Thursday, May 19, 2016

லக்ஷ்மணனைக் கொன்ற அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 044

Abhimanyu killed Lakshmana! | Drona-Parva-Section-044 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 14)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவை எதிர்த்த எட்டு வீரர்கள்; அவர்களைத் தாக்கிய அபிமன்யு; துரியோதனனையும், துரியோதனன் மகனையும் சேர்த்து பத்து வீரர்களாக அபிமன்யுவைத் தாக்கிய கௌரவர்கள்; துரியோதனன் மகன் லக்ஷ்மணனைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவைச் சூழ்ந்த கொண்ட ஆறு வீரர்கள்; அவர்களை வீழ்த்தி ஜெயத்ரதனிடம் சென்ற அபிமன்யு; அபிமன்யுவைத் தடுத்த கிராதன்; அபிமன்யுவால் கொல்லப்பட்ட கிராதனின் மகன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, {தனி} ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கரமான கடும்போரைக் குறித்தும், சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} ஆற்றலைச் சொல்லும் நிகழ்வான அந்தச் சிறப்புமிக்கவனின் வெற்றியைக் குறித்தும் நீ எவற்றைச் சொல்கிறாயோ, அவை மிக அற்புதமானதெனவும், கிட்டத்தட்ட நம்பமுடியாததெனவும் நீ எனக்குச் சொல்கிறாய். எனினும், நீதியை {அறத்தைத்} தங்கள் புகலிடமாகக் கொண்டோரின் வழக்கில், அவற்றை நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமாக நான் கருதவில்லை. நூறு இளவரசர்கள் கொல்லப்பட்டு, துரியோதனன் அடித்து விரட்டப்பட்ட பிறகு, சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்கு} எதிராக என் படையைச் சேர்ந்த போர்வீரர்கள் என்ன வழியை மேற்கொண்டனர்?” என்று கேட்டான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்களின் வாய்கள் உலர்ந்தன; கண்கள் ஓய்வற்றதாகின {சஞ்சலமடைந்தன}; அவர்களது உடலை வியர்வை மூடியது; அவர்களின் மயிர்கள் சில்லிட்டு நின்றன {அவர்களுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது}. தங்கள் எதிரியை வீழ்த்துவதில் நம்பிக்கையிழந்த அவர்கள் களத்தை விட்டு ஓடத் தயாரானார்கள். காயம்பட்ட தங்கள் சகோதரர்கள், தந்தைமார், மகன்கள், நண்பர்கள், திருமணத்தால் ஏற்பட்ட உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோரைக் கைவிட்டுத் தங்கள் குதிரைகளையும் யானைகளையும் மிக வேகமாகச் செலுத்தி தப்பி ஓடினர்.

அவர்கள் பிளக்கப்பட்டு முறியடிக்கப்பட்டதைக் கண்ட துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், கிருபர், துரியோதனன், கர்ணன், கிருதவர்மன், சுபலனின் மகன் (சகுனி) ஆகியோர் வெற்றி கொள்ளப்பட முடியாத சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து பெரும் கோபத்துடன் விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே உமது பேரனால் {அபிமன்யுவால்} தாக்கப்பட்டு, விரட்டப்பட்டனர்.

ஆடம்பரத்தில் வளர்ந்தவனும், கணைகளில் சாதித்தவனும், பெரும் சக்தி கொண்டவனும், அனுபவமின்மை மற்றும் செருக்கின் விளைவால் அச்சமற்றவனாக இருந்தவனுமான லக்ஷ்மணன் மட்டுமே, தனி ஒரு வீரனாக அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} அப்போது எதிர்த்துச் சென்றான். தன் மகனைக் {லக்ஷ்மணனைக்} குறித்துக் கவலைப்பட்ட அவனது தந்தை (துரியோதனன்) அவனைப் பின்தொடர்ந்து செல்வதற்காகத் திரும்பினான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிறரும் துரியோதனனைப் பின்தொடர்வதற்காகத் திரும்பினர். பிறகு, அவர்கள் அனைவரும், மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமழையால் அபிமன்யுவை நனைத்தனர். எனினும், அபிமன்யு, தன்னந்தனியாகவே, அனைத்துத் திசைகளிலும் வீசும் உலர்ந்த காற்று, கூடியிருக்கும் மேகங்களின் திரள்களை அழிப்பதைப் போல அவர்களை நசுக்கத் தொடங்கினான்.

சினங்கொண்ட யானையொன்று மற்றொரு யானையோடு மோதுவதைப் போலவே அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெரும் அழகு கொண்டவனும், பெரும் துணிவு கொண்டவனும், தன் தந்தையின் அருகே வளைக்கப்பட்ட வில்லுடன் நின்றவனும், அனைத்து ஆடம்பரங்களுடனும் வளர்க்கப்பட்டவனும், யக்ஷர்களின் இரண்டாவது இளவரசனுக்கு {குபேரனின் மகனுக்கு} ஒப்பானவனும், வெல்லப்பட முடியாதவனுமான உமது பேரன் லக்ஷ்மணனுடன் மோதினான். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, லக்ஷ்மணனோடு மோதித் தன் கூரிய கணைகளால் அவனது கரங்கள் இரண்டையும் மார்பையும் தாக்கினான்.

