Thursday, May 12, 2016

வியூகத்தைப் பிளந்த அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 034

Abhimanyu broke the array! | Drona-Parva-Section-034 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவைப் போரிட வேண்டாம் என்று தடுத்த தேரோட்டி சுமித்ரன்; துரோணரின் தலைமையிலான வீரர்களுடன் மோதிய அபிமன்யு; துரோணரின் கண்ணெதிரிலேயே வியூகத்தைப் பிளந்த அபிமன்யு; கௌரவப் படைக்குப் பேரழிவை ஏற்படுத்திய அபிமன்யு; களத்தைவிட்டு ஓடிய கௌரவப் படையின் போர்வீரர்கள்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "புத்திக்கூர்மை கொண்ட யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் வியூகத்தை நோக்கித் தன் தேரோட்டியைத் தூண்டினான். "செல்வீர், செல்வீர்" என்று அபிமன்யுவால் தூண்டப்பட்ட அந்தத் தேரோட்டி {சுமித்ரன்}, அவனிடம் {அபிமன்யுவிடம்}, "ஓ! நீண்ட ஆயுளைக் கொண்டவனே, பாண்டவர்களால் உன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் சுமையானது மிகக் கனமானதாகும். அஃதை உன்னால் தாங்க முடியுமா? முடியாதா? என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே நீ போரில் ஈடுபட வேண்டும். ஆசான் துரோணரோ மேன்மையான ஆயுதங்களை ஆழப் புரிந்தவரும், (போரில்) சாதித்தவருமாவார். நீயோ, பெரும் ஆடம்பரத்துடன் வளர்க்கப்பட்டு, போருக்கு பழக்கமில்லாதவனாக இருக்கிறாய்" என்றான் {தேரோட்டி சுமித்ரன்}.


இந்த வார்த்தைகளைக் கேட்ட அபிமன்யு, தன் தேரோட்டியிடம் சிரித்துக் கொண்டே, "ஓ! தேரோட்டியே, யார் இந்தத் துரோணர்? மேலும், க்ஷத்திரியர்களின் இந்தப் பரந்த கூட்டம்தான் என்ன? தேவர்கள் அனைவரின் உதவியோடு, சக்ரனே {இந்திரனே} தன் ஐராவதத்தில் வந்தாலும், போரில் நான் மோதுவேன். நான் இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் குறித்துச் சிறு கவலையும் கொள்ளவில்லை. பகைவரின் இந்தப் படை என்னில் பதினாறில் ஒரு பங்குக்கும் சமமாகாது. ஓ! சூதரின் மகனே {சுமித்திரரே}, விஷ்ணுவையே {கிருஷ்ணரையே} தாய்மாமனாகவும், அண்டத்தை வெல்லும் அர்ஜுனரை என் தந்தையாகவும் கொண்டு, போரில் ஒரு பகைவனாக இருக்கும் என் இதயத்தில் அச்சம் நுழைய முடியாது" என்றான்.

பிறகும் அபிமன்யு, அந்தத் தேரோட்டியின் {சுமித்ரனின்} வார்த்தைகளை அலட்சியம் செய்து, பின்னவனைத் {தேரோட்டியைத்} தூண்டும் வகையில், "துரோணரை நோக்கி வேகமாகச் செல்வீராக" என்றான். இப்படி ஆணையிடப்பட்ட தேரோட்டி, சிறிதும் உற்சாகமற்ற இதயத்துடன், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அபிமன்யுவின் மூன்று வயதான குதிரைகளைத் தூண்டினான். துரோணரின் படையை நோக்கி சுமித்ரனால் தூண்டப்பட்ட அந்தப் புரவிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேகத்துடனும், ஆற்றலுடனும் துரோணரையே நோக்கி விரைந்தன.

