Wednesday, March 23, 2016

கர்ணனை அனுமதித்த பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 124

Bhishma permitted Karna! | Bhishma-Parva-Section-124 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 82)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் சென்ற கர்ணன்; கர்ணனிடம் அன்பொழுகப் பேசிய பீஷ்மர்; கர்ணனைப் பாண்டவர்களுடன் சேருமாறு அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரையை மறுத்துப் போரில் களம் காண பீஷ்மரிடம் அனுமதி கோரிய கர்ணன்; கர்ணனுக்கு அனுமதியளித்த பீஷ்மர்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சந்தனுவின் மகனான பீஷ்மர் அமைதியடைந்த பிறகு, ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய இடங்களுக்கு {தங்கள் தங்கள் பாசறைகளுக்குத்} திரும்பினர். பீஷ்மரின் படுகொலையைக் கேள்விப்பட்ட [1] மனிதர்களில் காளையான ராதையின் மகன் (கர்ணன்), ஓரளவு அச்சத்தால் தூண்டப்பட்டு அங்கே வந்தான். அவன் {கர்ணன்}, நாணல் படுக்கையில் {கிடப்பதைப் போல} கிடக்கும் [2] அந்தச் சிறப்புவாய்ந்த வீரரை {பீஷ்மரைக்} கண்டான். பிறகு, பெரும்புகழ் கொண்ட அந்த விருஷன் (கர்ணன்), கண்களை மூடிக் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} அணுகி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவரது பாதத்தில் விழுந்தான். அவன் {கர்ணன் பீஷ்மரிடம்}, “ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, உமது கண்களுக்கு முன்பாக இருந்த போதெல்லாம், உம்மால் எங்கும் வெறுப்புடனே பார்க்கப்பட்ட நான் ராதையின் மகன் {கர்ணன்} {வந்திருக்கிறேன்}” என்றான் [3].


[1] பீஷ்ம பர்வம் பகுதி 121ல் பீஷ்மரின் மரணத்தை நினைத்து வருந்திய குறிப்பு இருக்கிறது.

[2] வேறொரு பதிப்பில், “அவன் {கர்ணன்}, அப்பொழுது கணைகளின் படுக்கையை அடைந்த மகாத்மாவான பீஷ்மரை, ஜனனகாலத்தில் நாணல்படுக்கையில் கிடந்த வீரனும், தலைவனுமான சுப்ரமண்யனைப் போலக் கண்டான்” என்று இருக்கிறது.

[3] வேறொரு பதிப்பில், “ஓ குருக்களில் சிறந்தவரே, யான் ராதையின் மகன்; குற்றம்மற்றவனாயினும் பார்க்கும்பொழுதெல்லாம் உம்மால் வெறுக்கப்படுபவன்” என்று கர்ணன் கூறியதாக இருக்கிறது.

இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், குருக்களின் முதிர்ந்த தலைவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, திரையால் [4] மூடப்பட்ட தன் கண்களின் இமைகளை மெல்ல உயர்த்தி, காவலர்களை விலகச் செய்து, அந்த இடத்தில் யாரும் இல்லாததைக் கண்டு {உறுதி செய்து கொண்டு}, மகனை அணைக்கும் தந்தையைப் போல ஒரு கரத்தால் கர்ணனை அணைத்துக் கொண்டு, பெரும்பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார். {பீஷ்மர் கர்ணனிடம்} “வா, என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு எப்போதும் சவால் விடும் எதிராளியான நீ வருவாயாக. நீ என்னிடம் வந்திராவிடில் அஃது உனக்கு நன்றாயிராது என்பதில் ஐயமில்லை. நீ குந்தியின் மகனே, ராதையினுடையவனல்ல {ராதையின் மகன் அல்ல}. அதிரதனும் உன் தந்தையல்ல. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னைக் குறித்த இவை அனைத்தையும் நான் நாரதரிடமும், கிருஷ்ண துவைபாயனரிடமும் {வியாசரிடமும்} கேட்டிருக்கிறேன். இவையனைத்தும் உண்மை என்பதில் ஐயமில்லை.

[4] ஒரு வேளை பீளையாக இருக்கலாம்.

