Friday, January 01, 2016

லட்சுமணனை விரட்டிய அபிமன்யு! - பீஷ்ம பர்வம் பகுதி - 073

Abhimanyu drove Lakshmana away! | Bhishma-Parva-Section-073 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 31)

பதிவின் சுருக்கம் : விராடனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; சித்திரசேனன், புருமித்திரன், சத்தியவிரதன் ஆகியோரோடு போரிட்ட அபிமன்யு; அபிமன்யுவை எதிர்த்த லட்சுமணன்; லட்சுமணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்ற அபிமன்யு; தேரிழந்த லட்சுமணனைத் தனது தேரில் சுமந்து சென்ற கிருபர்; தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்திய பீஷ்மர்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, மன்னன் விராடன் வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரை மூன்று கணைகளால் துளைத்தான். அந்தப் பெரும் தேர்வீரர் {பீஷ்மர்}, தங்கச் சிறகுகள் கொண்ட மூன்று கணைகளால் அவனது {விராடனின்} குதிரைகளைத் துளைத்தார்.


பயங்கரமான வில்லாளியும், உறுதியான கரம் படைத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஆறு கணைகளைக் கொண்டு காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} நடுமார்பில் துளைத்தான். அதன்பேரில், பகை வீரர்களைக் கொல்பவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அஸ்வாத்தாமனின் வில்லை அறுத்ததுடன், ஐந்து கணைகளால் அவனை {அஸ்வத்தாமனை} ஆழமாகத் துளைத்தான். கோபத்தில் புலன்களை {உணர்வுகளை} இழந்தவனும், அந்தப் போரில் தனது வில் துண்டாக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் கடினமான மற்றொரு வில்லை எடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூரிய தொண்ணூறு {90} கணைகளால் பல்குனனையும் {அர்ஜுனனையும்}, கடுமையான எழுபது {70} கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.

அப்போது கிருஷ்ணனோடு சேர்ந்த பல்குனன் {அர்ஜுனன்} கோபத்தில் கண்கள் சிவக்க, நீண்ட சூடான மூச்சுகளைவிட்டு ஒருகணம் சிந்தித்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவனும், இடது கையால் வில்லை உறுதியாகப் பிடித்தவனுமான காண்டீவதாரி {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, (எதிரியின்) உயிரை எடுக்க வல்லவையும், முற்றிலும் நேராக இருப்பவையும், கூர்மையானவையுமான கடுங்கணைகள் பலவற்றைத் தனது வில்லின் நாணில் பொருத்தினான். பலம்வாய்ந்த மனிதர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைக் கொண்டு, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விரைவாகத் தாக்கினான். அவனது {அஸ்வத்தாமனின்} கவசத்தைப் பிளந்த அந்தக் கணைகள், அவனது உயிர்க்குருதியைக் குடித்தன.

ஆனால், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} இப்படித் துளைக்கப்பட்டாலும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமல்} நடுங்கவில்லை. அந்தப் போரில் பாதிக்கப்படாதவனும், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பியவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு அதே போன்ற கணைகளைப் பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏவினான். ஒன்றாகச் சேர்ந்திருந்த இரண்டு கிருஷ்ணர்களையும் {இரண்டு கருப்பர்களையும்_ கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனையும்} எதிர்கொண்ட அவனது {அஸ்வத்தாமனது} அந்தச் செயல், குரு படையின் முதன்மை வீரர்களால் பாராட்டப்பட்டது. அனைத்து ஆயுதங்களைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய முறைகளைத் துரோணரிடம் இருந்த அடைந்திருந்த அஸ்வத்தாமன், உண்மையில், படைகளுக்கு மத்தியில் அச்சமற்ற வகையிலேயே தினமும் போராடி வந்தான்.

எதிரிகளைச் சுடுபவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான வீரன் பீபத்சு {அர்ஜுனன்}, "இவன் {அஸ்வத்தாமன்} எனது ஆசானின் மகன், இவன் துரோணரின் அன்புக்குரிய மகன். அதிலும் குறிப்பாக இவன் பிராமணன், எனவே, எனது மரியாதைக்குரியவன்" என்று நினைத்தே பரத்வாஜரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்குக்} கருணை காட்டினான். (தனது தேரில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளைக் கொண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தவிர்த்துவிட்டு, தன் கரங்களின் பெரும் வேகத்தைக் காட்சிப்படுத்தியபடியும், உமது துருப்புகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கியபடியும் போரிடத் தொடங்கினான்.

அப்போது துரியோதனன், சாணைக்கல்லில் கூர்தீட்டப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைச் சிறகாகக் கொண்டவையுமான பத்து {10} கணைகளைக் கொண்டு பெரும் வில்லாளியான பீமனைத் துளைத்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்ட பீமசேனன், கடினமானதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், எதிரியின் உயிரை எடுக்கவல்லதுமான ஒரு வில்லையும், பத்து கூரிய கணைகளையும் எடுத்தான்.
கோள்களால் சூழப்பட்ட சூரியன் (சூரிய மண்டலம்)
கடும் சக்தியையும், மூர்க்கமான வேகத்தையும், கூர்மையான முனைகளையும் கொண்ட அந்தக் கணைகளைப் பொருத்தி, வில்லின் நாணைத் தனது காதுவரை இழுத்து, உறுதியாகக் குறிபார்த்து, குருக்களின் மன்னனுடைய {துரியோதனனுடைய} அகன்ற மார்பில் ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில் அவனது மார்பில் தங்க இழைகளில் தொங்கிக் கொண்டிருந்த ரத்தினம், அந்தக் கணைகளால் சூழப்பட்டு, ஆகாயத்தில் கோள்களால் சூழப்பட்ட சூரியனைப் போல மிக அழகாகத் தெரிந்தது.

