Sunday, March 06, 2016

அர்ஜுனன் துச்சாசனன் மோதல்! - பீஷ்ம பர்வம் பகுதி – 111

The encounter between Arjuna and Dussasana! | Bhishma-Parva-Section-111 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 69)

பதிவின் சுருக்கம் : சிகண்டியை அறிவுறுத்திய அர்ஜுனன்; ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்ட வீரர்களின் பட்டியல்; அர்ஜுனனைத் தடுத்த துச்சாசனன்; துச்சாசனனின் வில்லையும் தேரையும் முறித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தவிர்த்துப் பீஷ்மரிடம் ஓடிய துச்சாசனன்; மயக்கம் தெளிந்த துச்சாசனன் மீண்டும் அர்ஜுனனுடன் போரிட்டது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட அர்ஜுனன், சிகண்டியிடம், "பாட்டனை {பீஷ்மரை} நோக்கிச் செல்வாயாக. இன்று நீ பீஷ்மரிடம் சிறு அச்சத்தையும் கொள்ளக்கூடாது. என் கூரிய கணைகளின் மூலம் நானே அவரது சிறந்த தேரில் இருந்து அவரைப் {பீஷ்மரைக்} கீழே வீழ்த்துவேன்" என்றான் {அர்ஜுனன்}.


பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த வார்த்தைகளைக் கேட்டு கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.

அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யுவும் பார்த்தனின் {அர்ஜுனனின்} வார்த்தைகளைக் கேட்டு பீஷ்மரை நோக்கி மகிழ்ச்சியுடன் விரைந்தனர்.

முதிர்ந்தவர்களான விராடன், துருபதன் ஆகியோரும் கவசம் பூண்ட குந்திபோஜனும், உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீஷ்மரை நோக்கி விரைந்தனர்.

நகுலன், சகாதேவன், வீரமன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரும், வீரர்களில் எஞ்சியோர் அனைவரும், ஓ! ஏகாதிபதி, பீஷ்மரை நோக்கியே விரைந்தார்கள்.

ஒன்றாகச் சேர்ந்து செல்லும் (பாண்டவப் படையின்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை எதிர்த்த உமது வீரர்களைப் பொறுத்தவரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் தங்கள் சக்திக்குத் தக்கபடி எதிர்த்தார்கள். உம்மிடம் (அவர்களைக் குறித்துச்) சொல்லும் என்னை {என் வார்த்தைகளைக்} கேட்பீராக.

அந்தப் போரில், சித்திரசேனன் [1], இளம்புலியொன்று காளையைத் தாக்குவதைப் போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரிடம் சென்று கொண்டிருந்த சேகிதானனை எதிர்த்து விரைந்தான்.

[1] துரியோதனன் தம்பிகளுள் ஒருவன்.

கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் செயல்வேகத்துடனும், ஆவேசத்துடனும் முயன்று பீஷ்மரை அடைந்திருந்த திருஷ்டத்யும்னனைத் தடுத்தான்.

சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டுப் பீஷ்மரைக் கொல்ல விரும்பிய பீமசேனனைப் பெரும் செயல்வேகத்துடன் தடுத்தான்.

அதேபோலப் பீஷ்மரின் உயிரைக் (காக்க) விரும்பிய விகர்ணனும், சுற்றிலும் எண்ணற்ற கணைகளை இறைத்த துணிச்சல் மிக்க நகுலனைத் தடுத்தான்.

சினத்தால் தூண்டப்பட்ட சரத்வானின் மகனான கிருபரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய சகாதேவனைத் தடுத்தார்.

வலிமைமிக்கத் துர்முகன் [2], பீஷ்மரைக் கொல்ல விரும்பியவனும், கொடுஞ்செயல் புரிபவனுமான பீமசேனனின் வலிமைமிக்க மகனை {கடோத்கசனை} நோக்கி விரைந்தான்.

[2] துரியோதனனின் தம்பிகளுள் ஒருவன்.

உமது மகன் துரியோதனன், போரில் முன்னேறிய சாத்யகியைத் தடுத்தான் [3].