ஓ! மகனே {கர்ணா} நான் உன்னிடம் வெறுப்பெதையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் உண்மையாகவே சொல்கிறேன். உன் சக்தியைக் குறைப்பதற்காகவே நான் அத்தகு கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே {கர்ணா}, காரணமே இல்லாமல் நீ பாண்டவர்களைத் தவறாகப் பேசுகிறாய். பாவத்தாலேயே நீ இவ்வுலகில் வந்தாய். இதன் காரணமாக உனது இதயம் அப்படி இருக்கிறது. செருக்காலும், இழிந்தோரின் தோழமையாலும் உன் இதயம் தகுதிவாய்ந்த மனிதர்களையும் {புண்ணியவான்களையும்} வெறுக்கிறது. இதன் காரணமாகவே நான் குரு முகாமில் உன்னைக் குறித்து அத்தகு கடும் வார்த்தைகளைப் பேசினேன்.

பூமியில் எதிரியால் தாங்கிக் கொள்ளக் கடினமான உன் போராற்றலைக் குறித்து நான் அறிவேன். பிராமணர்கள் மீது நீ கொண்ட மரியாதையையும், உனது வீரத்தையும், கொடையளிப்பதில் நீ கொண்ட பெரும் பற்றையும் நான் அறிவேன். ஓ! தேவனைப் போன்றவனே {கர்ணா}, மனிதர்களில் உன்னைப் போல வேறு எவனும் இல்லை. குடும்பத்துக்குள் உண்டாகும் பிளவுக்கு அஞ்சியே நான் உன்னைக் குறித்துக் கடும் வார்த்தைகளை எப்போதும் பேசினேன்.

வில்லாளித்தன்மை, ஆயுதத்தைக் குறிபார்த்தல், கர நளினம் {லாகவம்}, ஆயுத பலம் ஆகியவற்றில் நீ பல்குனனுக்கோ {அர்ஜுனனுக்கோ}, உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கோ இணையானவனாவாய்! ஓ! கர்ணா, காசி நகரத்திற்குத் தனியாக உன் வில்லுடன் சென்று, குரு மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மணமகளை {பானுமதியை} அடைவதற்காகப் போரில் மன்னர்களைத் தாக்கினாய். வலிமைமிக்கவனும், வெல்லப்பட இயலாதவனும், போரில் தன் ஆற்றல் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுபவனுமான மன்னன் ஜராசந்தனும் போரில் உனக்கு இணையாக முடியவில்லை. நீ பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவன்; நீ எப்போதும் நல்ல போரைச் செய்பவன். சக்தியிலும், பலத்திலும் நீ தேவர்களின் பிள்ளைக்கு இணையானவன், மேலும், நிச்சயமாக மனிதர்களுக்கு மேன்மையானவன்.

உனக்கு எதிராக நான் கொண்டிருந்த கோபம் தணிந்துவிட்டது. முயற்சியால் விதியைத் தவிர்க்க முடியாது. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கர்ணா}, வீரர்களான பாண்டுவின் மகன்கள் உனக்கு இரத்த {உடன்பிறந்த} சகோதரர்களாவர். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, நீ எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பினால் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்வாயாக. ஓ! சூரியனின் மகனே {கர்ணா}, இந்தப் பகையுணர்ச்சிகள் என்னோடு முடியட்டும். பூமியின் மன்னர்கள் அனைவரும் இன்று ஆபத்திலிருந்து விடுபடட்டும்” என்றார் {பீஷ்மர்}.

கர்ணன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை நான் அறிவேன். இவை யாவிலும் (நீர் சொல்வதைப் போலவே) ஐயமில்லை. நீர் என்னிடம் சொல்வதைப் போலவே, ஓ! பீஷ்மரே, நான் குந்தியின் மகனே, சூதர் ஒருவரின் மகனல்ல. எனினும், நான் குந்தியால் கைவிடப்பட்டு, சூதர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வந்தேன். (இவ்வளவு நெடுங்காலத்திற்கு) துரியோதனனின் செல்வத்தை அனுபவித்த நான், அஃதை இப்போது பொய்யாக்கத் துணியேன்.