பெரும் சக்தி கொண்டவனாக இருப்பினும், மனிதர்கள் அறையும் ஒலியைத் தாங்கிக் கொள்ளாத பாம்பைப் போல, பீமசேனனால் இப்படித் தாக்கப்பட்டதை உமது மகனால் {துரியோதனன்} (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபத்தால் தூண்டப்பட்டவனும், தனது படையைக் காக்க விரும்பியவனுமான அவன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான பல கணைகளைக் கொண்டு பீமனைப் பதிலுக்குத் துளைத்தான். இப்படியே போரில் போராடி, ஒருவரை ஒருவர் கடுமையாகச் சிதைத்துக் கொண்டவர்களான வலிமைமிக்க உமது மகன்கள் இருவரும் {துரியோதனனும் - பீமனும்}, அப்போது, தேவர்கள் இருவரைப் போலத் தெரிந்தனர்.

மனிதர்களில் புலியும், பகைவீரர்களைக் கொல்பவனுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சித்திரசேனனை பல [1] கூரிய கணைகளாலும், புருமித்ரனை ஏழு கணைகளாலும் துளைத்தான். போரில் இந்திரனுக்கு நிகரான வீரனாகிய அவன் {அபிமன்யு}, சத்தியவிரதனையும் எழுபது கணைகளால் அடித்து, அந்தப் போர்க்களத்தில் நடனமாடியபடியே நம்மைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கினான். பிறகு, பத்து கணைகளால் சித்திரசேனனும், ஒன்பது கணைகாளல் சத்தியவிரதனும், ஏழு கணைகளால் புருமித்ரனும் பதிலுக்கு அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தனர்.

[1] பத்துக் கணைகள் என்று வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.

இப்படித் துளைக்கப்பட்ட அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, ரத்தத்தில் நனைந்தபடியே, எதிரிகளைத் தடுக்கவல்ல சித்திரசேனனின் அழகிய பெரிய வில்லை வெட்டி வீழ்த்தினான். மேலும் அவன் {அபிமன்யு}, ஒரு கணையால் எதிராளியின் {சித்திரசேனனின்} கவசத்தைப் பிளந்து அவனது மார்பைத் துளைத்தான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது படையின் இளவரசர்கள் அம்மோதலில் ஒன்று சேர்ந்து, கூரிய கணைகளால் அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தனர்.

வல்லமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனான அபிமன்யுவோ, அவர்கள் அனைவரையும் கூர்மையான அம்புகளால் அடித்தான். அவனது அருஞ்செயலைக் கண்ட உமது மகன்கள், கோடைக்காலத்தில் வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிகும் நெருப்பின் தழல்களைப் போல உமது படையை எரித்துக் கொண்டிருந்த அந்த அர்ஜுனன் மகனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். (இப்படி) உமது துருப்புகளை அடித்துக் கொண்டிருந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு} பிரகாசத்தில் ஒளிர்வதாகத் தெரிந்தது.

அவனது {அபிமன்யுவின்} நடத்தையைக் கண்ட உமது பேரன் {உமது பேரனும் துரியோதனன் மகனுமான} லக்ஷ்மணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது விரைந்து பாய்ந்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யு, மங்கலக்குறிகளால் அருளப்பட்ட லக்ஷ்மணனையும், அவனது தேரோட்டியையும் ஆறு கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் லக்ஷ்மணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல கூரிய கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த அருஞ்செயல் பெரும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.

அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யு, தன் கூரிய கணைகளால் லக்ஷ்மணனின் நான்கு குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் கொன்றுவிட்டு, அவனிடம் {லக்ஷ்மணனிடம்} விரைந்து சென்றான். அதன்பேரில் பகைவீரர்களைக் கொல்பவனான லக்ஷ்மணன், கொல்லப்பட்ட குதிரைகளைக் கொண்ட அந்தத் தேரில் நின்றபடியே, கோபத்தால் தூண்டப்பட்டு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி ஒர் ஈட்டியை எறிந்தான். எனினும் அபிமன்யு, பாம்பைப் போன்றதும், தன்னை நோக்கி விரைந்து வந்ததும், கடும் தோற்றம் கொண்டதுமான அந்தத் தடுக்கப்பட முடியாத ஈட்டியைத் தன் கூரிய கணைகளால் துண்டாக்கினான். பிறகு, லக்ஷ்மணனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட கிருபர், துருப்புகள் அனைத்தின் பார்வைக்கெதிரிலேயே, அவனை {லக்ஷ்மணனை} அம்மோதலை விட்டு அகற்றிச் சுமந்து சென்றார்.

அச்சம்தரும் அந்தப் போர் மிதமாக மாறிய போது, மற்றவர் உயிரைப் பறிக்க விரும்பிய போராளிகள் ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்து சென்றனர். போர்க்களத்தில் உயிரைவிடத் தயாராக இருந்த உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், பாண்டவப்படையின் பெரும் தேர்வீரர்களும் ஒருவரையொருவர் கொன்றனர். தலைமுடி கலைந்தும், தங்கள் கவசங்களை இழந்தும், தேர்களை இழந்தும், விற்கள் ஒடிந்தும் இருந்த சிருஞ்சயர்கள், தங்கள் வெறுங்கைகளைக் கொண்டே குருக்களுடன் போரிட்டனர். அப்போது கோபத்தால் தூண்டப்பட்டவரும், பெரும் பலமும், வலிமையான கரமும் கொண்டவருமான பீஷ்மர். தன் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு உயர் ஆன்மப் பாண்டவர்களின் துருப்புகளைக் கொன்றார். பாகன்களை இழந்த யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோரின் வீழ்ந்த உடல்களால் பூமி மறைக்கப்பட்டது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்