Thursday, May 12, 2016

சல்லியனை மயக்கமடையச் செய்த அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 035

Abhimanyu made Salya faint! | Drona-Parva-Section-035 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 05)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனைக் காத்த கௌரவப் படை; அஸ்மகன் மகனைக் கொன்ற அபிமன்யு; கர்ணனை நடுங்கச்செய்தல்; மேலும் மூவரைக் கொல்வது; மற்றும் சல்லியனோடு மோதி, அவனை மயக்கமடையச் செய்வது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அளவிலா சக்தி கொண்ட சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} தன் படை முறியடிக்கப்படுவதைக் கண்ட துரியோதனன், சினத்தால் நிறைந்து, முன்னவனை {அபிமன்யுவை} எதிர்த்துத் தானே சென்றான். போரில் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி மன்னன் {துரியோதனன்} திரும்புவதைக் கண்ட துரோணர், (கௌரவப்) போர்வீரர்கள் அனைவரிடமும், “மன்னனைக் காப்பீராக. வீர அபிமன்யு, நமக்கு முன்னிலையில், தான் குறிவைக்கும் அனைவரையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொன்று வருகிறான். எனவே, அவனை {அபிமன்யுவை} எதிர்த்து, அச்சமில்லாமல் வேகமாக விரைந்து, குரு மன்னனை {துரியோதனனைக்} காப்பீராக” என்றார் {துரோணர்}.


எப்போதும் வெற்றியால் அருளப்பட்டவர்களும், நன்றியுணர்வும், வலிமையும் மிக்கவர்களுமான போர்வீரர்கள் பலர், துரியோதனனின் நன்மையைத் தங்கள் இதயத்தில் கொண்டு, அச்சத்துடன் உமது மகனை {துரியோதனனைச்} சூழ்ந்து கொண்டனர். துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், கர்ணன், கிருதவர்மன், சுபலனின் மகனான பிருஹத்பலன் {சகுனியின் சகோதரன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, {சோமதத்தன் மகன்களான} பூரி மற்றும் பூரிஸ்ரவஸ், {பாஹ்லீக நாட்டு} சலன், பௌரவன், {கர்ணனின் மகன்} விருஷசேனன் ஆகியோர் கூரிய கணைகளை ஏவிக்கொண்டு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} அந்தக் கணை மழையின் மூலம் தடுத்தனர். அந்தக் கணை மழையின் மூலம் அவனை {அபிமன்யுவைக்} குழப்பிய அவர்கள் துரியோதனனை மீட்டனர்.

எனினும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, {உணவுக்} கவளத்தைத் தன் வாயிலிருந்து பறித்தது போன்ற அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ளவில்லை. அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களையும், அவர்களது தேரோட்டிகள் மற்றும் குதிரைகளையும் அடர்த்தியான கணை மழையால் மறைத்து, அவர்களைப் புறமுதுகிடச் செய்து சிங்க முழக்கம் செய்தான். இரையைத் தேடி பசியுடன் செல்லும் சிங்கத்தைப் போன்ற அவனது {அபிமன்யுவின்} கர்ஜனையைக் கேட்டு, துரோணரின் தலைமையிலான அந்தத் தேர்வீரர்கள், கோபத்துடன் அதைப் பொறுத்துக் கொள்ளவில்லை. பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அவனை {அபிமன்யுவை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்ட அவர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவன் மீது பல்வேறு விதங்களிலான கணைகளை மழையாகப் பொழிந்தனர். எனினும் உமது பேரன் {அபிமன்யு}, கூரிய கணைகளின் மூலம் அவற்றை (அவற்றில் எதுவும் தன்னை அடையும் முன்பே) ஆகாயத்திலேயே வெட்டிய பிறகு, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான். அவனது அந்த அருஞ்செயலைக் காண மிக அற்புதமானதாக இருந்தது.

கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனின் {அபிமன்யுவின்} கணைகளின் மூலம் அவனால் இப்படித் தூண்டப்பட்ட அவர்கள், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைக்} கொல்லவிரும்பி, புறமுதுகிடாத அவனைச் சூழ்ந்து கொண்டனர். எனினும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தனியாகவே, அந்த (கௌரவத்) துருப்புகளெனும் கடலைத் தன் கணைகளின் மூலம் தடுத்தான். அபிமன்யுவும் அவனைச் சார்ந்தவர்களும் ஒரு புறமும், அந்த வீரர்கள் அனைவரும் ஒரு புறமும் என ஒருவரையொருவர் தாக்கி இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரர்களில் ஒருவரும் களத்தில் புறங்காட்டவில்லை.

கடுமையான அந்தப் பயங்கரப் போரில் துஸ்ஸகன் ஒன்பது கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். துச்சாசனன் பனிரெண்டு கணைகளால் அவனைத் துளைத்தான்; சரத்வானின் மகனான கிருபர் மூன்றால் அவனைத் துளைத்தார். துரோணர், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பான பதினேழு கணைகளால் அவனைத் துளைத்தார். விவிம்சதி எழுபது கணைகளாலும், கிருதவர்மன் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தனர். பூரிஸ்ரவஸ் மூன்று கணைகளாலும், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆறாலும் அவனைத் துளைத்தனர். சகுனி இரண்டாலும், மன்னன் துரியோதனன் மூன்று கணைகளாலும் அவனைத் துளைத்தனர்.

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் நர்த்தனம் செய்பவனைப் போலத் தெரிந்த வீர அபிமன்யு, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று {மூன்று மூன்று} கணைகளால் துளைத்தான். பிறகு அபிமன்யு, அவனை அச்சுறுத்த முயன்ற உமது மகன்களின் விளைவால், சினத்தால் நிறைந்து, பண்பாலும் பயிற்சியாலும் அவன் அடைந்த அற்புத பலத்தை வெளிப்படுத்தினான். கருடன் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்டவையும், கடிவாளம் பிடித்தவரின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிபவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையுமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, விரைவாக அஸ்மகனின் வாரிசைத் [1] தடுத்தான் [2]. பெரும் பலம் கொண்ட அந்த அழகிய அஸ்மகன் மகன், அவன் {அபிமன்யுவின்} முன்னிலையிலேயே நின்று, பத்து கணைகளால் அவனைத் துளைத்து, “நில், நில்” என்று சொன்னான். அபிமன்யுவோ, சிரித்துக் கொண்டே, பத்து கணைகளைக் கொண்டு, முன்னவனின் {அஸ்மகன் மகனின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம், இரண்டு கரங்கள், வில், தலை ஆகியவை கீழே பூமியில் விழும்படி செய்தான். அஸ்மகர்களின் வீர அட்சியாளன் இப்படிச் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்ட பிறகு, நடுக்கமுற்ற அவனது {அஸ்மகன் மகனின்} படை களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கியது.

[1] இவனுக்கு அஸ்மகதாயாதன் என்று பெயர் என Encyclopedia of Hindu World என்ற புத்தகத்தில் 705ம் பக்கத்தில் குறிப்பு உள்ளது. ஆதிபர்வம் பகுதி 178, 179 ஆகியவற்றில் அஸ்மகன் குறித்த கதையைப் படிக்கலாம். அஸ்மகனுக்கு மூலகன் என்று ஒரு மகன் இருந்ததாகவும், இவன் பின்னாட்களில் நாரீகவசன் என்று அழைக்கப்பட்டதாகப் பாகவதம் 9.9 சொல்கிறது. கங்குலியில் அஸ்மகன் மகனுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. வேறொரு பதிப்பில் இவன் அஸ்மகன் என்றே குறிக்கப்படுகிறான்.

[2] வேறொரு பதிப்பில் இந்த வரி, “அஸ்மகராஜன் கருடனுக்கும் காற்றிற்கும் சமமான வேகமுள்ளவையும், சாரதி சொல்வதைச் செய்கின்றவையுமான குதிரைகளோடு அந்த அபிமன்யுவை விரைவுடன் எதிர்த்து வந்தான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே அஸ்மகன் மகன் என்றே உள்ளது. மேலும் அஸ்மகன் மகனை அபிமன்யு எதிர்த்துச் செல்வதாகவே உள்ளது.

