Thursday, May 19, 2016

பிருஹத்பலனைக் கொன்ற அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 045

Abhimanyu killed Vrihadvala! | Drona-Parva-Section-045 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 15)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட ஆறுவீரர்கள்; ஜெயத்ரதன் தலைமையில் யுதிஷ்டிரனை எதிர்த்த கௌரவவீரர்கள்; பிருந்தாரகனைக் கொன்ற அபிமன்யு; தன்னைச் சூழ்ந்து கொண்ட ஆறு வீரர்களையும் தாக்கியது; கோசல மன்னன் பிருஹத்பலனைக் கொன்ற அபிமன்யு...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட முடியாதவனும், போரில் புறமுதுகிடாதவனுமான அந்த இளமைநிறைந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, மூன்று வயதே ஆன பெரும் பலம் கொண்ட சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு, நமது வியூகத்தைப் பிளந்த பின்பு, வெளிப்படையாக ஆகாயத்தில் நடப்பவன் போலத் தன் பரம்பரைக்குத் தகுந்த சாதனைகளை அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்ட என்படையின் வீரர்கள் யாவர்?” என்று கேட்டான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டு குலத்தின் அபிமன்யு, நம் வியூகத்தில் ஊடுருவிய பிறகு, தன் கூரிய கணைகளால் மன்னர்கள் அனைவரையும் போரில் இருந்து புறமுதுகிடச் செய்தான். அப்போது, துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், கர்ணன் ஆகிய ஆறு வீரர்களும் அவனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். உமது படையின் மற்ற போராளிகளைப் பொறுத்தவரை, (பாண்டவர்களைத் தடுக்கும்) கனமான சுமையை ஏற்றுக் கொண்ட ஜெயத்ரதனைக் கண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனை ஆதரிப்பதற்காக யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தனர். பெரும் பலம் கொண்ட அவர்களில் பலர், முழுமையாக ஆறு முழம் நீளம் கொண்ட தங்கள் விற்களை வளைத்தபடி, மழைத்தாரைகளைக் கொட்டுவதைப் போலச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது தங்கள் கணை மழையைப் பொழிந்தனர். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, கல்வியின் அனைத்துக்கிளைகளையும் அறிந்த அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரையும் தன் கணைகளாலேயே முடக்கினான்.

அவன் {அபிமன்யு}, ஐம்பது கணைகளால் துரோணரையும், இருபதால் பிருஹத்பலனையும் துளைத்தான். எண்பது கணைகளால் கிருதவர்மனையும், அறுபதால் கிருபரையும் அவன் துளைத்தான். மேலும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளும், பெரும் வேகமும் கொண்டவையுமான பத்து கணைகளால் அஸ்வத்தாமனைத் துளைத்தான். மேலும், அந்தப் பல்குனன் மகன் {அபிமன்யு}, பிரகாசமானதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், பெரும் சக்தி கொண்டதுமான கர்ணி {சிறகுகளைக் கொண்ட கணை} ஒன்றால் தன் எதிரிகளின் மத்தியில் இருந்த கர்ணனுடைய காதுகளில் ஒன்றைத் [1] துளைத்தான். கிருபரின் தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளையும், அவரது பார்ஷினி தேரோட்டிகளையும் வீழ்த்திய அபிமன்யு, பத்து கணைகளால் கிருபரின் நடுமார்பைத் துளைத்தான்.

[1] கங்குலியில் இது "தேர்களில் ஒன்றை" என்றே இருக்கிறது. அதாவது, "And the son of Phalguni pierced Karna, in the midst of his foes, in one of his cars, with a bright, well-tempered, and bearded arrow of great force." என்றே இருக்கிறது. எனினும், வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும், "காதுகளில் ஒன்று " என்றே இருக்கிறது. கங்குலியில் அச்சுப்பிழை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதி, மேலே காதுகள் என்றே இட்டிருக்கிறேன்.