(தங்களை நோக்கி) அவ்வழியில் அவன் {அபிமன்யு} வருவதைக் கண்ட துரோணரின் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் அவனை எதிர்த்துச் சென்றனர். மேலும், பாண்டவர்களும் அவனைப் {அபிமன்யுவைப்} பின்னால் தொடர்ந்து சென்றனர். அர்ஜுனனுக்கும் மேம்பட்டவனும், தங்கக் கவசம் பூண்டவனும், கோங்கு மரம் பொறித்த சிறந்த கொடிரமரத்தைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, யானைகளின் மந்தையைத் தாக்கும் சிங்கக் குட்டியைப் போலப் போரிட விரும்பி, துரோணரின் தலைமையிலான போர்வீரர்களுடன் அச்சமற்றவகையில் மோதினான். மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் போர் வீரர்கள், அபிமன்யு தங்கள் வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} துளைக்க முயன்ற அந்த வேளையில் அவனை {அபிமன்யுவைத்} தாக்கத் தொடங்கினர். கங்கையின் நீரோட்டம் பெருங்கடலில் கலக்கும் இடத்தில் நீர்ச்சுழி காணப்படுவதைப் போல, அங்கே {போர்க்களத்தில்} ஒரு கணம் கொந்தளிப்பு உண்டானது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு போராடும் வீரர்களிடையில் அங்கே தொடங்கிய போரானது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் மாறியது.

அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருக்கையில், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, துரோணர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வியூகத்தைப் {சக்கரவியுகத்தைப்} பிளந்து அதற்குள் ஊடுருவினான். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த {உமது படையின்} பெரும் எண்ணிக்கையிலான யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படையினர், இப்படி எதிரியின் மத்தியில் ஊடுருவி வந்த அந்த வலிமைமிக்கப் போர்வீரனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டு, அவனைத் தாக்கத் தொடங்கினர். பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகள், கொக்கரிப்புகள், அக்குள் தட்டல்கள், முழக்கங்கள், கூச்சல்கள், சிம்ம கர்ஜனைகள், "நில், காத்திரு" என்ற ஒலிகள், குழப்பமான கடுங்குரல்கள், "போகாதே, நில், என்னிடம் வா" என்ற அலறல்கள், "இவன், இதோ நான், பகைவன்" என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட ஒலிகள், யானைகளின் பிளிறல்கள், மணிகள் மற்றும் ஆபரணங்களின் கிங்கிணியோசைகள், வெடித்த சிரிப்புகள், குதிரைக் குளம்பு மற்றும் தேரின் {தேர்ச்சக்கரங்களின்} சடசடப்பொலிகள் ஆகியவற்றுடன் [பூமியை எதிரொலிக்கும்படி செய்து கொண்டு], அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} நோக்கி அந்த (கௌரவப்) போர்வீரர்கள் விரைந்தனர்.

எனினும், பெரும் கர நளினமும் {லாவகமும்}, உடலின் முக்கிய அங்கங்களின் அறிவையும் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {அபிமன்யு}, முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல ஆயுதங்களை வேகமாக ஏவி, முன்னேறி வரும் அந்தப் போர்வீரர்களைக் கொன்றான். பல்வேறு விதங்களிலான கூரிய கணைகளால் கொல்லப்பட்ட அந்தப் போர் வீரர்கள் முற்றிலும் ஆதரவற்றவர்களாகி சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போலப் போர்க்களத்தில் அபிமன்யுவிடம் தொடர்ச்சியாக விழுந்தனர்.