பிறகு, கர்ணன், கிருபர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, சலன், சல்லியன், பூரிஸ்ரவஸ், {துரியோதனன் தம்பி} கிராதன், சோமதத்தன், {துரியோதனன் தம்பி} விவிம்சதி, {கர்ணனின் மகன்} விருஷசேனன், சுஷேனன், குண்டபேதி, பிரதர்த்தனன், பிருந்தாரகன், லலித்தன், பிரபாகு, தீர்க்கலோசனன் {தாருக்கலோசனன்} [3], கோபம் கொண்ட துரியோதனன் ஆகியோர் அவன் {அபிமன்யு} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.

[3] கர்ணனின் மகன் விருஷசேனனுக்குப் பிறகு குறிப்பிடப்படுபவர்கள் யாவர் என்பது தெரியவில்லை.

அந்தப் பெரும் வில்லாளிகளின் நேரான கணைகளால் அதீதமாகத் துளைக்கப்பட்ட அபிமன்யு, கவசமனைத்தையும், உடலையும் துளைக்கவல்ல கணைகளைக் கர்ணன் மீது ஏவினான். கர்ணனின் கவசத்தைத் துளைத்து, பிறகு அவனது உடலையும் துளைத்த அந்தக் கணை, பிறகு எறும்புப்புற்றைத் துளைத்துச் செல்லும் பாம்பைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன் பெரும் வலியை உணர்ந்து முற்றிலும் ஆதரவற்றவனாக ஆனான் {மனத்தளர்ச்சியடைந்தான்}. உண்மையில் கர்ணன், நிலநடுக்கத்தின் போதான மலை ஒன்றைப் போல நடுங்கத் தொடங்கினான்.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனனின் வலிமைமிக்க மகன் {அபிமன்யு}, பெரும் கூர்மையைக் கொண்ட வேறு மூன்று கணைகளால் சுஷேனன், தீர்க்கலோசனன், குண்டபேதி ஆகிய மூன்று வீரர்களைக் கொன்றான். அதே வேளையில், (அதிர்ச்சியில் இருந்து மீண்ட) கர்ணன், இருபத்தைந்து கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். அஸ்வத்தாமன் இருபதாலும், கிருதவர்மன் ஏழாலும் அவனைத் தாக்கினர். சினத்தால் நிறைந்த அந்தச் சக்ரன்மகனின் {இந்திரன் மகனான அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, கணைகளையே எங்கும் நிறைத்தபடி களத்தில் திரிந்து கொண்டிருந்தான். சுருக்குக் கயிற்றைத் {பாசத்தைத்} தரித்த யமனைப் போலவே துருப்புகள் அனைத்தும் அவனை {அபிமன்யுவை} கருதின.

பிறகு அவன் {அபிமன்யு}, தன் அருகே வர நேர்ந்த சல்லியனின் மேல் தன் கணை மழையை இறைத்தான். பிறகு அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {அபிமன்யு} பெருமுழக்கம் முழங்கி, அதனால் உமது துருப்புகளை அச்சுறுத்தினான். அதேவேளையில், ஆயுதங்களில் சாதித்த அபிமன்யுவால் துளைக்கப்பட்டு, தன் முக்கிய அங்கங்களில் ஊடுருவிய அந்த நேரான கணைகளோடு கூடிய சல்லியன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தபடியே மயக்கமடைந்தான்.

சுபத்திரையின் கொண்டாடப்படும் மகனால் {அபிமன்யுவால்} இப்படித் துளைக்கப்பட்ட சல்லியனைக் கண்ட துருப்புகள் அனைத்தும், பரத்வாஜரின் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடின. வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியன், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் இப்படி மறைக்கப்பட்டதைக் கண்ட உமது படையினர், சிங்கத்தால் தாக்கப்பட்ட மான்கூட்டத்தை {விலங்குகளைப்} போலத் தப்பி ஓடின. போரில் (தனது வீரம் மற்றும் திறமை ஆகியவற்றுக்காகப்} புகழப்பட்டு, பிதுர்கள், தேவர்கள், சாரணர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பூமியிலுள்ள பல்வேறு வகையிலான உயிரினங்களின் கூட்டங்களால் கொண்டாடப்பட்டு, தெளிந்த நெய்யினால் ஊட்டப்பட்ட நெருப்பு {ஹோமம் செய்யப்பட்ட அக்னி} போல அந்த அபிமன்யு மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்