பாண்டவர்களுக்காக உறுதியாகத் தீர்மானம் செய்திருக்கும் வசுதேவரின் மகனை {கிருஷ்ணனைப்} போல, ஓ! பிராமணர்களுக்கு அபரிமித கொடையளிப்பவரே {பீஷ்மரே}, துரியோதனனுக்காக, என் உடைமைகள், என் உடல், என் பிள்ளைகள், மனைவி ஆகியோரையும் கைவிட நான் தயாராகவுள்ளேன். ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நோயால் மரணம் க்ஷத்திரியருக்குரியதில்லை. துரியோதனனைச் சார்ந்தே நான் எப்போதும் பாண்டவர்களை அவமதித்து வந்தேன். இக்காரியங்கள் அதன் வழியில் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாததாகும்.

முயற்சியால் விதியை வெல்லத் துணிந்தவர்கள் {இதுவரை} யார் இருந்துள்ளனர்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, பூமியின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் உம்மால் காணப்பட்டு, சபையிலும் அறிவிக்கப்பட்டது. அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்} பிற மனிதர்களால் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை நான் நன்கறிவேன். அவர்களோடே நாம் போரிடத் துணிகிறோம். போரில் நான் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வீழ்த்துவேன். இதுவே என் உறுதியான தீர்மானமாகும்.

(பாண்டவர்களுக்கு எதிரான) இந்தக் கடும் பகையைக் கைவிட இயன்றவனாக நான் இல்லை. மகிழ்ச்சியான இதயத்துடனும், என் வகையின் கடமைகளை என் கண் முன் கொண்டும், நான் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்ப்பேன். ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கும் எனக்கு உமது அனுமதியைக் கொடுப்பீராக. நான் போரிடுவேன். இதுவே என் விருப்பமாகும். எப்போதாவது நான், கோபத்தாலோ, சிந்தனையற்ற தன்மையினாலோ உமக்கு எதிராகக் கடுஞ்சொற்களைப் பேசியிருந்தாலும், எந்தச் செயலையாவது உமக்கெதிராகச் செய்திருந்தாலும் என்னை நீர் மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றான் {கர்ணன்}.

பீஷ்மர் {கர்ணனிடம்}, “உண்மையிலேயே, இந்தக் கடும் பகையை உன்னால் கைவிட இயலவில்லையெனில், ஓ! கர்ணா நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். சொர்க்கத்தில் விருப்பத்துடன் போரிடுவாயாக. கோபமில்லாமலும், பழியுணர்ச்சியின்றியும், உனது சக்திக்கும், துணிவுக்கும் தகுந்த வகையில், அற நடத்தை நோற்று மன்னனுக்கு {துரியோதனனுக்குப்} பணிசெய்வாயாக. ஓ! கர்ணா, என் அனுமதியைப் பெற்றுக் கொள்வாயாக. நீ எதை வேண்டினாயோ அதை அடைவாயாக. நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} மூலமாக, க்ஷத்திரியனின் கடமைகளை நிறைவேற்ற வல்ல உலகங்கள் அனைத்தையும் {இதன் பிறகு} அடைவாயாக.

நேர்மையான போரைத் தவிர, வேறெதிலும் க்ஷத்திரியன் ஒருவனுக்குப் பெருமகிழ்ச்சி இல்லை என்பதால், செருக்கிலிருந்து விடுபட்டு, உன் பலம் மற்றும் சக்தியை நம்பி போரில் ஈடுபடுவாயாக. அமைதியை ஏற்படுத்த நான் நீண்ட காலம் பெருமுயற்சிகளைச் செய்தேன். ஆனால், ஓ! கர்ணா, நான் அந்தப் பணியில் வெல்லவில்லை. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இதைச் சொன்னதும், பீஷ்மரை வணங்கிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, அவரிடம் மன்னிப்பைப் பெற்று, தன் தேரில் ஏறி, உமது மகனை (அவனது {துரியோதனனின்} பாசறையை} நோக்கிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}" {என்றார் வைசம்பாயனர்}.

***************** பீஷ்ம வத உபபர்வம் முற்றிற்று ***************
********* பீஷ்ம பர்வம் முற்றிற்று *********



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்