Monday, May 02, 2016

பார்த்தனின் செயலை வியந்த மாதவன்! - துரோண பர்வம் பகுதி – 025

Madhava wondered Partha’s feat! | Drona-Parva-Section-025 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : பகதத்தனைக் கொல்வதாக உறுதியேற்று அவனிடம் விரைந்த அர்ஜுனனை சம்சப்தகர்கள் போருக்கு அழைப்பது; பகதத்தனை விட்டுச் சம்சப்தகர்களிடம் திரும்பிய அர்ஜுனன்; போரில் தாக்கப்பட்டு மயக்கமடைந்த கிருஷ்ணன்; பிரம்மாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனின் செயலை எண்ணி வியந்த கிருஷ்ணன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் அர்ஜுனனின் அருஞ்செயல்களைக் குறித்து நீர் என்னைக் கேட்டீர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே} போரில் பார்த்தன் {அர்ஜுனன்} எதை அடைந்தான் என்பதைக் கேளும். களத்தில் பகதத்தன் பெரும் சாதனைகளைச் செய்த போது, துருப்புகளுக்கிடையில் ஏற்பட்ட அலறலைக் கேட்டும், எழுந்த புழுதியைக் கண்டும், குந்தியின்மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தன் யானையில் பெரும் வேகத்தோடு போருக்கு முன்னேறுவதாகத் தெரிகிறது. நாம் கேட்கும் இந்த உரத்த ஆரவாரம் அவனால் {பகதத்தனால்} ஏற்பட்டதாகவே இருக்க வேண்டும். யானையின் முதுகில் இருந்து போரிட்டு {பகையணியைக்} கலங்கடிக்கும் கலையை நன்கறிந்தவனும், போரில் இந்திரனுக்குச் சற்றும் குறையாதவனுமான அவன் {பகதத்தன்} உலகில் உள்ள யானை வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் என நான் நினைக்கிறேன்.


மேலும் அவனது யானையும் {சுப்ரதீகமும்} போரில் மோதுவதற்கு எதிரியற்ற முதன்மையான யானையாகும். பெரும் திறமை கொண்டதும், களைப்பனைத்துக்கும் மேலானதுமான அது {அந்த யானை}, ஆயுதங்கள் எதையும் பொருட்படுத்தாது. ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணனா}, அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லதும், நெருப்பின் தீண்டலைக் கொண்டதுமான அஃது {அந்த யானை} ஒன்றே தனியாக இன்று பாண்டவப் படையை அழித்துவிடும். நம்மிருவரைத் தவிர அந்த உயிரினத்தைத் தடுக்கவல்லவர் வேறு யாருமில்லை. எனவே, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} இருக்கும் இடத்திற்கு விரைவாகச் செல்வாயாக. தன் யானையுடைய பலத்தின் விளைவால் போரில் செருக்குடையவனும், தன் வயதின் விளைவால் ஆணவம் கொண்டவனுமான அவனை {பகதத்தனை} பலனைக் {பலாசுரனைக்} கொன்றவனிடம் {இந்திரனிடம்} விருந்தினனாக இன்றே அனுப்புவேன்” என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இந்த வார்த்தைகளால் கிருஷ்ணன், பாண்டவப் படையணிகளைப் பிளந்து கொண்டிருக்கும் பகதத்தன் இருக்கும் இடத்திற்கு முன்னேறத் தொடங்கினான். அர்ஜுனன், பகதத்தனை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பதினாலாயிரம் {14000} எண்ணிக்கையிலான வலிமைமிக்கச் சம்சப்தகத் தேர்வீரர்களும், வாசுதேவனை {கிருஷ்ணனை} வழக்கமாகப் பின்தொடரும் பத்தாயிரம் கோபாலர்கள் அல்லது நாராயணர்களும், களத்ததிற்குத் திரும்பி அவனைப் போருக்கு அழைத்தனர் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, “செல்லுகின்ற அந்த அர்ஜுனனை பெரும் தேர்வீரர்களான பதினாலாயிரம் சம்சப்தகர்கள் பின்பக்கத்திலிருந்து அழைத்துக் கொண்டு நெருங்கி வந்தனர். அவர்களுள் பெரும் தேர்வீரர்களான பத்தாயிரம் திரிகர்த்தர்கள் அர்ஜுனனையும், பெரும் தேர்வீரர்களான நாலாயிரம் பேர் கிருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு பின்தொடர்ந்தனர். மன்மதநாத தத்தரின் பதிப்பில் இவ்வரிகள் இன்னும் தெரிவாக இருப்பதாகத் தெரிகிறது. அது பின்வருமாறு: “அர்ஜுனன் பகதத்தனை நோக்கிச் சென்ற போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பதினாலாயிரம் சம்சப்தகர்கள் பின்புறத்தில் இருந்து அவனை மகிழ்ச்சியாக அழைத்தனர். பதினாலாயிரம் பேர்களான இவர்களில் பத்தாயிரம் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் திரிகர்த்த குலத்தைச் சேர்ந்தவர்கள், (எஞ்சிய) நாலாயிரம் பேர் வசுதேவர் மகனைப் பின்தொடர்பவர்களாவர் {கோபாலர்கள் அல்லது நாராயணர்கள் ஆவர்}” என்று இருக்கிறது.

