Tuesday, May 03, 2016

வாய்ப்பைப் பயன்படுத்தாத அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 026

Arjuna availed not the opportunity! | Drona-Parva-Section-026 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சுசர்மன்; சுசர்மனின் தம்பிகளைக் கொன்ற அர்ஜுனன்; சுசர்மனை மயக்கமடையச் செய்து கௌரவர்களை நோக்கி முன்னேறிய அர்ஜுனன்; பகதத்தன் அர்ஜுனன் மோதல்; தேரைத் திருப்பி சுப்ரதீகத்தைக் கொல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கிருஷ்ணன்; நியாயமான போரைக் கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாத அர்ஜுனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பார்த்தனின் {அர்ஜுனனின்} விருப்பத்தின் பேரில் கிருஷ்ணன், தங்கக் கவசத்தால் மறைக்கப்பட்டவையும், மனோவேகம் கொண்டவையுமான அவனது வெண்குதிரைகளைத் துரோணரின் படைப்பிரிவுகளை நோக்கித் தூண்டினான். இப்படி அந்தக் குருக்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, துரோணரால் அதீதமாகப் பீடிகப்பட்ட தன் சகோதரர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, {அர்ஜுனனோடு} போரிட விரும்பிய சுசர்மன் தன் தம்பிகளோடு அவனைப் பின்தொடர்ந்தான்.


பிறகு எப்போதும் வெல்பவனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம், “ஓ! மங்காத மகிமை கொண்டவனே {அச்யுதா, கிருஷ்ணா}, இங்கே தன் தம்பிகளோடு கூடிய சுசர்மன் போருக்குச் சவால் விடுக்கிறான். ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வடக்கில் நமது படை (துரோணரால்) பிளக்கப்படுகிறது. நான் இதைச் செய்ய வேண்டுமா, அதைச் செய்ய வேண்டுமா என இந்தச் சம்சப்தகர்களின் விளைவால் இன்று என் இதயம் அலைபாய்கிறது. நான் இப்போது சம்சப்தகர்களைக் கொல்வேனா? அல்லது ஏற்கனவே எதிரிகளால் பீடிக்கப்படும் என் துருப்புகளைத் தீங்கிலிருந்து காப்பேனா? நான், ’இவற்றில் எது எனக்குச் சிறந்தது?’ என்றே நினைக்கிறேன் என அறிவாயாக” என்றான் {அர்ஜுனன்}.

இப்படி அவனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, தேரைத் திருப்பிக் கொண்டு, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்} இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது அர்ஜுனன் ஏழு கணைகளால் சுசர்மனைத் துளைத்து, மேலும் இரண்டு கூரிய கணைகளால் அவனது வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். பிறகு அவன் {அர்ஜுனன்}, ஆறு கணைகளைக் கொண்டு திரிகர்த்த மன்னனின் {சுசர்மனின்} தம்பிகளை விரைவாக யமலோகம் அனுப்பிவைத்தான் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்த வரி சற்றே மாறுபடுகிறது, “அர்ஜுனன் விரைந்து ஆறு பாணங்களாலே திரிகர்த்த தேசாதிபனுடைய சகோதரனைக் குதிரைகளோடும் சாரதியோடும் யமலோகத்திற்கு அனுப்பினான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இப்படியே இருக்கிறது.

பிறகு சுசர்மன், அர்ஜுனனைக் குறிபார்த்து முழுக்க இரும்பாலானதும், பாம்பு போலத் தெரிந்ததுமான ஈட்டி ஒன்றை அவன் {அர்ஜுனன்} மீது எறிந்தான், வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} குறி பார்த்து, அவன் மீது வேல் ஒன்றை எறிந்தான். மூன்று கணைகளால் அந்த ஈட்டியையும், மேலும் மூன்று கணைகளால் அந்த வேலையும் அறுத்த அர்ஜுனன், தன் கணைகளின் மாரியால் இருந்த சுசர்மனை, அவனைத் தேரிலேயே புலன்களை இழக்கச் செய்தான்.

பிறகு, மழையைப் பொழியும் வாசவனை {இந்திரனைப்} போலக் கணைகளின் மாரியை இறைத்தபடி (உமது படைப்பிரிவை நோக்கி) மூர்க்கமாக அவன் {அர்ஜுனன்} முன்னேறியபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் எவரும் எதிர்க்கத் துணியவில்லை. முன்னேறிச் செல்லும்போதே வைக்கோல் குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் தன் கணைகளால் கௌரவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் எரித்தபடி தனஞ்சயன் {அர்ஜுனன்} முன்னேறினான். உயிர்வாழும் உயிரினமொன்று நெருப்பின் தீண்டலைத் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல, புத்திசாலியான அந்தக் குந்தியின் மகனுடைய {அர்ஜுனனின்} தடுக்கப்பட முடியாத வேகத்தை உமது துருப்புகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பகைவரின் படையை மூழ்கடித்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் இரையின் மீது) பாயும் கருடனைப் போல, பிராக்ஜோதிஷர்களின் மன்னனிடம் {பகதத்தனிடம்} வந்தான். தன் முடிவை அடைவதற்கு வஞ்சகமான பகடையாட்டத்தின் உதவியை நாடிய உமது மகனின் {துரியோதனனின்} பிழைக்காகவும், க்ஷத்திரியர்களை அழிப்பதின் பொருட்டும், அவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, {பாவமற்ற} அப்பாவிப் பாண்டவர்களுக்குப் போரில் நன்மையைச் செய்வதும், எதிரிகள் அனைவருக்கும் கேடுவிளைவிப்பதுமான காண்டீவத்தைத் தன் கைகளில் பிடித்தான்.

இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கலங்கடிக்கப்பட்ட உமது படை, ஓ !மன்னா, பாறையின் மீது மோதிய படகைப் போலப் பிளந்தது. பிறகு, துணிச்சல்மிக்கவர்களும், வெற்றியைக் கைப்பற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடியவர்களுமான பத்தாயிரம் {10000} வில்லாளிகள் (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) முன்னேறினர். அச்சமற்ற இதயங்களைக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். போரில் எவ்வளவு கனமான எந்தச் சுமையையும் தாங்க வல்ல பார்த்தன் {அர்ஜுனன்} அந்தக் கனமான சுமையை அடைந்தான். மதங்கொண்ட அறுபது வயது கோபக்கார யானை ஒன்று தாமரைக்கூட்டங்களை நசுக்குவதைப் போலவே, பார்த்தனும் {அர்ஜுனனும்} அந்த உமது படைப்பிரிவை நசுக்கினான்.

அந்தப் படைப்பிரிவு இப்படி நசுக்கப்பட்டபோது, மன்னன் பகதத்தன், அதே யானையில் {சுப்ரதீகத்தில்} அர்ஜுனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அதன் பேரில் மனிதர்களில் புலியான தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் தேரில் இருந்த படியே பகதத்தனை வரவேற்றான். அர்ஜுனன் தேருக்கும், பகதத்தன் யானைக்கும் இடையில் நடந்த மோதலானது அதீத கடுமையும் தீவிரமும் கொண்டதாக இருந்தது. அறிவியல் விதிகளின்படி {சாத்திர விதிப்படி} தயாரிக்கப்பட்ட தன் தேரில் ஒருவனும், தன் யானையில் மற்றவனும் என, வீரர்களான பகதத்தன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் களத்தில் திரிந்தனர்.

அப்போது பகதத்தன், மேகத்திரள்களைப் போலத் தெரிந்த தன் யானையில் இருந்து கொண்டு, தலைவன் இந்திரனைப் போலத் தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணை மாரியைப் பொழிந்தான். எனினும் வாசவனின் {இந்திரனின்} வீரமகன் {அர்ஜுனன்}, பகதத்தனின் அந்தக் கணை மாரி தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான். பிறகு பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {பகதத்தன்} அர்ஜுனனின் கணைமாரியைக் கலங்கடித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கணைகள் பலவற்றால் தாக்கினான். கணைகளின் அடர்த்தியான மழையால் அவர்கள் இருவரையும் மூழ்கடித்த பகதத்தன், கிருஷ்ணனையும் பார்த்தனையும் {அர்ஜுனனையும்} அழிப்பதற்காகத் தன் யானையைத் தூண்டினான்.

அந்தகனைப் போல முன்னேறி வரும் அந்தக் கோபக்கார யானையைக் கண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அந்த யானை தன் இடப்பக்கத்தில் இருக்குமாறு தன் தேரை விரைவாக நகர்த்தினான். தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு}, அந்தப் பெரும் யானையை, அதன் முதுகில் உள்ள பாகனோடு {பகதத்தனோடு} சேர்த்துக் கொல்ல இப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைத்தாலும், நியாயமான {நல்ல} போரின் விதிகளை நினைவுகூர்ந்த அவன் {அர்ஜுனன்}, அதை {அந்த வாய்ப்பைப்} பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை [2]. எனினும், அந்த யானை {சுப்ரதீகம்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிற யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் அடைந்து, அவையனைத்தையும் யமலோகத்திற்கு அனுப்பியது. இதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} சினத்தால் நிறைந்தான்” {என்றான் சஞ்சயன்}.

[2] வேறொரு பதிப்பில் இந்த வரி, “கோபங்கொண்ட அந்தகன் போல வருகின்ற அந்த யானையைக் கண்டு ஜனார்த்தனன் தேரினாலே அதிவேகத்தோடே அதனை அபஸவ்யமாகச் சுற்றினான். தனஞ்சயன் யுத்ததர்மத்தை நினைத்து யுத்தத்திற்காக வந்திருந்தாலும், திரும்பிய அந்தப் பெரிய யானையை அதன் மீதுள்ள பகதத்தனோடு மரணத்துக்கு உட்படுத்த விரும்பவில்லை.” என்றிருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்