உமது பேரனான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த அபிமன்யு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (தடியால்) தாக்கப்பட்ட பாம்பைப் போலச் சினத்தால் நிறைந்து, உமது (மற்றொரு) பேரனிடம் {லக்ஷ்மணனிடம்} “விரைவில் அடுத்த உலகத்திற்குச் செல்லவிருப்பதால், நீ இவ்வுலகை நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. உன் சொந்தங்களின் பார்வைக்கு முன்பாகவே, நான் உன்னை யமலோகத்திற்கு அனுப்புவேன்” என்றான்.

பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, இப்படிச் சொல்லிவிட்டு, அப்போதுதான் சட்டை உரித்து வந்த பாம்புக்கு ஒப்பான ஒரு பல்லத்தை எடுத்தான். அபிமன்யுவின் கரங்களால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, அழகிய மூக்கு, அழகிய புருவங்கள், அழகாகத் தெரியும் சுருள் முடி ஆகியவற்றைக் கொண்டவனும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுவனுமான லக்ஷ்மணனின் அழகிய தலையைத் துண்டித்தது. லக்ஷ்மணன் கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சலிட்டன.

தன் அன்புக்குரிய மகன் கொல்லப்பட்டதால் துரியோதனன் சினத்தால் நிறைந்தான். க்ஷத்திரியர்களில் காளையான அவன் {துரியோதனன்}, “இவனைக் கொல்வீர்” என உரக்கச் சொல்லி, தனக்குக் கீழிருந்த க்ஷத்திரியர்களைத் தூண்டினான். பிறகு, துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன் ஆகிய ஆறு வீரர்கள் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களைக் கூரிய கணைகளால் துளைத்துத் தன்னிடம் இருந்து விரட்டிய {அவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்த} அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஜெயத்ரதனின் பரந்த படையின் மேல் பெரும் வேகத்துடனும் மூர்க்கத்துடனும் பாய்ந்தான்.

அதன்பேரில், கவசமணிந்தவர்களான கலிங்கர்கள், நிஷாதர்கள், கிராதனின் வீர மகன் [1] ஆகியோர் தங்கள் யானைப் படையின் மூலம் அவனது பாதையைத் தடுத்து, அவனைச் சூழ்ந்து கொண்டனர். அதன்பிறகு, பல்குனன் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்}, அந்த வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மூர்க்கமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. பிறகு, அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஆகாயத்தில் திரண்டிருக்கும் மேகக்கூட்டங்களை அனைத்துத் திசையிலும் செல்லும் காற்றானது அழிப்பதைப் போல அந்த யானைப் படையை அழிக்கத் தொடங்கினான்.

[1] சுபர்ச நாட்டு மன்னன் கிராதன் பீமனால் திக்விஜயத்தின் போது வீழ்த்தப்பட்டதாகச் சபாபர்வம் பகுதி 29ல் ஒரு குறிப்பு இருக்கிறது. http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section29.html கிராதனுடைய மகனின் பெயர் என்ன என்பது தெரியவில்லை. இவனது தந்தையான கிராதன் கர்ண பர்வம் பகுதி 51ல் பீமனால் கொல்லப்படுகிறான். விதர்பனின் மகன் கிராதன் என்றும் கிராதனுக்குக் குந்தி என்ற மகன் இருந்ததாகவும், அவனுக்குத் திருஷ்டி பிறந்ததாகவும், அதன்பிறகு நிர்விருத்தி வந்ததாகவும் பாகவதம் 9:24 சொல்கிறது. இந்தக் கிராதனும் அந்தக் கிராதனும் ஒன்றா என்பது தெரியவில்லை.

அப்போது அந்தக் கிராதன் {கிராதன் மகன்}, கணைகளின் மழையால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} மறைத்தான். அதேவேளையில், துரோணர் தலைமையிலான பிற தேர்வீரர்களும் களத்திற்குத் திரும்பி கூர்மையும் வலிமையும் மிக்க ஆயுதங்களை இறைத்தபடி அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். அவ்வாயுதங்கள் அனைத்தையும் தன் கணைகளால் தடுத்த அர்ஜுனன் மகன், தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, பெரும் வேகத்தோடு ஏவப்பட்ட தடையற்ற கணைகளின் மழையால் கிராதனின் மகனைப் பீடிக்கத் தொடங்கினான்.

பின்னவனின் {கிராதன் மகனின்} வில், கணைகள், தோள்வளைகள், ஆயுதங்கள், கிரீடத்துடன் கூடிய தலை, குடை, கொடிமரம், தேரோட்டி, குதிரைகள் ஆகிய அனைத்தையும் அபிமன்யு வெட்டி வீழ்த்தினான். உன்னதப் பரம்பரை, நன்னடத்தை, சாத்திர அறிவு, பெரும் பலம், புகழ், ஆயுத பலம் ஆகியவற்றைக் கொண்ட அந்தக் கிராதனின் மகன் கொல்லப்பட்ட போது, வீரப் போராளிகள் பிறரில் கிட்டத்தட்ட அனைவரும் போரைவிட்டுத் திரும்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்