{ஒருபுறம்} பகதத்தனால் பிளக்கப்படும் பாண்டவப் படையைக் கண்டும், மறுபுறம் சம்சப்தகர்களால் அழைக்கப்பட்டும், அர்ஜுனனின் இதயம் இரண்டாகப் பிரிந்தது. அவன் {அர்ஜுனன்}, “சம்சப்தகர்களுடன் போரிட இந்த இடத்திற்குத் திரும்புவது, அல்லது யுதிஷ்டிரரிடம் செல்வது ஆகிய இந்த இரண்டு செயல்களில் இன்று எது எனக்குச் சிறந்தது?” என்று எண்ணத் தொடங்கினான். தன் புரிதலின் துணை கொண்டு சிந்தித்த அவனது {அர்ஜுனனின்} இதயம் இறுதியாக, ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, சம்சப்தகர்களைக் கொல்வதில் உறுதியாக நிலைத்தது.

குரங்குகளில் முதன்மையானதைத் தன் கொடியில் கொண்ட அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்), தனியாகப் போரில் ஆயிரக்கணக்கான தேர்வீரர்களைக் கொல்ல விரும்பித் திடீரெனத் திரும்பினான். அர்ஜுனனைக் கொல்ல துரியோதனன், கர்ணன் ஆகிய இருவரும் நினைத்ததும் இதுவே. இதற்காகவே அவர்கள் இந்த இரட்டை மோதலுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். பாண்டுவின் மகனும் தன் இதயத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைபாயவிட்டான், ஆனால், இறுதியில், போர்வீரர்களில் முதன்மையான சம்சப்தகர்களைக் கொல்லத் தீர்மானித்துத் தன் எதிரிகளின் நோக்கத்தைக் கலங்கடித்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களான வலிமைமிக்கச் சம்சப்தகர்கள் ஆயிரக்கணக்கான நேரான கணைகளை அர்ஜுனன் மீது ஏவினர். அந்தக் கணைகளால் மறைக்கப்பட்ட குந்தியின் மகனான பார்த்தனோ {அர்ஜுனனோ}, ஜனார்த்தனன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணனோ, குதிரைகளோ, அந்தத் தேரோ காணப்படவில்லை {கண்ணுக்குப் புலப்படவில்லை}. அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} தன் புலன்களை இழந்து, பெரிதும் வியர்த்தான். அதன் பேரில் பிரம்மாயுதத்தை ஏவிய பார்த்தன் {அர்ஜுனன்}, கிட்டத்தட்ட அவர்கள் அனைவரையும் அழித்தான்.

வில்லின் நாண்கயிறுகளைப் பிடித்துக் கொண்டும், விற்களையும், கணைகளையும் கொண்ட நூற்றுக்கணக்கான கரங்களும், நூறு நூறான கொடிமரங்களும், குதிரைகளும் கீழே தரையில் விழுந்தன, மேலும், தேரோட்டிகளும், தேர்வீரர்களும் விழுந்தனர். காடுகள் அடர்ந்து வளர்ந்த முதன்மையான மலைகளுக்கும், மேகத் திரள்களுக்கும் ஒப்பானவையும், நன்றாகப் பழக்கப்பட்டவையுமான பெரும் யானைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டும், தங்கள் பாகன்களை இழந்தும் பூமியில் விழுந்தன. பாகர்களைத் தங்கள் முதுகுகளில் கொண்ட பல யானைகள், அர்ஜுனனின் கணைகளால் நசுக்கப்பட்டு, தங்கள் முதுகில் உள்ள சித்திரவேலைப்பாடுகளைக் கொண்ட துணிகள் வெட்டப்பட்டு, தங்கள் அம்பாரிகள் உடைக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தன.

கிரீடியின் {அர்ஜுனனின்} பல்லங்களால் வெட்டப்பட்ட மனிதர்களுடைய கரங்கள், வாள்கள், வேல்கள், கத்திகள், நகங்கள், முத்கரம், போர்க்கோடரி ஆகியவற்றைப் பிடித்த நிலையிலேயே கீழே விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காலைச்சூரியனைப் போன்றோ, தாமரையைப் போன்றோ, சந்திரனைப் போன்றோ இருந்த அழகிய தலைகள் அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தன. சினத்தில் இப்படிப் பல்வேறு வகைகளிலான மரணக் கணைகளால் எதிரியைக் கொல்வதில் பல்குனன் {அர்ஜுனன்} ஈடுபட்டபோது, அந்தப் படை எரிவது போலத் தெரிந்தது. தண்டுகளுடன் கூடிய தாமரைகளை நசுக்கும் யானையைப் போல அந்தப் படையை நசுக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட அனைத்து உயிரினங்களும், “நன்று, நன்று” என்று சொல்லி அவனை மெச்சின.

வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான பார்த்தனின் அந்தச் சாதனையைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} மிகவும் ஆச்சரியமடைந்து, கூப்பிய கரங்களுடன் அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ அடைந்திருக்கும் சாதனையைச் சக்ரனாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, பொக்கிஷங்களின் தலைவனாலோ {குபேரனாலோ} செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன். இன்று வலிமைமிக்கச் சம்சப்தக வீரர்கள் அனைவரையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீழ்த்தியதை நான் கண்டேன்” என்றான் {கிருஷ்ணன்}.

பார்த்தன் {அர்ஜுனன்}, போரில் ஈடுபட்ட சம்சப்தகர்களைக் கொன்ற பிறகு, கிருஷ்ணனிடம், “பகதத்தனிடம் செல்வாயாக” என்றான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்