[3] வேறு பதிப்பொன்றில் சாத்யகியை எதிர்த்தது அலம்புசன் என்று சொல்லப்பட்டுள்ளது.

காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய அபிமன்யுவைத் தடுத்தான்.

சினத்தால் தூண்டப்பட்ட அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முதிர்ந்தவர்களும், ஒன்றிணைந்திருப்பவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் தடுத்தான்.

போரில் ஆவேசத்துடன் முயன்று வந்த பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பீஷ்மரின் மரணத்தை விரும்பியவனும், பாண்டவர்களில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனை எதிர்த்தார்.

வலிமைமிக்க வில்லாளியான துச்சாசனன், அந்தப் போரில் (தன் பிரகாசமான ஆயுதங்களால்) பத்து திக்குகளுக்கும் ஒளியூட்டுபவனும், பீஷ்மரை அடைய விரும்பியவனும், சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்டவனும், பெரும் வேகத்துடன் விரைந்து வந்தவனுமான அர்ஜுனனைத் தடுத்தான்.

அந்தப் பெரும்போரில் உமது படையின் பிற வீரர்கள், பீஷ்மருக்கு எதிராகச் செல்லும் பாண்டவர்களின் {பாண்டவப் படையின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தடுத்தார்கள்.

சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கத்தேர்வீரனான திருஷ்டத்யும்னன், பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்து, {தன்} துருப்புகளிடம் மீண்டும் மீண்டும் உரத்த குரலில், "அதோ, குரு குலத்தை மகிழ்விப்பவரான அர்ஜுனர், போரில் பீஷ்ரை எதிர்த்துச் செல்கிறார். கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைவீராக. அஞ்சாதீர். பீஷ்ரால் போரில் உங்களைத் தாக்க இயலாது [4]. போரில் அர்ஜுனரிடம் போராட வாசவனும் {இந்திரனும்} துணியமாட்டான். எனவே, போரில் துணிச்சலைக் கொண்டிருந்தாலும், முதிர்ந்து, பலமற்றவராக இருக்கும் பீஷ்மரைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்?" என்றான்.

[4] அதாவது, பீஷ்மர் உங்களைப் பிடிக்கவோ, அடையவோ மாட்டார் எனச் சொல்வதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்

தங்கள் படைத்தலைவனின் {திருஷ்டத்யும்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} தேரை நோக்கி விரைந்தனர். எனினும், உமது படையில் மனிதர்களில் முதன்மையான பலர், உயிரூட்டும் சக்தியின் மூர்க்கமான திரள் போலப் பீஷ்மரை எதிர்த்து விரையும் அவ்வீரர்களை மகிழ்ச்சியாக ஏற்றுத் தடுத்தனர் [5].

[5] வேறொரு ஒரு பதிப்பில், "போரில் வரும் அந்தப் பாண்டவ வீரர்களை, உமது வீரர்களில் சிறந்த மனிதர்கள், உற்சாகத்துடன், வெள்ளத்தை மலைகள் தடுப்பது போலத் தடுத்தார்கள்" என்று இருக்கிறது.

வலிமைமிக்கத் தேர்வீரனான துச்சாசனன், அச்சங்கள் அனைத்தையும் கைவிட்டு, பீஷ்மரின் உயிரைப் பாதுகாக்க விரும்பி, தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்பாண்டவர்களும், பீஷ்மரின் தேரின் அருகில் நின்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனின் தேர் வரை சென்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} மேலும் முன்னேற முடியாத மிக அற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டோம். பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலவே உமது மகன் (துச்சாசனன்}, கோபம் நிறைந்த பாண்டுவின் மகனைத் {அர்ஜுனனைத்} தடுத்தான்.

இருவரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக இருந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இருவரும் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அழகிலும், காந்தியிலும் ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அவ்விருவரும் சூரியனையோ, சந்திரனையோ ஒத்திருந்தனர். கோபம் தூண்டப்பட்டிருந்த அவ்விருவரும், ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பினர். பழங்காலத்தின் மயனும் சக்ரனும் {இந்திரனும்} போல, அந்தப் பயங்கரப் போரில் அவ்விருவரும் மோதிக் கொண்டனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன், மூன்று {3} கணைகளால் பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, இருபதால் {20 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான். விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இப்படிப் பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், நூறு நாராசங்களால் துச்சாசனனைத் துளைத்தான். இவை {அந்தக் கணைகள்}, பின்னவனின் {துச்சாசனனின்} கவசங்களின் ஊடாக ஊடுருவி அந்தப் போரில் அவனது குருதியைக் குடித்தன.

பிறகு துச்சாசனன், கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மீண்டும், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மூன்று கூரிய கணைகளால் அர்ஜுனனின் நெற்றியைத் துளைத்தான். நெற்றியில் தைத்த கணைகளோடு கூடிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நெடும் கொடுமுடிகளோடு கூடிய மேரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். பெரும் வில்லாளியான அந்தப் பார்த்தன், வில் தரித்த உமது மகனால் {துச்சாசனனால்} இப்படி ஆழத் துளைக்கப்பட்டு, அந்தப் போரில் மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்ட ராகு, வளர்பிறையின் பதினைந்தாவது {15} நாளில் முழுமையாக இருக்கும் சந்திரனைப் பீடிப்பதைப் போலச் சினத்தால் தூண்டப்பட்டுத் துச்சாசனனைப் பீடித்தான். அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, அந்தப் போரில், கங்கப் பறவையின் தன்மைகளைக் கொண்ட {கழுகின் இறகுகளாலான} சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பல கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, மூன்று கணைகளால் துச்சாசனனின் வில்லை அறுத்து, அவனது தேரையும் ஒடித்து, காலனின் கணைகளை ஒத்த கடுங்கணைகள் பலவற்றை அவன் {துச்சாசனன்} மீது ஏவினான் [6]. எனினும், உமது மகன், வீரியத்துடன் முயன்று பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே அவற்றை வெட்டினான். இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தன.

[6] வேறொரு பதிப்பில் கங்குலியில் இல்லாத செய்தி ஒன்று இருக்கிறது. அது பின்வருமாறு. "அந்தத் துச்சாசனன், பீமனுக்கு எதிரில் நின்று கொண்டு வேறு வில்லைக் கையிலெடுத்து இருபத்தைந்து கணைகளாலே அர்ஜுனனை இரண்டு கைகளிலும் மார்பிலும் தாக்கினான்".

பிறகு, உமது மகன் மிகக் கூர்மையான கணைகள் பலவற்றால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான எண்ணற்ற கணைகளைத் தன் வில்லின் நாணில் பெருத்தி, அவற்றைக் குறி பார்த்து, தன் எதிரியின் மீது அவை அனைத்தையும் ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னப்பறைவைகளைப் போல, அவை அந்த உயர் ஆன்ம வீரனின் {துச்சாசனனின்} உடலை ஊடுருவிச் சென்றன. இப்படி உயர் ஆன்ம பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} பார்த்தனை {அர்ஜுனனைத்} தவிர்த்துவிட்டு, பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தான்.

உண்மையில், அடியற்ற ஆழமான நீரில் இப்படி மூழ்கிக் கொண்டிருந்தவனுக்குத் {துச்சாசனனுக்குப்} பீஷ்மர் ஒரு தீவானார். வீரமும் ஆற்றலும் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு உணர்வு மீண்டு, (அசுரன்) விருத்திரனைத் தடுத்த புரந்தரனைப் {இந்திரனைப்} போல, பார்த்தனை {அர்ஜுனனை} மீண்டும் தடுக்கத் தொடங்கினான். பெரும் வடிவம் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, அர்ஜுனனைத் துளைக்கத் தொடங்கினான், ஆனால் பின்னவனோ {அர்ஜுனனோ} (இவை அனைத்தாலும்) எள்ளளவும் வலியை உணரவில்லை" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்