Tuesday, May 10, 2016

தேவர்களே ஊடுருவ முடியாத வியூகம்! - துரோண பர்வம் பகுதி – 031

Impenetrable array to the very gods! | Drona-Parva-Section-031 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : பனிரெண்டாம் நாளை தோற்றதாகக் கருதிய கௌரவ வீரர்கள்; எரிச்சலும் கோபமும் கொண்ட துரியோதனன் துரோணரிடம் பேசியது; பாண்டவர்களின் வீரர்களில் முதன்மையான ஒருவரைக் கொல்வதாகத் துரியோதனனிடம் சூளுரைத்த துரோணர்; பதிமூன்றாம் நாள் போரில் சக்கர வியூகம் அமைத்த துரோணர்; நாளின் இறுதியில் அபிமன்யு கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் சொல்லும் சஞ்சயன்; திருதராஷ்டிரன் அடைந்த துயரம்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "முதலில் அளவிலா ஆற்றல் கொண்ட அர்ஜுனனால் {தாங்கள்} பிளக்கப்பட்டதாலும், யுதிஷ்டிரன் நன்கு பாதுகாக்கப்பட்டதால், துரோணர் செய்திருந்த சபதம் தோல்வி அடைந்த காரணத்தாலும் உமது வீரர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவே கருதப்பட்டனர். புழுதி படிந்தும் பிளந்திருந்த கவசங்களுடனுமிருந்த  அவர்கள் அனைவரும் சுற்றிலும் தங்கள் கண்களை ஆவலாகச் சுழலவிட்டனர். உறுதியான இலக்கைக் கொண்ட தங்கள் எதிரிகளால் வீழ்த்தப்பட்டு, போரில் அவர்களால் {எதிரிகளால்} அவமதிக்கப்பட்ட அவர்கள் {கௌரவ வீரர்கள்}, துரோணரின் சம்மதத்தின் பேரில் களத்தில் இருந்து திரும்பினர். அப்படித் திரும்பிக் கொண்டிருக்கையில், உயிர்களனைத்தும் பல்குனனின் {அர்ஜுனனின்} எண்ணற்ற தகுதிகளைப் புகழ்வதையும், அனைவரும் அர்ஜுனனிடம் கேசவன் {கிருஷ்ணன்} கொண்ட நட்பைப் பேசுவதையும் அவர்கள் கேட்டனர். சம்பவங்களின் கோர்வையை நினைவு கூர்ந்த அவர்கள், சாபத்தில் வீழ்ந்த மனிதரைப் போல முற்றான அமைதி கொண்டு அந்த இரவைக் கழித்தனர் [1].


[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, "பிராணிகள் பல்குனனுடைய அளவற்ற குணங்களைப் புகழவும், அவனிடத்திலிருக்கின்ற கிருஷ்ணனுடைய நேசமானது சொல்லப்படவும், உம்மைச் சேர்ந்தவர்க் எல்லோரும் (பிரம்மஹத்தி முதலான தோஷத்தினால்) நிந்திக்கப்பட்டவர்கள் போலத் தியானத்தில் ஊமைத்தன்மையை அடைந்தார்கள்” என்றிருக்கிறது.

அடுத்த நாள் காலையில், துரியோதனன், தங்கள் எதிரியின் செழிப்பைக் கண்டு இதய உற்சாகத்தைப் பெரிதும் இழந்து, எரிச்சலாலும், கோபத்தாலும் இந்த வார்த்தைகளைத் துரோணரிடம் சொன்னான். பேச்சில் திறமையுள்ள அந்த மன்னன் {துரியோதனன்}, எதிரி அடைந்த வெற்றியை எண்ணி சினத்தால் நிறைந்து, துருப்புகள் அனைத்தும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {பிராமணோத்தமரே}, உம்மால் அழிக்கப்பட வேண்டிய மனிதர்களால் இன்று நீர் எங்களைத் தாழ்த்திவிட்டீர் {கீழான நிலைக்குக் கொண்டுவந்து விட்டீர்} என்பதில் ஐயமில்லை. அடையத்தக்க தூரத்தில் யுதிஷ்டிரனைக் கொண்டிருந்தும், இன்று அவனை நீர் பிடிக்கவில்லை. போரில் உம்மால் பிடிக்கத்தக்க அந்த எதிரி, உமது பார்வையில் ஒரு முறை பட்டாலே, தேவர்களாலேயே உதவப்பட்டு, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டாலும் கூட அவன் உம்மிடம் இருந்து தப்புவது இயலாதே. மனம் நிறைந்திருந்த நீர் எனக்கு ஒரு வரத்தை அளித்தீர்; எனினும், இப்போதோ அதன் படி செயல்படாமலிருக்கிறீர். (உம்மைப் போன்ற) உன்னதர்கள், தங்களிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒருவனின் நம்பிக்கைகளை ஒருபோதும் பொய்யாக்குவதில்லை" என்றான் {துரியோதனன்}.

துரியோதனனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} நாணிக் குறுகினார். மன்னனிடம் {துரியோதனனிடம்} அவர் {துரோணர்}, "என்னை நீ இப்படி நினைப்பது உனக்குத் தகாது. உனக்கு ஏற்புடையதைச் சாதிக்கவே நான் எப்போதும் முயல்கிறேன். கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்படும் படையைத் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கூடிய மூன்று உலகங்களாலும் வீழ்த்த இயலாது. அண்டத்தை உண்டாக்கிய கோவிந்தன் எங்கிருக்கிறானோ, அர்ஜுனன் தலைவனாக எங்கிருக்கிறானோ, அங்கே முக்கண் மகாதேவனைத் தவிர வேறு எவனுடைய பலம் செல்லுபடியாகும்? ஓ! ஐயா {துரியோதனா}, நான் இஃதை இன்று உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், இது வேறுவகையிலாகாது.

இன்று நான், பாண்டவ வீரர்களில் முதன்மையான ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனைக் கொல்வேன். இன்று நான், தேவர்களாலும் ஊடுருவமுடியாத ஒரு வியூகத்தை அமைப்பேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, எவ்வழிகளிலாவது அர்ஜுனனை களத்திலிருந்து {வெளியே} கொண்டு செல்வாயாக. அவன் அறியாததோ, போரில் அடையமுடியாததோ யாதொன்றும் இல்லை. {உலகத்தாரால்} போரைக் குறித்து {இதுவரை} அறியப்பட்ட அனைத்தையும் அவன் பல்வேறு இடங்களில் இருந்து அடைந்திருக்கிறான்" என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "துரோணர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, மீண்டும் போரிடுவதற்காக அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சம்சப்தகர்கள், களத்தின் தென் பகுதிக்கு அவனை {அர்ஜுனனைக்} கொண்டு சென்றனர். பிறகு, எப்போதும் பார்க்கப்படாத, கேள்விப்படாத வகையில் அர்ஜுனனுக்கும், அவனுடைய எதிரிகளுக்கும் {சம்சப்தகர்களுக்கும்} இடையிலான அந்த மோதல் இருந்தது.

மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் அமைத்த வியூகமானது பிரகாசிப்பதாகத் தெரிந்தது. உண்மையில், உச்சியை அடைந்து, (கீழிருக்கும் அனைத்தையும்) எரிக்கும் சூரியனைப் போல அந்த வியூகமானது பார்க்கப்பட முடியாததாக இருந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அபிமன்யு, தன் தந்தையுடைய மூத்த அண்ணனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில், போரில் ஊடுருவ முடியாத அந்தச் சக்கர வியூகத்தின் பல இடங்களைத் துளைத்தான். மிகக் கடினமான அருஞ்செயல்களைச் செய்து, ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்ற அவன் {அபிமன்யு}, (இறுதியில்) ஒன்று சேர்ந்திருந்த ஆறு வீரர்களால் {ஒரே நேரத்தில்} எதிர்க்கப்பட்டான். ஓ! பூமியின் தலைவா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே} இறுதியாக அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துச்சாசனன் மகனிடம் [2] பலியாகி தன் உயிரை விட்டான். இதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தோம், பாண்டவர்களோ பெரும் துன்பத்தில் நிறைந்தனர். சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, நம் துருப்புகள் இரவு ஓய்வுக்காகப் பின்வாங்கப்பட்டன {திரும்ப அழைக்கப்பட்டன}" {என்றான் சஞ்சயன்} [3].

[2] இவன் பெயர் துர்மாசனன் durmashana என்று வலைத்தளங்கள் பலவற்றில் காணப்படுகிறது.

