Tuesday, May 10, 2016

சக்கர வியூகம்! - துரோண பர்வம் பகுதி – 032

The Circular array! | Drona-Parva-Section-032 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் ஒவ்வொருவரின் தகுதிகளையும், கிருஷ்ணனின் பெருமையையும் எடுத்துச் சொல்லும் சஞ்சயன்; துரோணர் அமைத்த சக்கர {பத்ம} வியூகம்; அந்த வியூகத்தில் கௌரவ வீரர்கள் ஒவ்வொருவரும் நின்ற நிலைகளைக் குறித்த வர்ணனை...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரில் கடுஞ்செயல்களைச் செய்பவர்களும், களைப்பனைத்துக்கும் மேம்பட்டவர்களும், சாதனைகளால் தங்களை நிரூபித்துக் கொள்பவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} ஐவரும், கிருஷ்ணனுடன் கூடி தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர்.

நீதி, செயல்கள், பரம்பரை, நுண்ணறிவு {புத்திக்கூர்மை}, சாதனைகள், புகழ், செழிப்பு ஆகியவற்றில் யுதிஷ்டிரனைப் போன்ற வேறொரு மனிதன் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை. உண்மைக்கும் {சத்தியத்துக்கும்}, நீதிக்கும் அர்ப்பணிப்புடன், ஆசைகளைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், பிராமணர்களை வழிபடுவதன் விளைவாலும், அது போன்ற இயல்புடைய பிற அறங்களாலும் {சிறப்பு குணங்களாலும்} எப்போதும் சொர்க்கத்தில் இன்புறுகிறான்.


யுக முடிவின் {ஊழிக்காலத்து} அந்தகன், ஜமதக்னியின் வீர மகன் (ராமர்) {பரசுராமர்}, தன் தேரிலுள்ள பீமசேனன் ஆகிய மூவரும் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இணையானவர்களாகவே சொல்லப்படுகின்றனர்.

போரில் தன் உறுதிமொழிகளை எப்போதும் அடையும் காண்டீவதாரியான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} பூமியில் சரியான இணை {ஒப்புவமை} ஒன்றையும் நான் காணவில்லை.

மேன்மையானவர்களிடம் மதிப்பு {குருபக்தி}, ஆலோசனைகளை வெளியிடாமை, பணிவு, சுயக்கட்டுப்பாடு, மெய்ந்நலம் {மேனியழகு}, துணிச்சல் ஆகிய ஆறும் எப்போதும் நகுலனிடம் இருக்கின்றன.

சாத்திரங்களில் அறிவு, ஈர்க்கும் தன்மை {இனிமை}, பண்பில் இனிமை {கம்பீரம்}, நீதி, ஆற்றல் ஆகிவற்றில் அசுவினிகளுக்கே இணையானவனாக வீர சகாதேவன் இருக்கிறான்.

கிருஷ்ணனிடமும், பாண்டவர்களிடம் உள்ள உன்னதக் குணங்கள் அனைத்தின் கூட்டும் அபிமன்யுவிடம் மட்டுமே காணப்படுகிறது. உறுதியில் யுதிஷ்டிரனுக்கு இணையானவனாக, நடத்தையில் கிருஷ்ணனுக்கும், சாதனைகளில் பயங்கரச் செயல் புரியும் பீமசேனனுக்கும் இணையானவனாக இருந்த அவன் {அபிமன்யு}, மேனி அழகு, ஆற்றல், சாத்திர அறிவு ஆகியவற்றில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனாக இருந்தான். பணிவிலோ, அவன் சகாதேவன் மற்றும் நகுலனுக்கு இணையானவனாக இருந்தான்” என்றான் {சஞ்சயன்} [1].

