Wednesday, February 17, 2016

சர்வதோபத்திர மண்டல வியூகங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 100

Sarvatobhadra and Constellation Vyuhas! | Bhishma-Parva-Section-100 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 58)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் அமைத்துக் கொண்ட சர்வதோபத்திர வியூகம்; பாண்டவர்கள் அமைத்துக் கொண்ட வியூகம்; பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் தங்கள் வியூகங்களில் நின்ற நிலைகள்; போர் தொடங்கும் முன்பு காணப்பட்ட அபசகுனங்கள்....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர் துருப்புகளுடன் கிளம்பினார். அவர் {பீஷ்மர்} தனது துருப்புகளைச் சர்வதோபத்திரம் என்று அழைக்கப்படும் வலிமைமிக்க வியூகத்தில் அமைத்தார் [1]. கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரனான சைப்யன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் ஆகியோர் அனைவரும் பீஷ்மருடனும், உமது மகன்களுடனும் சேர்ந்து மொத்தப் படையின் முன்னணியில் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டு அந்த (கௌரவ) வியூகத்தின் முகப்பில் நின்றார்கள்.


[1] சர்வதோபத்திரம் என்ற வியூகமானது, அனைத்துத் திக்குகளையும் வீரர்கள் நோக்கும் வகையில் சதுரமான ஒரு வியூகமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். சர்வதோபத்திரம் என்றால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாப்பானது என்று பொருளாம்.
 வில்லிபாரதத்தில் கௌரவர்கள் சருப்பதோபத்ர வியூகம் அமைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு பேர் யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து,  மான உரவோன், .   {வில்லி பாரதம் 3:ஒ.போ.ச.10}

கவசங்கள் தரித்திருந்த துரோணர், பூரிஸ்ரவஸ், சல்லியன், பகதத்தன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வியூகத்தின் வலது பக்கத்தில் தங்கள் நிலைகளை அமைத்தனர். அஸ்வத்தாமன், சோமதத்தன், பெரும் தேர்வீரர்களான அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன், அனுவிந்தன்} ஆகியோர் ஒரு பெரும் படையுடன் இடது பக்கத்தைப் பாதுகாத்தனர். துரியோதனன், ஓ, ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் திரிகர்த்தர்களால் சூழப்பட்டுப் பாண்டவர்களுடன் மோதுவதற்காக வியூகத்தின் மத்தியில் தன் நிலையை அமைத்துக் கொண்டான். தேர்வீரர்களில் முதன்மையான அலம்புசன், வலிமைமிக்கத் தேர்வீரனான சுருதாயுஷ் [2] ஆகியோர் கவசங்களைத் தரித்துக் கொண்டு, வியூகத்தின் பின்புறத்திலும், எனவே மொத்தப்படையின் பின்புறத்திலும் தங்கள் நிலையை அமைத்துக் கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது வீரர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் இப்படித் தங்கள் வியூகத்தை அமைத்துக்கொண்டும், கவசம் தரித்துக் கொண்டும் எரியும் நெருப்பைப் போலத் தெரிந்தனர்.

[2] கலிங்க மன்னன் சுருதாயுஷ் பீமனால் கொல்லப்பட்டதாக பீஷ்ம்பர்வம் பகுதி 54ஆவில் குறிப்பு இருக்கிறது. இது வேறு ஒருவனாக இருக்க வேண்டும்.

கவசம் தரித்தவர்களான மன்னன் யுதிஷ்டிரன், பாண்டுவின் மகனான பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் {தங்கள்} வியூகத்தின் முன்னிலையில் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டனர், எனவே அவர்கள் அனைவரும் தங்கள் துருப்புகளின் முகப்பிலேயே இருந்தனர் [3]. பகையணியினரை அழிப்பவர்களான திருஷ்டத்யும்னன், விராடன், வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி ஆகியோர் ஒரு பெரும்படையின் துணையோடு நின்றனர். சிகண்டி, விஜயன் (அர்ஜுனன்), ராட்சசன் கடோத்கசன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சேகிதானன், வீர குந்திபோஜன் ஆகியோர், ஒரு பெரும்படையால் சூழப்பட்டுப் போருக்காக நின்றனர். பெரும் வில்லாளியான அபிமன்யு, வலிமைமிக்கத் துருபதன், (ஐந்து) கைகேய {கேகயச்} சகோதரர்கள் ஆகியோர் கவசம் தரித்துக் கொண்டு போருக்காக நின்றனர்.

[3] கங்குலியின் பதிப்பில் அர்ஜுனனின் பெயர் இங்கு விடுபட்டுள்ளது. வேறு பதிப்புகளில் அர்ஜுனனின் பெயரும் இடம்பெறுகிறது.

இப்படியே போரில் பெரும் துணிவுமிக்கவர்களான அந்தப் பாண்டவர்களும் கவசமணிந்து கொண்டு வலிமைமிக்கதும், வெல்லப்பட முடியாததுமான வியூகத்தை [4] வகுத்துக் கொண்டு போருக்காக நின்றனர்.

[4] வேறு பதிப்புகளில் நட்சத்திரக் கூட்டங்களைப் போல (circular galaxy formation) வட்டவடிவிலான மண்டல வியூகம் என்று சொல்லப்படுகிறது. வில்லிபாரதத்தில் பாண்டவர்கள் பற்ப  வியூகம் அமைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  வில்லிபாரத விளக்கவுரையில் பற்பம் என்பதை பத்மம் அதாவது பத்ம வியூகம் என்று விளக்கியிருக்கிறார்கள். பற்பம் என்றால் சாம்பல் என்ற பொருளும் உண்டு.