[3] வேறொரு பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகமானவை இருக்கின்றன, அவை பின்வருமாறு, "அப்போது, ஜனமேஜயன், "போரில் விடாமுயற்சியுடையவர்களும், செயல்களாலே சிரமங்களைத் தெரிவிப்பவர்களும், கிருஷ்ணனோடு கூடியவர்களுமான பாண்டவர்கள் அனைவரும் தேவர்களாலும் அணுக முடியாதவர்கள் ஆவர். அடிக்கடி தொடர்ச்சியான உத்தம காரியங்களாலும், புத்தியினாலும், சுபாவத்தினாலும், கீர்த்தியினாலும், ஐசுவரியத்தினாலும், கிருஷ்ணனுக்கு நிகரான ஒரு மனிதன் உண்டானதுமில்லை; உண்டாகப் போவதுமில்லை. மன்னன் யுதிஷ்டிரன், சத்யம், தர்மம், தவம், தானம், பிராம்மணப் பூஜை முதலான குணங்களாலே தேகத்துடனே சொர்க்கம் அடைந்தானாம். ஊழிக்காலத்து அந்தகன், கீர்த்தியுடைய ஜமதக்னி மகனான பரசுராமர், யுத்த அரங்கத்தில் நிற்கின்ற பீமசேனன் ஆகிய மூவரும் சமானர்களாகச் சொல்லப்படுகிறார்கள். பிரதிஜ்ஞை செய்த காரியத்தை நிறைவேற்றுவதில் சாமர்த்தியமுள்ளவனும், ரணகளத்தில் காண்டீவத்தை வில்லாகக் கொண்டவனுமான பார்த்தனுக்குச் {அர்ஜுனனுக்குச்} சமமான உவமையை இப்புவியில் அறிகிறேனில்லை. நகுலனிடத்தில் அதிகமாகக் குருபக்தி, செய்யப்பட்டதையும், செய்யத்தக்கதையும் வெளியிடாமலிருத்தல், வணக்கம், மன அடக்கம், சௌந்தரியம், வல்லமை ஆகிய ஆறும் நிலைபெற்றிருந்தன. வீரனான சகதேவன் கல்வி, இனிமை, காம்பீர்யம், தைரியம், ரூபம், பராக்கிரமம் இவைகளால் அசுவினி தேவதைகளுக்கு ஒப்பானவனாவான். கிருஷ்ணனிடத்திலும், பாண்டவர்களிடத்திலும் அதிகமான எந்தக் குணங்களுண்டோ மங்களகரங்களான அந்தக் குணங்கள் அபிமன்யு ஒருவனிடத்தில் இருக்கின்றவையாகக் காணப்பட்டனவாம். பிராம்மணோத்தமரே, வல்லமையினால் யுதிஷ்டிரனுக்கும், ஒழுக்கத்தினால் கிருஷ்ணனுக்கும், செய்கையினால் பயங்கரச் செய்கையுடைய பீமசேனனுக்கும், வடிவத்தினால் மங்களகரமான பராக்கிரமத்தினால் தனஞ்சயனுக்கும், வணக்கத்தில் சகதேவனுக்கும் நகலனுக்கும் ஒப்பாயிருக்கின்றவனும், பகைவர்களால் தோல்வியடைவிக்கத்தகாதவனும், சுபத்திரையின் மகனுமாகிய {என் பாட்டன்} அபிமன்யுவைப் பற்றிய விருத்தாந்தத்தை நான் முழுதும் கேட்க விரும்புகிறேன். அவன் போரில் எவ்வாறு கொல்லப்பட்டான்?" என்று வினவ, வைசம்பாயனர் சொல்லத் தொடங்கினார். "பெரும் மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிர மன்னன், அபிமன்யு கொல்லப்பட்டதைக் கேட்டுச் சஞ்சயனைக் குறித்து (அபிமன்யுவின் விருத்தாந்தத்தை) விஸ்தாரமாக வினவினான்" என்று வைசம்பாயனர் சொன்ன பிறகு கங்குலியில் உள்ளது போலவே பின்வரும் சம்பவங்கள் தொடர்கின்றன. மேற்சொன்ன செய்திகள் கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட இதே பொருளைக் கொண்ட விவரிப்பை சஞ்சயன் சொல்வதாக அடுத்த பகுதியில் {துரோண பர்வம் பகுதி 32ல்} வருகிறது.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, இளமையை அடையாதவனும், மனிதர்களில் சிங்கத்தின் {அர்ஜுனனின்} மகனுமான அவன் (அபிமன்யு) கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் தூள் தூளாக நொறுங்குகிறது. உண்மையில், ஆட்சி உரிமையை விரும்பும் துணிச்சல்மிக்க மனிதர்கள், மனவுறுத்தல் ஏதுமின்றி ஒரு குழந்தையின் மீது ஆயுதங்களை ஏவத்தக்க வகையில் சட்டம் இயற்றுபவர்களால் {தர்மகர்த்தாக்களால்} ஏற்படுத்தப்பட்ட க்ஷத்திரியர்களின் கடமைகள் கொடூரமானவையே. ஓ! கவல்கணன் மைந்தா {சஞ்சயா}, ஆடம்பரமாக வளர்க்கப்பட்டிருந்தாலும் அச்சமற்ற வகையில் களத்தில் திரிந்த அந்தக் குழந்தையை {அபிமன்யுவை}, ஆயுதங்களில் சாதித்தவர்களான இத்தனை பல வீரர்கள் சேர்ந்து எவ்வாறு கொன்றார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! சஞ்சயா, போரில் நம் தேர் அணிவகுப்பினுள் ஊடுருவிய அளவிலா சக்தி கொண்ட சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} நம் வீரர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் என்னிடம் கேட்கும் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} படுகொலையை {வதத்தை} விரிவாகச் சொல்கிறேன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவனமாகக் கேட்பீராக. நம் படையணிகளுக்குள் ஊடுருவிய அந்த இளைஞன் {அபிமன்யு}, தன் ஆயுதங்களுடன் எவ்வாறு விளையாடினான் என்பதையும், வெற்றி பெறும் நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட நமது படையின் தடுக்கப்பட முடியாத வீரர்கள் அனைவரும் அவனால் {அபின்யுவால்} எவ்வாறு பீடிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது நான் உமக்குச் சொல்கிறேன். செடிகள், மூலிகைகள், மரங்கள் ஆகியன நிறைந்த காட்டில், {காட்டுத்} தீயால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட காட்டுவாசிகள் அனைவரையும்போல, உமது படையின் வீரர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தனர்" {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்