Friday, January 15, 2016

துரியோதனனை உற்சாகப்படுத்திய பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 081

Bhishma made Duryodhana cheerful! | Bhishma-Parva-Section-081 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 39)

பதிவின் சுருக்கம் : ஏழாம் நாள் போர்த் தொடக்கம்; துரியோதனனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடந்த கருத்துப் பரிமாற்றம்; பீஷ்மரின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த துரியோதனன்; போருக்குப் புறப்பட்ட படை குறித்த சஞ்சயன் வர்ணனை...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஒருவர் மேல் ஒருவர் பகையுணர்வுகளை வளர்த்து வந்தவர்களும், இரத்தம் தோய்ந்த மேனியுடையவர்களுமான அந்த வீரர்கள் {ஆறாம் நாள் போர் முடிவில்} ஓய்ந்திருக்கத் தங்கள் பாசறைக்குச் சென்றனர். விதிகளுக்கு ஏற்புடைய வகையில் சிறிது நேரம் {அன்றிரவு} இளைப்பாறி (அந்த நாளைய சாதனைகளுக்காக) ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்ட அவர்கள், மீண்டும் போர்புரியக் கருதி கவசம் தரித்தவர்களாகக் காணப்பட்டார்கள்.


பிறகு, துயரில் மூழ்கியவனான உமது மகன் {துரியோதனன்}, (தன் காயங்களில்) இருந்து சொட்டிய குருதியால் நனைந்தபடி, பாட்டனிடம் {பீஷ்மரிடம் துரியோதனன்} [1], "நமது துருப்புகள் மூர்க்கமானவையாகவும், பயங்கரமானவையாகவும், எண்ணிலடங்கா கொடிமரங்களைச் சுமப்பவையாகவும் இருக்கின்றன. மேலும், அவை முறையாக அணிவகுக்கப்பட்டும் இருக்கின்றன. எனினும், துணிவுமிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பாண்டவர்கள் (நமது அணிவகுப்பிற்குள்) ஊடுருவி (நமது துருப்புகளைப்} பீடித்து, படுகொலை செய்து, காயப்படாமல் தப்பிக்கிறார்கள். நம் அனைவரையும் குழப்பும் அவர்கள் போரில் பெரும் புகழை வென்றுள்ளனர்.

[1] தான் ஏற்றிருக்கும் பம்பாய் உரையில், 2வது வரியின் தொடக்கத்தில் visravat என்றிருக்கிறது என்றும், வங்க உரைகளிலோ visramvat என்றிருக்கிறது என்றும், அதன் பொருள் "பாசத்துடன் கூடிய விசாரணை நோக்கங்களினால்" என்பதாகும் என்றும். அதுவே "நம்பிக்கையின் காரணமாக" என்றும் பொருள் படலாம் என்றும் இங்கே விளக்குகிறார் கங்குலி.

இடியைப் போன்ற வலிமையுடன் இருந்த நமது மகர [2] அணிவகுப்புக்குள் ஊடுருவிய பீமன், காலனின் கணை {யமதண்டங்களைப்} போன்ற பயங்கரக் கணைகளால் என்னைப் பீடித்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவனை {பீமனைக்} கண்ட நான், ஓ! மன்னா {பீஷ்மரே}, எனது புலன் உணர்வுகளை இழந்தேன் {அச்சத்தால் மயக்கமடைந்தேன்}. இப்போதும் எனது மன அமைதியை என்னால் மீட்க முடியவில்லை. உமது அருளால், ஓ! உண்மையில் {சத்தியத்தில்} உறுதியுள்ளவரே {சத்தியசந்தரே, பீஷ்மரே}, பாண்டு மகன்களைக் கொன்று வெற்றியை அடைய நான் விரும்புகிறேன் [3]" என்றான் {துரியோதனன்}.

[2] ஆறாம் நாள் போரில் பாண்டவர்கள் மகர வியூகமும், கௌரவர்கள் கிரௌஞ்ச வியூகமும் அமைத்ததாகப் பீஷ்மபர்வம் பகுதி 075 கூறுகிறது. ஆனால் இங்கே துரியோதனனோ "நமது மகர அணிவகுப்பு" என்கிறான். ஒரு வேளை ஐந்தாம் நாள் போரைக் குறித்துச் சொல்கிறானோ என்னவோ? ஐந்தாம் நாள் போரில்தான் கௌரவர்கள் மகர அணிவகுப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

[3] பின்வருவன வேறு பதிப்புகளில் துரியோதனன் பேசுவதாகக் காணக்கிடைப்பதாகும்: "துணிவுமிக்கவர்களான அந்தப் பாண்டவர்கள் மூர்க்கமானவைகளும், பயங்கரமானவைகளும், அணிவகுக்கப் பட்டவைகளும், சிறந்த பல கொடிமரங்களைக் கொண்டவைகளுமான {நமது} படைகளைப் பிளந்தும், வீரர்களைக் கொன்றும் போரில் நம் அனைவரையும் குழப்பி வெற்றியடைந்து மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். காலனுக்கு ஒப்பான அந்த மகர வியூகத்தினுள் புகுந்த பீமனின் யமதண்டங்களைப் போன்ற கொடிய கணைகளால் போரில் நான் தாக்கப்பட்டேன். மன்னா {பீஷ்மரே}, கோபங்கொண்டிருக்கிற அந்தப் பீமசேனனைக் கண்டு அஞ்சிய நான், இப்போதும் மனத்தில் ஆறுதலை அடையவில்லை. சத்திய சந்தரே {பீஷ்மரே}, உம்முடைய அருளால் வெற்றியை அடைவதற்கும், பாண்டவர்களைக் கொல்வதற்கும் நான் விரும்புகிறேன்" என்றான் துரியோதனன்.

அவனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்டவரும், ஆயுதம் தரித்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் மனோ சக்தி கொண்டவருமான கங்கையின் உயர் ஆன்ம மகன் {பீஷ்மர்}, துரியோதனன் கொண்ட துயரைப் புரிந்து கொண்டு, உற்சாகமற்றிருந்தாலும் சிரித்தவாறே அவனிடம் {பீஷ்மர் துரியோதனனிடம்}, "விடா முயற்சியுடனும், எனது முழு ஆன்மாவுடனும் (அவர்களது) படைக்குள் ஊடுருவி, ஓ! இளவரசே {துரியோதனா}, உனக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தர நான் விரும்புகிறேன். உனக்காக நான் ஒரு போதும் பாசாங்கு செய்வதில்லை. பாண்டவர்களின் கூட்டாளிகளாக உள்ளவர்கள் மூர்க்கமானவர்களாகவும், எண்ணிலடங்காதவர்களாகவும் இருக்கின்றனர். பெரும் புகழ்பெற்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் மிகத் துணிவுள்ளவர்களாகவும், ஆயுதங்களில் சாதித்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

களைப்படைய இயலாத அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் கோபத்தையே கக்குகிறார்கள். ஆற்றலில் வளர்ந்து, உன் மீது பகையை வளர்த்திருக்கும் அவர்கள் {பாண்டவர்கள்}, எளிதில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என் முழு ஆன்மாவுடனும், என் உயிரை விட்டும் நான் அந்த வீரர்களுடன் போராடுவேன். ஓ! பெரும் மகிமை கொண்டவனே {துரியோதனா}, இன்று உனக்காகவே, இந்தப் போரில் என் உயிர் துச்சமாக வெளிப்படும். {உனக்காக என்னுடைய உயிரானது இப்போது காப்பாற்றத்தக்கதன்று}. இங்கிருக்கும் உன் எதிரிகளை விடு, உன் பொருட்டுத் தேவர்களுடனும், தைத்தியர்களுடனும் கூடிய உலகங்கள் அனைத்தையும் கூட நான் எரித்துவிடுவேன். ஓ! மன்னா {துரியோதனா}, அந்தப் பாண்டவர்களுடன் போரிட்டு, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் செய்வேன்" என்று மறுமொழி கூறினார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், பெரும் நம்பிக்கையும் ஊக்கமும் பெற்றதால், அவனது இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. (தனது படையின்) துருப்புகள் அனைத்தையும், மன்னர்கள் அனைவரையும் முன்னேறும்படி மகிழ்ச்சியாக அவன் {துரியோதனன்} உத்தரவிட்டான். அந்த உத்தரவின் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் மற்றும் யானைகளைக் கொண்ட அவனது {துரியோதனனது} படை முன்னேறத் தொடங்கியது. பல்வேறு விதமான ஆயுதங்களைத் தரித்திருந்த அந்தப் பெரும்படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது.

யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்கள் அடங்கிய அந்த உமது படை, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் மிகவும் அழகாகத் தெரிந்தது. பல்வேறு விதமான ஆயுதங்கள் தரித்த அரசப் போராளிகள் பலர் உமது துருப்புகளுக்கு மத்தியில் தெரிந்தனர். தேர்கள், காலாட்படைவீரர்கள், யானைகள், பெரு உடல்களைக் கொண்ட குதிரைகள் ஆகியவை களத்தில் நகர்ந்ததனால் எழுப்பப்பட்ட புழுதியானது காலைச் சூரியன் போலச் சிவந்து, சூரியக் கதிர்களை மறைத்த படி மிக அழகாகத் தெரிந்தது.

பாற்கடல் கடைதல்
காற்றில் அசைந்து, வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தவையும், தேர்கள் மற்றும் யானைகளில் இருந்தவையுமான வண்ணக் கொடிகள் பல, மேகங்களுக்கு மத்தியில் உள்ள மின்னலின் கீற்றுகளைப் போல அழகாகத் தெரிந்தன. கிருதயுகத்தில் தேவர்களாலும், பெரும் அசுரர்களாலும் கடையப்பட்ட கடலின் முழக்கத்தைப் போல, மன்னர்களால் வளைக்கப்பட்ட விற்களின் நாணொலிகளின் முழக்கம் கடுமையானவையாகவும், பேரொலியாகவும் இருந்தன. பல்வேறு நிறங்கள், வடிவங்ககள் ஆகியவற்றை (உடைய போராளிகளைக்) கொண்டவையும், செருக்குடன் காணப்பட்டவையும், பகை வீரர்களைக் கொல்ல இயன்றவையுமான உமது மகன்களின் அந்தப் படை, யுக முடிவின் போது ஏற்படும் மேகங்களின் திரள்களைப் போல மூர்க்கமாக இரைந்தன" {என்றான் சஞ்சயன்}.

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்