[1] மேற்கண்ட வர்ணனை முழுவதும் வேறொரு பதிப்பில் ஜனமேஜயன் வாயிலாக வைசம்பாயனருக்குச் சொல்லப்பட்டதாகச் சென்ற பகுதியின் {துரோண பர்வம் பகுதி 31ன்} [3]ம் அடிக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறோம். இங்கே சஞ்சயனே அவற்றைச் சொல்வதாக வருகிறது.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, வெல்லப்பட முடியாத சுபத்திரையின் மகன் அபிமன்யு போர்க்களத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறுதியுடனிருப்பீராக. தாங்க முடியாத உமது சோகத்தைத் தாங்கிக் கொள்வீராக. உமது சொந்தங்களின் பெரும்படுகொலைகளைக் குறித்து உம்மிடம் நான் சொல்லப் போகிறேன்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்} பெரும் சக்கர வியூகத்தை [2] அமைத்தார். அதில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான (நமது தரப்பின்) மன்னர்கள் அனைவரும் நிறுத்தப்பட்டனர். சூரியப் பிரகாசத்தைக் கொண்ட இளவரசர்கள் அனைவரும் {அந்த வியூகத்தின்} நுழைவாயிலிலேயே நிறுத்தப்பட்டனர் [3]. (ஒருவரோடொருவர் சேர்ந்து நிற்போம் என்று) அவர்கள் அனைவரும் உறுதி மொழிகளை ஏற்றிருந்தனர். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களை அவர்கள் அனைவரும் கொண்டிருந்தனர். சிவப்பு ஆடைகளையும், சிவப்பு ஆபரணங்களையும் அவர்கள் அனைவரும் அணிந்திருந்தனர். சிவப்பு கொடிகளையும் அவர்கள் அனைவரும் கொண்டிருந்தனர், மேலும் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சந்தனக் குழம்பையும், நறுமணமிக்க வேறு தைலங்களையும் {காரகில் சாந்துகளையும்} பூசிக் கொண்டு பூமாலை அணிந்தவர்களாக அவர்கள் அனைவரும் இருந்தனர். போரிட விரும்பிய அவர்கள் ஒரே அமைப்பாகச் செயல்பட்டு, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர். உறுதியான வில்லாளிகளான அவர்கள் அனைவரும் எண்ணிக்கையில் பத்தாயிரம் பேராக இருந்தனர். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவரோடொருவர் இரக்கம் கொண்டு, வீரச்செயல்களில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் விஞ்ச விரும்பி, ஒருவருக்கொருவர் நன்மை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அவர்கள் அனைவரும் உமது அழகிய பேரன் லக்ஷ்மணனைத் {துரியோதனன் மகனைத்} தலைமையில் கொண்டு போரிடச் சென்றனர்.

[2] வேறொரு பதிப்பில் இது பத்ம வியூகம் என்று சொல்லப்படுகிறது. “எக் கரமும் படை கொண்டு எழு சேனையை, எயில்கள் வளைப்பனபோல், சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே” வில்லிபாரதம் 3:41:4. அதேபோல வில்லி பாரத்தில் பாண்டவர்கள் மகர வியூகம் வகுத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது, “வரு படைதன்னை நிறுத்தி விதம்பட, மகரவியூகம் வகுத்து, ஒரு பகல் யூகமும் இப் பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே, குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து, அடு கோள் அரிபோல், துருபதன் மைந்தனும் நின்றனன், அந்தரத் துந்துபிமீது எழவே” வில்லிபாரதம் 3:41:6. இந்தக் குறிப்புக் கங்குலியில் இல்லை.

[3] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தியில் உள்ள இந்தப் பகுதி வேறு மாதிரியாக இருக்கிறது, அது பின்வருமாறு, “மகாராஜரே, ஆசாரியரால் (அந்த ரணகளத்தில்) பத்மவ்யூஹம் அமைக்கப்பட்டது. அந்தப் பத்ம வியூகத்தில் மன்னர்கள் அனைவரும் தாமரைப் பூவைப் போலவும், அரசவர்க்கத்தைச் சேர்ந்த மகன்கள் தாதுக்கள் போலவும் அமைக்கப்பட்டனர். அந்தப் பத்மவியூகத்துக்குத் துரியோதனன் கர்ணிகை {தாமரைப்பூவில் இருக்கும் காயின்} ஸ்தானத்தில் நிற்பவனானான்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தன் படைகளுக்கு மத்தியில் நின்றிருந்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான கர்ணன், துச்சாசனன், கிருபர் ஆகியோரால் சூழப்பட்டுத் தன் தலைக்கு மேல் உயர்த்திப் பிடிக்கப்பட்ட குடையைக் கொண்டிருந்தான். காட்டெருதின் வாலால் {சாமரம்} வீசப்பட்ட அவன் {துரியோதனன்} தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போலப் பிரகாசித்தான்.

அந்தப் படையின் தலைமையில் இருந்த படைத்தலைவரான துரோணர் உதயசூரியனைப் போலத் தெரிந்தார். அங்கே பெரும் மேனி அழகைக் கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மேருவின் முகட்டைப் போல அசையாதவனாக நின்றான். அஸ்வத்தாமனின் தலைமையில் நின்றவர்களும், தேவர்களுக்கு ஒப்பானவர்களுமான உமது மகன்கள் முப்பது {30} பேர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} பக்கத்தில் நின்றனர். பிறகு, ஜெயத்ரதனின் விலாப்புறத்தில், சூதாடியான காந்தார ஆட்சியாளன் (சகுனி), சல்லியன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகிய வலிமைமிக்கத் தேர்வீரர்கள் நின்றனர். பிறகு, உமது படைவீரர்களுக்கும், எதிரிகளுடையவர்களுக்கும் இடையில் கடுமையானதும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான போர் தொடங்கியது. மரணத்தையே இலக்காகக் கொண்டு இரு தரப்பும் போரிட்டன” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்