பிறகு, வேள்வி ஒன்றில், புரோகிதர்கள் வேள்வி மேடையைக் குசப்புற்களால் {தர்ப்பைகளால்} பரப்புவதைப் போல, அபிமன்யு, அவர்களுடைய உடல்களையும், உடலின் உறுப்புகளையும் போர்க்களத்தில் பரப்பினான். மேலும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அவ்வீரர்களின் கரங்களை ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தினான். அவற்றில் {அந்தக் கரங்களில்} சில உடும்புத்தோலாலான கையுறைகளையும், சில விற்களையும் கணைகளையும் கொண்டிருந்தன, சில {கரங்கள்} வாள்களையோ, கேடயங்களையோ, அங்குசங்களையோ, கடிவாளங்களையோ கொண்டிருந்தன; மேலும் சில வேல்களையும், போர்க்கோடரிகளையும் கொண்டிருந்தன. சில கதாயுதங்களையோ, இரும்பு குண்டுகளையோ {பந்துகளையோ}, ஈட்டிகளையோ கொண்டிருந்தன; சில ரிஷ்டிகளையும், கவைக்கோல்களையும், கோடரிகளையும் கொண்டிருந்தன. சில பிண்டிபாலங்களையோ {குறுங்கணைகளையோ}, பரிகங்களையோ {முள் பதிக்கப்பட்ட தண்டாயுதங்களையோ}, கணைகளையோ, கம்பனங்களையோ பிடித்திருந்தன. சில சாட்டைகளையும், மகத்தான சங்குகளையும், பராசங்களையும், கசகிரகங்களையும் கொண்டிருந்தன. சில முத்கரங்களையும், சில பிறவகை ஏவுகணைகளையும் கொண்டிருந்தன. சில சுருக்குக் கயிறுகளையும் {பாசங்களையும்}, சில கனமான தண்டங்களையும், சில கற்களையும் கொண்டிருந்தன. அந்தக் கரங்கள் அனைத்தும் கைவளையங்களால் அலங்கரிக்கபட்டும், இனிமையான நறுமணப் பொருட்கள் மற்றும் தைலங்களால் பூசப்பட்டுமிருந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கருடனால் கொல்லப்பட்ட ஐந்து தலை நாகங்களைப் போலக் குருதி பூசப்பட்டிருந்த அந்தக் கரங்களின் பிரகாசத்தால் அந்தப் போர்க்களமே அழகானது.

அழகிய மூக்குகள், முகங்கள், மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பருக்களில்லாமல் அழகிய குண்டலங்களைக் கொண்ட எதிரிகளின் எண்ணற்ற தலைகளைப் பல்குனன் மகன் {அபிமன்யு} போர்க்களத்தில் பரப்பினான். கோபத்துடன் பற்களால் உதடுகளைக் கடித்திருந்ததால், அவை {அந்தத் தலைகள்} அனைத்திலும் அதிகமாக இரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது. அழகிய மாலைகள், கிரீடங்கள், தலைப்பாகைகள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுச் சூரியச்சந்திரர்களுக்கு இணையான காந்தியைக் கொண்டு, தண்டை இழந்த தாமரைப் மலரைப் போல அவை {அந்தத் தலைகள்} தெரிந்தன. பல நறுமணப்பொருட்களால் மணத்துடன் இருந்த அவை, உயிரோடிருந்தவரை ஏற்புடைய நன்மையான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தன.

ஆகாயத்தின் நீர் மாளிகைகளைப் போலத் தெரிந்தவையும், நன்கு தயாரிக்கப்பட்டவையும், முன்னிலையில் ஏர்க்கால்களையும், சிறந்த மூங்கில் சட்டங்களையும் கொண்டவையும், கொடிமரங்கள் நிறுவப்பட்டு அழகாகத் தெரிந்தவையுமான பல்வேறு தேர்கள், தங்கள் ஜங்கங்கள் {ஏர்க்காலைத் தாங்கும் அண்டை மரங்கள்}, குபரங்கள் {சக்கரங்களின் விளிம்புகள்}, நேமிகள் {ஆரக்கால்}, தசனங்கள் {சக்கரங்களில் உள்ள குடம்}, சக்கரங்கள், கொடிமரங்கள் மற்றும் தேர்த்தட்டு ஆகியவற்றை இழந்தன. அவற்றில் இருந்த போருக்கான கருவிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டன. அவற்றை மறைத்த விலையுயர்ந்த விரிப்புகள் பறந்து சென்றன, அவற்றில் இருந்த போர்வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

{இப்படி} தன் முன் வந்த அனைத்தையும் தன் கணைகளால் சிதைத்த அபிமன்யு அனைத்துப் பக்கங்களிலும் திரிவதாகத் தெரிந்தது. தன் கூரிய கணைகளால் யானை வீரர்களையும், கொடிமரங்கள், அங்குசங்கள், கொடிகள், அம்பறாத்தூணிகள், கவசங்கள், கச்சைகள், கழுத்தணிகள், விரிப்புகள், மணிகள், துதிக்கைகள், தந்தங்கள் ஆகியவற்றோடு கூடிய யானைகளையும், யானைகளைப் பின்பக்கத்தில் இருந்து பாதுகாத்த காலாட்படை வீரர்களையும் அவன் {அபிமன்யு} துண்டுகளாக வெட்டினான்.

