெய்வீக ஆயுதங்களைப் போரில் சாதாரண மனிதர்களைக் கொல்லப் பயன்படுத்துவது முறையாகாது.

(மறுபுறம்) ஒரு நியாயமான போரின் மூலமே நாம் நமது எதிரிகளை வெற்றியடையலாம். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் இந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் உமது கூட்டாளிகளாய் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களை நன்கு அறிந்தவர்களாகவும், போருக்கு ஆவலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வேதங்களில் குறிப்பிட்ட தொடக்கங்களைச் {சடங்குகளை} செய்து, வேள்விகளில் இறுதி நீராடலையும் மேற்கொண்டவர்கள் ஆவர் [1]. இவர்கள் அனைவரும் வீழ்த்தப்படாதவர்களும் தேவர்களின் படையையே கூடப் போரில் கொல்வதற்குத் திறம் வாய்ந்தவர்களுமாவர்.

[1] "வேதாந்தாவப்ருதஸநாதா' என்பது மூலம் "வேதாத்யஅயனம் செய்து முடித்த பிறகு, திருமணம் செய்து கொண்டு, வேள்வியைச் செய்தவர்கள்" என்பது பழைய உரை என்றும். திருமணம் செய்து கொள்ளாதவன் வேள்வி செய்யலாகாது என்பதால் திருமணம் செய்து கொண்டு என்ற பொருள் இங்கே ஒலிக்கும். இதனால், "அனைவரும் இம்மையில் அடைய வேண்டியவற்றை அடைந்துவிட்ட படியால் மரணத்திற்கு அஞ்சமாட்டார்கள்" என்பது குறிப்பு என்று வேறொரு பதிப்புச் சொல்கிறது.

நீர் உமது கூட்டாளிகளாக, சிகண்டி, யுயுதானன், பிருஷதக் குலத்து திருஷ்டத்யும்னன்; மேலும் பீமசேனன் மற்றும் இந்த இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, யுதாமன்யு, உத்தமௌஜஸ், மற்றும் பீஷ்மருக்கும், துரோணருக்கும் போரில் இணையானவர்களான விராடர், துருபதர்; வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சங்கன், பெரும் வலிமைமிக்க ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, மற்றும் அவனது {கடோத்கசனின்} மகனும், பெரும் வலிமை மற்றும் ஆற்றலைக் கொண்டவனுமான அஞ்சன்பர்வன்; போரில் நன்கு தேர்ச்சி பெற்றவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சினிக்களின் வழித்தோன்றல் {சாத்யகி}, வலிமைமிக்க அபிமன்யு, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரைக் கொண்டிருக்கிறீர்.

மேலும், நீரே கூட, மூவுலகங்களையும் அழிக்கும் திறம் பெற்றவராக இருக்கிறீர். ஓ! சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான பிரகாசம் கொண்டவரே, ஓ! கௌரவரே {யுதிஷ்டிரரே}, நீர் உமது கண்களை  வெளிப்படையாக ஒரு மனிதனின் மீது கோபத்துடன் செலுத்தினால், அவன் அழிந்து போவது உறுதி என்பதை நான் அறிவேன்" என்றான் {அர்ஜுனன்}. 


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்