பிறகு வலிமைமிக்க அந்த அபிமன்யு, உமது வீர மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருக்களின் புகழை அதிகரிப்பவனும், துணிவுமிக்கவனுமான பிருந்தாரகனைக் [2] கொன்றான். இப்படி அபிமன்யு, அவனது எதிரிகளில் முதன்மையான வீரர்களை ஒருவர் பின் ஒருவராக அச்சமற்ற வகையில் கொன்று வரும்போது, துரோணரின் மகனான அஸ்வத்தாமன் இருபத்தைந்து க்ஷுத்ரகங்களால் {குறுங்கணைகளால்} அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். எனினும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தார்தராஷ்டிரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கூர்மையாக்கப்பட்ட கணைகளால் அஸ்வத்தாமனை பதிலுக்கு விரைவாகத் துளைத்தான். எனினும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பெரும் வேகமுடைய மிகக் கூர்மையான அறுபது கடுங்கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தாலும், பின்னவன் {அபிமன்யு} மைநாக மலையைப் போல அசையாமல் நின்றதால் அவனை நடுங்கச் செய்வதில் தோல்வியுற்றான். பெரும் சக்தியும் வலிமையும் கொண்ட அபிமன்யு, தங்கச் சிறகுகளைக் கொண்ட நேரான எழுபத்து மூன்று கணைகளால் தன் எதிராளியை {அஸ்வத்தாமனைத்} துளைத்தான்.

[2] இவன் யாரெனத் தெரியவில்லை. துரோண பர்வம் பகுதி 124ல் பீமன், மற்றொரு பிருந்தாரகனைக் கொல்வதாக வருகிறது.

அப்போது, தன் மகனைக் காக்கவிரும்பிய துரோணர், நூறு கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தார். அஸ்வத்தாமன், தன் தந்தையைக் காக்க விரும்பி அறுபது கணைகளால் அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். இருபத்திரண்டு பல்லங்களால் கர்ணன் அவனைத் துளைத்தான். பதினான்கால் கிருதவர்மன் அவனைத் துளைத்தான். அது போன்ற ஐம்பது கணைகளால் பிருஹத்பலன் அவனைத் துளைத்தான். சரத்வானின் மகனான கிருபரோ பத்து கணைகளால் துளைத்தார். எனினும், அபிமன்யு, அவர்கள் ஒவ்வொரையும் பத்து {பத்து பத்து} கணைகளால் துளைத்தான்.

கோசலத்தின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்} ஒரு கர்ணியால் அபிமன்யுவை அவனது மார்பில் அடித்தான். எனினும் அபிமன்யுவோ, தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரம், வில் மற்றும் தேரோட்டியை விரைவாகப் பூமியில் சாய்த்தான். இப்படித் தன் தேரை இழந்த அந்தக் கோசல ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அபிமன்யுவின் அழகிய தலையை அவனது உடலில் இருந்து துண்டிக்க விரும்பி ஒரு வாளை எடுத்தான். அப்போது அபிமன்யு, கோசலர்களின் ஆட்சியாளனான மன்னன் பிருஹத்பலனின் மார்பை ஒரு பலமான கணையால் துளைத்தான். இதனால் பின்னவன் {பிருஹத்பலன்} இதயம் பிளக்கப்பட்டுக் கீழே விழுந்தான். இதைக் கண்டு, அணிவகுப்புப் பிளக்கப்பட்ட சிறப்புமிக்க மன்னர்கள் பத்தாயிரம் பேர் தப்பி ஓடினர். வாள்கள், விற்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த அம்மன்னர்கள், (மன்னன் துரியோதனனின் விருப்பத்திற்கு) மாறான {அமங்கலமான} வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தப்பி ஓடினர். இப்படிப் பிருஹத்பலனைக் கொன்ற சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, மழையைப் போன்ற அடர்த்தியான தன் கணை மழையால் உமது வீரர்களான அந்தப் பெரும் வில்லாளிகளை முடக்கியபடி போரில் திரிந்து கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்