வனாயு, மலைநாடுகள், காம்போஜம், பாஹ்லீகம் ஆகியவற்றில் பிறந்தவையும், அசைவற்ற வால்கள், காதுகள், கண்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், உறுதியானவையும், பெரும் வேகமுடையவையும், நன்கு பழக்கப்பட்டவையும், வாள்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்த சாதனைவீரர்களால் செலுத்தப்பட்டவையுமான குதிரைகள், தங்கள் அழகிய வால்களில் உள்ள சிறந்த ஆபரணங்களை இழந்தவையாகத் தெரிந்தன. அவை பலவற்றில் நாக்குகள் மற்றும் கண்கள் அவற்றின் இடத்தில் இருந்து தெறித்து, வெளியில் நரம்புகள் புடைத்து, ஈரல்கள் பிதுங்கியிருந்தன. அவற்றின் முதுகில் இருந்த சாரதிகள் உயிரற்று அவற்றின் பக்கத்திலேயே கிடந்தனர். அவற்றை அலங்கரித்த மணி வரிசைகள் அனைத்தும் நொறுங்கிக் கிடந்தன. இப்படிக் களத்தில் பரவிக் கிடந்த அவை {குதிரைகள்}, ராட்சசர்களுக்கும், இரைதேடும் விலங்குகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தன. கவசங்களும், (தங்கள் உடல்களை மறைக்கும்) தோலுறைகளும் பிளக்கப்பட்ட அவை கழித்த மலஜலங்களால் நனைந்திருந்தன. இப்படியே உமது படையின் குதிரைகளில் முதன்மையானவை பலவற்றைக் கொன்ற அபிமன்யு பிரகாசமாகத் தெரிந்தான்.

நினைத்தும் பார்க்க முடியாத பழங்காலத்தின் விபுவை {விஷ்ணுவைப்} போல மிகக் கடினமான சாதனையைத் தனியாக அடைந்த அபிமன்யு, பயங்கரமான அசுரப் படையை நசுக்கிய அளவிலா சக்தி கொண்ட முக்கண்ணனை (மகாதேவனைப்) போல, உமது படையின் மூன்று வகை (தேர்கள், யானைகள், குதிரைகள்) படையை நசுக்கினான். உண்மையில், அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியாத சாதனைகளைப் போரில் அடைந்து, உமது படையின் காலாட்படை வீரர்களின் பெரும்பிரிவை எங்கும் சிதைத்தான்.

(தேவர்ப்படைத்தலைவன்) ஸ்கந்தனால் {முருகனால்} அழிக்கப்பட்ட அசுரப்படையைப் போல, தனி ஒருவனான சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} கூரிய கணைகளால் இப்படிப் பேரழிவுக்கு உள்ளான உமது சேனையைக் கண்ட உமது வீரர்களும், உமது மகன்களும் அனைத்துப் பக்கங்களையும் வெறித்துப் பார்த்தனர். அவர்கள் வாய்கள் வரண்டன; அவர்களின் கண்கள் ஓய்வற்றவையாகின; அவர்களின் உடல்கள் வியர்வையால் மறைந்தன; அவர்களுக்கு மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாயிற்று. எதிரியை வீழ்த்தும் நம்பிக்கையை இழந்த அவர்கள், களத்தை விட்டு ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநாட்டினர். தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள விரும்பிய அவர்கள், ஒருவரையொருவர் பேர் சொல்லியும், குடும்பப் பெயர்களைச் சொல்லியும் அழைத்து, காயம்பட்டுக் களத்தில் கிடந்த தங்கள் மகன்கள், தந்தைமார், சகோதரர்கள், சொந்தங்கள், திருமணத்தால் உண்டான உறவினர்கள் ஆகியோரைக் கைவிட்டு, தங்கள் குதிரைகளையும், யானைகளையும் (மிக வேகமாகத்) தூண்டி தப்பி ஓட முயற்சித்தனர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்