வெம் பற்ப ராக வரை யூகமாக, முறையால் அணிந்து, வெயில் கால் அம் பற்ப ராக பதி என்ன நிற்க  {வில்லி பாரதம் 3:ஒ.போ.ச.13}

பிறகு, ஓ! ஏகாதிபதி, உமது வியூகத்தின் மன்னர்கள் தங்கள் படைகளோடு கூடி சிறப்பாக முயற்சி செய்து, தங்களுக்கு முன்னிலையில் பீஷ்மரை நிறுத்திக் கொண்டு, போரில் பார்த்தர்களை {பாண்டவர்களை} எதிர்த்து விரைந்தனர். அதே போலவே பீமசேனனால் தலைமை தாங்கப்பட்ட பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வெற்றியை விரும்பி, பீஷ்மருடன் போரிடுவதற்காகச் சென்றனர்.

சிங்க முழக்கங்கள், குழம்பிய கூக்குரல்கள் ஆகியவற்றுடன் தங்கள் சங்குகள், கிரகசங்கள், மாட்டுக் கொம்புகள் ஆகியவற்றை ஊதிக்கொண்டு, பேரிகைகள், பணவங்கள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் அடித்துக் கொண்டு பாண்டவர்கள் {பாண்டவப் படையினர்} சென்றனர். பயங்கரக் கூச்சல்களை எழுப்பியபடியே அந்தப் பாண்டவர்கள் போருக்குச் சென்றார்கள். எங்கள் பேரிகைகள், பணவங்கள், சங்குகள், துந்துபிகள் ஆகியவற்றின் ஆரவாரத்துடனும், உரத்த சிங்க முழக்கங்களுடனும், இன்னும் பிற விதங்களிலான கூச்சல்களாலும் நாங்களும் எதிரியின் கூச்சல்களுக்கு மறுமொழி கொடுத்தபடியே சினத்தால் தூண்டப்பட்டு அவர்களை எதிர்த்து பெரும் மூர்க்கத்துடன் விரைந்தோம்.

இந்த ஒலிகள் அனைத்தும் ஒன்றோடொன்று கலந்து ஒரு பயங்கர இரைச்சலை உண்டாக்கியது. பிறகு, இரு படைகளின் வீரர்களை ஒருவரையொருவர் நோக்கி விரைந்து தாக்கத் தொடங்கினர். அந்த மோதலால் உண்டான ஆரவாரத்தின் விளைவாகப் பூமியே நடுங்குவதாகத் தெரிந்தது. பறவைகளும் கடுமையாக இரைந்தபடியே காற்றில் {ஆகாயத்தில்} பறந்தன. எழும்போது ஒளிமிக்கவனாக இருந்த சூரியன் {ஒளி} மங்கினான். பெரும் பயங்கரங்களைக் குறிப்பது போலக் காற்றுக் கடுமையாக வீசியது. மோசமான படுகொலைகளை முன்னறிவிக்கும் வண்ணம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சந்தரும் நரிகள் பயங்கரமாக ஊளையிட்டபடியே உலவின.

திசைகள் எரிவது போலத் தெரிந்தன, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீலவானத்தில் இருந்து புழுதி {மண்} மாரி பொழிந்தது. இரத்தத்தோடு கூடிய எலும்புத்துண்டுகளும் அங்கே மழையாகப்பொழிந்தது. அழுது கொண்டிருந்த விலங்குகள் அனைத்தின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. கவலையால் நிறைந்த அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறுநீரையும், தங்கள் குடல்களில் இருந்த உள்ளடக்கங்களையும் {மலத்தையும்} வெளியேற்றத் தொடங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனித ஊனுண்ணிகள், ராட்சசர்கள் ஆகியோரின் உரத்தக் கூச்சல்கள் போரின் பேரொலியையே செவிக்குப் புலப்படாதவையாக ஆக்கின. நரிகள், வல்லூறுகள், காக்கைகள் நாய்கள் ஆகியன, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான ஒலிகளை எழுப்பியபடி, களத்தில் பாயவும், கீழ்நோக்கி வரவும் ஆரம்பித்தன. சூரிய வட்டிலை {சூரியனைத்} தாக்கிய சுடர்மிகும் எரிகோள்கள் {தூமகேது} பெரும் பயங்கரங்களை முன்னறிவித்தபடி பூமியில் வேகமாக விழுந்தன.

பாண்டவர்களுக்கும் , தார்தராஷ்டிரர்களுக்கும் உரிய இரு பெரும் படைகளும், அந்தப் பயங்கர மோதலில் புயலால் நடுங்கும் காடுகளைப் போலச் சங்குகள் மற்றும் பேரிகைகள் உருவாக்கிய பெரும் ஆரவாரத்தின் விளைவாக நடுங்கின. மன்னர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் நிறைந்தவையும், தீய {அசுபமான} காலத்தில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டவையுமான இரு படைகளும் உண்டாக்கிய ஒலி, புயலால் கலங்கடிக்கப்படும் பெருங்கடல்களின் ஒலிகளை ஒத்திருந்தது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்